Pages

Monday, 16 July 2012

புவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை - மதுரை கங்காதரன்

புவிவெப்பமயமாதல்  - ஒரு விழிப்புணர்வு கவிதை 

- மதுரை கங்காதரன்  


அன்பு மனிதா !
புவியாகிய எனக்கு 'காய்ச்சல் '
சீக்கிரம் வைத்தியம் செய்.
'டைப்பாய்டு , ஜானடீஸ் ' என்று 
மாறு முன்னே!

என்னைக்காப்பாற்று!
அதோடு 
உன்னையும் காப்பாற்றிக்கொள்.

என் வலி, உனக்கும் வலி தான்!
என் கஷ்டம் உனக்கும் கஷ்டம் தான் !
ஏனென்றால் 
எனக்குள் நீ இருக்கிறாய்.

என் மேல் மரக்கன்று நட்டு 
பச்சிலை தடவு!
அதனால் பெய்யும் மழையால் 
என் வெப்பம் தணியும்.

சுற்றுப்புறத் தூய்மையினால் 
'ஓசோன்' மண்டலத்துக்கு 
ஒத்தடம் கொடு.

உனக்குத் தேவையான 
ஊன், உடை, உறைக்கு 
மலை வேண்டும்.

ஆக்கத்திற்கு அணு சக்தி 
முழு பாதுகாப்போடு அனுமதி.

வாகனத்தை நன்றாய் பராமரி 
அது விடும் நச்சுப் புகையை கட்டுப்ப்படுத்து 

தொழிற்சாலைகள் கக்கும் கரும்புகையினை
தூய்மையாக்கி வெளியேற்று 

அளவுக்கு அதிகமானால் 
எதுவும்  ஆபத்து 

பிரபஞ்சத்தின் அபூர்வம் பூமி 
பூமியின் அதிசயம் உயிரினங்கள் 
அதிலும் மேன்மை 
ஆறறிவு மனிதர்கள்!

விழித்திடு மனிதா !


பசுமை வனங்கள் 
பாலைவனமாய் மாறுமுன்னே 


யு.வி கதிர்கள் 'ஓசோன்' மண்டலத்தை 
ஓட்டை போடு முன்னே 


வெப்ப கதிர்கள் மனிதனைத் தாக்கி 
'தோல்' வியாதிகள் வருமுன்னே 


விழித்திடு மனிதா !
புவி வெப்பமயமாவதை 
தடுத்திடு மனிதா!


இப்போதே புறப்படு மனிதா!
'புது உலகம் ' செய்திடு மனிதா !
'மனிதம்' கத்திடு மனிதா !


------------------------------------------------------------------------------------------------------------------

புவிவெப்பமயமாதல்  - 
ஒரு விழிப்புணர்வு புது மொழிகள் 

 - மதுரை கங்காதரன்  



பச்சை மரங்கள்
புவி வெப்பம் தணித்திடும் சாமரங்கள் !

புவி வெப்பம் குறைக்கும் மருந்து 
மாசில்ல சூழல்.

புவி வெப்பம் தடுக்க மீண்டும்
பசுமை புரட்சி தொடங்கு

நச்சு புகை வெளியேற்றம் தடுப்போம்
புவி வெப்பத்தை குறைப்போம்



புவி வெப்பம் தணிப்போம்
மாசில்லா புது உலகம் செய்வோம்

பசுமை மரங்களை நட்டு
புவி வெப்பத்தை தடுத்திடு

புவி வெப்பமயம்
மனிதனுள் மெல்ல ஏறும் விஷம் .    


---------------------------------------------------------------------------------------------------


















       

Friday, 13 July 2012

தியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி

தியான முறையில் இலட்சியத்தை 
அடையும் எளிய வழி  -

 மதுரை கங்காதரன்



தத்துவம் :  நாம் காற்றை  தீவிரமாக சுவாசிக்கும் போது காற்றுடன் காந்தசக்தியும் சேர்த்து சுவாசிக்கிறோம். அவைகள் தான் நமது மனதில் நுழைந்து எண்ணங்களாக மாறி அதுவே நம் இலட்சியத்தை அடையும் சக்தி நமக்கு தருகிறது. அப்படி நடக்கும்போது உங்கள் ஆழ்மனத்தில் அபரீதமான சக்தி சேமித்து வைக்கப்படுகிறது. அப்போது நாம் ஒன்றையே நினைத்து திரும்ப திரும்ப உங்கள் மனதில் உங்கள் இலட்சியத்தை ஒன்ற வைத்து விட்டால் நீங்கள் நினைத்தது கட்டாயம் நடக்கும்.

இந்த பயிற்சிக்கு மற்றவகளுடைய துணை தேவையில்லை.நீங்கள் தான் மனது வைக்க வேண்டும். என்ன ! உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று நினைத்து விட்டீர்களா ?! அப்படியென்றால் நீங்கள் 50% இலட்சியத்தை அடைந்துவிட்டீர்கள். மீதம் 50% அடைய கீழ் காணும் பயிற்சியினை தினமும் தவறாமல் செய்யவேண்டும்.




1. முதலில் சௌகரியமான இடத்தில் அமருங்கள். நீங்கள் அடைய வேண்டிய இலக்கை மனதில் நினையுங்கள். 

2.   இதை  கூடியவரை பிறர் தொந்தரவு தராத இடத்தில் பயிற்சி செய்யுங்கள்.

3. இப்போது உங்கள் உடம்பை நன்றாக தளரவிட்டு கண்களை மெல்ல மூடிக்கொள்ளுங்கள். அதே  சமயத்தில் நீங்கள் அடைய வேண்டியதை நினையுங்கள். 

4.  பிறகு மிக மெதுவாக மூச்சை இழுத்து (காற்றை சுவாசித்து ) மிக மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். (சுவாசித்த காற்றை  வெளியே விடவேண்டும் )

5.    இப்படி குறைந்தபட்சம் 10 அல்லது 12 முறையாவது செய்யும்போது, உங்கள் உடம்பு  மிகவும் இலேசாவதுடன் நீங்கள் நினைத்ததை அடையக்கூடிய தெம்பும், நம்பிக்கையும் உருவாகின்றன. (அதிகமாக செய்ய செய்ய உங்களுக்கு அதிகமான சக்தி கிடைக்கும்) 

6.  அந்த கட்டத்தை அடையும்போது உங்கள் உங்கள் ஆழ்மனதுடன் நெருக்கமான உறவு உன்டாகிறது. 

7.     இப்போது நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, எந்த நிலை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே உங்கள் மனதில் ஓடவிடுங்கள்.

8நிச்சயம் நினைத்தது நடக்கும் என்று உங்கள் மனசுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

9. விரும்பியது கிடைத்துவிட்டது என்ற உணர்வை    உங்களுக்குள் பதியவிடுங்கள்.

10. இப்போது நீங்கள் அடைய நினைக்கும் நிலை கிடைத்துவிட்டது என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

11உங்கள் இலக்கை அடைய யார் யார் உதவி செய்தனரோ அவர்களுக்கெல்லாம் உங்கள் மனதிற்குள் நன்றி சொல்லுங்கள்.

12.  தினமும் தவாறாமல்  இந்த  பயிற்சியினை செய்து வந்தால் உங்கள் இலட்சியம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இலகுவாக அதை அடைவீர்கள்.




குறிப்பு: இதை  உங்கள் குடும்பதைருக்கோ, நண்பர்களுக்கோ சொல்வது மூலம் இன்னும் உங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும் . இதன் மூலம் அரிய , பெரிய அனுபவங்களும் உண்டாகும்.
                
  









































நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான். - நீங்களும் லட்சாதிபதி ஆகலாம் ! -

நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம் ! -
 மதுரை கங்காதரன் 

நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.



இது  உங்கள் வாழ்க்கைக்கான நிதி நிர்வாகத்திற்கான எளிய வழி  முறைகள்





நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.

இந்தக் கட்டுரை படிக்க ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் இன்று முதல் லட்சாதிபதிகள் !  இன்றைய லட்சாதிபதிகள் நாளைய கோடீஸ்வரர்கள் ! என்ன ஆச்சர்யமாய் பார்க்கிறீங்க! தினமும் ஒருநாள் பிழைப்பு ஒட்டுறதுக்கே வழி  இல்லாம இருக்கோம் ?! இதுலே  எப்படி நாங்க லட்சாதிபதி ..... என்று இழுப்பதை என்னால் உணர முடிகிறது. அதே சமயத்தில் எப்படி ? எந்த வழியில் ? என்கிற பல கேள்விகள் உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன அப்படித்தானே ? ஒருவேளை இது  ஒருவகையான ஏமாற்று வேலையா ? அப்படியெல்லாம் கவலை படவேண்டாம் .

ஒரு சிலர் 'ஆமா , இதுபோல எத்தனையோ பேர் எத்தனையோ வழிகள்லே சொல்லி நாம அது படி செஞ்சதுலே நம்மகிட்டே கொஞ்ச நஞ்சம் இருந்ததை இழந்துட்டோம், இப்போ நம்மகிட்டே இருக்கிறதை நாங்க இழக்கத்தயாராக இல்லை, மேலும் அப்படிப்பட்ட ஆசையை நாங்க கனவுலே கூட நினைக்கலே ?! இன்னும் சொல்லப்போனா அந்த ஆசையே மறந்துட்டோம்' என்று உங்கள் மனசுக்குள் குமுறுவது எனக்குக் கேட்கின்றது.

வீடுகளில் தினம் கேட்கும் புலம்பல்கள்  

 

ஒரு சிலர் 'வீடு கட்றதுக்கு பேங்கிலே கொறஞ்ச வட்டிக்கு லோன் கொடுக்கிறாங்களே ன்னு ஆசைபட்டு பணம் வாங்கினோம். போக போக வட்டி ஏறுதனாலே அசல் கட்ட முடியாம கடன்காரனாக மாறிவிட்டோம் '     

'தேவைக்கு கொஞ்ச பணம் வேண்டும்கிறதனாலே நகைகளை அடமானம் வச்சோம் , திருப்ப முடியலே '

'வீட்டை  அடமானம் வச்சி பணம் வாங்கினோம் , வட்டி கட்ட முடியலே '

'லோன் போட்டு வண்டிய வாங்கினேன், அதுக்கு சரியா தவணை கட்டமுடியாம திண்டாடுறேன், எப்போ வண்டிய புடிங்கிட்டு போவாங்கலோன்னு பயமா இருக்கு !'

'ஒருபக்கம் பையன் , பொண்ணுகளுடைய பீஸ் கட்டணும் !'

'பொண்ணுக்கு வயசாயிருச்சி , அவளுக்கு காலாகாலத்திலே கல்யாணம் பண்ணி  கரைய ஏத்துறதுக்கு நக நட்டு வாங்கணும் ! '

'நகை கடை பக்கம் எட்டி கூட பார்க்க முடியலே, அவ்வளவு விலை ! '

'தொழில் தொடங்குறதுக்கு மூலதனம் கொஞ்சம் குறையுது , அதை புரட்ட முடியலே !'

'போன  மாசம் டாக்டர்கிட்டே சும்மா செக்கப்புக்கு போனேன் , இந்த டெஸ்ட் , அந்த டெஸ்ட் ன்னு எடுக்கச்சொல்லி சேர்த்து வச்ச கொஞ்ச பணத்தையும் பிடுங்கிட்டு மேற்கொண்டு கடனையும் வாங்கவச்சுட்டார் !'

'வீட்டு வாடகை, மளிகை கடை பாக்கி , பால்காரன், ஸ்திரி பெட்டி தேய்க்கிறவனுக்கு, காய்கறிக்கடைகாரனுக்கு , ஆட்டோ ரிக்ஷா '

இப்படி அதிகபட்சம் எல்லா வீட்டிலேயும் இந்த  புலம்பல் சத்தம் இருக்கும். யாருக்குமே குறித்த நேரத்திலே பணம் தர முடியமே, மானம் போகிறாப்ப்பிலே பல சங்கடங்களை அனுபவிச்சுவர்றத நாம பார்க்கிறோம்.

அதுக்கும் மிஞ்சி இன்னும் சில இடத்திலே 'வீட்டிலே ரெண்டு சம்பலக்கரன்னு தான் பேச்சு , மாச கடைசியிலே ஒரு ரூப கூட மிஞ்சலே ' இப்படியும் பல பேர் புலம்புறதை நாம பார்க்கிறோம்.

இவையெல்லாம் விடுங்க! முக்கியமா இந்த கட்டுரை எழுதத் தூண்டிய நிகழ்ச்சி இதுதான். ரொம்ப வருசத்துக்கு முன்பு என் நண்பன் ஒருவருடைய கல்யாணத்திற்கு சென்றிறுந்தேன்.அப்போது அவரோட வயது 27 இருக்கும். அவருடைய அப்பா நல்ல பெரிய வேலையில் இருப்பவர். இன்னும் ஓரிரு வருடத்தில் 'ரிடையர்டு' ஆக  இருப்பவர். அதற்குள் தன பையனுடைய கல்யாணத்தை   முடித்துவிடவேண்டும்' என்று முனைப்புடன் கல்யாணம் நடத்தினார்.

நான் தெரியாத்தனமாய் ஒரு கேள்வியை அவரிடத்தில் கேட்டுவிட்டேன். 'சார், கல்யாணம் ரொம்ப சிறப்பா நடந்திருச்சி ! எவ்வளவு சார் பட்ஜெட் போட்டீங்க, அதுக்குள்ளே முடிச்சுட்டீங்களா ' என்று கேக்குறதுக்குள்ளே கொஞ்சம் கூட யோசிக்காமல் 'ஒரு லட்சமாகும்னு நினைத்தேன், ஆனா அது ஒன்றரை லட்சத்திலே போய் முடிஞ்சது' என்று அங்கலாய்த்தார்.

உடனே நான் சும்மா இருக்கமே, 'சார், நீங்க பெரிய உத்தியோகத்திலே இருக்கீங்க, நல்ல சம்பளம் வாங்குறீங்க , நிறைய சேர்த்து வச்சிருப்பீங்க , அதனாலேத்தான் உங்க பையனோட கல்யாணத்தை ஜாம் ஜாம் ன்னு நடத்தியிருக்கீங்க ! அப்படித்தானே' என்றேன்.

'அட போங்க தம்பி , சேமிப்பா , அப்படின்னா என்ன அர்த்தம் தம்பி, இதுநாள் வரை ஒரு நயா  பைசா கூட சேமிக்கலே, எவ்வளவு சம்பளம் வாங்கிறேனோ அப்பப்போ செலவுக்கு சரியாப் போகுது. எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் ன்னு  அசால்டா இருந்துட்டேன், பையனுக்கு 27 வயசு ஆனது தெரியல்லே, இவ்வளவு  சீக்கிரமா நான் ரிடையர் ஆவேன்னு கூட நினைச்சு பாக்கலே. இவ்வளவு வேகமா வருஷம் போயிருச்சி . எல்லாம் சமாளிச்சுடலாம்னு ரொம்ப குருட்டு நம்பிக்கையா இருந்துட்டேன் '  என்றார்.    

நானும் விடல்லே. 'சார், உங்க அப்பாவும் (அதாவது பையனோட தாத்தா ) பெரிய ஆபீசரா இருந்து ரிடையர் ஆனவர். அவர் எதாவது சொத்து சேர்த்து வச்சிருப்பாருள்ளே' என்றேன்.

'தம்பி , என் அப்பாவும் என்னோட கல்யாணத்தை கடன் வாங்கித்தான் பண்ணினார். அவர் வாங்கின கடனை நான் அடச்சுட்டேன், இப்ப் நான் என் பையனுக்காக வாங்கின கடனை அவன் அடைக்கணும்.  ம் ... கடன்லே தான் எங்க பரமபரை ஓடுது !' என்று தன கையாலாகாத்தனத்தை பரிமாறிக்கொண்ட்டார்.

அப்போது தான் எனக்கு ஒரு இலட்சியம் பிறந்தது. எல்லோருக்கும் தன குடும்பத்திற்கு ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஒவ்வொரு செலவு வரும். எல்லா செலவும் ஒரேயடியாய் வருவதில்லை. பையனோ பொன்னோ பிறந்த உட்னே ஸ்கூலுக்கு போவதில்லை, உடனே கல்யாணம் செய்வதிலை. எல்லாத்துக்கும் நேரம் , காலம் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அதிகம் வசதி படைத்தவர்களுக்கும் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எதற்ககெல்லாம் மூலக்காரணம் போதியளவு  'நிதி நிர்வாக'த்திறமை இல்லாதது அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.




இப்படி 'கடன்' என்னும் ஈட்டிகாரனிடமிருந்து தப்புவது எப்படி? கிடைக்கும் பணத்தில் சிறந்த 'நிதி நிர்வாகம்' செய்து எப்படி 'லட்சாதிபதி' ஆகலாம் என்பதன் ரகசியம் தான் இந்தக்கட்டுரை. ஏற்கனவே இதை பின் பற்றித்தான் பல பேர் 'லட்சாதிபதி' ஆயிருக்கிறனர். 'லட்சாதிபதிகள்' 'கோடீஸ்வரர்கள் ' ஆகியிருக்கின்றனர். இதை பின்பற்றுவது மிக எளிது. இதில்  வரும் ஐடியாக்கள் எளிதானது. இதை  ஓய்ந் பற்றுங்கள் பலன் கிடைக்கும்.

தொடரும் ...     

             

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


  











Tuesday, 10 July 2012

வெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா

வெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி  வழி  யோகா -  மதுரை கங்காதரன் 


நமது மனம் மற்றும் எண்ணங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. அதை பலமுறை அனுபவபூர்வமாகவே கவனித்திருக்கலாம்.அப்படி மாற்ற கூடிய சக்தி எப்படி ,எங்கிருந்து வருகிறது? அந்த சூழ்நிலை சக்தியை வெற்றி சக்தியாக , மகிழ்ச்சிக் கனியாக, ஆரோக்கிய வளர்ச்சிகாக   எப்படி மாற்றுவது தான் இந்த  ஒலி , ஒளி  வழி  யோகா ! இது  மிகவும் எளிதான வழி , எல்லா வயதினருக்கும் , எல்லா இனத்தவருக்கும் , எல்லா மததினருக்கும் பொருந்தும் பொதுவானதும்  பிறருக்கு பாதிக்காத வழியும் ஆகும்  !

நமது சூழ்நிலை சுற்றி பலருடைய எண்ண  அலைகள் இருக்கின்றன. அதாவது அது எண்ண  அலைகளாகவும், ஒலி அலைகளாகவும்,   ஒளி  அலைகளாகவும் , காந்த  அலைகளாகவும் பரவி இருக்கின்றன . அதில் எந்த எந்த  சக்தி அதிக பலம் வாய்ந்ததாக இருககின்றதோ அது தான் உன்னை மீகவும் கவரும் அல்லது ஏற்கச்செயும். அது நல்ல அலைகளாக இருந்தால் நன்மையாகவும், கெட்ட  அலைகளாக இருந்தால் கெட்ட  செயலும் உண்டாகும்.அந்த சூழ்நிலையை எப்படி எப்போதும் நல்ல , வெற்றி மற்றும் மகிழ்ச்சி சக்தியாக மாற்றும் வித்தை தான் இந்த  யோகா.

சுருங்க சொல்ல போனால் முன்பு 'மந்திரங்கள் ' சொல்ல கேட்டுயி ருப்பீர்கள். அந்த  'மந்திரங்கள் ' என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த  மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் (கண்ணை மூடிக்கொண்டு அதாவது  மனப்பாடம் செய்திருந்தால் )   நிறுத்தி நிதானமாய் உச்சரிக்கும் ஒவ்வொரு  தடவையும் சுத்தமான காற்று அலைகள் உங்கள் உடம்பிற்க்குள் புகுகின்றன. சக்திமிக்க மந்திர வார்த்தைகள்  உச்சரிக்கும்போது ஒலி  அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றன.மனக்கண்ணால் உங்களை நீங்கள் நினைக்கும் போது ஒளி அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றது. ஆக  இந்த  அலைகள் தான் உங்களுக்கு அறிய பெரிய காரியங்களை செய்யக்கூடிய சக்தியை கொடுக்க காத்திருக்கின்றது. அதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது அதன் மகிமையை உணருவீர்கள்.


இந்த  மந்திர சொற்கள் உங்கள் ஆழ்மனதில்  புதைந்து இருக்கும் திறமைகளையும், ஐடியாக்களையும் உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல் மூலமாக வெளியே கொண்டு வருவதற்காக உதவி வந்திருக்கும் கோடாளி. இப்படி  தான்  பல துறைகளில் உள்ள சாதனையாளர்கள் பின் பற்றி வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொருவருடைய வாழ்கை சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகத் தான்  இந்த ஒலி , ஒளி  வழி  யோகா. தினமும் பின்பற்றுங்கள்! மிகச் சிறந்த பலன்கள் பெறுவீர்கள்.    


வாழ்கை முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தி, ஒரு தூண்டுதல் , ஒரு தன்னம்பிக்கை மிக மிக அவசியம். அந்த  உந்து சக்தி தான் இந்த  மந்திர வரிகள். நாம் பிறர் தயவிலோ பிறருக்காகவோ  காத்திருந்தால் நமது முன்னேற்றம்  தடை படும். அந்த முன்னேற்றதுக்கான சுய ஊக்கி தான் இந்த மந்திரவரிகள். 






அந்த மிந்திர வார்த்தைகள் இதோ ....


முதலில்



படிக்கும் மாணவ , மாணவியருக்கு ..  

நான்  எனது  வாழ்கை முன்னேற்றதிக்காக  சிறந்த  இலட்சியங்களை உருவாக்கிக் கொள்வேன்.அதற்காக அறிவு சார்ந்த பல புத்தகங்களை பலவழிகளில் கற்று வெற்றி பெறுவேன். எநநிலையிலும்   கர்வம் கொள்ளாமல் எனது கடமைகளை கண்ணும் கருத்துமாய் செய்வேன். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த  உலகுக்குப் பெருமை சேர்க்கும் விதம நடந்து கொள்வேன்.


என்னுடைய கல்வி அறிவு, திறமை மற்றும் புத்திசாலிதனத்தை ஒருமுகபடுத்தி நான் கொண்ட இலட்சியத்தை அடைந்தே தீருவேன்.


என்னிடம் எண்ணற்ற திறமைகள்,  ஐடியாக்கள் பல இருக்கின்றன,  என் ஆழ  மனம் காட்டும் வழியிலும் அதன் சக்தியிலும் எனக்கு மிக அதிக நம்பிக்கை இருக்கின்றன. என் நிஜமான தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கு கிட்டாதவற்றை பற்றி கவலை கொள்ளமாட்டேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தை   நழுவவிடாமல் நன்றாக பயன்படுத்திக் கொள்வேன்.     


ஒவ்வொரு செயலையும் முனைப்புடன் முயற்சிப்பேன்.'என்னால் முடியாது' என்று ஒருபோதும் கூறமாட்டேன்.வாழ்க்கையை வளப்படுத்தும் அன்பு, செல்வம், சந்தோஷம் ஆகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன்.வெற்றிகளை கொடுக்கும் பல எண்ணங்கள் இந்த  உலகில் நிறைந்திருக்கின்றன.அவைகளை நான் பெற்றுகக் கொண்டிருக்கிறேன்.    



என் அறிவு, என் சக்தி, என் பலம் சுபிட்சமான வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  சுபிட்சத்தை என் கண்ணால் காண்கிறேன் அதை அடைவேன் என்று உறுதி கொள்கிறேன்   


குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும். 


-----------------------------------------------------------------------------------------------------------------------


தொழிலில் பல சாதனை செய்ய வேண்டும் என்கிறவர்களுக்கும், நல்ல வேலை கிடைக்கவும்,  பதவி உயர்வு மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் பொதுவாக எல்லோருக்காகவும்....   




என்னிடம் எண்ணற்ற புதுமைகள் படைக்கும்  திறமைகள் இருக்கின்றன, அதிக பலனை தரும் எளிமையான ஐடியாக்கள் இருக்கின்றன, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு போன்ற  மூல பலங்கள் இருக்கின்றன அவற்றை நான்  தெரிந்து வைத்திருக்கிறேன்.அவற்றின் விலை மதிக்கமுடியாத மதிப்பை உணர்ந்திருக்கிறேன். என்  திறமைகளை  பயன்படுத்தும்போதும் பணிகளை செய்யும்போதும் நிச்சயம் பலன் கிடைக்கிறது. செல்வம் சேர்க்கக்கூடிய வாய்ப்புகளும் ஐடியாக்களும் என்னிடம் நிறைய இருக்கின்றன. எனக்கு பிடித்தமான தொழிலை நான் செய்கிறேன். அதன் மூலம் பணம் சேர்ப்பேன்.என் ஆழ்மனம் கூறும் யோசனைகளிலும் அதன் உந்துதல் சக்தியிலும் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது.


என்  நிஜமான தேவைகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும் என்று எனக்குத்  தெரியும். ஆகையால் நான் பொறுமை இழக்கவில்லை, கவலைப்படவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.


நான் விரும்புவது ஒவ்வொன்றும் முறையான வரிசைப்படி முறையான நேரத்தில் என் வாழ்கையில் கிடைக்கும். இது  இயலாது என்கிற எண்ணம் எதுவுமே எனக்கு கிடையாது. அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன். அவை தான் என் வாழ்வை வளப்படுத்தும்.


வெற்றிகரமான எண்ணங்கள் இந்த  உலகெங்கும் நிறைந்திருக்கின்றன. அவை இப்போது எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.


பல சக்திகள் இதுவரை பயன்படுத்தாமல் என்னுள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி விரைவாகவும் சுலபமாகவும் என் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளப்போகிறேன்.


நான் சொந்த முயற்சியில் சம்பாதிபேன் . அதை முதலீடு செய்து பன் மடங்கு பெருக்குவேன். ஆக்கப்பூர்வமான  சிந்தனைகள் அலை அலையாய் எனக்குள் பொங்கி எழுகின்றன.


எதிர்பாராத பணம். உதவி மற்றும் சந்தர்ப்பங்கள் பரபரப்பான சூழ்நிலையில் எனக்கு கிடைக்கிறது. பின்னடைவு ஏற்பட்டால் அதுவும் வளர்ச்சிக்கு ஒரு வழி என்று நினைக்கிறேன். பின்னடைவு என்பது மாறு வேடத்தில் வரும் பரிசு தான் என்று நினைக்கிறேன். அதுவே எனது முன்னேற்றத்துக்கு படிக்கல் என்று கருதுகிறேன். 


என் அறிவு, என் சக்தி, என் பலம் எனது இலட்சிய  வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  இலட்சியத்தை  என் கண்ணால் காண்கிறேன் அதை அடையும் வரை ஓயாமல் உழைத்து வெற்றி பெறுவேன்  என்று உறுதி கொள்கிறேன்.   



குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும். 










VETRIKKU, MAGILCHIKKU, AROKKIYATHIRKKU OLI, OLI VALI YOGA - BY MADURAI GANGADHARAN

Sunday, 8 July 2012

பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன்

 பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன் 




காலம் (ன் ) மட்டும் காத்திருந்தால் 
கதாநாயகன் ஆயிருப்பாய் !
உம இலட் சிய கனவின் 
உண்மை சொருபத்தை பார்த்திருப்பாய் !

உமக்குத்  தெரியுமா ? பாரதி !
நம்மை ஆண்ட வெள்ளையன் 
நம்மை விட்டு வெளியேறிவிட்டான் !
அனறு 
'வந்தேமாதரம் ' சொன்னால் 
சிறையில் தள்ளப்பட நாங்கள் 
இன்று 
எல்லா சுதந்திரத்தையும் 
பெற்றுவிட்டோம் 

நீர் கண்ட புதுமை பெண்கள் 
அணுக்கு நிகராக 
ஆட்டோ முதல் ராக்கெட் வரை 
இய்க்குகின்றனர் !

கண்ணமாக்களும் , சக்திகளும் 
இன்று ஆட்சி கூட செய்துவருகின்றனர் 


'பாஞ்சாலி சபதம் ' படைத்த நீ 
சுதந்திர இந்தியாவில் இருக்கும் 
"தமிழாட்சி' காவியத்தை தந்திருப்பாய் 

உன் எழுச்சி கவிதைகள் மூலம் 
இன்றைய தலைமுறைக்கு புத்துயிர் 
தந்திருப்பாய் !
உன் சுதந்திர கனவு நனவாக்கிய 
வித்தையை கற்று கொடுதிருப் பாய் 

இளையதலையினருக்கு 
அவர்களின் கனவை  எப்படி நனவாக்கும் 
ரகசியத்தை சொல்லியிருப்பாய 

உன் கவிதை வெள்ளி திரையிலும் 
டி .வி சீரியலிலும் 
வெப் சைட்டிலும்  இண்டர்நெட்டிலும் 
மொபைலிலும் எதிரொலித்து 
இந்த  உலகை வலம்  வந்திருக்கும் 

உன் கவிதை வரிகளை 
கண்ணதாசனும் , வைரமுத்தும் 
இன்னும்  தற்போதுள்ள கவிஞர்களும் 
சிறிய பெரிய திரைகளில் 
கொடுத்து உன் புகழ் பரப்புகின்றனர்..

கவலை  வேண்டாம் பாரதி !
நீ ஏந்திய லட்சிய கவிதை ஜோதியை 
என் போன்றவர்களும் 
கவிஞர்களும் அறிஞர்களும் 
எப்போதும  அணையாமல் 
எந்திவருகின்றோம்   

வெகுவிரைவில் உலகம் முழுதும் 
உம்மை விழா எடுக்கும் 
அப்போது அக்னி குஞ்சுகளாக 
உயிர்தெளுவோம் 
என்றும் 
புதுகவிதை ஜோதியை காப்போம்..

-----  ஆக்கியோன் - கங்காதரன்  .




Saturday, 7 July 2012

2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும் அனுபவ வாழ்கை பொன் வரிகள்



   அனுபவ   வாழ்கைப்  பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்




2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும் 





பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 2000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையைத் தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் 'பிடிக்கும்' என்று கையைத் தூக்கினர். பிறகு அதே நோட்டை கீழே போட்டு மிதித்து அழுக்கோடு  காட்டினேன்.  மீண்டும் அனைவரும் 'பிடிக்கும்' என்று கையைத் தூக்கினர்.  

'நோட்டு கசக்கப்பட்டு பழசு ஆகிவிட்டதே , ஏன் பிடிக்கின்றது ' என்று கேட்டேன்.

'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அடித்தாலும் , மிதித்தாலும், அழுக்கானாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்'  என்றார் .  


'சரியாகச் சொன்னீ ர்கள்' என்றேன் 

அதுபோல 

தன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மிதித்தல்) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி (அதாவது மனது கிழியும் வரை) இருக்கும் வரை தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது.  

***************************************



இன்னும் வரும் 
    

ANUPAVA VALKAI PON VARIGAL - MADURAI GANGADHARAN

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Friday, 6 July 2012

ஒற்றையர் ரம்மி சீட்டு ஆட்டம் - SOLO RUMMY WITH PLAYING CARDS


ஒற்றையர் ரம்மி சீட்டு ஆட்டம்   








SOLO RUMMY WITH PLAYING CARDS



RULES:

·        This game is without Joker

·        Total cards 52 (4 x 13 )

·        You will be served only 13 cards or you take only any 13 cards.

·        As per Rummy rule you have to play.

·        You can take any card from the remaining cards and
·        You have to arrange a set of any three or four cards 
        having the same rank (like A or J or Q or K) or same 
        number (2 to 10)e.g. 8♥-8♣-8♠ or A-A♣-A♠ or any three 
        consecutive cards that are of the same suit (same 
        symbol)e.g. 3♥-4♥-5♥-6♥ or A♥-J♥-Q♥-K♥ or 10♥-J♥-Q♥-
        K♥ or A♥-2♥-3♥ etc.,















·        Winner – Who has arranged with minimum cards taken from the remaining cards.

·        That is, say you arrange all sets from 8 cards and also for the same you can arrange sets from 5 cards then, 5 cards arrange is winner.

 For Example:

As per Figure – 1 you have served 13 cards

Figure: 2
You have judged the following 5 cards are not suitable to arrange sets.

Figure: 3
You have taken 5 yellow shaded cards from the remaining cards to arrange sets. 

Note : If you want to see it in a FULL SCREEN - Click right corner 4 direction arrows.