Pages

Monday, 10 February 2014

PASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்

'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும்  
லஞ்சம் ஊழல் ஒழிப்பும் 
 (நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்)  
விழிப்புணர்வு கட்டுரை 

மதுரை கங்காதரன் 


 சென்ற மாதம் கடைசி வாரம் மதுரையில் உள்ள 'பாஸ் போர்ட்' அலுவலகத்திற்குச் சென்று என்னுடைய  கடந்த முறை எடுத்த 'பாஸ் போர்ட்' ஐ புதுபிக்கச் சென்றிருந்தேன்.  'பாஸ் போர்ட்'  புதிதாக எடுப்பதற்கு அல்லது புதுபிக்க நீங்கள் கட்டாயம் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.


1. உங்கள் பெயர் ( இனிஷியல் விரிவாக்கம் உட்பட ) உங்கள் படிப்புச் சான்றிதழின் படி / ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை படி நூறு சதவீதம் சரியாக பிழையில்லாமல் இருக்க வேண்டும். (ஒருவேளை பிழை (கள் ) இருந்தால் அதற்கான ஆவணங்கள் தயார் செய்து சம்பந்தப்பட்ட நபரிடத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்) 


2. உங்கள் படிப்புச் சான்றிதழில் பெயர், பிறந்த நாள் ஆகியவை சரியாக இருக்க வேண்டும் 

3. தற்போது இருக்கும் முகவரி உத்திரவாதம் வேண்டுவதற்காக ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / டிரைவிங் லைசென்ஸ் சரியாக இருக்க வேண்டும்.


4. பட்ட படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்க்கு 'ECNR' (Emigration Check Not Required) எளிதாகக் கிடைக்கும். இது மிக முக்கியமான ஒன்றும் கூட.  

5. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த இருவரின் பெயர்கள் வேண்டும் (Reference members )

6. உங்கள் வீடு முகவரி எந்த காவல் நிலையத்தில் (Place of Police station ) கீழ் உள்ளது என்ற விவரம் வேண்டும் 


7. அனைத்தையும் நீங்கள் ஆன் லைன் மூலம் பதிய வேண்டும் (இதற்கு சிலர் இலவசமாக / சிறிது பணம் பெற்று செய்து தருகிறார்கள். கூடவே உங்களுக்கு வழிகாட்டியாகவும்  இருக்கிறார்கள்) 

8. உங்களுக்கு வேண்டிய பாஸ் போர்ட் தகுந்தவாறு பணத்தைக் கட்ட வேண்டும். (பிறந்த குழந்தைக்கும் எடுக்கலாம்).  

9. 'ரிசிப்ட்' சிலிப்பில் குறிப்பிட்டு இருக்கும் இடம் , தேதி மற்றும் நேரத்திற்குள் , அரை மணி நேரம் முன்னதாக பாஸ் போர்ட் அலுவலகத்தில் இருக்க வேண்டும் 


10. முதலில் உங்களுடைய அனைத்து தகவல்களை சரிபார்க்கின்றனர் , குறிப்பாக ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / படிப்பு சான்றிதழ் / டிரைவிங் லைசென்ஸ் போன்றவை. எல்லாம் ஒரு ஜெராக்ஸ் காப்பியை அவர்களிடத்தில் கொடுக்கவேண்டும். அதை அவர்கள் அசலுடன் சரி பார்த்த பின்னர் ஒரு 'டோக்கன்' தருகின்றனர். அதில் உங்களுக்கான ஒரு எண் தரப்பட்டிருக்கும். அந்த எண்  தான் அங்கு இருக்கும் வரை 'டிஸ்பிளே' யில் நீங்கள் அடுத்து யாரைப் பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

11. முதலில் 'ஏ' கவுண்டருக்குச் செல்லவேண்டும். அங்கு சில மாற்றம் வேண்டுமென்றால் சரி செய்யலாம் (திருத்திக் கொள்ளலாம்). அதாவது தெரிந்த நபரின் பெயகள் , காவல் நிலையம் இருப்பிடம் போன்றவை.


12. பிறகு 'பி' கவுண்டருக்குச் செல்லவேண்டும். அங்கும் உங்கள் அனைத்துத் தகவல்கள் அசலுடன் சரி பார்த்த பின்னர் உங்கள் 'கை விரல்கள் ரேகை'  பதிவு செய்யப்படும்.


13. பிறகு 'சி' கவுண்டருக்குச் செல்ல வேண்டும். அங்கும் அனைத்தும் சரிபார்க்கப்படும். (நீங்கள் படித்த படிப்பு, செய்யும் தொழில், வேலை விவரம், வெளிநாடு பயணம் , வெளிநாடு வேலை போன்றவைகள் 


14. பிறகு 'டி' கவுண்டர். மீண்டும் சரி பார்த்தல். இங்கு அனேகமாக உங்கள் பழைய பாஸ் போர்ட் சரி பார்க்கிறார்கள்.


15. அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 'அக்னாலெஜ்மெண்ட்' தருகிறார்கள்.

16. காவல் நிலைய சரிபார்ப்புக்குப் பின்னர் உங்களுக்கு பாஸ் போர்ட் வழங்கப்படும்.
இதற்கும் லஞ்சம் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள் ?

அதாவது ஒருவன் வெளிநாட்டிற்கு சுற்றுலா அல்லது வேலைக்குச் செல்ல நினைக்கும் போது பாஸ் போர்ட் தேவை படுகின்றது. அதில் முக்கியமாக பெயர், விலாசம், வழக்கு விவரம் போன்றவை தெளிவாகத் தெரியவரும். உள்நாட்டில் அரசாள்பவர்கள் எப்படிவேண்டுமாலும் இருக்கலாம் என்பது போல் தெரிகின்றது.

சில கட்சித் தலைவர்கள் / பேச்சாளர்கள் சிலர் திரைப்படத் துறையிலிருந்து வந்ததால் அல்லது அதிகம் படிக்காமல் இருப்பதால் அல்லது விவரம் அதிகமாக தெரியாமல் இருப்பதால் என்னவோ எல்லோருமே யாராவது  எழுதிக் கொடுத்ததைத் தான் படிக்கிறார்கள். வசனம் பேசுவதுபோல் பேசுகிறார்கள். சுயமாக சொந்தமாக மக்களை சந்தித்து அவர்களுடன் சகஜமாக பேசி கண்ணிற்குத் தெரியும் பிரச்சனைகளை பழைய தலைவர்கள் தீர்ப்பது போல் மீண்டும் இனிமேலாவது வருமா ? புள்ளி விவரங்கள் , அடுக்குமொழி வசனங்கள், வசைபாடுவது , நடந்த குறைகளை எடுத்துச் சொல்வதை விட அடுத்து என்ன செய்ய போகிறோம் அதை எவ்வாறு தீர்ப்பது என்பவைகள் பேசுவது நல்லது.

எதிராளிகளை (மற்றவர்களை) ப் பற்றி பேசுவதை விட உங்களைப் பற்றி பேசுவது மிகவும் நல்லது. ஒன்று  நிச்சயம் ! மக்களுக்கு நல்லதைத் செய்தால் தான் தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம். அதை விட்டு தேர்தல் நேரம் மட்டும் இலவசங்களை அள்ளிக்கொடுத்து , பணம் கொடுத்து , வாய்க்குவந்த வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்பது தற்போது நிலவரப்படி சாத்தியங்கள் குறைவு.

ஏனென்றால் இப்போது பல இளைய தலைமுறையினர் வலை தளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தலைவர்களின் எண்ணங்கள் நன்கு தெரிகின்றது. அதை அப்படியே தங்களுடைய குடும்பத்தில் சொல்லி 'யாருக்கு ஒட்டு போட்டால் நமக்கு நல்லது கிடைக்கும்' என்று பலரிடத்தில் நேரிலோ அல்லது வலைத்தளத்திலோ சொல்வதால் பெரிய பெரிய மாற்றங்கள்  வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 
மக்களே இனிமேலாவது தெளிவு பெறுங்கள். தலைவிதியை நீங்கள் முடிவு செய்யுங்கள்......  கண்களை மூடிக்கொண்டு பாழும் கிணற்றில் மீண்டும் குதித்து பிறகு வருத்தப்படுவதை விட இப்போதே விழிப்புணர்வுடன் வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள். எல்லோரும் பலன் பெறுவோம். 


லஞ்சம் ஊழல்  பெரும்பாலும் அரசியல் தலைவர்களால், அரசு வேலை பார்ப்பவர்களால் நடைபெறுகின்றது. அவர்களுக்கு அதிகாரம் அதிகம். நினைத்தால் எதை வேண்டுமாலும் சாதிக்காலம். பணபலம், ஆட்பலம் கூட இருக்கின்றது. சாதாரண மனிதனால் அவர்களைத் கனவில் கூட தொட முடியாது. அதாவது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் அவருக்குக் கீழ் இருக்கும் காவல் நிலையத்தில் தடையில்லாத சான்றிதழ் தேர்தலின் போது தரவேண்டும். அதுபோல் வருமான வரித்துறையிடமிருந்து தடையில்லாத  சான்றிதழ் கொடுக்க வேண்டும் . அது போல் அவர் வெற்றி பெற்றால் வருடம் ஒருமுறை வாங்கி ஆன் லின் ல் ஏற்ற வேண்டும்.
அது அரசு வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் வருடம் ஒருமுறை தடையில்லா சான்றிதழ் தர வேண்டும். இப்படி இருந்தால் பொதுமக்களிடம் நன்றாக பழகுவார்கள். மேலும் ஓரளவு பயமும் இருக்கும். அதேபோல் சொத்து பற்றிய விவரமும் தெரிவிக்கவேண்டும். 

இவைகளை சுய சான்றிதழ் (Self Certificate)  மற்றும் சுயமதிப்பீடு (Self Assessment) கூட தந்தால் போதுமானது.
முக்கியமாக மாதம் ஒருமுறையாவது பிரபல மீடியாக்களில் பொதுமக்கள் சிலருடன் / கல்லூரி மாணவ மாணவியர்களுடன் / சிறுவர்களுடன் / ஆன்றோர்களுடன் / முதியோர்களுடன் / விவசாய , மீனவ மக்களுடன் / தொழில் அதிபர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ , எம்.பி. மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அவர்களின் பிரச்சனைகளை நேருக்குநேர் கேட்டு உடனே தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். 


இப்போது பெரும்பாலும் நகரில் தான் மாற்றங்கள் , உதவிகள் கிடைக்கின்றது. விவசாய, தொழிலாள , மீனவ பிரச்சனைகளைக் கண்டுகொள்வது இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தான் அவர்கள் பேசவருகிறார்கள். பல உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள். முடிவில் ஏமாற்றம் தான் மிச்சமாகிறது. பெரும்பாலும் தலைவர்கள் யாரோ எழுதிக் கொடுத்ததை தான் பேசுகிறாகள். மக்களுக்குத் தேவையானதை கஷ்டப்படும் மக்களிடம் கேட்டால் தானே தெரிய வரும். சமீபமாக மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டு அவைகளைத் தீர்த்தது கிடையாது. அது கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்  தலைவர் எம்.ஜி,யார் அவர்களோடு சரி. அதற்கு பின் இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். 
தலைவர்கள் மக்கள் முன் நேரடியாக பேசினால் தான் பல பிரச்சனைக்குத் தீர்வுகள் கிடைக்கும். குறிப்பாக லஞ்சம், ஊழலுக்கு சாவு மணி அடிக்கலாம். இனிமேல் தலைவர்கள் நேரடியாக சந்தித்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் வரத் தான் போகிறது. மக்கள் குறைகள் தீரத் தான் போகிறது. செழுமையான நாடு என்கிற பெயர் கிடைக்கத் தான் போகிறது. பொறுத்துப் பார்ப்போம். விடிவு கட்டாயம் பிறக்கும்.    

இந்தத் தகவல்கள் உங்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$                     

Sunday, 26 January 2014

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ? 78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* Court had given punishment to some criminals and more innocents. Also lawyers pleading wisely and release many criminals as well as some innocents . Tell yourself that this is correct or not ?
* More bribery and corruption takes place mostly in politics and public sectors.
* Media and news papers are exposed high status people's punishment are exposed big and their mistakes are exposed very very small. At the same time ordinary people's mistakes are exposed very very huge manner and their punishment are exposed very very little. Is this called 'Kali kalam'?
* Up to you have the money or position , all your mistakes will hide. Once you loose money as well as position, your previous mistakes even it is small will be exposed very very big manner.  
* Some people want to become 'laughter king' . But they are reluctant to be act as buffoons.

Success step will continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* நீதிமன்றம் தனது தீர்ப்புகளினால் சில குற்றவாளிகளையும், பல நிரபராதிகளையும் தண்டித்திருக்கின்றது. அதேபோல் வழக்கறிஞர்கள் தங்களது வாதத்திறமைகளினால் பல குற்றவாளிகளையும், சில நிரபராதிகளையும் விடுதலை தந்திருக்கிறார்கள். இது சரியா ? தவறா? என்று நீங்களே சொல்லுங்கள்?
* லஞ்சமும் ஊழலும் அதிகம் நடைபெறும் இடங்கள் பெரும்பாலும் அதிகாரமிக்க அரசியலிலும், பொதுத்துறையிலும் தான்..
* ஊடகங்கள் , மீடியாக்கள் பெரிய பதவி, பெரிய அந்தஸ்துள்ள  மனிதர்களின் பெரிய பெரிய தவறுகளை மிகச் சிறிதாவும் , தண்டனைகளை மிக மிக பெரிதாகவும் சித்தரித்து கூறுகிறார்கள் / காட்டுகிறார்கள் . அதே சமயத்தில் சாதாரண மனிதர்களின் சிறு சிறு தவறுகளை மிகமிகப் பெரிதாகவும்,  தண்டனைகளை மிகச் சிறிதாகவும் எடுத்துக்கூறுகிறார்கள். இதுதான் 'கலிகாலமா'?       
* உன்னிடம் பணம் , பதவி இருக்கும் வரையில் நீ செய்த தவறுகள் வெளியில் வராது . அதேசமயத்தில் உன்னிடத்தில் பணம், பதவி இல்லாது போனவுடன் நீ செய்த சிறு தவறும் பூதாகரமாக வெளியில் கிளம்பும்.
* நிறைய பேர் 'சிரிப்பு மன்னனாக' விரும்புகின்றனர். ஆனால் கோமாளித்தனமாக நடந்துகொள்ளத் தயங்குகின்றனர்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

*****************************************************************************************************************************

சிரி சிரி சிரிப்புகள் - Jokes

சிரி சிரி சிரிப்புகள் - Jokes  
மதுரை கங்காதரன் 



* " இன்ஸ்பெக்டர் ஐயா , என்னோட நூறு பவுன் நகை , ஒரு லட்சம் ரூபா திருடங்க திருடிட்டாங்க. நீங்க தான் உடனே கண்டுபிடிச்சு தரனும் "

" அந்த நகை, பணம் எப்படி கிடைத்தது"

" முக்கு வீட்டிலே நான் திருடியது சார்"


**************************************************************************

* தேவலோகத்தில் 

 "பிரபு ! இந்த திருடன் திருடிய நூறு பவுன் நகையிலே  இந்த இன்ஸ்பெக்டர் ஐம்பது பவுன் நகைகள் எடுத்துக்கொண்டான் பிரபு !"

" அடப்பாவி, திருடிய எனக்கு திருட்டுப் பட்டம். என்னிடம் திருடிய உனக்கு இன்ஸ்பெக்டர் பதவியா? இந்த கொடுமை எப்படி பூலோகவாசிகளிடம் சொல்வது?"

**************************************************************************

" தலைவரே! எதுக்காக பையன் அடம்பிடிக்கிறான்"

" உலகம் சுத்திப்பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் வயசாகட்டும் !  ஜனாதிபதி பதவி கிடைச்ச பிறகு சுத்தலாம் ன்னு சொன்னா கேட்க மாட்டீங்கிறான்"

***************************************************************************************************************
'

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! பார்க்கிலே என்னோட லவ்வரோட மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத நாலு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  'எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க' நானும் சரின்னு ஒத்துகிட்டேன் "

******************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே  நான் என் மாமியாரை, கணவரை சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.  நான் நல்லா திட்டுறதை இரண்டு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல திட்டுங்கன்னு கூப்பிட்டாங்க"  

****************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! ஆபிஸில் மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத ஒரு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க"

**************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே கண்டதை போட்டு சமைப்பேன். வாயில் வைக்கவே முடியாது . அதை கேள்விப்பட்ட  டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல பலவற்றை கலந்து புதுப்புது பேரை வைச்சு கண்டதைப் போட்டு சமைங்கன்னு கூப்பிட்டாங்க"

****************************************************************************

* " பல பட அதிபர்கள்  அந்த குறிப்பிட்ட தியேட்டர்லே தான் தங்களுடைய படத்தை வெளியிடனும்ன்னு ஒத்த கால்லே நிக்கிறாங்க? என்ன காரணம்?"

  " ஓ .. அதுவா! தியேட்டர்லே ரசிகர்கள் கை தட்டுராங்கலோ இல்லையோ அஞ்சு நிமிஷத்திற்கு ஒரு முறை பேக் - க்ரவுண்ட் மியூசிக் ஆக விசில், கை தட்டும் சத்தம், சிரிப்பு , கமெண்ட்ஸ்ன்னு ஒலி பரப்புவார்கலாம் "

*************************************************************************************

*  "அந்த டாக்டர் போலின்னு எப்படி தெரிஞ்சது"

"'ஊசி போடுறதுக்கு கை காட்டுங்கன்னு' சொல்றதுக்கு பதிலா காதை காட்டுங்கன்னு சொன்னாரு "

************************************************************

*  "வர வர மனுசனா பொறந்து பிரயோசனமே இல்லை போலத் தெரியுது"  

"ஏன் ? எதுக்காக அப்படி சலிச்சுக்கிறே"

" பின்னே என்ன , பேங்க்காரங்க எனக்கு லோன் கிடையாது ! ஆனா என் மாட்டுக்கு லோன் தர்றதா சொன்னாங்க" 

(((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


*    " இது என்னங்க புது வியாபாரமாத் தெரியுது"

"எதைச் சொல்றீங்க"

" பணம் கொடுக்கிறதைப் பொறுத்து எந்த கட்சியில் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ , எம்.பி சீட் வாங்கித் தரப்படும்" ன்னு ஒரு போர்டு தொங்குது"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



" ஏம்பா ! பல குரல்லே மாத்தி மாத்தி நல்லாப் பேசுறேயே ,
நீ எந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப் போறே"

" 'நேரலை' நிகழ்ச்சியிலே நானே பல ஆண் , பெண், குழந்தைங்க குரல்லே உலகத்திலே உள்ள பல இடங்களிலிருந்து பேசுவதோடு, நிகழ்ச்சியைப் பத்தி நல்லாப் புகழ்ந்து பேசுறேன்"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^   




        

'தேர்தல்' ஒரு விளையாட்டா? மக்களின் இரட்சகனா ? புதுக்கவிதை

'தேர்தல்' ஒரு விளையாட்டா? மக்களின் இரட்சகனா ?
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

விளையாட்டில் நடப்பது !



விளையாடும் அணிகள் வீறுகொண்டு விளையாடுவார்கள் 
ஆடுகளத்தில் நடுவர்(கள்) தீர்ப்பு சொல்லுவார்(கள்) 

ரசிகர்களைப் பற்றி  விளையாடுபவர்கள் கவலை கொள்கிறார்களா?
ரசிகர்கள் தான் விளையாட்டு வீரர்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள்!

மக்களுக்காகவா  விளையாடுகிறார்களா?
தனக்காகத் தானே விளையாடுகிறார்கள் !


பணத்திற்காகத் தானே விளையாடுகிறார்கள் !
விளம்பரத்திற்க்காகத் தானே விளையாடுகிறார்கள்!

விளம்பரம் , எண்கள் கொண்ட கால் கை உடைகள் 
கண்களைக் கவரும் ரசிகர்களின் கும்மாளங்கள் 

அவர்கள் வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தாலும் கவலை படுவதில்லை!


மீண்டும் களத்தில் பலருடன் ஆடுகிறார்கள் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!

அணியின் வீரர்கள் நன்றாக ஆடினாலும் 
அதன் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!

மக்களுக்கு இது ஒரு வெட்டிப் பொழுதுபோக்குச் செலவு  
ஏதாவது மக்களுக்கு பயன் படியாக இருக்கின்றதா?


வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றதா?


தேர்தலில் நடப்பது ? 


வேட்பாளர்கள் பணம் கொடுத்து தொகுதியை பெறுகின்றனர் 
கட்சிகள் வீறுகொண்டு பிரச்சாரம் செய்வார்கள் 

தேர்தல் ஆணையம் தீர்ப்பு விதிமுறைகள் விதிக்கும் 
அதற்கு மதிப்பு கொடுக்காமல் கட்சிகள் வேலை செய்யும் 

மக்களைப் பற்றி  கட்சிகள் கவலை கொள்கிறார்களா?
மக்கள் தான் கட்சிகளைப் பற்றி விமர்சிகிறார்கள்!

மக்களுக்கு சேவை செய்யவா கட்சிகள் இருக்கின்றது ?
பின் ஏன் விலைவாசிகள் வானத்தைத் தொடுகின்றது?

விவசாயிகள் ஏன் தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள்? 
ஏழைகளின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கின்றது?


லஞ்சம் ஊழல் ஏன் தலை விரித்து ஆடுகின்றது ?
பிடிபட்டாலும் சிறை சென்று வெளியில் வந்துவிடுகிறார்கள் !  

பணத்திற்காகத் கட்சிகள் நடத்துகிறார்கலா ?
சுயநலத்திற்குத் தானே கட்சிகள் ஆட்சி செய்கின்றன !

பரப்பரப்பாக செய்திகளைக் கொடுத்து  காசாக்குகிறார்கள் !
கூட்டணிக்காக பேரம் நடத்துகிறார்கள்  

அள்ளி வீசும் வாக்குறுதிகள் வாரிக்கொடுக்கும் இலவசங்கள் 
பணத்தால் தங்கள் சின்னத்தில் குத்தும் ஓட்டுகள் 

கட்சி வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தால் கவலை படுவதில்லை!

மீண்டும் தேர்தல் களத்தில் புதிய கூட்டணிகளுடன் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!


கட்சி தொண்டர்கள் நன்றாக உழைத்தாலும் 
கட்சித் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!

மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக ஆக்கிவிட்டார்கள்  
மக்களின் குறைகளுக்கு நிரந்தரமான தீர்வு கொடுக்கிறார்களா?   

வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அலசி ஆராய்கின்றார்களா?

இப்போது சொல்லுங்கள் 'தேர்தல்' ஒரு விளையாட்டா?
ஆமாவா? இல்லையா?என்று !


**********************************************************************************

நன்றி...

வணக்கம்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Saturday, 25 January 2014

இதுவும் சாணக்கிய தந்திரம் - சிறுகதை

இதுவும் சாணக்கிய தந்திரம் -
 சிறுகதை 
மதுரை கங்காதரன் 

அன்றைய தினம் 'உமா எக்ஸ்போர்ட்ஸ் & இம்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காரணம், புதிதாக வர இருக்கும் அதிகாரி சோமசுந்தரம் ! மிகவும் அனுபவமிக்க எந்த ஒரு பிரச்சனையும் எளிதாகவும் அதேவேளையில் இருவருக்கும் நஷ்டமில்லாமலும் , சமாதானமாகவும் தீர்ப்பதில் வல்லவர். சுயநலமில்லாமல் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்.  

'இதற்கு முன் அவர் எங்கு பணியாற்றினார்? எந்த மாதிரியான குணமுள்ளவர்' எனபதைப் பற்றி அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நிறையவே தெரிந்து வைத்துக்கொண்டிருந்தனர். அனைவர் மனதிலும் 'அப்பாடா! எங்களுக்கெல்லாம் விமோட்சணம் கிடைத்துவிட்டது. வருகின்றவர் மிகவும் அன்பானவர். இரக்க குணம் கொண்டவர். தொழிலாளர்களின் குறைகளை தினமும் கேட்டு , நிர்வாகத்திடம்  சொல்லி அதை சாமர்த்தியமாக நிவர்த்தி செய்யும் திறமை படைத்தவர். கூட்டுமுயற்சியின் பலனாக உற்பத்தியை பெருக்கி அந்த லாபத்தின் ஒருபகுதியை தொழிலாளிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர். தொழிலாளிகளுக்கு வேண்டிய வசதிகளையும், சலுகைகளையும் வாங்கித் தருவதில் கை தேர்ந்தவர். அவரால்  கட்டாயம் நிறுவனம் வளரும். அதில் வேலை செய்பவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்' என்று பலவாறு கனவும் கற்பனையும் ஒவ்வோர் தொழிலாளிகளிடம் இருந்தது. 

இப்போது இருக்கும் அதிகாரி கோதண்டம் இவருக்கு நேர்மாறானவர். எல்லாமே சுயநலம் தான். தொழிலாளிகளுக்கு இம்மியளவு நல்லது செய்யும் மனமில்லாதவர். வேலை மட்டும் பிழிந்து வாங்குவார். அவர்களுக்கு அதிக வேலைநேர சம்பளம், சாப்பாடு படி, போக்குவரத்து , தொழிலாளர்களின் குடும்பத்தைப் பற்றி அக்கறையில்லாதவர்! தொழிலாளர்கள் உழைப்பினால் கிடைக்கும் எல்லாப் பலனும் அவருக்கு மட்டும் தான். அதாவது சம்பளம், போனஸ் மற்றும் பதவி உயர்வு எல்லாமே இவருக்கு கிடைக்கும்படி செய்து கொள்வார்.

ஆகையால் சோமசுந்தரம் வரவினால்  'இன்றோடு நமது துன்பம் தொலைந்தது. வாழ்கையில் விடிவு காலம் பிறந்தது' என்று நம்பிக்கையோடு இருந்தனர். அவருக்குச் சம்பளம், அதிகாரம்  மற்றும் வசதிகள்  கிட்டத்தட்ட கோதண்டம் அதிகாரிக்குச் சமம். 

அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சோமசுந்தரம் எவ்வித பரபரப்பில்லாமல் அனைவரைப் போல் பணியில் சேர்ந்தவுடன் தனது வேலையில் மூழ்கினார். ஆனால் தொழிலாளிகள் நினைத்தது போல் அவர் ஏதும் புதிதாக செய்யவில்லை. மேலும்  அதிகாரி கோதண்டத்தின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி வந்தார்.

இப்போது எல்லோரின் மனதில் ' என்னடா , நாம ஒண்ணு நினைச்சோம். அவரு நல்லவரு, வல்லவருன்னு. ஆனா இவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்' என்று சிலர் சலித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் ' பணமும், அதிகாரமும் கொடுத்து காலம் அவரை சுயநலவாதியாக மாற்றிவிட்டது போலும் " என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டனர். மற்றவர்கள் 'நாம கொடுத்து வைத்தது  அவ்வளவு தான்' என்று அங்கலாய்த்துக்கொண்டனர்.

அதிகாரி கோதண்டமும், சோமசுந்தரம் தன்னுடன் சேர்ந்து தனக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது அவருக்கு பலம் என்பதோடு தன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு  இருக்கிறார் என்பது அவருக்கு ஆறுதலைத் தந்தது.

வழக்கம் போல் ஒரே மாதிரியான உற்பத்தி , வழக்கமான அலுவலக வேலைகள் நடந்து வந்தமையால்  நிர்வாகம் சோமசுந்தரத்தின் வரவினால் ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. நாள்கள் ஓடின.

எதிர்பாராத சூழ்நிலையில் அதிகாரி கோதண்டம் ஒரு மாதம் விடுப்பு எடுக்க நேர்ந்தது. நிர்வாக மேலிடம் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சோமசுந்தரத்தை அழைத்து " மிஸ்டர் சோமசுந்தரம்! பார் தி அன் எக்ஸ்பெக்ட் ரீசன் மிஸ்டர் கோதண்டம் இஸ் கோயின் டு டேக் ஒன் மந்த் லீவ் . அவரின் வேலைகளை நீங்கள் தான் கவனிக்கவேண்டும். வேலையில் எவ்வித இடையூறும் தொய்வும் வரக்கூடாது.  சோ யூ ஹவ் டு டேக் கேர் ஆப் ஹிஸ் ரெஸ்பான்சிபிலிடி" என்று சற்று கடுமையாக  உத்தரவு போட " எஸ் சார் , ஐ வில் டேக் கேர்  சார் ! " என்கிற அமைதியான பதில் தந்துவிட்டு தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்.

மறுநாள் சோமசுந்தரம் எப்போதும் போல இல்லாமல் மிகவும் வித்தியாசமாக அனைவரிடத்தில் நடந்து கொண்டார். அலுவலகத்தில் நுழைந்தவுடன் அன்றைய தினத்தில் நடக்க இருக்கும் வேலைகளைப் பற்றிய திட்டத்தினை அனைத்து துறை பொறுப்பாளர்களை அழைத்து பேசினார். அவ்வாறு பேசும்போது மிகவும் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவர்களது திறமைகளை பாராட்டினார். ஏதேனும் உதவி வேண்டுமானால் நான் செய்யாத் தயார். நான் உங்களின் ஒருவன். அல்லது பிரச்சனை ஏற்பட்டால் அது எனது பிரச்சனை என்று எண்ணி தீர்த்து வைக்கிறேன் என்று உறுதி தந்தார். அவ்வாறு பேச பேச அனைவருக்கும் புது தெம்பு ஏற்பட்டது. மேலும் தினமும் இவ்வாறு கூடுவோம். கூட்டு முயற்சியால் எதுவும் சாதிக்கலாம்" என்று அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்தார்.

அதோடு நிற்காமல் ஒவ்வொரு தொழிலாளியையும் இனிமையாக விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். காலையில் பலர் சாப்பிடாமல் வந்திருப்பதை கணக்கில் கொண்டு மறுநாள் முதல் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தார். போக்குவரத்திற்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்தார். மருத்துவம், கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். தொழிலாளிகளோடு தொழிலாளியாய் தானும் அவர்களின் உழைப்பில் பங்கு கொண்டார். அத்தகைய செயல்களைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மிதந்தனர். தாங்கள் காண்பது நனவா ? அல்லது கனவா? பலமுறை சரி பார்த்துக்கொண்டனர். சோமசுந்தரத்திற்கு இத்தகைய 'ஞான உதயம்' எதனால் பிறந்திற்று? இதுவரை எதனால் இல்லாமல் போயிற்று? என்கிற ஆராய்ச்சியில் விடை தெரியாமல் விழித்தனர். 

அவரின் இத்தகைய நடவடிக்கையினால் நாளுக்கு நாள் உற்பத்தி பெருகியதோடு அனைவரும் ஆர்வத்துடன் வேலை செய்தமையால் தரமும் அதிகமாகியது. தொழிலாளிகள் பலரும் அனாவசிய விடுப்பு எடுக்காமல் தினமும் வருகை தந்தமையால் நாளுக்கு நாள் திட்டமிட்டதற்கு மேலாக உற்பத்தியைக் கொடுத்தனர். அனைவரும் விருப்பத்துடன் சற்று அதிக நேரம் வேலை செய்தார்கள். அவற்றிக்கு சரியானபடி  கூடுதல் சம்பளமும், சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தார்.  இரண்டு மாத உற்பத்தியை ஒரே மாதத்தில் கொடுத்து சாதனை படைத்தனர்.


நிர்வாகம் அவரை தனியே அழைத்து பேசியது. " மிஸ்டர் சோமசுந்தரம், யூ ஹாவ் டன் அன் எக்ஸ்செல்லேன்ட் ஜாப். வி அப்ப்ரிசியாட் யுவர் பெர்பார்மன்ஸ். தரம், அதிவேக உற்பத்தி, சரியான நேரத்தில் டெலிவரி , நிறைந்த லாபம் கொடுத்த  உங்களுக்கு நிர்வாகம் அந்த லாபத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கின்றது. அது போல் மென்மேலும் சிறப்பாக பல சாதனைகளைப் படைக்க வேண்டுகிறோம். இந்தாருங்கள் உங்களுக்கான ஊக்கத் தொகை " என்று சில பணக்கட்டுகளை சோமசுந்தரத்திற்கு கொடுத்தார்கள்.

ஆனால் அதை கையால் வாங்கிக்கொள்ளாமல் "சாரி சார்! இதற்கு முன் யார் எப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த பணம் உழைப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணம். அது தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணம். அவர்களின் முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் அதற்குக் காரணம். இதை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்" என்று ஆணித்தரமான பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் சற்று மிரண்டது. இப்படியும் நேர்மையாக இருப்பார்களா? என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்காத நிர்வாகம் "உங்களின் தாராளமான குணத்தை நான் பாராட்டியே தீரவேண்டும். உங்கள் விருப்பப்படி அனைவருக்கும் லாபத்தின் அதிக பகுதியை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்படி செய்கிறோம்" என்று உறுதி கொடுத்த பின்னரே சோமசுந்தரம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இச்செய்தி காட்டுத்தீ போல் அனைவரின் காதுகளில் எட்டும்போது தேன் பாய்கின்றவாறு உணர்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி அன்றோடு கரைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனெனில் கோதண்டம் ஒரு மாத விடுமுறை முடித்துக் கொண்டு மறுநாள் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டால்  ' நம் நிலைமை பழைய குருடி , கதவைத் திறடி' போலாயிற்றே என்று நொந்து கொண்டார்கள். அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வருமா? என்று நப்பாசையுடன் அன்று வேலைகளை முடித்து வீட்டிற்குச் சென்றனர்.

மறுநாள்..

கோதண்டத்திற்கு பதிலாக சோமசுந்தரமே அலுவலகத்தில் நுழைந்தார். அது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது. ஏன் கோதண்டம் வரவில்லை? அனேகமாக கூடுதல் விடுப்பு கேட்டிருப்பார்' என்று நினைத்துக்கொண்டு அனைவரும் சந்தோசப்பட்டனர். 


சோமசுந்தரம் அனைவரின் முன்பு தோன்றினார். "தொழிலாள தோழர்களே ! சற்று முன் நிர்வாக எனக்கு ஒரு இ . மெயில் அனுப்பியிருந்தது. அதில் நம் அதிகாரி கோதண்டம் அவர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார். இனிமேல் என்னை அவரின் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் உங்களுக்கெல்லாம் என்னுடைய முந்தைய செயல்கள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேன் என்று? எல்லாமே சாணக்கியன் தந்திரம் தான். அவரின் தந்திரத்தை இக்காலத்தின் படி சற்று மாற்றி நடந்து கொண்டேன். வெற்றி பெற்றேன். எப்படி என்று சற்று விரிவாகச் சொல்கிறேன். நான் இங்கு வேலைக்குச் சேரும்போது எல்லோரையும் எனது கண்களைப் போல் காக்கவேண்டும் என்கிற உறுதியோடு இருந்தேன். ஆனால் நாம் நமக்கும் மேலே அதிகாரம், பதவி , பணம் படைத்தவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியாது. அதற்கு காலம் நேரம் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். என்னதான் நீதி, நேர்மை, உறுதி, நம்பிக்கை இருந்தாலும் காலம் தவறி எதிர்கொண்டால் நமக்கு தோல்வி உறுதி தான். ஆகவே புதிதாக வந்தவுடன் அதிகாரி கோதண்டம் அவர்களை பகைத்து என் நோக்கத்தை நிறைவேற்ற நினைத்தால் எனக்கு நிச்சயம் தோல்வி தான் கிடைத்திருக்கும். 

நானும் அந்த அதிகாரி கோதண்டம் அவருடன் சேர்ந்து உங்களுக்கு 'துரோகம்' செய்தது எனக்கு பெரிய கஷ்டத்தை தந்தது. ஆயினும் 'பொறுத்தார் பூமி ஆள்வார்'  என்கிற கூற்றின்படி பொறுத்தேன். ஒரு நாள் அதிகாரி கோதண்டத்தின் அதிகாரம் எனக்கு கட்டாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அப்படி அதிகாரம் கிடைத்த மறு நொடியிலிருந்து நான் நினைத்து சாதிக்க வேண்டும் என்கிற கங்கணம் கொண்டேன். அதுவரை என் குணம் மாற்றிக்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியமும் கொண்டடேன். நான் மனதளவில் அவ்வாறு மாறவில்லை. நேரம் கைகூடும் வரை உங்களை பகைத்துக் கொண்டு அவருடன் கூட்டு சேர்ந்து துரோகம் செய்தேன். அதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். 

அவர் விடுப்பிற்கு சென்றது எனக்கு சாதகாம ஆக்கிக்கொண்டேன். அந்த சமயத்தில் என்னால் இயன்றளவு உங்களுக்கும், நிறுவனத்திற்கும் நிறைய செய்யவேண்டும் என்று இரவும் பகலும் கஷ்டப்பட்டேன். அதற்கு மறுவார்த்தை கூறாமல் என்னுடன் சேர்ந்து உழைத்தபடியால் தான் இத்தகைய சாதனை நிகழ்ந்தது. நிர்வாகம் உங்கள் அனைவரையும் பாராட்டியது. இனி வரும் காலம் நம் கையில். நீதி, நேர்மை, சத்தியத்தோடு உழைப்போம். வெற்றி பெறுவோம். புது சரித்திரம் படைப்போம்" என்று இலட்சிய உரையாற்ற அனைவரும் 'நாளை நமது தான்' என்கிற நம்பிக்கையோடு பணியாற்றச் சென்றனர்.

முற்றும்...

********************************************************************************************

நன்றி..

வணக்கம்..

*********************************************************************************************