Pages

Wednesday, 10 August 2016

From VIP to V V I P - வேலை வேண்டுமா? இதைப் படி!


 V            V                  I           P
வேலை வேண்டுமா? இதைப் படி!
(From VIP to VVIP)
வேலை தேடும் இளைஞர்களுக்காக சில வழிகாட்டுதல்கள்
ஆசிரியரின் பருந்துப் பார்வை
படைப்பு : மதுரை கங்காதரன்
தங்களுடைய பாட புத்தகங்களையே ஒழுங்காக வாசிக்க விரும்பாத இளைஞர்களைப் பிடித்து உட்கார வைத்து, இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்வது அவ்வளவு நியாயமாக எனக்குப் படவில்லை. ஆகையால், யார் ஒருவர் நன்கு கல்வி கற்று, பின்பு வேலைக்குச் சென்று சம்பாதித்துவாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் இந்தப் புத்தகத்தைப் படிப்பது நல்லது. பொழுதுபோக்கிற்காக அல்லது கௌரவத்திற்காக வேலைக்கு செல்ல நினைப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பும் நிலையில் இருப்பவர்கள், ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்கள், ‘வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் ஆகியோர் இந்த புத்தகத்தைப் படிப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.


அதாவது இந்த படித்தகத்தைப் படித்து 'பூஜ்ஜியம்' பெறுதைவிட, படிக்காமல் 'பூஜ்ஜியம்' வாங்குவதே மேல் என்று நான் கருதுகிறேன். ஆகையால் அவர்கள் இந்த புத்தகம் படிக்கும் நேரத்தில் 'மொபைலில் கேம்' விளையாடப் போகலாம், ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம் அல்லது திரைப்படத்திற்குச் செல்லலாம். அவர்களுக்கு அன்றையப் பொழுது அட்டகாசமாய்ப் போய்விடும். அது உறுதி. ஆனால் இதை நினைத்துப் பின்னாளில் வருத்தப்படாமல், புலம்பாமல் என்ன கஷ்டம் வந்தாலும் அதை அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும். ஒருவேளை இந்த புத்தகம் உங்கள் கையில் கிடைத்தால், அதை யாருக்கு உபயோகப்படுமோ அவர்களுக்குக் கொடுத்தாலே மிகப் பெரிய உதவியாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவராக வர நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களே இந்த புத்தகத்தைப் படிப்பதற்குப் பொருத்தமானர்கள் ஆவார்கள்.

ஆங்கிலத்தில் VVIP என்றால் Very Very Important Person அதாவதுமிகமிக முக்கியமான மனிதன்என்று அர்த்தம். ஆமாம். ‘இளைஞர்கள் தான் ஒரு குடும்பத்திற்கும், நாட்டிற்கும் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி அவர்களை 'விலை மதிக்க முடியாத சொத்து' என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த வயதிலிருந்து தான் அவர்களுடைய அறிவும் ஆற்றலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட ஆரம்பிக்கின்றது. இன்றைக்குப் பார்க்கும் வளர்ச்சிகள், பலர் இளைஞராக இருந்த போது விதைத்த விதைகளே. இளைஞர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டினால், அவர்களுக்குள் இருக்கும் திறமை கட்டாயம் வெளிப்படும். அது வீட்டிற்கும், நாட்டிற்கும் பல நன்மைகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு தாயின் கருவறையிலிருந்து பத்து மாத குழந்தை பிறந்து வெளி உலகத்திற்கு அறிமுகமாவதைப் போலபள்ளி, கல்லூரிக் கூட்டிலிருந்து இந்த வெளி உலகத்திற்கு முதலில் அறிமுகப்படுத்துவது இந்த 'வேலை' ஒன்றே. அந்த வேலைக்கான வழிகாட்டுதல் தான் இந்த புத்தகம். VIP  VVIP ஆக மாற்றுவது இந்த வேலைக்குத் தான் அதிக சக்தி உள்ளது என்பதை இப்போது பெரிய பெரிய பதவியில் இருக்கும் பலரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகம் எழுதுவதற்குக் காரணம், தினம் தினம் பல ஆண்களும், பெண்களும் வேலைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? என்பதை பார்க்கும் போது என் மனம் வருந்தியது. ஏன் இந்த நிலைமை? என்று ஆராயும் போது, இளைஞர்களுக்கு யாருமே வேலை கிடைப்பதற்கான வழிகாட்டுதல்கள் சொல்லுவதில்லை என்பதை அறிந்தேன். அதற்கான புத்தகம், அதுவும் தமிழ்மொழியில் மிக அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு இருந்தாலும் இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி எளிதாக விளக்கப்படாததை உணர்ந்தேன். ஏன்? அவர்களுக்காக வேலைக்கான வழிகாட்டுதல்களை புத்தக வடிவில் தரக்கூடாது என் மனதில் பட்டதன் பிரதிபலிப்பு தான் இந்த புத்தகம்.  

இருபதிலிருந்து அறுபது வரை, சிலருக்கு அதற்கு மேலும் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு இருப்பது 'வேலை' ஒன்றே. இந்த வேலை தான் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்குகின்றது என்பது மெய்யான கூற்று. நாலு பேருக்கு நடுவில் கௌரவமாய் நடமாட உதவுவது இந்த வேலையே. முன்பு வீட்டிற்கு ஒருவர் வேலை பார்த்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது வீட்டிற்கு இருவர் வேலைக்குப் போனால் தான் குடும்பத்தை சமாளிக்கலாம் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. வேலை இல்லாதவனுக்கு மக்கள் வைத்திருக்கும் பெயர் வெட்டி ஆபிஸர்அல்லது தண்டச்சோறு’. ஒருவன் படித்து முடித்தவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி, "தம்பி, எங்கே வேலை பார்க்கிறான்?" என்பது தான். ஒரு இளைஞர் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் அவர் குடும்பத்திற்குப் பாரமாக கருதப்படுகிறார். ‘வேலை, புருஷ லட்சணம்என்று மாறி வேலை, வாழ்க்கை லட்சணமாகஆகிவிட்டது எனலாம். படித்து முடிந்தவுடன்  ஒரு இளைஞருக்குத் தேவையாய் இருப்பது 'வேலை' ஒன்றே.                    

கல்லூரி வாழ்க்கை முடித்த பிறகு, இளைஞர்கள் வேலை தேடும் போது, அவர்களின் கண்களை கட்டிக் காட்டில் விட்டது என்பது போலத் தான் உணர்கிறார்கள். எங்கு யாரிடத்தில் எப்படி வேலை கேட்பது? என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. கல்லூரியில் அதற்கான யோசனையோ, வழிகாட்டுதலோ அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரியில் இடம் கிடைப்பது போலல்ல இந்த வேலை சமாச்சாரம்! ஏனென்றால் அதில் சேருவதற்கு மதிப்பெண், இட ஒதுக்கீடு, நன்கொடை, சிபாரிசு போன்றவைகள் உதவலாம்ஆனால் வேலையில் சேருவதற்கு முழுக்க முழுக்க அவரவர்களின் முயற்சியும், தன்னம்பிக்கையும் தேவைபடுகிறது. அவர்களுக்குச் சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் போனால் காலவிரயமும் (Time Waste), பணவிரயமும் (Money waste) ஏற்படும். சிலர் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, கிடைத்த நல்லவேலையை விட்டுவிட்டு கிடைக்காத வேலைக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசு வேலையை நம்பி, சுடச்சுடக் கிடைக்கும் தனியார் வேலையை உதரித் தள்ளுவது சரிதானா? இந்த நிலைமைக்குக் காரணம் அவர்களின் அறியாமையும், எவரும் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்காததே.

'வேலை' என்பது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான முதல் படி. அவர்கள் ஆண்களாக இருக்கலாம் அல்லது பெண்களாகவும் இருக்கலாம். இந்த பரபரப்பான உலகில் அவர்களுக்கு யார் நிதானமாக வழிகாட்டுவார்கள்? மேலும் சுயநலம் பெருகிவிட்ட இந்த காலத்தில் யார் அவர்களுக்கு அக்கறையுடன் பொறுமையாக யோசனை சொல்லுவார்கள்? 'பணம் கொடுத்தால் தான் எதுவும் நடக்கும்' என்று இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு இலவசமான ஆலோசனை வழங்குவது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இந்த 'கை(யே)டு' (Hand book or Guide) தான்.

இந்த 'கையேடு' தயாரிக்க எனது முப்பது வருடத்திற்கும் மேலான பல்வேறுத் தொழில்துறையில் ஏற்பட்ட அனுபவமும், மனித வளம் நிர்வாகிப்பதில் ஏற்பட்ட அனுபவமும் சேர்ந்து உதவியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மாறி வரும் உலகில் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை  அனுசரித்து நடந்துகொள்வதில் தான் திறமையும், வெற்றியும் இருக்கின்றது.

'வேலை' என்று வரும் போது இப்புத்தகத்தில் அதன் மூன்று நிலைகளை விளக்கியுள்ளது.
1. வேலை கிடைப்பதற்கு உண்டான வழிகளும், அதற்குத் தயாராகும் முறைகளும்
2. புது வேலை கிடைத்தவுடன் நடந்து கொள்ளும் விதம்
3. கையில் பணம் கிடைத்தவுடன் உதிக்கின்ற எண்ணங்களும், பாதுகாக்கும் வழிகளும் 

இப்புத்தகத்தில் இந்த காலத்தில் வேலை கொடுப்பவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? அவர்கள் இளைஞர்களிடத்தில் அல்லது வேலை வேண்டுபவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்? என்பதைத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதே போல் வேலை தேடுபவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எத்தகைய அணுகுமுறை? மேற்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லாதவர்கள் வீடு எங்கேயும் பார்க்க முடியாது. வேலை எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கட்டாயம் தேவைபடுகிறது. ஆகவே இப்புத்தகம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதை முழுமையாகப் படித்து முடித்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும், வேலை வாய்ப்பு கொடுப்பவர்களுக்கும்  ஒருவித நிம்மதியையும், மனநிறைவையும் தரும். எக்காலத்திலும் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
படியுங்கள், பயன் படுத்துங்கள், பலன் பெறுங்கள்!

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
Smart Work Consultants
No. 15, First floor, North veli street,
Near Sethupathi school signal, Madurai – 625001.
Mobile: 7373993339, 8489498080; e.mai: look4jobss@gmail.com

குறிப்பு: இந்த புத்தகம் மட்டுமல்ல, எங்களிடம் பதிவு செய்து கொள்ளும் ஆண்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பினை விரைவாகப் பெற்றுத் தருகிறோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை நேரடியாக அல்லது கைபேசி மூலமாக தொடர்ப்பு கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். கல்லூரி மற்றும் நிறுவனங்கள் மொத்தமாக புத்தகம் வாங்கும்பட்சத்தில் சலுகை விலையில் கிடைக்கும்.    
****************************


பொருளடக்கம்

ஆசிரியரின் பருந்துப் பார்வை                                                                                          .
முதல் நிலை
'வேல்' போல் வேலை வேண்டுமா?                                                                            .
'வேலை' எதற்கு வேண்டும்?                                                                                                          .
வேலைக்கு முன் தெரிய வேண்டியவைகள்                                                                        .
வேலைக்கு கை கொடுக்கும் ஒழுக்கம்                                                                                   .
வேலையின் போது சமர்பிக்க வேண்டியவைகள்                                                 .
வேலை கிடைக்கும் வழிகள்                                                                                                         .
வேலை தரும் இடங்களும் அதன் தேர்வுகளும்                                                   .
பகுதிநேர வேலைகள்                                                                                                             .

இரண்டாம் நிலை
வேலையில் சேர்ந்த பிறகு நடப்பவைகள்                                                                .
நேர்மை தரும் உயர்வு                                                                                                                     .
உயர்வதற்கான வழிகள்                                                                                                        . .
மூன்றாம் நிலை
வேலை கிடைத்தவர்கள் பண விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டியவைகள்
எட்டிப் பார்க்கும் பணக்காரத்தனம்                                                                                              ..
வேலைக்கு முழுக்கு போடும் வயது!                                                                         ..
சேமிக்காத வாழ்க்கை                                                                                                                        ..
புது உறவுகளும், பழக்கங்களும்                                                                                       ..
வேலை பற்றி இன்றைய இளைஞர்களின் மனோபாவம்                                             ..
உங்களுக்குள் பல திறமைகள்                                                                                          ..
மாற்றங்களை எதிர்கொள்ளும் கல்வி மற்றும் தொழில்                                              ..
கைகொடுக்கும் கணினிக் கல்வி                                                                                     ..
இணையதளமே அனைத்திற்கும் அடித்தளம்                                                                        ..
கடைசியாக ஆனால் முடிவு இல்லை!                                                                         ..

 








Monday, 18 July 2016

தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா?





                                                                                                                                                                        17.7.16

காமராசர் பிறந்தநாள் விழாக் கவிதைப் போட்டி

             தலைப்பு :தமிழ் எழுத்தால் முடியாதா
                 தனித்தொலித்தால் விடியாதா?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்


புதுமை எங்கும் எதிலும் வேண்டுமாம்!
பழமை அழிந்தாலும் மறந்தாலும் பரவாயில்லையாம்!
தமிழ்மொழி வாழ்ந்தால் உன் அடையாளம் தங்கும்
தமிழ்மொழி அழிந்தால் உன் சரித்திரம் முடியும்.

முட்டாளின் சபையில் அறிவாளிகள் முட்டாளாகலாமா?
முனையிலா அந்நியமொழியை தமிழில் திணிக்கலாமா?
முத்தமிழின்  படைப்புகளைப் படித்துப் பார்ப்பாய்
முப்பாலின் சிறப்பை இனிமையை அறிவாய்

மூளை எடை கூட மண்டையில் மசாலா சேர்ப்பார்களா?
முதன்மைத் தமிழில் வடமொழி எழுத்துகளை சேர்க்கலாமா?
மாங்கனி இனிப்பில் கசப்புச்சுவை இருக்கின்றதா?
முத்தான தனித்தமிழ் தேனொலியில் பிறமொழி ஒலிக்கலாமா? 

புதுசொற்கள் உருவாக்க தமிழில் இல்லாத எழுத்துகளா?
புதிதாய் ஒட்டிடும் வடமொழி எழுத்துகள் தேவைதானா?
ஆண்மையான தமிழை அடிமாடாய் ஆக்கிவிடாதே
அன்னைக்கு இணையான தமிழை ஆயாவாக்காதே.

தெரியாதவர்கள் புரியாதவர்கள் அரைகுறை தமிழை பேசட்டும்
அறிந்தவர்கள் அறிஞர்கள் பிறமொழி கலந்து பேசலாமா?
நாகரீக மோகத்தில் அந்நியமொழியை கலந்து பேசினால்
நரகத்திற்குத் தள்ளபடும் தமிழ் பேசும் தமிழர்களின் இனம்

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !! வெல்க தமிழ் !!!

           *******************************

Friday, 1 July 2016

நவீன லட்சுமண ரேகை - வீடியோ

நவீன லட்சுமண ரேகை - வீடியோ 

விழாவின்போது எடுத்த சில மின் படங்கள் : 26.6.2016












Monday, 27 June 2016

நவீன லட்சுமண ரேகை - மதுரை கங்காதரன்


நவீன லட்சுமண ரேகை

 POWER POINT PRESENTATION 

நாள் : 26.6.16  காலை : 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இடம் : சௌராஷ்ட்ரா சேம்பர்  ஆப் காமர்ஸ் , மதுரை. 

மதுரை கங்காதரன் 


நேற்று (26.6.16 - ஞாயிறு) அன்று நடை பெற்ற ஆள்வது மனம் - ஆழ்வதும் மனம் என்கிற சிந்தனை திண்ணை கூட்டத்தில் சுமார் 35 சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் காலை 11.00 மணி அளவில் தொடங்கி மாலை 5.00 மணி வரை நன்கு நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை சிந்தையாளர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று நான் உரையாற்றிய .நவீன லட்சுமண ரேகை' பற்றிய  POWER POINT PRESENTATION  ஐ உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,

பார்த்த பின் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி ..  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Friday, 24 June 2016

ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்

மன நாயகம்

ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்

ஆராய்ந்து அறிந்து வாழாத வாழ்க்கை,

 வாழத் தகுதியற்ற வாழ்க்கை - சாக்ரட்டீஸ்


பல ‘நான்’ கள் சிந்திக்க சந்திக்கும் ஒரு நாள் நிகழ்ச்சி

நாள் – 26-6-2016 ஞாயிறு.(உலக போதை எதிர்ப்பு தினம்)  
   காலை 10.30 முதல் மாலை 4.30வரை

இடம் – சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ், கீழ வெளி வீதி, மதுரை  625001


நோக்கம் –  சிந்தனையை வளைப்பது ‘நானா’?    

சிந்தனையால் வளைக்கப்படுவது ‘நானா’?   
                                       
Does “I” mould my thinking? Or my thinking moulds “I” ? என்ற 

கேள்விக்குப் பதில் காணல் 


                                                                       பங்கேற்பாளர்கள்  -

· ‘வேலையில்லாதவன்தான் சிந்தித்துக் கொண்டிருப்பான்’ என நினைக்காத 

அல்லது

·‘சிந்திப்பவன்தான் மனிதன்’ என நம்பும் 30 பேர்.


நிகழ்ச்சிகள்

· குழுவாய் அமர்ந்து சுய அறிமுகம்.

· சிந்தனைன்னு நான் சொல்றது எதுன்னா?......பொதுக் கலந்துரையாடல்

· உலக சிந்தனையாளர்கள் அறிமுகம் – குறும்படம் – வி, ஆர் 

கணேஷ் சந்தர்

· நவீன லட்சுமண ரேகை’  - பவர் பாய்ண்ட் – கு, கி, கங்காதரன்


·         கண்டதைச் சொல்லுகிறேன் – (வாழ்வை உற்றுநோக்கித் தான் 

கண்டுபிடித்த ஓர் உண்மையை பங்கேற்பாளர்களிடையே கூறி 

விவாதத்திற்கு வைத்தல)


கண்டுபிடிப்பாளர்கள்

1.   திரு. கு, கி கங்காதரன்

a.   மனிதனின் சிந்தனை முடங்கிக் கொண்டு வருகிறது. அல்லது 

மனிதன் சிந்திக்க மறுக்கிறான்

b.   குடும்பக் கடமைகளை முடித்த பின் வாழ்க்கையைத் தள்ள 

மனிதனுக்கு எந்தagenda வும் இல்லை

2.   திரு. சுதாகர்
a.  தனி மனித ஒழுக்கம் பலவீனமடைந்து வருகிறது. Human 

Value is becoming weaker

3.   திருமதி. பானுமதி

a.   குழந்தையிடமிருந்து குழந்தைமை எடுக்கப்படுகிறது

b.   மனிதனின் அன்னிய நாட்டு மோகம் அவனை அவனுக்கே 

அன்னியமாக்கிவிட்டது.



Contact:
V R Ganesh Chander
மதுரை 
98409 11021

%%%%%%%%%%%%%%%%%%%%%%%


Wednesday, 15 June 2016

பூதகுடி ஒரு பார்வை - அஜித் குமார்

பூதகுடி ஒரு பார்வைஅஜித் குமார்


சென்ற 12.6.16  ஞாயிறு அன்று மதுரை அருகே உள்ள 'பூதகுடி' கிராமத்தில் நடைபெற்ற ஒரு மாணவனின் நூல் வெளியிட்டு விழாவிற்குச் சென்று அவருக்கு வாழ்த்துரை வழங்கினேன்.

மாணவன் பெயர் : செல்வன் அஜித் குமார்
படிப்பு : பி.. தமிழ் இரண்டாம் ஆண்டு
கல்லூரி : யாதவா கல்லூரி, மதுரை.
ஊர் : பூதகுடி
எழுதிய நூலின் பெயர் : பூதகுடி ஒரு பார்வை

சிறப்பு :
கல்லூரி மாணவர்கள் என்றால் காதல் கவிதைகள் மட்டும் எழுதத் தெரியும் என்கிற நினைப்பை அகற்றி, தான் வாழும் கிராம பூமி பற்றி எழுதியதோடு அதை புத்தகமாக வெளியிட்டு வரலாற்றுப் பதிவு செய்ததே.

இவர் செய்த காரியம் இளைஞர் சமுதாயத்திற்கு முன் உதாரணம். மேலும் அவர் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் கூட.

அவர் மென்மேலும் பல நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என்று இதன் மூலம் வாழ்த்துகிறேன்.


*** மதுரை கங்காதரன்***

Monday, 30 May 2016

தமிழுக்குள் பிற எழுத்தேன், தனித்தன்மை நிலைத்திடுமா?








தமிழுக்குள் பிற எழுத்தேன், தனித்தன்மை நிலைத்திடுமா?
                         புதுக்கவிதை
                    மதுரை கங்காதரன்

                     தமிழ்தாய் வாழ்த்து

ஒலியாய் பிறந்து எழுத்தாய் தவழ்ந்து தமிழாய் வளர்ந்து
தமிழனுக்கு அடையாளமாய்த் திகழுவது தமிழ்மொழி

செழிப்பு மிக்க செந்தமிழ்மொழிக்கு 
செம்மொழி சிறப்பு கொடுத்த தமிழ்தாயே

இந்த மாமதுரை கவிஞர் பேரவையில் தான்
இனிய தனித்தமிழ் என் செவியில் பாய்கிறது

என் உள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்கிறது
ஏன் இது தமிழர்களுக்குப் புரியவில்லை

தமிழ்தாயே, அவர்களிடத்தில் தூது செல்
தனித்தமிழே பேசு என்று சொல்வாயாக! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

தமிழுக்குள் பிற எழுத்தேன்தனித்தன்மை நிலைத்திடுமா?
          புதுக்கவிதை

அன்று சிகரமாய் உயரத்தில் பறந்த தமிழ்
இன்று தகரமாய் தரையில் தவழும் நிலைமை

நீரில் மிதக்கும் நீர் குமிழிகள்
நீண்ட ஆயுளுடன் இருக்குமா?

தமிழில்  பிற எழுத்துகள் கலந்தால்
தமிழ்மொழியின் ஆயுள் நீளுமா?

இயல்பாய் நடக்க இரு கால்கள் இருக்க
ஒரு கால் வெட்டி கட்டைக் கால் பொருத்தலாமா?

இனிமையாய் பேச சொந்த தமிழ்மொழி இருக்க
இரவலாய் பிறமொழி கலந்து பேசலாமா?

தனித்தமிழ் பேசுவதோ சொர்க்கத்தில் மிதப்பது போல
பிறமொழி கலந்து பேசுவதோ நரகத்தில் வாழ்வது போல

தனித்தமிழ் பேசினால் உன் தரம் தாழ்ந்துவிடுமா?
தமிழென்ன தலையாட்டும் பொம்மையா?

இந்நாளில் தனித்தமிழ் பேசாத தமிழா, விழித்துக் கொள்
பின்னாளில் மானமிழப்பாய் மதிகெட்டுப் போவாய்

தரணியாளும் தகுதி கொண்ட தமிழ்மொழியை
தரம் தாழ்த்தும் பிறமொழிக் கலப்பு சரியா?

தமிழா, தமிழ்மொழி அழியாமல் காத்திட
தனித்தமிழில் இன்று முதலாவது பேசுவாயாக.

வாழ்க தமிழ் ! வளர்க தனித்தமிழ் ! வெல்க தமிழ்மொழி !

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++