Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- From 24.1.26 BRM by ADITI Group - Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- A compilation (upto 41 Pages -28.3.26)
Tuesday, 17 December 2019
Monday, 16 December 2019
Tuesday, 26 November 2019
24.11.19 அன்னைத் தமிழை மறக்காதே ! அடையாளத்தை இழக்காதே! - மா.க.பே, மதுரை
24.11.2019. இன்று .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின்
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .
முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி !
படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்
ரெ .கார்த்திகேயன் & கு.கி.கங்காதரன்
கை வண்ணம்
குறிப்பு : அன்றைய தினம் கவிஞர் ஆதி நரசிம்மன் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் வடை ஆகியவை தந்து சிறப்பித்தார்.
என் கவிதை இதோ...
அன்னைத் தமிழை மறக்காதே !
அடையாளத்தை இழக்காதே!
கு.கி.கங்காதரன் மதுரை 9865642333
அறிவியலில் பிழை நாட்டை அழிக்கும்
உற்பத்தியில் பிழை தரத்தைக் கெடுக்கும்
மருத்துவரின் பிழை உயிரை மாய்க்கும்
மொழியில் பிழை அடையாளத்தை இழக்கும்
செயலில் மாற்றம் மகிழ்ச்சியைத் தரலாம்
வயலில் மாற்றம் வளர்ச்சியைத் தரலாம்
எண்ணத்தில் மாற்றம் எழுச்சியைத் தரலாம்
அன்னைத்தமிழில் மாற்றம் தளர்ச்சியைத் தருமே
விதையைத் தேடி மரம் அலைகிறது
விண்ணைத்தேடி நிலவு அலைகிறது
தீயினைத் தேடி தீக்குச்சி அலைகிறது
தமிழர்களைத் தேடி தமிழ் அலைகிறது .
தமிழனே தமிழ்பேச மறக்கின்றாயே
தங்கத்தை தகரமாகப் பார்க்கின்றாயே
இமயத்தை இளக்காரமாய் நினைக்கிறாயே
அன்னைத்தமிழை வீதிக்கு இழுக்கிறாயே
அந்நியமொழி ஆதிக்கத்தில் தமிழும் வீழ்ந்தது
அழியப்போகும் மொழியில் தமிழும் சேர்ந்தது
அடையாளம் தெரியாமல் தமிழ் புதையப்போகிறது
அப்போது தமிழ் இனமே காணாமல் போகப்போகிறது
**********************
மேலும் மின்பங்களுக்கு இதில் செல்லவும்...
யூடியுப் இல் பார்க்க இதில் செல்லவும்...
நன்றி
Subscribe to:
Comments (Atom)







































































