Pages

Tuesday, 6 September 2022

28.8.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 2 - தமிழால் தலை நிமிர்வோம்

                                


மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் நடந்த மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - தமிழால் தலை நிமிர்வோம் -  படங்கள் . நாள் : 28.8.2022 நேரம் : காலை : 10.00 மணிக்கு

நிகழ்ச்சியின் தொகுப்பு: 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. முனைவர் வரதராசன், கவிஞர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். அன்றைய நாளில் கவிதை பாடிய கவிஞர்கள், பேராசிரியர் சக்திவேல்,  இரா.கல்யாணசுந்தரம், இரா .இரவி, இரா.வரராசன், கு.கி.கங்காதரன், லிங்கம்மாள், குறளடியான், முருகுபராதி, இதயத்துல்லா, அரங்க கிரிதரன், சங்கர நாராயணன், செயராமன், மா.வீரபாகு, அஞ்சூரியா செயராம், சு.பால கிருட்டிணன், கு.பால் பேரின்ப நாதன், கோ.சாந்தி திருநாவுக்கரசு, அனுராதா,  இராம பாண்டியன்,         மு.க.பரமசிவம், பொன் பாண்டி, சுப்ரமணியம், ஆகியோர் "தமிழால் தலை நிமிர்வோம்" என்ற தலைப்பில் கவிதை படித்தனர்.   

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய காதல் யாழ்கள், யாவும் தமிழாய், கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. கவிதை பாடிய கவிஞர்கள் அனைவருக்கும் இரு நூல்களும் அன்பளிப்பாக வழங்கினார், நூல்களின் ஆசிரியர் கவிதாயினி சாந்தி..

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

 

          தமிழால் தலை நிமிர்வோம் 

                            புதுக்கவிதை 

                      கு.கி. கங்காதரன் 

 

குயிலின் இனிமை தமிழில் கேட்கலாம்  

மயிலின் நாட்டியம் தமிழில் காணலாம்  

மல்லிகையின் மணமாய் தமிழில் உணரலாம்  

மங்கல ஒலியையும் தமிழில் இசைக்கலாம்  

 

மந்திர அறிவியலும் தமிழில் படிக்கலாம்  

தந்திரக் கதைகளும் தமிழில் சுவைக்கலாம்  

மருத்துவக் குணமும் தமிழில் சொல்லலாம்  

மனிதநேய உறவும் தமிழில் இணைக்கலாம்    

 

காதல் காவியமும் தமிழில் ரசிக்கலாம்

கலாச்சார பெருமையும் தமிழில் போற்றலாம் 

ஆலய வழிபாடும் தமிழில் பாடலாம்  

அரசியல் வரலாறும் தமிழில் ஊட்டலாம்    

 

கணினி வித்தையும் தமிழில் புரியலாம்  

கர்மங்கள் அனைத்தும் தமிழில் பேணலாம்  

இலக்கணச் மரபுகள் தமிழில் வளர்க்கலாம்  

இலக்கிய அமுதமும் தமிழில் பருகலாம் 

 

நாகரிகம் வளர்ச்சியையும் தமிழில் பேசலாம்  

நெஞ்சத்தில் எந்நாளும் தமிழில் நிலைக்கலாம்

தமிழர்களின் வலிமை தமிழில் காட்டலாம் 

துள்ளும் அழகினை தமிழில் விளையாடலாம்  

 

தமிழனே தமிழால் தலையாய் நிமிரலாம் 

தமிழ்மொழி அடையாளமே உடலாய் பேணலாம்

தமிழின்பால் பற்றே உயிராய் எண்ணலாம்

தமிழன்னையை உள்ளத்தில் மதித்து வணங்கலாம்   

                                  *********




































அடுத்த கவியரங்கம் 25.9.2022 ஞாயிறு அன்று மதுரை மணியம்மை பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்..

தலைப்பு: வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு  

அனைவரும் வருக வருக..



Tuesday, 30 August 2022

National Small Industry Day - தேசிய சிறுதொழில் தினம் - கட்டுரை - கு.கி.கங்காதரன்

 

National Small Industry Day

தேசிய சிறுதொழில் தினம்  

கட்டுரை

கு.கி.கங்காதரன்

 


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ம் நாள் மிக முக்கியத்துவம் கொண்ட நாள். ஏனென்றால் அன்றுதான் "தேசிய சிறுதொழில் தினம்" கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில்  சிறுதொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வரும் ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை  அளிக்கவும், அதனை ஆதரிக்கவும், மேற்கொண்டு ஊக்குவிக்கவும் செய்யப்படுகிறது. இது மட்டுமில்லாமல், தற்போதுள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்குச் சீரான வளர்ச்சியை வழங்கவும், மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய தொழில்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்கவும் இந்த "தேசிய சிறுதொழில் தினம்" விளங்குகின்றது.

        தொழிற்சாலையின் அர்த்தம் என்பது, எதாவது ஒருவிதத்தில் நமக்குப் பயன்படும் தரமான ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகும். தொழிற்சாலையில் இருவகை உண்டு. ஒன்று சிறிய தொழிற்சாலை மற்றொன்று பெரிய அளவில் இருக்கும் தொழிற்சாலை. இதில் எது இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதே உண்மை. இங்கு சிறிய தொழிற்சாலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, நாப்கின்கள், திசுக்கள், சாக்லேட்கள், டூத்பிக், தண்ணீர் பாட்டில்கள், சிறிய பொம்மைகள், காகிதங்கள், பேனாக்கள் போன்றவை உற்பத்தி செய்வது சிறுதொழில் வகையினைச் சேர்ந்ததாகும்.

சமீப காலமாக, இந்த வாசகம் எல்லோர் மனங்களிலும் முக்கியமாக இளைஞர்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்து வருகின்றது என்பதே உண்மை. அதாவது இளைஞர்களே! நீங்கள் படித்து முடித்து வேலை தேடுபவர்களில்லாமல், பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று பலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அத்தகைய வாய்ப்பினை, அதாவது இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கித் தருவதற்கு இந்த நாள் ஒரு பொன்னான நாள் அமையும் என்று சொன்னாலும் மிகையாகாது. சிறு தொழில் தானே? இதில் என்ன பெரிசா சம்பாதிக்கப் போகிறோம்?’ என்று அசட்டையாக இருப்பதைத் தவிர்க வேண்டும். ஏனென்றால், இன்று நீங்கள் பார்க்கும் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் பின்னால் இருக்கும் வரலாறைப் புரட்டிப் பார்த்தோமானால், அவைகள் ஒரு காலத்தில் மிகச் சிறிய அளவிலேயே இயங்கி வந்திருக்கும். அவர்களின் ஈடு இணையற்றக் கடுமையான உழைப்பு, கிடைத்த வாய்ப்புகள், காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்ததால் இன்று இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார்கள். முயன்றால், முடியாதது ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும், முயற்சி செய்தோர் இகழ்ச்சி அடைவதில்லை, என்று பலர் முயற்சியின் சிறப்பைக் கூறியுள்ளனர். 

        சிறிய அளவிலான தொழில்கள் மிகமுக்கியமானவை, ஏனெனில் இது இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கானது, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்களை அதிகரிப்பதோடு, மாசுபாடு, குடிசைப்பகுதிகள், வறுமை போன்ற பிரச்சினைகளைக் குறைப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய அளவிலான தொழில்களில் முதலீடு செய்தால், அது இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும், சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த சிறிய அளவு தொழில்களுக்கான இயந்திரங்கள், சிறிய ஆலைகளில் ஒரே நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் முதலீடு செய்யப்படுவதாகும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம், மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், துறைகளுக்கிடையேயான தொடர்பை ஊக்குவித்தல், ஏற்றுமதியை பெரிதாக்குதல் மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி திறனை ஊக்குவித்தல் போன்றவற்றில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்த சிறுதொழில்களின் பங்களிப்பு மிகவும் அற்புதமானது. பாரம்பரியம் முதல் உயர் தொழில்நுட்பம் வரையிலான 6000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மூலம், நாடு முழுவதும் பரவலாகப் பரவியுள்ள 36 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை உள்ளடக்கிய இந்தத் துறை, 80 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது, மேலும் உற்பத்தி செய்யப்பட்ட 45% உற்பத்தியில் 40% ஏற்றுமதியாக பங்களிக்கிறது. உத்தேச தேசிய உற்பத்திக் கொள்கையின் இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை 25% ஆக உயர்த்துவது மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் வேலைகளை உருவாக்குவது, அத்துடன் இந்தியாவை அதன் தற்போதைய 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திலிருந்து 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குக் கொண்டு செல்வதாகும்.

சிறுதொழில் செய்வதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

உற்பத்தியைக் கவனத்துடன் கண்காணிக்கலாம்

பொருட்களின் தேவையினை அறியலாம்

அதிக வேலைவாய்ப்புகள் தரலாம்

தொழில் தொடங்க சிறு மூலதனமே போதுமானது

தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பு உண்டாகுதல் 

வாடிக்கையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படுதல்

எளிதான மேலாண்மையே போதுமானது

வேலையில் சுதந்திரம் இருக்கும் போன்றவை.

 

சிறுதொழிலில் உள்ள சில பிரச்சினைகளை இப்போது பார்க்கலாம்

1. பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாகிறது

2. கிடைக்கும் உபரி அல்லது துணைப்பொருட்கள் வீணாகுதல்

3. குறைந்த அளவிலான இயந்திரங்களின் பயன்பாடு

4. தொழிலாளர்களின் பற்றாக்குறை

5. கடன் பெறுவதில் சிரமம்

6. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது கடினமான வேலை

7. ஏற்ற தாழ்வு கொண்ட மூலப்பொருட்களின் விலை

8. பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம்

9. பழைய பழைய நுட்பங்களையே பயன்படுத்தும் சூழல்

10. புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாமை

11.பெரிய அளவிலான தயாரிப்பாளர்களுடன் தொழில் போட்டியை எதிர்கொள்வது கடினமான செயல் போன்றவை.

 

 இதற்கு முன்பே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கிய உந்துதலை கொடுப்பதற்காக, தொழிற்சாலைகள் தங்கள் அலகுகளை அமைப்பதற்கான அடிப்படை மற்றும் விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் தொழில்துறை வளாகங்களை உருவாக்குவதில் அமைப்பு ஈடுபட்டுள்ளது. SIPCOT இதுவரை 15 மாவட்டங்களில் 24 தொழில் வளாகங்களையும், 6 துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் (SEZ) தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது. சிப்காட் பெரிய தொழில்துறை அலகுகளுக்கு உதவிக்கான கட்டமைக்கப்பட்ட தொகுப்புகளை அனுமதிப்பதில்/வழங்குவதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரு சிறப்பு ஏஜென்சியாகவும் செயல்பட்டு வருகின்றது. நிறைவாக மக்களாகிய நாம் சிறுதொழிலை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க ஆரம்பித்தால் அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..

 

####################################

Monday, 1 August 2022

24.7.2022 முயன்றால் முடியும்! புதுக்கவிதை - கு.கி.கங்காதரன்

 முயன்றால் முடியும்!

24.7.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை கவியரங்கம் 

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 



  மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு மாலையிட்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.



  மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரவலர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. 

    முயன்றால் முடியும் என்ற தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .துணைச்செயலர் கு.கி. கங்காதரன், பொருளாளர் இரா. கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். பேரவையின் தலைவர். பாவலர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா.இரவிகு.கி.கங்காதரன்இரா.கல்யாணசுந்தரம்குறளடியான்மு.க.பரமசிவம், இஸ்மத்பால கிருட்டிணன்கவிக்குயில் இரா. கணேசன்லிங்கம்மாள்பா.வீரபாகுக.செயராமன்கு.பால் பேரின்பநாதன்சாந்தி திருநாவுக்கரசுமதுரகவி க.சரத்குமார்சங்கர நாராயணன்நாகேந்திரன்இரவி சந்திரன்உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை பாடினார்கள். மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் அமரர் சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மகன் திரு .ஆதி சிவம் நன்றி கூறினார்.














































முயன்றால் முடியும்!

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன் 


மனிதா பிறப்பது ஒருமுறை
மானுடம் காப்பது நெறிமுறை
முடியாது என்பார் மூடர்கள்
முடியும் என்பார் அறிவாளிகள்

வெற்றிக்குத் தேவை முயற்சி
வேண்டும் அதற்குப் பயிற்சி
தோல்வி என்பது தொடக்கம்
துணிந்தால் கிடைக்கும் பதக்கம்

விழுந்தே கிடந்தால் வீழ்ச்சி 
எழுந்து நடந்தால் எழுச்சி  
முயற்சி செய்தால் வளர்ச்சி 
முடிந்தால் வாழ்வில் மகிழ்ச்சி

முயற்சி நம்பிக்கை அளிக்கும்
நம்பிக்கை திறமையை வளர்க்கும்
திறமை துணிவைத் தரும்
துணிவு வெற்றியைக் காட்டும்

கவலைகளைத் துடைத்திடும் முயற்சி
கட்டாந்தரையைப் பசுமையாக்கும் முயற்சி
தீமைகளை நன்மையாக்கும் முயற்சி
தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சி

********************************

Wednesday, 22 June 2022

DOG’S GRATITUDE- Short story (English) - நன்றியைக் காட்டிய நாய் (Tamil) - K.K.GANGADHARAN

                                       நன்றியைக் காட்டிய நாய்

                                                              மதுரை கங்காதரன்

                                  சிறுவர்களுக்கான சிறுகதை

ஒரு ஊரில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் ராமு. அவன் மிகவும்  ஏழை நேர்மையானவன். அதோடு இரக்க குணம் கொண்டவன். நல்ல உழைப்பாளியும் கூட. அவனைப் பார்த்த ஒரு பணக்காரர், ராமுவை தன் தோட்டத்தில் வேலை செய்ய தோட்டக்காரனாக நியமித்தார். ராமு, எப்பொழுதும் தோட்டத்திலே வேலை செய்து வந்தான். அவன் ஒரு நாள் தோட்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பசியுடன் ஒரு நாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. ராமு இரக்கப்பட்டு அதற்கு சோறு கொடுத்தான். தினமும் சோறு கொடுக்க... இருவரும் நண்பர்களானார்கள்.

 ஒரு நாள் பணக்காரரின் மகள் தோட்டத்திற்கு வந்து, அந்த நாயுடன் விளையாடிவிட்டுச் சென்றாள். ராமுவும் அந்த நாயும் தூங்கிக் கொண்டிருக்கும், வேளையில் அந்த பணக்காரர் டார்ச் லைட்டை ராமுவின் முகத்தில் அடித்து எழுப்பினார். ராமு, எனது மகள் காலையில் இந்த தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது விலை உயர்ந்த நெக்லேஸ் இங்கு தொலைந்து விட்டது என்றார். அதற்கு ராமு, கவலை வேண்டாம் முதலாளி. இந்த நாய் அதனைக் கண்டுபிடித்து தரும் என்றான். ராமு சொல்லியது போல அந்த நாய் நெக்லேஸை கண்டுபிடித்துக் கொடுத்தது. பணக்காரர் மகிழ்ச்சி அடைந்தார். ராமு வையும் நாயையும் தன் பங்களாவிலே தங்க வைத்தார். அவர் மகள் தினமும் அந்த நாயுடன் விளையாடி மகிழ்ந்தாள்.

                                                    **********************

DOG’S GRATITUDE

In a village, a man lived in a town. His name was Ramu. He was very poor and honest. But, kindhearted. He was also a good worker. A rich man saw him and hired Ramu to work in his garden. Ramu always worked in the garden.

One day, while he was eating in the garden, a hungry dog was watching him. Ramu took pity on him and gave him rice. The two became friends and Ramu gave rice daily.

One day the rich man's daughter came to the garden and left for her house after playing with that dog. While Ramu and the dog were asleep, that rich man smashed the torchlight into Ramu's face. He said, "Ramu when my daughter was playing in the garden in the morning, a high-value necklace got lost here."

Ramu replied, "Don't worry boss. This dog will find it. ” As Ramu said the dog found the necklace and gave it to him. The rich man rejoiced. Ramu and the dog stayed in his bungalow. His daughter enjoyed playing with that dog every day.

                                           **********************