Pages

Monday, 30 July 2018

29.7.18 தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு


அன்று நான் வாசித்த கவிதை....
தமிழ்த்தாய் வாழ்த்து

என்னுயிர்த் தாங்கும்
அன்னைத் தமிழே
தவம் செய்யாத்
தஞ்சமானத் தமிழே
வணக்கம். 
  
தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு
                புதுக்கவிதை 
            மதுரை கங்காதரன் 

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கலை
அன்னைத் தமிழை வளர்க்கும் நிலை
இல்லாத ஊரில் அழகான சூழல்
ஆங்கிலக் கலப்பில் அழுக்கானத் தமிழ்.

உறைந்து போயின இனிய இலக்கியங்கள்
கரைந்து போகும் கனிந்த கலைகள்
மறைந்து போகும் மானமுள்ளத் தனித்தமிழ்
சிதைந்து போயின சிங்காரத் தமிழ்.

உறுப்பு இழந்தால் மாற்றுப்பு உதவும்
உயிர் இழந்தால் மாற்றுயிர் உதவுமா?
பூக்கள் உதிர்ந்தால் மீண்டும் பூக்கலாம்
பூந்தமிழ் மறைந்தால் மீண்டும் மலருமா?

தமிழர்களின் தாயான செந்தமிழை மறவோம்
தாலாட்டிச் சீராட்டும் கன்னித்தமிழை மறவோம்
உடலோடு ஒட்டிய உரிமைத்தமிழை மறவோம்.
உயிரோடு கலந்த உன்னதத்தமிழை மறவோம்.

அனையாவிளக்காய் ஒளிரும் தமிழைக் காப்போம்
அமுதமழையாய் பெய்யும் தமிழைக் காப்போம்
குறையில்லாத் திவ்வியத் தமிழைக் காப்போம்
நிறைக்காத்துச் செம்மொழித் தமிழைக் காப்போம்

அன்று எடுத்த மின்படங்கள் 
















































































######################

Monday, 9 July 2018

எதனால் எது முழுமை? (அதிதி விழாவிற்காக) - புதுக்கவிதை



எதனால் எது முழுமை? (அதிதி விழாவிற்காக)
                                   புதுக்கவிதை
                            மதுரை கங்காதரன்

உணவால் உடல் முழுமை
உடலால் உயிர் முழுமை
உணர்வால் மனம் முழுமை
உறவால் குடும்பம் முழுமை

மனிதன் முழுமைக்கு முயற்சிக்கிறான் 
முடிவில் முடியாமல் தவிக்கிறான் 
முழுமையைத் தேடி ஓடுகிறான் 
மனிதன் எட்டாமல் வாடுகிறான் 

அறத்தால் வாழ்வு முழுமை
ஆன்மீகத்தால் உலகு முழுமை
உறக்கத்தால் அமைதி முழுமை
இரவு பகலால் நாள் முழுமை

முன்னகர்வுக்கு முழுமை முக்கியம்
முயற்சித்தால் அதுவும் சாத்தியம்
முழுமையே வாழ்வின் இலக்கு
முடித்துக் காட்டுவதே பழகு.

பணத்தால்  வசதி முழுமை
பாசத்தால் உறவு முழுமை
கல்யாணத்தால் காதல் முழுமை
கனிகளால் மரம் முழுமை

செயலால் எண்ணம் முழுமை
செந்தமிழால் இலக்கியம் முழுமை
ருசியால் நாக்கு முழுமை
பசியால் வயிறு முழுமை

வள்ளுவரால் திருக்குறள் முழுமை
கம்பரால் இராமாயணம் முழுமை
இளங்கோவால் சிலப்பதிகாரம் முழுமை
கீதையால் பாரதம் முழுமை.

படைத்தவனே தன் படைப்பில் முழுமையெனில் 
படைப்பு எதுவும் தன்னில் முழுமை அல்ல.
குறைவாயிருப்பதே முழுமை எனில் 
நிறைவு நோக்கிய நகர்வு முடியுமா?

%%%%%%%%%%%%%%%%%%%%%%

அதிதி - 8.7.18 முழுமை நோக்கிய முன்நகர்வு - மின்படங்கள்



அதிதி சிந்தனைத் திண்ணை 
8.7.18 முழுமை நோக்கிய முன்நகர்வு 
நிகழ்ச்சியின் மின்படங்கள் 
































*******************

Monday, 2 July 2018

தமிழ்மண் கண்ட (மறந்த) விளையாட்டுகள் - புதுக்கவிதை



தமிழ்மண் கண்ட (மறந்த) விளையாட்டுகள்
                 புதுக்கவிதை 
              மதுரை கங்காதரன் 
                        
உடலில் உறுதி அளித்தது கயிறு குதிக்கும் விளையாட்டு
ஒற்றுமை உவகை வளர்த்தது  கல்லா மண்ணா விளையாட்டு
காலுக்கு வலிமை தந்தது நொண்டிப் பாண்டி விளையாட்டு
கணிதம் அறிவு ஊட்டியது பல்லாங் குழி விளையாட்டு
கணினி வரவு அழித்ததே கூடி ஆடும் விளையாட்டு!

துணிவு முயற்சி தாவுவது பச்சை குதிரை விளையாட்டு
தைரியம் நம்பிக்கை விரிந்தது ஓடி ஒளியும் விளையாட்டு
கைகள் கவனம் கூட்டியது தட்டும் கல் விளையாட்டு
கள்ளர்கள் கவ்விப் பிடித்தது கள்ளன் போலிசு விளையாட்டு
கைப்பேசி கவர்ச்சி கரைத்ததே உடல் பேணும் விளையாட்டு!

குறிப்பார்த்து அடிக்கச் செய்தது கோலி குண்டு விளையாட்டு
கிரிக்கெட் ஆட்டம் மாற்றியது கிட்டிப் புல்லு விளையாட்டு
சுறுசுறுப்பு உச்சிக்கு ஏற்றியது தாயக் கட்டை விளையாட்டு
சுற்றிலும் சுலழ வைப்பது  சிலம்பு சுற்றும் விளையாட்டு
சுருங்கிய உறவில் புதைந்ததே நலம் காக்கும் விளையாட்டு!

கண்கட்டி வித்தை காட்டுவது உறி அடிக்கும் விளையாட்டு
காலும் கையும் தொடுவது சடுகுடு பாடும் விளையாட்டு
ஆற்றல் வீரம் வலுப்பது ஏறு தழுவும் விளையாட்டு
அறிவு பொறுமை கொடுத்தது ஆடு புலி விளையாட்டு
இளமைக் காலம் மறந்ததே ஆடி பாடும் விளையாட்டு!

சாட்டைக் சுற்றி ஆடுவது பம்பரம் விடும் விளையாட்டு
சறுக்கி விழுந்து ஏறுவது வழுக்கும் மரம் விளையாட்டு
ஓங்கி தட்டி ஓட்டுவது வண்டிப் பந்தய விளையாட்டு
ஓடித் துரத்தி பிடிப்பது தொட்டுப் பிடிச்சு விளையாட்டு 

அந்நிய மோகம் துரத்தியதே தமிழ் மண் விளையாட்டு!

                *******************