Pages

Wednesday, 6 February 2019

சமூக விரோதியை சமூகநலனுக்காக உள்ள சமூக நெம்புகோல்



சமூக விரோதியை சமூகநலனுக்கு அசைக்கும் இளக்கும் 
அவனச் சுற்றி உள்ள சமூக நெம்புகோல்
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

என்னைப் பொருத்தவரையில் சமூகவிரோதிகளை சமூகநலனின் மேல் அக்கறைக் கொள்ளவைக்கும் நல்ல சமூகத் தொண்டர்களாக மாற்றுவது மிகவும் எளிது என்றே கருதுகிறேன். அதற்கு நெம்புகோலாக ஆன்மீகம், அன்பு, அறிவு, பொறுமை இந்நான்கும் அமையும் என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆன்மீகத்தால் கருணை வாங்கலாம். அன்பினால் உறவை வாங்கலாம். அறிவினால் கல்வியை வாங்கலாம். பொறுமையினால் உலகையே வாங்கலாம். இந்நான்கும் குறையும்போதோ அல்லது இல்லாதபோது தான் ஒருவன் சமூகத்திற்கு வேண்டாதவனாகிறான். பிறகு சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறான். அதனால் அவனே சமூகவிரோதியாக மாறுகிறான்.

புகழ்பெற்ற வெற்றிபெற்றச் சமூகத் தொண்டர்களின் வரலாற்றை அசைபோட்டுப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட மூன்று பண்புகள் இருப்பதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தியடிகள், அன்னை தெரேசா ஆகியோரைக் கூறலாம். இந்த உலகத்தில் கடினமிக்கச் செயல் என்னவென்றால் மக்களில் யார் நல்லவன்? யார் கெட்டவன் என்பதை அடையாளம் காணுவதுதான். இவரா இப்படிச் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே! என்று அவரின் சமூக விரோதச் செய்திகள் பல்வேறு ஊடகங்களில் மூலம் நமக்குத் தெரியவரும்போதுதான் அவரைப்பற்றிய உண்மை நிலை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆண் பெண் இவற்றில் எந்த வர்க்கத்தின் சதவீதம் அதிகம் என்பது சொல்வதற்கில்லை. இதிலும் அவர்களுக்குள் போட்டியாகவே காணமுடிகின்றது.

நன்றாகப்படித்து வேலைக்குச் செல்லும் ஆண்களும் சரி பெண்களும் சரி மிதமிஞ்சிய வருமானத்தால் இளமை வேகத்தால் ஆசைத் தூண்டுதலால் பலர் இயல்பான கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுக் காண்பதே உண்மை! கொள்வதே சுகம் என்பதற்கு அடிமையாகிக் கெட்டுச் குட்டிச்சுவராக ஆகின்றனர். அவர்களைப் பகடைக் காய்களாய் மாற்றி அவர்களைச் சுடச்சுடச் செய்திகளைத் தரும் சுரபிகளாக மாற்றி அதனை வைத்துப் பணம் பார்க்கும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றில் அடிப்பட்ட வெகு சிலரே சிலரின் அறிவுரைகளால், தொடர்சிகிச்சைகளால் மனம்மாறி திருந்தி நல்வழிக்குத் திரும்புகின்றனர். பின்னரே நான் ஏன் இப்படிச் செய்தேன்? ஒழுங்காக வாழ்ந்திருக்கலாமே என்று வருந்துகின்றனர். உறவுகளும் பொருள்களும் இழந்த பின்னர் வருந்தி என்ன பயன்? கண்கள் நன்றாகப் பார்க்கும்போதே பாதையைப் பார்த்து நடக்காதவன், கண்கெட்ட பின்னே எங்ஙனம் சரியான பாதை நோக்கி நடக்க இயலும். இவர்கள் முதலில் வீட்டிற்கு விரோதியாக மாறி பின்னர் சமூகத்திற்கு விரோதியாக மாறி விடுகின்றர் என்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

படித்தவர்கள் இப்படியென்றால் படிக்காதவர்களோ தங்களைத் தாங்களே ஒரு 'ஆமாம் சாமி' கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர்களின் உதவியால் சில சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது கொடுமை அல்லவா? இவர்களில் பெரும்பாலும் வரட்டு கௌரவத்தில் மூழ்கி, இருக்கும் உறவை இழந்து, நல்ல வாழ்க்கைத் துறந்து அடாவடித்தனம் செய்பவர்களே. இப்படி இருக்கும்போது இதில் யாருக்கு என்ன அறிவுரைச் சொல்லித் திருத்த முடியும்? இதில் கூத்து என்னவென்றால் ஒரு கூட்டம் திருந்தி நல்ல வாழ்க்கைக்குத் தயாராகி வரும்போது, அடுத்த கூட்டம் சீரழிவதற்குத் தயாராகவும் அதன் ருசிகளை அனுபவிக்கத் துடிப்பவர்களாக மாறுவதே கொடுமையிலும் கொடுமை. இதிலும் நல்லவன், கெட்டவனாகும், கெட்டவன் நல்லவனாக மாறும் சுழற்சி நடைபெறுகிறது என்றே சொல்லலாம். ஆக நல்லவன் எப்போதும் நல்லவனாகவும் கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவே இருப்பான் என்று சொல்வது மிகக் கடினம்.                           ,

சமூகச் சுமைகளான (விரோதிகான) இவர்களை நல்வழி நோக்கி அசைக்கும் நல்லவடிவங்களில் உடனே இளக்கவும் ஏதாவது மந்திரக்கோல் உலகில் உண்டா? என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். இவர்களைப் பாறாங்கல்லுக்கு ஒப்பிட்டால், அக்கல் பூமியின் மீது இருந்தால் நெம்புகோலால் நிமிர்த்தி விடலாம். ஆனால் பூமியில் புதைத்திருந்தால் எங்ஙனம் அடையாளம் கண்டு வெளியே கொண்டுவர இயலும். வேண்டுமென்றால் ஒரு ஊகமாக ஆங்காங்கே தோண்டி ஒருவேளை பாறை இருந்தால் நெம்புகோலால் வெளியே கொண்டுவரலாம். இது தேவையற்ற வேலை தானே?

இவர்களை இப்படியே விட்டுவிடவும் முடியாது. இவர்களை கவனிக்கத் தவறி அதற்குண்டான தீர்வை கண்டுபிடித்து திருத்தாவிட்டால் பின்னாளில் ஒட்டுமொத்த சமுதாயமே சின்னாபின்னாமாகி விலங்கினைவிடக் கேவலமாக மனிதகுலம் மாறும் வாய்ப்பு உண்டு. பிறகு மனிதனை கடவுள் படைத்ததன் நோக்கம் அர்த்தமற்றதாகி விடும். அதோடு ஆன்மீகவாதிகள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோர் நினைத்த பொன்னான எதிர்காலக் கனவு நிறைவேறாமல் போய்விடும். இப்போதே பார்க்க, சுவைக்க, ரசிக்க, அனுபவிக்க இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகள் முழுவதும் இல்லாமலே போகலாம். இதற்கு மணிகட்டுவது யார்? சாதாரணமணி இல்லை! அபாயமணி! இந்த அபாயமணி கட்டாமல் இல்லை. கட்டியாச்சு. மணியும் ஒலிக்கின்றது. ஆனால் ஒரு திருத்தம். அந்த ஓசை ஒரே நேரத்தில் ஒலித்தால் ஒட்டுமொத்த உலகமே எழும். அதிலிருந்த தப்பிக்க வழிதேடும். ஆனால் ஒலி ஒரு சில இடத்தில் ஒலிப்பதால் அதன் தாக்கம் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால் ஒருநாள் அனைத்து திசைகள்ளிலும் ஒலிக்கும். அப்போது புலம்பிப்பயன் இல்லை.

இப்போது 'மனித உரிமை' என்ற அமைப்பு கொலை(கள்) செய்த ஒருவரை தூக்கிலிடவோ மரணதண்டனை கொடுக்கவோ கூடாது என்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. சிறுவயதுக் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது. வீட்டுபாடங்கள் அதிகம் கொடுக்கக் கூடாது. மீறினால் அக்காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பிரலயமே உண்டாக்கிவிடுகிறார்கள். அதனால் சிறிய தவறுகளைத் தொடக்கத்திலே தடுக்கமுடியாமல் அதுவே பெரிய தவறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. ஒருவன் அடிப்படையிலே ஏழையாகவே இருந்தாலும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனாலும் சமூகவிரோதச் செயலில் ஈடுபடுவதில்லை. அவனின் வளர்ப்பு, சூழ்நிலை, மற்றும் சமுதாயம் பற்றியத் தவறான புரிதலே காரணமாக அமைகின்றது.

என்னதான் ஆட்சியாளர்கள், சட்டம், நீதி மன்றங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இவர்களைத் திருத்தும் நெம்புகோலாக இருந்தாலும் அல்லது அக்கறை எடுத்துக்கொண்டாலும் அவர்களில் பெரும்பாலும் இவர்களை வைத்துப் பணம் பண்ணும் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர். ஆகையால் தான் சான் அளவு முன்னேறினாலும் முழம் அளவு சறுக்கல் உண்டாகின்றது. மேலும் பலவேறு ஊடகச் செய்திகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சமூக விரோதிகளான ரௌடிகள், கொலை, கொள்ளை, அராஜகம் செய்பவர்களை உயர்த்தியும், அவர்களின் செயல்களை நியாயப்படுத்திக் காண்பிப்பதால் ஒ... இப்படி இருந்தால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்! என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதனப் பார்க்கும் சிறார்கள் உட்பட அனைவரின் மனதில் பதிந்துவிடுகின்றது. அதோடு கைபேசியினால் பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கொண்டுதான் வருகின்றது. ஒவ்வொரு தவறான செயலுக்கும் காலம்தாழ்த்தித் தண்டனை தரும்போது குற்றங்கள் நீர்த்துப் போவதோடு இல்லாமல் குற்றவாளிமேல் அனுதாபம் காட்டும்படியாக அமைகின்றது. 

நீதித்துறைகளின் சில திர்ப்புகள் தாமதமாக வருவதோடு, சில திர்ப்புகள் குழப்பதில் ஆழ்த்தவும் செய்கின்றது. ஒரே வழக்குக்கு ஒரு நீதிபதி தண்டனை வழங்குகின்றார். மேல் முறையீட்டின்போது அதே வழக்கினை வேறொரு நீதிபதி விடுதலை கொடுக்கிறார். இது கேலியாக இல்லை! இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு குற்றத்தின்போதும் சமூக விரோதிகளை பிடித்துவிட்டோம் என்று முகமூடி அணிந்த சிலரைக் காண்டுகின்றனர். முகத்தைக் காட்டினால் தானே மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது புரியாதபுதிராக உள்ளது.
   
மேலும் ஆங்காங்கே கண்கானிப்புக் கேமராக்கள் இருந்தாலும் பல காமிராக்கள் செயல் இழந்து இருக்கின்றது. அதோடு அந்த கேமராக்களின் உதவியால் குற்றவாளிகளை சொற்ப அளவே பிடிப்பது உண்மை. உண்மை, நேர்மை, தேசபக்தி, மரியாதை ஆகியவை இளைஞர்களிடம் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பம் மேலும் மேலும் மனிதர்களை சோம்பேறிகளாக்குவதோடு வேலையில்லா திண்டாத்திற்கும் வழிவகுக்கின்றது. அதனாலும் இளைஞர்கள் சமூக விரோதச் செயலுக்கு ஈடுபடக்காரணமாக அமைகின்றது. மேலும் மனப்பாடக் கல்வி முறையை குறைத்து செயல்முறைக் கல்வி கொண்டுவந்தால் ஓரளவிற்கு நன்மை தரலாம். இன்றையத் தொழில்நுட்பம் ஆசையைத் தூண்டும் கருவியாகவே உள்ளது. அதனால் தறிகெட்டுப் போகவும் செய்கிறார்கள். முடிவாக முதலில் சொன்ன நான்கினையும் பின்பற்றினாலே போதும். சமூக நலன் என்றுமே நிலைத்து நிற்கும்.                    **************************************


Monday, 4 February 2019

Latest 5G Computer Mouse 3+ ( Mouse with Camera, Flash light and Finger print)


Computer Mouse 3+ 
( Mouse with Camera, flash light
 and finger print)

BY GANGADHARAN

UNIQUE FEATURES OF THE MOUSE 3+

Top to bottom : Finger print, Camera, Flash light and Scroll 

Simplification of password:

·     Instead of typing text, this finger print is take care which is easy and fast as well as high security.
·     Password confusion and password in memory can be avoided.
·     With the help of finger print we can protect whole computer / data / file / folders.
·     Any website login / online transaction / online test / e.mail we can open / visit quickly with this finger print.

Camera applications:
·     We can scan /  documents / drawings / records / images and send it to printer or save local disk / pen drive / emails / social website like face book, whatsapp etc.,
·     We can also take selfie as well as photos.
·     We can take video too.
·     We can make video calling like android phones without web camera.

Flash light:
·     To take clear photo, scan, video etc.,
·     Having power back up in computer / laptop we can use it during power failure.   

Other applications:
·     We can also chat in whatsapp by linking computer with phone number.
·     We can use this mouse for desk top as well as laptop.
·     We can transfer it to any desk top or laptop
·     We can make attendance by using finger print as well as face detection by camera.
·     We can watch work progress lively before computer / laptop sitting person.
·     More disk capacity in computer / laptop we can use and save many types of data. 
·     We can use it with or without wire.

Mouse in other angle views

 BACK VIEW
 BOTTOM VIEW
 FRONT VIEW
 SIDE VIEW
 LEFT VIEW
RIGHT VIEW

 TOP VIEW

Friday, 1 February 2019

உலகத் தாய்மொழி தினம் - Why Need World Mother Language Conference? ஏன் உலகத் தாய்மொழி மாநாடு தேவை?



உடனடி தேவை சர்வதேச உலகத் தாய்மொழிக் கல்வி மற்றும் மென்பொருள் ஆர்வலர்கள் மகாநாடு  

Urgent need International conference World Mother Language Education and Software tycoons  

உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.  உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழியானது தனது இரத்தத்தில் கலந்து இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் எந்தஒரு சூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது. ஏன் மறக்கவும் கூடாது. இளம் பருவத்தில் முதற்கொண்டே கல்வி கற்பதை தனது தாய்மொழியில் இருந்துதொடங்குவதே மிகவும் சிறந்தது. அதுவே மற்ற மொழிகளை எளிதாகக் கற்பதற்கு வலிமையான அடித்தளம் ஆகும். கல்வி என்பது வெறும் பாடங்களை மனப்பாடம் செய்யும் படிப்பு அல்ல.   அதில்    ஆன்மிகம்மருத்துவம்தொழில், பண்பாடுகலாசாரம்நாகரிகம்கலை,  இலக்கியம்தத்துவம்இசைநாட்டியம் போன்றனவையும் அடக்கம். அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாகக் கற்றறிந்து கொள்ள முடியும். எனவேஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே  உலகத் தாய்மொழி தினத்தின் சிறப்புமிக்க நோக்கமாகும்.

உலகத் தாய்மொழி தினமாக 1999 ஆம் ஆண்டு இந்த நாளை உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO – United Nations Education, Scientific and Cultural Organization)  பொதுமாநாட்டில் அறிவிப்பு வெளியிட்டதுஆனால் அன்று முதல் இன்று வரையில் ஏதோ ஒரு சடங்கு சம்பிரதாயமாகவே உலகம் கொண்டாடி வருகின்றது என்பதே உண்மை. இன்று பல மொழிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தாய்மொழி ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர். கணினியில் அதிகமாகப்    படைக்கும்படிக்கும்   மொழிகளுக்கே  உயர் சம்பளம்,    விருது,   பட்டம்பதவிவேலைவாய்ப்புஅங்கீகாரம்சலுகைகள் போன்றவைகளால் மற்ற மொழிகள் தாக்குப்பிடிக்க முடியாமல்   அமைதியாக அழிந்துகொண்டிருக்கின்றன. 

UNESO ஒருபுறம் உலகத் தாய்மொழிகள் தினம் என்று கொண்டாடினாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO) மறுபக்கம் இதுவரை அழிந்த மொழிகளையும், இனி அழியப்போகும் மொழிகளைப்பற்றியும் அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் தமிழ்மொழியும் அடங்கும். இது மிகப்பெரிய கொடுமையல்லவாயார் கண்டது? அழிந்த மொழிகளில், அழிந்த பலவேறு ஊடகச்சவடுகளில் மனிதர்களுக்கு வரும் காலத்திற்குத் தேவையான பல அரியபெரிய இரகசியங்களும் அடங்கியிருக்கலாம்

ஒரு காலத்தில் மொழி கற்பதற்கு ஊடகமாக இருந்த   பாறைஓடு ஓலைச்சுவடிபேப்பர் என்று படிப்படியாக மாற்றம் அடைந்தது.  ஆனால் பேப்பர் வருவதற்கு முன் கையால் எழுதும் முறையும்பேப்பர் வந்த பின்னே அச்சு ஊடகமும் இப்போது கணினிதொடுதிரை கைப்பேசி    ஊடகத்தில்  'டிஜிட்டல்'ஆக  உருவெடுத்துள்ளது. கணினி எப்போது வலைத்தளத்தில் பரவி வாழ்வாதாரத்தில் கலந்துவிட்டோதோ அதிலிருந்து கணினியில் அதிகமாக எந்த மொழி உள்ளதோ அம்மொழியே வாழும் நிலை வந்துவிட்டது. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு தாய்மொழியானது மக்களிடையே நிலைத்திருப்பது மிகவும் கடினமான செயலாக விளங்குகின்றது. காரணம், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் சில மொழிகள்,  கணினிதொடுதிரை கைபேசி  என்னும் புதுப்புது ஆயுதங்கள் கொண்டு, புதுச்சக்தி பெற்று, புதுப்புது வழியில், அமைதியான முறையில் புரட்சி செய்து,  உலக மக்கள் உள்ளங்களில் ஊடுருவி, அவர்களின் தாய்மொழியைக்  கொஞ்சம் கொஞ்சமாக அல்லது ஒரேயடியாய் அழித்து வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.   

எந்த மொழி எப்போது அழியும்? எந்த மொழி நிலைத்து நிற்கும்? என்று யாராலும் கூற முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. தாய்மொழியானது வெறுமனே கணினியில் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அதைச்  சிறுவர்கள், பெரியோர்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொண்டு, அதனை  ஆட்சிசட்டம், கல்விகளில் மற்றும் நாட்டின் அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொழியே நிலைக்கும் நிலை உருவாகியுள்ளது.  அதோடு உலகத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் எந்த மொழிக்கு அதிகமாக இருக்கை உள்ளதோ அம்மொழி வாழுமாம். அதற்கு  ஒவ்வொரு இருக்கைக்கும் பல கோடிக்கணக்கில் பணம் செலுத்திப் பதிவு செய்யணுமாம். அவ்வாறு பணம் செலுத்த முடியாத பல தாய்மொழியின் நிலை இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றன

இந்நிலை மாறவேண்டுமானால் உலகத்தாய்மொழிகளைக் காப்பதற்காகவே உலகளவில் மாநாடு நடத்தவேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில பிரதிநிதிகள் கலந்துகொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் தாய்மொழியின் வரலாறுசிறப்பு ஆகியவை நன்றாக அறிந்தவர்களாக இருப்பதோடு வேறு சில மொழிகளையும் அதன் சிறப்பையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அதோடு கணினியில் தங்கள் தாய்மொழி எவ்வாறு வளர்ச்சிபெற்று உள்ளது பற்றி விளக்க வேண்டும். அதோடு கணினியில் பிறமொழிக்கு எவ்வாறு உதவலாம்? என்கிற கருத்துக்களும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் தாய்மொழிகள் காக்கப்படும்மேலும் வளர்ச்சி பெறும்.     

தாய்மொழி ஆர்வலர்கள் தங்களின் தாய்மொழி கணினியில் யூனிகோடு எழுத்துருவில் (Unicode Font) இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். ஒருவேளை ஒரு தாய்மொழிக்குப் பல்வேறு கணினி விசைப்பலகைகள், பல்வேறு எழுத்துருக்கள் இருந்தால் அதில் எது எளியதும், சிறந்தும் தேர்வுசெய்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இருந்தாலும் ஏட்டுக்கல்விபடி அவரவர் தாய்மொழி கணினி விசைப்பலகைகள் யூனிகோடு எழுத்துருவில் இருந்தால் மழலையர்கள் முதல் முதியோர்கள் வரை எளிதாக பயன்படுத்துவார்கள்.      

இதற்குமுன்பு பல துறைகள் இப்படியாக வளர்ந்துள்ளன. ஆன்மீகச் சிந்தனைகள்   மற்றும்    கருத்துகள்  உலக அளவில் பரவுவதற்குக் காரணமாக    இருந்தது    1893  ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள்அமெரிக்காவில்  உள்ள 'சிகாகோ'வில் நடந்த உலக சமய மாநாடு.

மேலும் அறிவியல்,  பொறியியல், தொலைதொடர்பு, விண்வெளிமருத்துவம் போன்ற  துறைகள் மிகப்பெரிய    அளவில்  வளர்வதற்குக் காரணமாக இருந்தது, வல்லரசு நாடுகள்  உட்பட பல நாடுகள் பங்கு கொண்ட முதல் உலகப் போரும்இரண்டாவது உலகப் போரும் என்று சொன்னால் மிகையாகாது.

அதுபோல் சென்ற 2000ம் ஆண்டு  முடியப் போகும் காலகட்டத்தில்  உலகளவில்  இயங்கும் கணினிகள் Y2K (Year 2000) சிக்கலை எதிர்கொண்ட போது, கணினியைப் பற்றிய பல முரண்பாடான கருத்துகள் பல திசைகளிலிருந்து வந்த வண்ணம் இருந்தன. அந்த இக்கட்டான சூழ்நிலைதான் உலகத்தில் உள்ள பல கணினி அறிவியல் வல்லுநர்களையும் (Computer Science Experts), தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களையும் (Information Technology Engineers) ஒன்று சேர வைத்ததுடன் அத்துறைகளில்  எல்லையற்ற  வளர்ச்சிகள்   ஏற்படுவதற்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். அவர்களின் கூட்டு  முயற்சியாலும்,  கடினமான உழைப்பினாலும் அனைத்து இடர்களையும் அந்த காலநேரத்திற்குள் சரி செய்து, எந்தத் துறையும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் கணினி அறிவியல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் செய்த சாதனைகள் பாராட்டுக்குரிய ஒன்றாகும். அது கணினியின்  மறுபிறவி  என்றே சொல்லலாம்.

ஆகவே உலகத் தாய்மொழிகள் அனைத்தும் காக்கப்படவேண்டுமானால் உடனடி தேவை சர்வதேச உலகத் தாய்மொழிக் கல்வி மற்றும்  மென்பொருள் ஆர்வலர்கள் மகாநாடு. அதற்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO)  வேண்டிய வசதிகள்நிதிவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.   

************************************

Monday, 28 January 2019

LATEST 5G CONVEYOR MODEL - SEMO Note: Design was registered - Patent Office, India..

LATEST 5G CONVEYOR MODEL - SEMO
          Note: Design was registered in
                 Patent Office, India..

Working Video















மாபெரும் சிறுகதைப் போட்டி - கடைசி தேதி :15.3.2019 ..முதல் பரிசு :ரூ 5000/= ..



மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு (2019) உங்களை அழைக்கிறோம்.

கடைசி தேதி :15.3.2019 ..முதல் பரிசு :ரூ 5000/=

மேலும் விபரங்களுக்கு ...




போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

நன்றி