Pages

Friday, 7 June 2019

உள்விதி மனிதன் பாகம்:46 மூளைச் சலவையில் மயங்காதே! DON'T BELIEVE BRAINWASH PEOPLE!


உள்விதி மனிதன்
Image result for DON'T BELIEVE BRAINWASH PEOPLE!
சமமனிதக் கொள்கை 
பாகம் 46. மூளைச் சலவையில் மயங்காதே!
DON'T BELIEVE BRAINWASH PEOPLE!

Image result for DON'T BELIEVE BRAINWASH PEOPLE!


பிரியமுள்ள மனிதா! உன் மூளையை வசியப் படுத்துவது மிகவும் எளிது. அதாவது யார் ஒருவர் தனது வாழ்வில் இலட்சியம் இல்லாமல், நிலைத் தன்மையில்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் மூளையை நாம் பேச்சால், கவர்ச்சியால், செயலால், போலி வாக்குறுதியால் எளிதாக அடிமைபடுத்திவிடலாம். ஏனென்றால் அவ்வாறான மூளை, சுய சிந்தனை இல்லாத மூளை! யார் எதைச் செய்யச் சொல்கிறார்களோ அப்படியேச் செயல்படும். அப்படிப்பட்ட மனிதர்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளனர். அந்த வசியம், நன்மை தருவதாக இருந்தால் அவர்களுக்கு நன்மை கிடைக்கும். அதுவே தீமையாக இருந்தால் அது தீமையில் முடியும். ஆனால் இவ்வுலகில் நிலைத்தன்மை உடையவர்கள் மிக மிகக் குறைவானவர்களே உள்ளனர். அவர்களில் சிலர் நிலைத்தன்மை இல்லாதவர்களின் மூளையை வசியப்படுத்தி, அவர்களைத் தவறான வழியில் போகச் செய்து, மனிதக்குலத்திற்குப் பல தீங்குகள் செய்து வருகின்றனர். அவர்களை உன் மூலம் இனம் கண்டு உன் மூலமாக அவர்களையும் நல்ல திசையில் திருப்பிவிடவே உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கிறேன். நல்ல எண்ணம் கொண்ட நிலைத் தன்மையானவர்கள் தான் பெரும்பாலும் இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்.

இரக்கமுள்ள மனிதா! இந்த நிலைத் தன்மை உள்ளவர்கள், நன்மை தரும் செயல்களைச் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் சுற்றியிருப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். நாட்டுத் தலைவராக இருந்தால் அந்நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கட்டாயம் கிடைக்கும். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வளமை பெறுவார்கள். எத்தனையோ நல்ல சமூகச் சேவகர்கள், தேசியத் தலைவர்கள், இரக்ககுணம் உள்ளவர்கள், உண்மை ஆன்மீகவாதிகள், தொண்டுள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் அதற்குச் சான்று. ஆனால் அந்த நிலைத்தன்மை உள்ளவர்கள், கெட்டவர்களாக இருந்தால் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு அவர்களின் கெட்ட செயல்களை நியாயப்படுத்தி தினமும் அல்லது அடிக்கடி பேசிப்பேசியேக் கேட்பவர்களின் மூளையை வசியப்படுத்தி அவர்களை தங்கள் பக்கத்தில் இழுத்து அடிமையாக்கி, அதோடு நிற்காமல் உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும்ஏன் உன் பரம்பரையும் எதிர்மறையாகக் கஷ்டப்படுத்துவதோடு அவர்களின் வாழ்க்கையையும் வீணாக்கி வருகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக நடக்க நான் உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து நல்லவழி காட்டுகிறேன்.
Image result for DON'T BELIEVE BRAINWASH PEOPLE!

பசுமை மனிதா! அந்த மாதிரி செயலில் உன்னை ஈடுபடுத்தவிடாமல் நான் அதைத் தடுத்து நல்ல திசையில் திருப்ப ஆரம்பித்துவிட்டேன்உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் நான் உனக்கு நிலையான புத்தியைக் கொடுத்து உனக்கு உண்மை எது? பொய் எது? என்பதை விளக்கி உன்னை நல்வழிப்படுத்தி, உனது வாழ்வில் நான் கொடுத்த செல்வதையும், வளத்தையும் திருப்பி வாங்கித்தருவேன் அல்லது அவற்றை தவறவிடாமல் செய்யப் போகிறேன்.

மதிப்புள்ள மனிதா! பாலும் வெண்மை, கள்ளும் வெண்மை. ஆனால் அதன் செயல் வித்தியாசம். பால் அருந்தினால் மூளை நன்றாய் சுறுசுறுப்பாய் வேலை செய்யும். கள் அருந்தினால் மூளை மயங்கும். அப்போது உன்னை அறியாமலே நீ மற்றவர்களுக்கு அடிமையாகிவிடுவாய். அதைத் தான் எல்லோரும் செய்துகொண்டு இருக்கிறார்கள். போலியான அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பெரியவர்கள் அழகாகப் பேசுவார்கள். அழகாக நடிப்பார்கள். அவைகளெல்லாம் கள் போன்றது. அதை உங்களுக்குத் தருகிறார்கள் என்றால் உன்னை மயக்குவதற்கும், உன் மூளையை அவர்களுக்கு அடிமைப்படுத்துவதற்குமாகும். ஆனால் இதில் விசேசம் என்னவென்றால், உனக்கு கள் கொடுத்த அவர்கள் எப்போதும் பால் அருந்திக் கொண்டு நிலையாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நீ ஏமாந்துவிடக் கூடாது. அந்த வேளைகளில் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். அப்போது நீ விழித்துக் கொண்டால் போதும். நீ ஏமாற்றங்களிலிருந்து தப்பித்து அவர்களிடத்தில்  ஏமாறாமல் உனது  செல்வங்களை பாழாக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

Image result for DON'T BELIEVE BRAINWASH PEOPLE!

கௌரவமான மனிதா! இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கு யார் யாருக்கு எது எது தேவைப்படுகின்றதோ அவற்றைக் கொடுத்து இருக்கிறேன். அதோடு எல்லாவற்றையும் அனுபவிக்கும், ரசிக்கும், பார்க்கும் சக்திதந்து இருக்கிறேன். ஒலிகளைக் கேட்கும் சக்தி இருக்கின்றது. இப்படி பலவிதப் புலன்களை இலவசமாகத் தந்து இருக்கிறேன். தந்து கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக எல்லா ஜீவராசிகளும் தங்களின்  உணவுத் தேவைக்கும், இனப்பெருக்கத்திற்கும், உயிரைக் காப்பதற்கும் தான் அவைகளைப் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் மனிதனோ பலவற்றைப் பார்க்கிறான். பல நல்ல கெட்டப்  பேச்சுகளை ஒலியாகக் கேட்கிறான். ஆனால் நல்லவை அனைத்தும் எடுத்துக் கொள்கிறானா? என்றால் 'இல்லை' என்றே சொல்லலாம். என்ன தான் அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நல்லவற்றை மூளையில் ஏற்றினாலும் அவன் நினைத்தால் தான், அவனுக்கு  ஆர்வம் கொண்டும் ஆழ்ந்த கவனம் கொண்டும் திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தால், கேட்டால் தான் அவன் நினைவில் நிற்கும். இல்லை என்றால் நீ ஒரு மணி நேரமோ பத்து மணி நேரமோ பேசினாலும், அழகாக நடித்துக் காட்டினாலும் அவன் மனதில் நிற்காது. அவைகளெல்லாம் எங்கே போகிறது? அதாவது அவன் எண்ணங்கள்  யாவும் கேளிக்கை மற்றும் வேடிக்கையில் ஈடுபட்டால், நீ என்ன சொன்னாலும் அவன் எண்ணத்தில் ஏறாது. அதாவது பசியோடு இருக்கும் மனிதனுக்கு எவ்வளவு பெரிய விசயத்தைச் சொன்னாலும் அவன் மண்டையில் ஏறாது. பசியோடு இருப்பவனுக்கு உணவு தான் முக்கியம். அந்த பசிப் போக்கும் முதல் செயல் தான் ஜீவாதாரம் அல்லது வாழ்வாதாரம்!

ஆகவே ஒரு செயல் வெற்றிபெற வேண்டுமென்றால் எதிரில் இருப்பவன் பசியை ஜெயித்து இருக்கவேண்டும். மானமுள்ள மனிதா! இந்த உலகத்தில் மனிதர்கள் மிக அழகாகத் தேன் தடவி இனிமையாக பேசுகிறார்கள். காந்தம் போல் கவருகிறார்கள். தங்கள் நடிப்பில் மக்களை மயக்குகிறார்கள். 
Related image

பெருமை கொண்ட மனிதா! ஒரு மனிதன் பலவற்றைப் பற்றி பேசுகிறான் என்றால் அவன் அதுவாக மாறிவிட்டான் என்று தவறாக நினைத்துக்கொண்டு அவன் பின்னால் சென்று கடைசியில் அதலபாதாளத்தில் விழுந்து விடாதே. இனிய மனிதா! ஒரு இலக்கியத்தை, தத்துவத்தை, ஆன்மீகத்தை பேசுகிறான் என்றால் அவைகளால் ஏதேனும் பிரயோசனம் இருக்கின்றதா? அது உன்னை மயக்குவதற்க்கும், கவர்வதற்கும் கடைசியில் உன்னை அடிமைபடுத்துவதற்கும் செய்துவிடுகிறது.

சிறப்பு மிகு மனிதா! ராஜா வேடத்தில் இருந்துகொண்டு வீர ஆவேச செயலையும், மதி தரும் நன்மையையும் செய்தால் யாருக்கு என்ன பயன்? ஒரு கண்ணாடியில் அனைத்து செல்வத்தையும் காட்டி 'எல்லாம் உனக்குத் தான்! அதை எடுத்துக் கொள்!' என்பதாகும். கண்ணாடியில் தெரியும், கனவில் தெரியும், திரையில் தெரியும் , புத்தகத்தில் இருக்கும் செல்வத்தினால் யாருக்காவது ஏதாவது பிரயோசனம் கிடைக்குமா? அது போலத் தான், மற்றவர்கள் உன் முன்னால் பேசுவது, நடிப்பது! எதற்காகவென்றால் உனது செல்வத்தை அவர்கள் பறிப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும். தன்னலமற்ற மனிதா! உனது கையில் நிஜமான செல்வங்கள் இல்லாத வரைக்கும், அவர்கள் கொடுக்காத வரைக்கும், எது வந்தாலும், எது காட்டினாலும், எது சொன்னாலும் உனக்கு பிரயோசனப் படாது.

இறைவனாக உனக்குள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றி பிறர் பேசியோ, நடித்தோ இருந்து கொண்டே இருப்பவன் இறைவனாக மாற முடியுமா? முடியாது! ஏனெனில் அவைகள் வெத்து வேட்டு. எங்கு பேச்சைப் போல் செயல் இருக்கின்றதோ அவனால் மட்டுமே உனக்கு லாபம். வெறும் பேச்சில் மட்டும் திருப்தியடைந்து உனது வாழ்க்கையை, செல்வத்தை, வளத்தை அவர்களுக்கு அர்பணித்து, குறைந்த காலத்திலேயே உனது வாழ்க்கையை  வீணாக்கிக்கொள்ளாதே.

சிறப்பு மிக்க மனிதா! இப்போது சிறியவர்கள் கூட அழகாக பேசுகிறார்கள், நடிக்கிறார்கள். ஆனால் செயல் இருக்கும்போது தான் முழுப் பலன் கிடைக்கிறது. புதுமை மனிதா! ஒரு தாயால் மட்டுமே குழந்தை பிறப்பின் முறையையும், வலியையும் சரியாக விளக்க முடியும். அதுவும் அவர்கள் ஆர்வத்துடன், ஆழ்ந்த சிந்தனையும் அந்த பேரு பெற்றவர்கள் தெளிவாகச் சொல்லுவார்கள். மற்றபடி எவ்வளவு தான் அதை புத்தகத்தில் படித்தாலும், அதைவிட மிகைப்படுத்தியோ, குறையுடனே தான் சொல்ல முடியும்.

மகிழ்ச்சி மனிதா! அரு சுவை உணவு பற்றி எவ்வளவு பேசினாலும், காட்டினாலும் உன் பசி தேறாது. அதை எடுத்து சாப்பிட்டால் தான் உனக்கு பலன் கிடைக்கும். ஆகவே இனிய மனிதா! உன் கடமைகளை, தேவைகளை எப்போதும் மறக்காதே! அது தான் உனக்கு கடைசி வரையில் உதவும். பொறுமை மனிதா! நீ நல்லதை சாப்பிட்டு நன்கு ஜீரணமானால் தான் நல்லவை உன் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். அதே சமயத்தில் கெட்டவைகள் வெளியேறும். அது போல நீ ஒரு காட்சியை, நடிப்பை, படிப்பை உன் மூளையில் ஏற்றுக்கொண்டு அதை நன்றாக ஆழ்ந்து சிந்தித்தால் தான் உனக்கு நல்லவை ஏற்று கெட்டவை நீக்கி நன்மை கிடைக்கும்.

நீ இப்போது எப்படி இருக்கிறாயென்றால் பார்ப்பது எல்லாம் எனக்கு வேண்டும்! வேண்டும் என்று அனைத்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அதை ஜீரணிப்பதற்கு நேரம் கொடுக்காமல் உனது உடல் நல்லவை, கெட்டவை என்று பிரிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்போது எந்த வைத்தியனாலும் நிரந்தர தீர்வு காண முடியாது. அப்படியே வைத்தியம் பார்த்துக் கொண்டாலும் அந்த வைத்தியத்திற்கு அடிமையாகி உனது செல்வத்தை இழப்பது உறுதி.


Image result for DON'T BELIEVE BRAINWASH PEOPLE!

இன்பமான மனிதா! அதற்கு வைத்தியம் தரும் ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், பெரியோர்கள் வேண்டாம். யார் ஒருவர் உனக்கு ஜீரணம் (சிந்தனை) செய்யும் நன்மை எது, தீமை எது என்று சொல்லித் தந்து எப்போதும் உன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்களோ அவர்களே உண்மை மகான்கள். அவர்கள் எப்போதும் நன்மை செய்வார்கள். உனக்கு அவர்களால் எப்போதும் தீங்கு வராது.

பிரியமான மனிதா! யார் ஒருவரால் நீ கடமையை மறக்கிறாயோ, செல்வத்தை, வளத்தை, வாழ்க்கையை வீணாக்குகிறாயோ, உனது வாழ்க்கையை மயக்கமடையச் செய்கிறார்களோ அது உனக்கு நஞ்சு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள். அவர்களிடமிருந்து நீ பிரிந்து விடு. பிறகு யார் ஒருவர் உனது வாழ்விற்காக, மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக பல செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் பின்னால் நீ செல்லலாம். அதற்கு இந்த உள்விதி  மனிதன் துணையாக இருப்பான். வீணர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கும் வழியை நான் காட்டுகிறேன். உன் வாழ்வு சுகம் பெறும் .
*********************

Wednesday, 5 June 2019

உள்விதி மனிதன் பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! GOD - REAL AND FAKE!



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம் : 45 இறைவன் - அசலும் நகலும்! 
GOD - REAL AND FAKE!

Image result for GOD - REAL AND FAKE!

மேன்மை கொண்ட மனிதா! ஆன்மிகம் புனிதமானது. மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமானது. ஒருவகையில் மகிழ்ச்சி வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்வது. தன்னை உணர்வது, எப்படி ஒரு முறையான நல்ல வாழ்க்கை வாழ்வது? போன்ற பல சிறப்பு அம்சங்கள் ஆன்மீகத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகவாதிகள் சிலர் இவ்வாறு போதிக்கிறார்கள். அதாவது ஆன்மீகப் பற்று உள்ளவர்களின் கடமைகளை மறக்கச் செய்வதே, அல்லது அரிய மனித வாழ்க்கையை வாழத்தவிர்ப்பதே, தனக்குச் சொல்லாத, சம்பந்தம் இல்லாதாக்  கடமையைச் செய்வதே தான் ஆன்மீகம் என்று தவறான வழியில் போதிப்பவர்களாகத் தெரிகிறது. அரசாங்கச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவிலும் கடவுள் பிரார்த்தனை, கோவிலுக்குச் செல்லுதல், பஜனை செய்தல் போன்றவை சொல்லப் பட்டிருக்கின்றதா? அவையெல்லாம் விளையாட்டு, பொழுதுபோக்குப் பிரிவு போல ஆன்மீகமும் சேர்ந்துவிட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது. 

அன்பு மனிதனே! உனக்குப் பல கடமைகள் வாழ்க்கையில் இருக்கின்றது. அதை முதலில் தவறாது செய்துவிட்டாலே பாதி ஆன்மிகம் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம். மீதி பாதிஉனக்குப் போகப்போக தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு குடும்பத்தை மறந்து, குடும்பத்தைத் துறந்து, பலரைப் புண்படுத்தி உன்னை நீயே பலவகையில் கஷ்டப்படுத்திக் கொள்வது தான் உண்மை ஆன்மிகம் என்பது உண்மைக்குப் புறம்பானது ஒன்று என்றே தோன்றுகின்றது.


Related image

பெருமை மிக்க மனிதா! உன்னுள் இருக்கும் இந்த ஜீவ ஓட்டமாய் உண்மையாய் இருக்கும் உள்விதி மனிதனை மறந்து வெளியில் இருக்கும் பொய்யான தோற்றத்தில் நீ தினமும் ஆடி, பாடி, நடித்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வாய்? அதோடு நீ, என்னையுமல்லாவா ஏமாற்றுகிறாய்? 

ஒருவர் கோவிலில் இருக்கும் இறைவனை எந்நாளும் பஜனை, ஆராதனை செய்து வந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரிடத்தில் ஏதோ ஒன்று எனக்கு கேட்கத் தோன்றியது.

"சுவாமி! நீங்கள் தினமும் இறைவனை வழிபாடு செய்கின்றீர்களே! ஆராதனை செய்கிறீர்களே ! அது எதற்காக?" என்று கேட்டேன்.

அவரோ "இறைவனைக் காண்பதற்காக!" என்று பதிலளித்தார்.

"ஆனால் நான் இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேனே, நீங்கள் பார்க்கவில்லையா?" என்றேன்.

"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டு 'எங்கே? எங்கே?" என்று ஆர்வமாய்க் கேட்டார்.

நான், எதிரில் இருக்கும் இறைவனைக் காட்டி இது தான் தெய்வம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்" என்று பதிலளித்தேன்.

அதற்கு அவரோ "இதுவா தெய்வம்? அவர் உருவமற்றவர். அவரை உணர்வின் வடிவமாக உள்ளவர். அவரின் செயல் மூலம் தான் உணர முடியும்" என்றார்.


Related image

"இறைவன் இங்கு சிலையாகக் காட்சி தருகிறார். இந்தச் சிலைக்கு செயல் இல்லை. ஆனால் நாம் எப்போதும் நினைத்துக்கொள்ள, மறந்துவிடாமல் இருக்க மறந்துவிடாமல் இருக்க, ஒரு  அடையாளத்திற்காகத் தான் இந்தச் சிலை. பிறகு அசலுக்கும் நகலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?" என்று கேட்டேன்.

அவருக்கு பதில் தெரியாமல் முழித்தார்.

"நகல் சிலை. அசல் செயல். நீ நகல். உன் செயல் அசல். நீ நகலாய் இருப்பதால் இருக்கிறாய். ஆனால் உன் செயல் அசலாய் இருப்பதால் அழியாமல் இருக்கிறது" என்று விளக்கிச் சொன்னவுடன் 'புரிந்துவிட்டது' என்று தலையாட்டினார்.

செம்மை மனிதா! இந்த சிலை நகல் என்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைத் தாங்கியவன் தான் அசல். யார் செயலைச் செய்து, கடமையை கண்ணும் கருத்துமாய் தன் வாழ்க்கைக் கடமையினைச் செய்வதோடு மனிதர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவர்கள் தான் அசல் மனித தெய்வங்கள். அதை விட்டுவிட்டு செயலைச் செய்யாமல் சிலைக்கு முன் நின்று பாட்டு பாடி, பஜனை செய்வதால் உன் கடமைகளை மறந்து நகலாக மாறிவிடுகின்றாய்.

அதாவது ஒருவனை தனது அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான வேலைகளைச் (கடமைகளை) செய்யுமாறுக் கட்டளையிட வேண்டும். அப்போது தான் அவனுக்கு வருமானம் கிடைக்கும். அவன் வாழ்கையும் குடும்பமும் செழிக்கும். அதை விட்டுவிட்டு அவனை நீ உனது வாழ்க்கைக் கடமையிலிருந்து வெளியில் வா! அந்த கடமையைச் செய்யாதே. இதோ என் கடமையைச் செய். இப்படி அவனுடைய கடமையை மறக்கச் செய்துவிடுகின்றது இன்றைய ஆன்மிகம்.

Image result for GOD - REAL AND FAKE!

இது எப்படி இருக்கிறதென்றால் "நீ சினிமாவுக்குப் போ" என்றால் அந்த கடமை செய்வதற்கு அவனுடைய பணமல்லாவா செலவாகும். பிறகு அவனது கடமைக்குப் பணம்? மீண்டும் உழை! நீ தான் உழைக்க வேண்டும். நீ கேளிக்கைக்காக, விளையாட்டுக்காக செலவழித்த பணம் உனக்கு திரும்ப கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. அது மட்டும் நினைவில் வைத்துக் கொள்.

நம்பிக்கை மனிதா! நீ உழைத்தால் தான் உனக்கு நிம்மதி வந்து சேரும். அல்லது நீ உழைத்த பணத்தில் உன் கடமைக்கு உதவாத காரியத்தில் உன் சுயநல இன்பத்திற்காகச் செலவழித்தால் முடிவில் நீ பிச்சைக்காரனாக அலைய வேண்டும். அது தேவையா?
Related image

ஆகையால் மேன்மை மனிதா! நீ உழைத்த காசு உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனைச் சேர்ந்தது. அது எவ்வகையில் செலவழித்தால் அசலான ஆன்மீகத்தை அனுபவிப்பாய்' என்று நான் சொல்கிறேன். அந்த செலவின் மூலம் பலரை வாழ வைப்பாய்!
@@@@@@@@@@@ 

உள்விதி மனிதன் பாகம் : 44 எது உண்மையான ஆன்மிகம்? WHICH IS THE REAL SPIRITUAL?



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 
பாகம் : 44 எது உண்மையான ஆன்மிகம்?
WHICH IS THE REAL SPIRITUAL?

Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

பெருமைமிக்க மனிதா! உனக்குத் தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத இடங்களில் எல்லாம் 'தேவ ரகசியம்' என்கிறார்களே? அப்படியானால் நீ அன்றாடம் சாப்பிடுவதற்கு உதவிடும் மரம், செடி, கொடி தரும் காய்கனிகள், விலங்கினங்கள், பறவைகள், கடல் உயிரினங்கள் எல்லாவற்றையும் உன் கண்களுக்குத் தெரியாதவாறு பூமியில் புதைத்து ரகசியமாக வைத்திருக்களாமல்லவா? அப்படியிருப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் இவ்வுலகம் படைத்ததற்கு மகிமை இல்லாமல் போயிருக்கும். உனக்கு எல்லாம் உபயோகப்பட வேண்டுமென்பதற்காக உனக்குள் இருக்கும் என் ஜீவ ஓட்டத்திற்காக மட்டுமே! ஆகையால் உனக்குப் பயன்படுவது எல்லாமே உன் கண்ணில்படுமாறு படைத்திருக்கிறேன். காடுகளில், மலைகளில் ஏன் நீ செல்லாத, காணாத பல இடங்களில் உன் உதவியில்லாமல் தானே பல வகை மரம், செடி, கொடி, புல், பூண்டுகள், கடலினங்கள் வளர்கின்றது, அதற்கு நீ என்ன உதவி செய்தாய்? ஆகையால் பூமியில் உனக்கு வேண்டியது எதுவும் ரகசியமானதாக இல்லை. அப்படி இருந்தால் கட்டாயம் அது அறியாமை, விழிப்புணர்வு என்கிற முடிவுக்குத் தான் வர வேண்டும். அல்லது அவைகள் உனது ஜீவ ஓட்டத்திற்குப்  பயன்படா!

தன்னலமற்ற மனிதா! இந்த உலகில் ஆன்மீக விசயங்கள் பரிமாறிக்கொள்வதுக்கென்றே ஒரு தனிக் கூட்டம் இருக்கின்றது. அதில் உண்மையில் ஆன்மீகவாதிகள் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் வயது முதிந்தவர்களாகவே அந்த காலத்தில் இருந்தார்கள். அதில் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. போலி சாமியார்களின் வேலை என்ன? பலர் முன்னிலையில் நல்ல ஆன்மீகவாதிகளைப் போல் நடிப்பது! அவர்கள் சதா ஒரு நாமத்தை ஜெபிப்பது! பூஜிப்பது? அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டு இருப்பது? வருகின்றவர்களுக்கு அருள்வாக்கு கூறுவது, தன்னை பின்பற்றுபவர்களுக்கு 'உபதேசம்' தருவது, பூஜை பிரசாதம் அளிப்பது, தன்னை வணங்குவதற்காக பணத்தை வசூல் செய்வது! என்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு பணவசூல் வேட்டை நடத்துவது!
Related image

நல்லெண்ண மனிதா! நீ இருக்கும் வரை இறைவனான இந்த உள்விதி  மனிதனைப் பற்றிய செய்திகளைப் பற்றி யாரேனும் கூறினாலும், பழங்காலத்தில் நடந்த நிகழ்சிகளைப் பற்றிக் கூறினாலும் எல்லாம் உண்மை என்பதாகவே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் அவற்றை நிரூபிக்க முடியாது. பார்த்தவர்களும் இல்லை. சாட்சியும் இல்லை. ஏதாவது அழுத்திக் கேட்டால் அவைகள் உணர்ந்து அனுபவிக்க முடியுமே தவிர கண்ணால் காண முடியாது! என்று ஒருவரியில் பதில் சொல்லித் தப்பித்துக் கொள்வார்.அதில்லாமல் பல ஏமாற்று வித்தைக் காட்டி பலரை ஏமாற்றவும் செய்வார்கள்.

இனிய மனிதா! இக்கால ஆன்மிகம் உன் வாழ்க்கைக்கு மேன்மைபடுத்த உதவுகிறதா? சில வகையில் உதவுகிறது. பல வகைகளில் உன்னை ஏமாற்றுகிறது என்று சொல்லத் தோன்றுகின்றது. தொண்டுள்ளம் கொண்ட மனிதா! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், முதலாளிகள், மனிதர்கள் எல்லாரையும் உட்கார வைத்து படத்திற்கு, சிலைகளுக்கு பூஜை செய்து புகழ்ந்து பாடி பேசினால் யாருக்கு என்ன பயன்? அவர்கள் உனக்கு ஏதாவது தரப் போகிறார்களா? அல்லது இரக்க குணம் கொண்டு உன்னைக் காத்து விடுவாரா? இன்றோ சில ஆன்மீகவாதிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி ஆன்மீக ஞானம் வரும்?


Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

இளமையில் ஆன்மிகத்தால் உனது வாழ்க்கை நேரம் வீணாகிறது. குடும்ப உறவுகளைத் துறந்து உன்னைப் பற்றிய எண்ணங்களை நினைக்கச் செய்கிறது. போலியாக ஒரு மனிதனைக் காட்டச் செய்கிறது. இளமைக்குண்டான கடமையை மறக்கச் செய்கிறது. புதிதாக சிந்தனைகளைச் செய்யவிடாமல் செய்கிறது. ஒரு நாள் அதையே வேண்டாம் என்கிற அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்தச் செய்கிறது. இப்படியெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இனி மேலும் நடக்கும்!


Image result for WHICH IS THE REAL SPIRITUAL?

நன்மை தரும் மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் வரை உனக்கு நீயே சரியாக இருப்பதற்கும், சரியாக நடக்கும் மனிதனுக்கும் ஆன்மிகம் வேண்டியதில்லை. உன் செய்கையினால் மற்றவர்கள் யாரும் கவலையில்லாமல், எப்போதும் மகிழ்ச்சியாய் அல்லது பிரச்சனையில்லாமல், தொல்லையில்லாமல், கஷ்டப்படாமல் இருப்பதுவே உண்மை ஆன்மிகம். அதுவே சத்தியம். அதுவே தெய்வீகம். அதுவே உனது வாழ்க்கை உயர்வதற்கான வழி ! பிற உயிர்களைத் தீய சக்தியாக்கி அதனை அழிக்க பயன்படுத்துவதெல்லாம் ஆன்மிகம் இல்லை. இதை முதலில் புரிந்துகொள். உனக்கு எல்லா விசயங்களும் தெரிய வரும்.
###################

Monday, 3 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே! - BEWARE OF FALSE PEOPLE!



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம்:43 போலி ஆசாமிகளிடத்தில் ஏமாறாதே!
BEWARE OF FALSE PEOPLE
Image result for BEWARE OF FALSE PEOPLE

மனிதா! இப்போது புரிகின்றதா? சொர்க்கம், நரகம் உலகில் வாழ நீ செய்யும் செயலில் மட்டுமே பேசும். அதை நீ உன் வாழ்க்கையிலே அனுபவிக்கலாம். பெருமை மனிதா! முன் ஜென்மம் செய்த பாவ புண்ணியம் ஏற்ப உனது இந்த பிறவி அமைகிறது என்று எடுத்துக்கொண்டால் பச்சிளம் குழந்தைகள் ஏன் இறக்க வேண்டும்? வாழ்வைத் தொடங்குமுன் வாழ்வின் அர்த்தத்தைக் காணும் முன் அவர்கள் வாழ்க்கை முடிவுற யார் காரணம்? திடீரென்று வெள்ளம், எரிமலை, வறட்சி, சூறாவளியால் கூண்டோடு அடித்து பலரின் ஜீவ ஓட்டத்தை நிறுத்தப்படுகின்றதே அதற்கு காரணம் என்ன?

Image result for BEWARE OF FALSE PEOPLE

நன்மை தரும் மனிதா! ஒரு தலைவனின் தவறான எண்ணங்களினாலும் அதன் செயல்களினாலும் எத்தனைத் தலைகள் உருண்டிருக்கின்றன? என்பதை நீ சரித்திரத்தில் படித்திருப்பாய். அதாவது ஒருவனின் திமிர், அதிகார வர்க்கம், ஆணவம், தலைக்கணம், பேராசை போன்ற காரணத்தினால் பலரை துன்புறுத்தும் செயல் செய்கின்றபோது அதை யாராலும் தடுக்க முடியாது. அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். ஏனெனில் அப்படிப்பட்டப் பாம்பை உன்னைப் போன்றோர்கள் தான் பாலூட்டி வளர்க்கிறார்கள்! இன்று நீ அனுபவிக்கிறாய். நீயே ஒரு பாம்பை, சிங்கத்தை, புலியை, கரடியை நரியை தேர்ந்தெடுத்து அதைக் கூட்டத்தோடு வளர்க்க துணைபோனதுமில்லாமல் அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்து அதன் பலனாக நான் உனக்குக் கொடுத்த அனைத்து செல்வத்தையும், வளத்தையும் அவர்களிடத்தில் இழந்து இப்போது அவர்களுக்கு அடிமையாக அல்லவா இருக்கிறாய்? அதன் பலன் இப்போது நீ இருக்கும் நிலைமை!

சிறப்புமிக்க மனிதா! உனது வலிமை உனக்குச் சோதிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்தும் உன் அறிவிலி தன்மையால் உன் வாழ்வை நீயே நாசமாக்கிக் கொண்டு வருகிறாய். அதோடு உன்னுடன் ஒட்டியிருக்கும் என்னைக் கூட மதியாமல் பல சந்தர்ப்பங்களில் பலருக்குத் தீய செயல்கள் செய்தோ அல்லது தீய செயல்களைச் செய்யத் தூண்டவோ செய்யும்போது நான் இனி அதைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன். உனக்குள் ஆன்ம ஓட்டமாய் இருக்கும் நான் பெரும் புரட்சி செய்துவிடுவேன். இனி போகப்போக என் ஆற்றலைப் பாரும்! நீ ஒரு பாம்பை வளர்த்தாயானால் அதேபோல் மற்றொரு பாம்பை உருவாக்கி அவர்கள் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறேன். இறுதியில் இரண்டுமே சாகப்போகும் காட்சியை நீ பார்க்கத் தான் போகிறாய்? அதில் நல்ல செயல் புரியும் நல்லவர்களே தப்பிப்பார் ! இது உறுதி.   

Image result for BEWARE OF FALSE PEOPLE

தன்னம்பிக்கை மனிதா! இந்த உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் பல ரூபத்தில் பலவித இடங்களில் பரந்து விரிந்து இருக்கின்றன. ஆனால் அனைத்து ஜீவராசிகளில், இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் மட்டும் தான் அவன் தன் குணம், எண்ணம், சிந்தனை, செயல்களை எளிதாக சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் சட்டென்று மாற்றிக்கொள்ளும் வரம் பெற்றிருப்பவன். மற்ற அனைத்து ஜீவராசிகள் அனைத்தும் அன்று முதல் இன்று வரையும், இனிமேலும் ஒரே மாதிரி செயல்களையும், குணங்களையும் கொண்டதாக இருக்கின்றது / இருக்கும்.

நல்லெண்ணம் கொண்ட மனிதா! மாமரத்தை ஒரு போதும் கொய்யா மரமாக மாற்ற முடியாது. அதன் வித்து முதல் முடிவு வரை அவற்றின் பலனாக மாமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தவிர வேறொன்றும் தரும் குணம் அதற்கில்லை.

அதேபோல் மானின் குணம் ஒரு போதும் புலியின் குணமாய் மாறும் வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லை. மானின் குணம் கடைசி வரைக்கும் சாந்தமாய், புலி போன்ற பிராணிகளுக்கு பயப்படுமாயும் வளர்ந்து வீழ்கிறது.

நல் சிந்தனை மனிதா! பறவைகள் ஒருபோதும் மீன்களாக மாறாது. மீன்கள் ஒருபோதும் பறவைகளாக மாறது. ஆனால் தன்னம்பிக்கை மனிதா! இந்த ஜட, ஜந்து பிரபஞ்சங்களில் எல்லாம் இறைவனாக இந்த உள்விதி மனிதன் இருக்கின்றான். என் எண்ணப்படியே எல்லாம் நடக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் சிறப்பு மனிதா! இந்த அனைத்து ஜடம் மற்றும் ஜீவராசிகள் எப்போதும் இந்த உலகம் பிறந்தது முதல் இன்று வரையில் அதன் குணம்  மாறாமல் இருக்கின்ற காரணத்தினால் உனக்குத் தீங்கு ஏற்படாதவாறு உன்னைக் காத்து வருகிறேன்.

ஆனால் என் இனிய மனிதா! இறைவனான இந்த உள்விதி மனிதனுக்கு மிகப்பெரிய வேலை மனித உருவத்தில் வந்துள்ளது! என்றால் அதில் ஆச்சரியப்படுவதில் ஏதுமில்லை. ஏனென்றால் மனிதனின் எண்ணம், செயல்கள் எப்போதும் மாறக்கூடியவையாய் இருக்கின்றது.

இன்னும் பலவித வேளைகளில் செயல்களில், இயக்கங்களில், கட்சிகளில், ஆன்மீகத்தில், சாதி சமயங்களில் ஏன்? ஆதிவாசிகளில் கூட அவர்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. மனிதர்களுடைய எண்ணங்கள் செயல்பாடுகள் மேலும் பல மாற்றங்கள் நாம் பார்க்கலாம். ஏன் அவைகள் அழியும் வரைப் பார்க்கலாம்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

அதனால் பெருமை கொண்ட மனிதனே! உன்னை ஆட்டிப் படைப்பதற்காகத்தான் மனித உடலில் மட்டும் விஷேசமாக நான் உனக்குள் உள்விதி மனிதனாக ஆன்மீக இயக்கமாய், ஜீவ இயக்கமாய் இருக்கிறேன். இதுவரை நான் உன்னை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் எப்போது உன் எண்ணமும் செயலும் என்னோடு ஒத்துபோகாமல் இருக்க ஆரம்பித்ததோ, அதேபோல் உன்னை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு எப்போது உன்னை மாற்றிக் கொண்டாயோ அப்போது முதல் நான் உன்னிலும் மேலான ஆதிக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

மேன்மை மனிதா ! போலியாக, நடிக்கும் பெரிய பெரிய தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றோர்கள் எல்லாம் உனக்கெதிரே நடந்து கொள்வதை 'சரி' என்று எண்ணிவிடாதே. அவர்கள் உன் எண்ணத்திற்குத் தகுந்தவாறு உன்னைக் கவர அவர்கள் போடும் வேஷம் தான்.

Image result for BEWARE OF FALSE PEOPLE

ஆனால் நீ சென்ற பிறகு அவர்கள் போட்ட வேஷத்தைக் கலைத்துவிடுவார். பாவம்! அது உண்மையென நம்பி அதற்காக நீ ஏமாந்து அவர்களுக்கு அடிமையாயிருப்பாய். அதாவது போலியானத்  தலைவர்கள், ஆன்மீகவாதிகள் போன்றவர்கள் எப்போதும் மாறி மாறி பேசிக்கொண்டேயும், தாங்கள் பரம யோக்கியர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைவில் அவர்களின் லீலை உனக்குத் தெரியாமல் பலவித தீயச் செயல்களில் ஈடுபடுவார்கள் ஜாக்கிரதை!
&&&&&&&&&&&&&&&&

உள்விதி மனிதன் பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி A WAY TO REACH HEAVEN



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 
மதுரை கங்காதரன் 
பாகம் : 42. சொர்க்கம் அடையும் வழி 
A WAY TO REACH HEAVEN
Related image

மேன்மையான மனிதா! உன் ஜீவா ஓட்டம் நின்ற பிறகு உன்னைத்  தொட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவா ஆன்மா உன்னைப் பிரிந்து சென்ற பிறகு அது உன் செயலைப் பொருத்துத் தான் சொர்க்கமோ அல்லது நரகத்தைத் தொடும் என்கிற ஐதீகம் இருக்கின்றது. நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது நீங்கள் செய்யும் நல்ல செயல் பொருத்தே தவிர நல்ல எண்ணங்களைப் பொருத்தோ, நல்ல நினைப்பு பொருத்தோ அல்ல. இதில் 'செயல்' என்பதை எதற்காக அழுத்தத்துடன் சொல்லப்படுகிறதென்றால், ஒருவனின் செயல் தான் அவனை நல்லவன், கெட்டவன் என்று பிரித்துக் காட்டும். பலர் வெளியில் ஆயிரம் முறை 'நல்லதை செய்' என்றும், நல்ல எண்ணம், சிந்தனை கொள்ளவேண்டும் என்றும் பேசியும் முழங்கவும் செய்வார். ஆனால் திரை மறைவில் உள்ளே செய்கின்ற செயலிலோ  ஊழல், லஞ்சம் அல்லது பணத்திற்காகப் பேராசைப்பட்டு பல தீய செயலில் மறைமுகமாக அல்லது பிறரை மறைமுகமாகத்  துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவர். அவனுக்குத் தனியாக நரகம் என்று மேலோகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மனிதன் உனக்கு வேண்டுமானால் பகட்டாக, அந்தஸ்து மிகுந்தவனாக, பணக்காரனாகத்  தோன்றலாம். ஆனால் அவன் நிச்சயம் மரண அவஸ்தை தான் பட்டுக்கொண்டிருக்கிறான் என்று உங்களில் பலருக்குத் தெரியாது, அதாவது அவன் தனது சுயநலமிக்கச் சுகத்திற்காக அவனது தலைமுறையே காணாமல் போகும் அளவுக்குக் கஷ்டப்படுவான்.

Image result for A WAY TO REACH HEAVEN

ஏனெனில் அவனையும் அவனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் நானல்லவா ஆட்டிப்படைக்கிறேன். அன்பு மனிதா! நான் நீதி தவறாத நீதிபதிஉனக்கு நீதி நல்ல வழியில் தேடித் தரவேண்டும். நிரந்தரமாக உன் மகிழ்ச்சி காத்திட வேண்டும். உன் பரம்பரைக்கும் நிம்மதி தரவேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளதால், நீ தவறு செய்யும்போதெல்லாம் உனக்கு யாராவது தீர்ப்பு வழங்கித் தண்டனை கொடுக்கிறார்களா? இல்லையே. குறுக்கு வழிகளில் முறைகேடாகச்  சொத்து சேர்த்தவன் எவ்வளவு தான் தன் பெயரில் தன்  குடும்ப, உறவின் பெயரில் சேர்ப்பான். ஐந்து தலைமுறை? பத்து தலைமுறை?அவைகளெல்லாம் நீ எவ்வளவு காலம் மறைமுகமாக பலரது வயிறெரிச்சல், சாபம் மற்றும் அசிங்கமானப் பேச்சுக்கு ஆளாகி அவமானப்பட்டு கஷ்டத்துடன் சேர்த்திருப்பாய்! இனிய மனிதா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கின்றது. நீ பட்ட அந்தக் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. நீ சேர்த்து வைத்த அந்த செல்வத்தை நீ யாருக்குத் தானமாகக் கொடுத்தாலும் அதை அவர்களால் மகிழ்ச்சியாக அனுபவிக்க இயலாமல், கூடிய விரைவிலே அவர்களிடத்தில் இருந்த கொஞ்சநஞ்சம் பணமும், செல்வமும் அதோடு இழந்து விரைவிலே அவர்கள் ஓட்டாண்டிகளாகிவிடுவார்கள்.

பேராசை கொண்ட பிரபலத் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள் இன்னும் பலர் இறக்கும்போது, தான் சேர்த்து வைத்த சொத்துடன் இறந்தார்களா?  சில நேரத்தில் அவர்கள் தற்கொலையும் செய்யுமளவிற்கு சென்றுவிடுகிறார்களே ஏன்? மனஅழுத்தம், மனஉளைச்சல், அவர்கள் தேடிய வினை, அவர்களை விட்டு அகலாமல் நான் அணைபோட்டுத் தடுத்து தண்டித்தது. அது மற்றவர்களுக்குத் தெரியாது!

Image result for A WAY TO REACH HEAVEN

வெற்றி மனிதா! நீ தேடிய மறைமுகத் தீய எண்ணத்துடன் வந்த செல்வங்கள் வேண்டுமானால் மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அத்துடன் இருமடங்கு பாவத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே! அந்த பாவம் உன்னை அழிப்பதோடு அவர்களையும் அழிக்கும் கருவியை கொடுக்கிறாய் என்று மறந்துவிடாதே!

ஒருசமயம் நீ கொடுத்த செல்வமே உனக்கு எமனாக வந்து உன்னையே உலை வைத்துவிடும். அது பாம்புக்கு பாலூட்டினால் அது உன்னையும் விடாது, சென்ற இடத்திலுள்ளவர்களையும் விடாது என்ற கதையாகிவிடும். 
********************