Pages

Tuesday, 15 August 2023

30.7.2023.மதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 13 -கீழடி உலகின் தாய்மடி - முனைவர் இரா.வரதராசன் நூல் வெளியீடு

நாள் 30.7.2023.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "கீழடி உலகின் தாய்மடி "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார். 

பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அனுராதா, அஞ்சூரியா க .செயராமன், மு .இதயத்துல்லா, புலவர் .முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, மா .வீரபாகு, அழகையா, சங்கர நாராயணன், வீரா,மா .ஆறுமுகம், இராம.பாண்டியன், நா .குருசாமி, ஆகியோர் கவிதை படித்தனர். முனைவர் இரா.வரதராசன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது.  கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மூத்த மகன் ஆதிசிவன் நன்றி கூறினார் 

.படங்கள்:  புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன்  நன்றி.


                                           





                           கீழடி உலகின் தாய்மடி!
                              - கவிஞர் இரா. இரவி
                                                 *****
கீழடி உலகின் தாய்மடி என்பது உண்மை
கீழடி உரைக்கின்றது தமிழரின் அன்றைய தொன்மை
எழுத்தறிவோடு குடிமக்களும் வாழ்ந்திட்ட கீழடி
எல்லா வகை நாகரிகத்தோடும் வாழ்ந்திட்ட கீழடி

முத்து பவளம் அணிகலன்கள் கிடைத்திட்ட கீழடி
முத்தாய்ப்பான தொழில்களும் புரிந்திட்ட கீழடி
விண்முட்டும் புகழை பெற்றுத்தந்திட்ட கீழடி
விளையாட்டு சாதனங்கள் பல தந்திட்ட கீழடி

தந்தத்தால் ஆன சீப்புகள் கிடைத்திட்ட கீழடி
தங்கத்தால் ஆன சங்கிலிகள் கிடைத்திட்ட கீழடி
நெசவுக்கான பொருட்கள் சில கிடைத்திட்ட கீழடி
நெசவு செய்து சிறப்பாக வாழ்ந்திட்ட கீழடி

கண்கவரும் வண்ணப்பொருட்கள் தந்திட்ட கீழடி
கழிவறைகள் கட்டி வாழ்ந்திட்ட கீழடி
நீர் மேலாண்மை அறிவில் உயர்ந்திட்ட கீழடி
நீர் எடுக்க கிணற்றுத்தொட்டிகள் செய்திட்ட கீழடி

தோண்டத் தோண்ட தந்து கொண்டே இருந்த கீழடி
தோண்டுவதற்கே போராடிப் பெற்ற கீழடி
சுட்ட சட்டிகள் செய்து வாழ்ந்திட்ட கீழடி
சுடும் தொழில்நுட்பம் அறிந்து வாழ்ந்திட்ட கீழடி

வெள்ளை வண்ணத்தால் அழகுபடுத்திட்ட கீழடி
வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வளம் மிக்க கீழடி
உலகமே அன்னார்ந்து வியந்திட்ட கீழடி
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி வாழ்ந்திட்ட கீழடி!
                                                                          ******












                           கீழடி உலகின் தாய் மடி 
                                     புதுக்கவிதை 
                                 கு.கி.கங்காதரன் 

கீழடியில் கண்டெடுத்தப் பழமைச் சின்னங்கள்
கெத்தாய் உரைக்கும் தமிழர் பெருமைகள்
வைகையில் தவழ்ந்திட்ட தமிழரின் நாகரிகம்
விரிந்து வளர்ந்ததே தமிழரின் பண்பாடு 

ஓரடி ஆத்திசூடி நீதிநெறியை போதிக்கும் 
ஈரடி திருக்குறள் வாழ்வினை உயர்த்தும்
நாலடி நன்னெறி ஒழுக்கத்தை சொல்லும் 
கீழடி அகழாய்வு தொன்மையைக் காட்டும்  


வெட்டி வேலை என்பார் அறியாதவர்கள் 
வெற்றி வேலாய்ப் போற்றிடுவார் அறிஞர்கள் 
வென்று வெளிப்பட்ட தமிழ்க்கலாச்சாரம்
வெல்லமாய் இனித்திடும் தமிழ்ப்பெருமைகள்

கீழடி அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள்
காட்டும் தழிழ்மண்னின் அவதாரங்கள்
கிடைத்திட்ட பழைமை தொல்பொருட்கள்
காத்திட வேண்டியப் பொக்கிசங்கள்

                               ************************

Monday, 14 August 2023

நான் ஒரு நாள் கடவுள் ஆனேன் - கு.கி.கங்காதரன்- புதுக்கவிதை

 நான் ஒரு நாள் கடவுள் ஆனேன் - கு.கி.கங்காதரன்-புதுக்கவிதை


ஒரு மந்திரக்கோல் கிடைத்ததடா

ஒரு நாள் கடவுள் ஆனேனடா.

சக்தி பிறந்ததடா

புத்தி வளர்ந்ததடா

யுக்தி தெரிந்ததடா

பக்தி உதித்ததடா

முக்தி கிடைத்ததுடா

 

பாடுபடும் பட்டாளிகளுக்கு - நான்

பசியை விரட்டும் கூட்டாளியானேனடா 

அப்பாவிகளைக் காத்தேனடா - அவர்

அறியாமையை அழித்தேனடா.

 

புதிய உலகம் படைத்தேனடா  - அங்கே

புதியபாதைப் போட்டேனடா 

பணப்பேய்களை விரட்டினேடடா - அவர்

பதவி வெறியை அகற்றினேனடா

 

உண்மையை நிலைநாட்டினேடடா - இருக்கும்

பொய்யர்களைப் பந்தாடினேடடா.

பூமியை சொர்க்கமாக்கிவிட்டேண்டா  - அதில்

புதுமைகளைப் புகுத்திவிட்டேண்டா 


பெண்களை பாரதியாக்கிவிட்டேண்டா  - அதோடு

ஆண்களைப் பூக்களாக்கிவிட்டேண்டா .

வானத்தை மனதில் வைத்தேனடா  - அதன் 

விசாலத்தை காட்டிவிட்டேனடா

 

பூமியை இதயத்தில் பூட்டினேனடா  - அதில்

பொறுமையைப் பொதித்திவிட்டேண்டா

உடலில் நெருப்பைப் பரப்பிவிட்டேனடா - ஒட்டிய

அநீதிகளைச் சாம்பலாக்கிவிட்டேண்டா.


சிந்தனை மழையாய்ப் பெய்யவைத்தேனடா - கூடவே

சிறப்புக் குணங்களைத் தெளித்துவிட்டேனடா .

உயிரில் ஆன்மீகத்தைக் கலந்துவிட்டேனடா  - அதோடு

உலகை உருப்படியாய் மாற்றிவிட்டேனடா .


உழைக்கும் ஏழைகளோடு வாழப்போறேண்டா - அவரோடு

ஊருக்கு நன்மை செய்யப்போகிறேனடா.

பாவிகளை பொசுக்கிவிட்டேனடா  - அவர்களைப்  

பூமிக்குக் கீழே புதைத்துவிட்டேனடா 


ஏழைகளுக்கு நிம்மதி தந்தேனடா  - அவர்களை

ஏமாற்றுபவர்களை நல்லபுத்தி கொடுத்தேனடா 

செவ்வாய்க்குக்  குடியேறச் செய்வேண்டா - அங்கே

செழிக்கும் வழி வழங்குவேண்டா 


நீனா நானாப் போட்டி எதுக்குடா - கடவுளின் 

நன்றி மறந்தால்  பிழைப்பு  நடக்காதுடா.

உலகமே கணினி மயமாக்கிவிட்டேண்டா  - மனுசன்

உழைப்பை கேலிப்பொருளாக்கதேடா

 

விவசாயத்தில் மாற்றம் செய்தேனடா  - பயிர்

விளைச்சலைப் பன்மடங்கு ஆக்கினேனடா 

கோடிக் கடனாளிக்குச் சிறை வைத்தேனடா   - அதோடு   

ஊழல் லஞ்சம் பேர்வழிகளை அழித்தேனடா

 

ஊரைச் சுருட்டியோர்களை பந்தாடினேனடா - நல்ல 

குழந்தைகள் பெண்களைக் காத்தேனடா 

செயற்கை நுண்ணறிவு தந்தேனடா - புவியை 

சொர்க்கமாய் மாற்றிவிட்டேனடா 

 

இதெல்லாம் கனவில் நடந்தடா - அனைத்தும் 

இன்று நடந்தால் இன்பமாய் இருக்குமடா 

கடவுளே மந்திரக்கோலை தருவாயா - மக்களை 

மகிழ்ச்சிக்  கடலில் ஆழ்த்துவாயா !

***********************************