Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Monday, 17 June 2019
Wednesday, 12 June 2019
உள்விதி மனிதன் பாகம்: 49 உனது ஆற்றல் அளவற்றது YOU ARE HAVING ENORMOUS POWER
உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம்: 49 உனது ஆற்றல் அளவற்றது
YOU ARE HAVING ENORMOUS POWER
மதுரை கங்காதரன்
பெருமைமிக்க மனிதா! முதல் முதலில்
உனக்கு இயற்கை பற்றிய பயம் இருந்தது. பிறகு அவற்றிலிருந்து ஒதுங்கி வாழ
ஆரம்பித்தாய்! மேலும் இயற்கையினால் ஏற்படும் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள
வழி தேடி ஓரளவு வெற்றியும் பெற்றாய்.
மேன்மை மனிதா! பிறகு தான்
கடவுள் என்றும், குரு என்றும், பெரியவர்கள்
என்றும், சட்டம் என்றும் பலருடைய பார்வையில் கண்டிப்பு இருந்தது. அதனால் உனக்கு பயம் என்று இருந்தது. ஆனால் இப்போது சிலரின் பெரியவர்கள், அறிஞர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் செயல்களில் பலவிதமான தவறுகள் இருப்பதினால் அவர்களின் பயம் இல்லாமல் போய்விட்டது. அது சரி, 'சட்டம்' என்கிற ஒன்றுக்காவது பயமாவது இருக்கின்றதா? அதுவும் இல்லை.
ஏனெனில் அந்தச் சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக எதிராளியை பழி வாங்குவதற்காகவே பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது பலரது கருத்து. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இதனால் சில குற்றவாளிகள் பிடிபடாமல் தைரியமாக சட்டத்தின் துணையோடு நடமாடிக்கொண்டு தான் இருக்கின்றன.
ஆக பயம் எப்போது விடுபட்டதோ அதிலிருந்து மனிதனின் சுயநலம் பெரிய அளவில்
விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்போது
ஏதாவது ஒருவகையில் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டுத் தான் கிடக்கிறோம். அவர்கள் சொல்லும்படி ஆடுகிறோம், செயல்களையும் செய்கிறோம்.
அன்பு மனிதா! உனக்குள்ள
ஆற்றல் எவ்வளவு என்று தெரியுமா? ஐன்ஸ்டீனின் ஒரு விதி
E = mc2 என்பதாகும். இது இதுநாள் வரை ஒரு பொருளில்
ஆற்றல் மட்டும் தான் என்கிற சித்தாந்தம் நிலவி வந்தது. ஆனால் அது மனித ஆற்றலுக்கும் பொருந்தும். அதாவது அதன் விரிவாக்கம் 'E' என்பது Energy அதாவது ஆற்றல். m என்பது mass அதாவது
எடை. c என்பது ஒளியின் வேகம் (அதாவது ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்).
இப்போது தெரிந்து கொள். உனது ஆற்றல். உன்னால் எதுவும் முடியும். அதற்கு உனக்குள் இருக்கும்
இந்த உள்விதி மனிதன் துணையாக இருக்கிறேன்.
%%%%%%%%%%%%%%%
Monday, 10 June 2019
உள்விதி மனிதன் பாகம்: 48 தவறுக்கு காரணம் பயமின்மையே! FEARLESS INDUCE PEOPLE TO DO WRONG
உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம்: 48, தவறுக்கு காரணம் பயமின்மையே!
FEARLESS INDUCE PEOPLE TO DO WRONG
மதுரை கங்காதரன்
இரக்கமுள்ள மனிதா! நீ நினைப்பது
அனைத்தும் சரி தான். நீ என்ன என்ன நினைக்கிறாயோ அது கூட சரிதான்.
அந்த நினைவு ஆழமாய் பதியும்போது அந்தச் செயல்கள் திரும்பத் திரும்ப செய்ய
வைக்கிறது. அதுவே பின்னர் பழக்கமாகி அடிமையாகிவிடுகிறது.
இது நல்ல, கெட்ட செயல்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
சிந்தனை கொண்ட மனிதா! வருங்காலம்,
நிகழ்காலம் அறியும் ஆசை மனிதனுக்கு விட்டு வைக்கவில்லை. வருங்காலம் எப்படி இருக்கும்? என்கிற ஆசையை வளர்த்திட எப்படியெல்லாம் எந்த எந்த மக்கள் என்னவெல்லாம்
பயன்படுத்தி வருகிறார்கள்? என்று பார்த்தோமானால் முதலில் 'ஜாதகம்' என்றார்கள்,
அதிலிருந்து பலன்களைக் கணித்தார்கள். பிறகு நாடி,
ஏடு, கைரேகை, எண் ஜோசியம், கிளி ஜோசியம்,
சீட்டு ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், ராசிக்கல் போன்ற பலவகைகள் வந்துவிட்டன. அனைத்தும் சரி
தான்.
ஏனென்றால் உன் மனது ஒன்றை மட்டும் உதாரணம் காட்டிச் சொன்னால் திருப்தி பெறாது. ஆகவே பலவற்றைச் சொல்லி உன் மனம் எது ஒத்துக் கொள்கிறதோ
அதைத் தான் நீ ஏற்றுக்கொண்டு பின்பற்றுவாய். அதுவே உனக்கு முழு
திருப்தி தரும். அதில் ஏமாற்றம் வந்தாலும் சமாதானம் அடைவாய்.
ஏனெனில் நீயாக விரும்பி ஏற்றுக்கொண்டாய் அல்லவா?
நாளடைவில் அதுவே பழக்கமாகி விட, அதற்கு அடிமையாகி அதனையே பரம்பரைப் பரம்பரையாக பின் பற்ற ஆரம்பித்துவிடுவர்.
அப்படித்தான் முன்னோர்கள் சிலவற்றை சரியான காரணங்கள் என்னவென்றுத் தெரியாமல் பின்
பற்றிப் பல காரியங்கள் செய்து வருகின்றனர்.
பேரன்பு மனிதா! எல்லாவற்றிற்கும்
பொதுவாக பிறர்க்குத் திருப்தி என்பது எதிலும் இருக்காது. ஆகவே எல்லோரும்
தைரியமாக தங்களுக்கு பிடித்த ஒன்றை பின் பற்றி வருகின்றனர். அதேபோல்
வித வித ரூபங்களில் விதவிதமான வகைகளில் கடவுள் வழிபாடுகள், பிரார்த்தனைகள்
உண்டாகப்பட்டுள்ளன.
இனிய மனிதா! இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி பிறர்க்கு உன் மூலமாகவே சிலர் உன்னை தவறான வழியில் பழக்கப் படுத்திவிடுகின்றனர்.
அதைத் தடுக்கவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். எக்காரணம் கொண்டும் என்னை மீறி அந்த மாதிரித் தவறான காரியங்களில் ஈடுபட்டு விடாதே.
இது எனது கடைசி எச்சரிக்கை!
பிரியமுள்ள மனிதா! உன் மனம்
பலவிதமான நிறங்களைக் கொண்டது. உனக்கு எது பிடிக்கும் என்பது நீயே
தேர்ந்தெடுத்துக் கொள்.
சேவை எண்ண மனிதா! மனிதன்
இந்த உலகில் பலவிதமான கெட்ட செயல்களைச் செய்யக் காரணம் பயமின்மை தான். ஏனென்றால் பலவித நூல்களில், சமயங்களில் சில சமயம் மனிதச் சட்டங்களில் 'பாவம்' செய்துவிட்டு மனதாக
'மன்னிப்பு' கேட்டால் உன் பாவம் நீங்கிவிடும் என்றும்,
காசியில் குளித்தால் பாவ தோஷங்கள் கரைந்துவிடும் என்றும், சிலர் பாவத்திற்கானப் பரிகாரங்கள் செய்தால் போதும் என்றும் கூறி வருகின்ற
படியால் மனிதன் தைரியமாக பாவங்கள் செய்துவிட்டு 'மன்னிப்பு'
கேட்டுவிடுவதோடு மீண்டும் பாவம் செய்யவும் துணிந்து விடுகிறான்.
இது நல்லதா!
நல்லெண்ண மனிதா ! சில விளையாட்டுகளில்
ஒரு அணி தவறு செய்தல் எதிரணிக்கு வாய்ப்போ, பலனோ அல்லது கூடுதல்
மதிப்போ கிடைக்கும். ஆனால் நடைமுறையில் ஒருவன் தவறு செய்தால்
அவனுக்கு மன்னிப்பும், அவனால் பாதிப்பிற்குள்ளான எதிராளிக்கு
கஷ்டமுமல்லவா வருகிறது. கொலை செய்தவன் தண்டனை பெறுகிறான்.
ஆனால் எதிராளிக்கு வாழ்க்கையல்லவா இழப்பு ஏற்படுகிறது. அவர்களைச் சார்ந்து இருப்பவர்களின் கதி என்னவாகும் என்பதை நீ யோசனை செய்கிறாயா?
மனிதனுக்கு பயம் எப்போது நீங்கியது? ஒருவன் தவறு செய்துவிட்டு தைரியமாக எவ்வித தொந்தரவும்,
கஷ்டமும் இல்லாமல் நடமாடுவதை பார்க்கும்போது, சிலர்
நாமும் தவறு செய்யலாமே! என்கிற முனைப்பும், தவறு பற்றிய பயமும் இல்லாமல் போய்விடுகின்றது.
உள்விதி மனிதன் பாகம்: 47 உன் எண்ணப்படி மாறும் ஜீன்கள் YOUR THINKING CAN CHANGE THE GENE
உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம்: 47 உன் எண்ணப்படி மாறும் ஜீன்கள்
Your thinking can change the Gene
மதுரை கங்காதரன்
அன்பு மனிதா! இந்த உலகில்
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அந்தக் கால காப்பியங்கள், இதிகாசங்கள்,
மதவாதக் கொள்கைகள், நாகரீகம், கலாச்சாரம், வேதங்கள், சித்தாந்தங்கள்,
பல தரப்பட்ட நூல்களை பற்றி பல வழிகளில் நாம் அறிகிறோம். அவைகளெல்லாம்
மனிதர்களால் மனிதர்களின் நன்மைக்காக, சிறந்த வாழ்வுக்காக எழுதப்பட்டவை
என்றாலும் அந்தப் புத்தகங்களால் ஏன் மக்களை பண்படுத்த முடியவில்லை. இவ்வளவுக்கும் அந்தக் காலத்தில் குறைந்த மக்கள்தொகையே இருந்தாலும் வெகுவானவர்களின் கல்வியறிவு மிகமிகக் குறைவாகவே இருந்திருக்கின்றது. பின் எப்படி இன்று இருப்பதைக் காட்டிலும் அவர்களால் நல்ல வாழ்க்கை அமைத்திருக்க முடியும்? அந்த நூல்கள்
இல்லாமல் எப்படி வாழ்ந்திருக்கின்றனர்? அப்படியென்றால் அந்த நூல்களெல்லாம்
சும்மா ஒப்புக்காக, நேரத்தைச் செலவழிப்பதற்காக எழுதப்பட்டதா?
என்கிற கேள்வி மேலோங்கி நிற்கிறது.
இனிய மனிதா! எப்போதும் நான் கூறுவது இது தான். செயல் இல்லாமல் வெறும் வார்த்தைகள்,
எழுத்துக்கள், எண்ணங்கள் என்றும் விலை பெறா
! மதிப்பும் பெறாது! செயல் எது செய்கிறதோ அது தான்
நிலைத்து நிற்கும். செயலைச் செய்பவர்கள் தான் எப்போதும் வெற்றி
பெறுவர்.
மேலும் பேரன்பு மனிதா! அந்தக் காலத்தில்
அரசாட்சி எப்படி இருந்தது? வீரம், நேர்மை,
நீதி, நியாயம் இருந்தது. தர்மம் வாழ்ந்தது. நாட்டை ஆளும் மன்னர்களுக்கு மக்கள் நன்மை ஒன்றே குறிக்கோளாக இருந்தது.
பின் ஏன் திடீரென்று இந்த மாற்றம்? இன்று கொலை,
கொள்ளை லஞ்சம், ஊழல், ஏமாற்று
என்று சர்வ சாதாரணமாய் நடைபெறுகிறது ! அதற்குக் காரணம் யார்?
கோவில்கள் பல இருக்கின்றன.
ஆனால் சில கோவில்களின் தவறான காரியங்கள் நடக்கின்றன. அதனால் கோவிலுக்குச் செல்பவர்கள் எல்லோரும் பக்திக்காக செல்கிறார்கள் என்பது
உறுதியாக சொல்வது கடினமாக இருக்கின்றது. ஆன்மிகம் பேசுகிறவர்கள்
எல்லோருமே நல்லவர்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?
பெருமையுள்ள மனிதா! அதற்கு
காரணம் நாம் தான். உன் ஜீவா ஓட்டம், ஆன்ம
ஓட்டம் தான் காரணம். இதைக் கேள். கேட்கும்போது
உனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஏனெனில் உன்னுள் இருக்கும்
இந்த மனஓட்டத்தை , மனக்காட்சியை அழித்து, மற்றவர்களுக்குத் தீங்கு செய்யும் எண்ணம், செயல் எப்படி
உருவானது?
முன்பெல்லாம் உனக்கு இறைவனைப் பற்றிய பயம், இறப்பை பற்றிய பயம், சட்டத்தைப்
பற்றிய பயம், வாழ்வைப்பற்றிய பயம், உன்னுடைய
கௌரவம் பற்றிய பயம், இயற்கையின் பயம், பெரியோர்களின் பயம் என்று பலவகை பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனிடமிருந்து அகன்று கொண்டிருக்கின்றது.
இதற்கெல்லாம் முதல் காரணம் நமது எண்ணங்களின் மாற்றமும் வாழ்க்கைப் பற்றிய
அசாதாரண நினைவுமாகும்.
சில ஆன்மீகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவர்களின் மனதில் 'நாம் எல்லோரும் எப்போதோ ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும்.
அந்த சமயத்தில் நாம் எதையும் கொண்டுபோகப் போவது கிடையாது. அதனால் இப்போது இருக்கும் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று பொய்யான
உண்மையை அவர்கள் எல்லோரின் மண்டையில் திணித்து வருகிறார்கள். உன் நிம்மதியின்மைக்கு காரணம் உன் குடும்பம் மற்றும் வளமான செல்வங்கள்
தான். அதை எனக்குக் கொடுத்து விடு என்று
மூளையை வசியப்படுத்தி அவர்களின் செல்வங்களை வாங்கிக்கொண்டு அவர்களை தங்கள் வாழ்நாள்
முழுதும் அடிமையாக்கிவிடுவதே ஒரு சிறந்த தொழிலாகக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உள்விதி மனிதனை 'இறைவன்' என்கிற போர்வையில் பல தொண்டுகள் போலியாக நடைபெறுவதால் தான் இந்த மாற்றம்.
அவர்களின் விளம்பரங்கள், அணுகுமுறைகள் பல ஊடகங்கள் வெகு பிரமாதமாய் திரும்பத்திரும்பக் காட்டி, பார்ப்பவர்களின்
மூளையை வசீகரம் செய்வது முதல் முயற்சி. அந்தக் கவர்ச்சியான பேச்சில், விளம்பரத்தில் கவரப்பட்டு அதைப் பார்ப்பவர்கள் 'சும்மா அங்கு போய் பார்ப்போம், என்ன சொல்கிறார்கள்? பார்ப்போம்'
என்கிற சிந்தனையுடன் அங்கு செல்கிறார்கள். அப்போது ஏமாற்றுபவர்களுக்குப் பாதி வெற்றி. அங்கோ
அவர்களின் அன்பான உபசரிப்பு, இனிமையான பேச்சு, ரம்மியமான சூழ்நிலை, பிரச்சனை இல்லாத மனிதர்கள் போன்றவை பார்க்க பார்க்க, அவைகளெல்லாம்
பிடித்துவிட, அது தான் தாங்கள் தேடிய இனிய வாழ்க்கை என்று தங்கள் கண்ணால் காண்பதை நம்பி
அவர்கள் தங்களின் கடமையை மறந்து அல்லது ஒதுக்கி அங்கு தஞ்சம் அடைகிறார்கள். மேலும் தங்கள் வாழ்நாளில் முக்கிய நோக்கமான 'மக்கள், மக்களைக் காத்தல்' என்கிற
கடமையை மறந்து வாழ்வை வீணாக்கிக்கொண்டு வருகிறார்கள்.
இனிய மனிதா! மனிதர்களின்
எண்ணங்கள் பலத்தரப்பட்டவை. அது எப்படி அமைந்துள்ளது என்று உனக்கு
ஆச்சரியமாக இல்லையா? கல்வியறிவு இல்லாத தாய் தந்தையர் மகன் மருத்துவம்
படித்து டாக்டராகிறான். மற்றொருவன் பொறியாளராகிறான். அறிஞராகிறான், விஞ்ஞானியாகிறான். கலெக்டர் ஆகிறான். அதாவது அவர்களுடைய மூதாதையர்களின்
அறிவுக்குச் சம்பந்தமில்லாத பல துறைகளில் மேதையாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது?
சிறப்புமிக்க மனிதா! அன்றோ நெசவாளியின்
மகன் நெசவாளி தான். டாக்டர் மகன் டாக்டர், கொல்லர் மகன் கொல்லர், ஆசிரியர் மகன் ஆசிரியர் என்று
இருந்த காலம் போய் எவரும் எந்தத் துறையிலும் நுழைந்து தேர்ச்சி பெறலாம் என்கிற எண்ணம்
எப்படி வந்தது? இங்கு ஜீன்கள் எவ்வாறு முன்னேற்றம் பெற்றன?
என்று சந்தேகம் உங்களுக்கு வருகிறது தானே?
மானமுள்ள மனிதா! உனக்குள்
இருக்கும் இந்த எண்ண ஓட்டம், எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தது.
நானும் எனது எண்ண ஓட்டத்தை உனது நன்மைக்காக மாற்றிக் கொண்டேன். அதாவது சூழ்நிலைக்கும்,
உன் விடாமுயற்சிக்கும், உன் அறிவுக்கும்,
உனது கடின உழைப்பிற்கும் உன் எண்ண மேன்மை அடையும் தன்மைக்குத் தகுந்தாற்போல் ஏற்றுக்கொள்ளக் கூடியது
என்பதை மறந்து விடாதே!
பெருமைமிக்க மனிதா! நான் உன்னுள்
இருந்துகொண்டு இத்தகைய அதிசய நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை இப்போதாவது உணர்ந்து
கொள்! உனக்குள் இருந்துகொண்டு உன்னையும் மற்றவர்களையும் நல்வழிப்படுத்துவதற்காக நான் உனக்கு எந்தவித பிரதிபலன் இல்லாமல் கொடுத்தது' என்று மட்டும் மறந்துவிடாதே! அதற்காத் தான் உனக்குள்
உள்விதி மனிதனாக இருந்துகொண்டு துணை செய்ய வந்திருக்கிறேன்.
Friday, 7 June 2019
உள்விதி மனிதன் பாகம்:46 மூளைச் சலவையில் மயங்காதே! DON'T BELIEVE BRAINWASH PEOPLE!
உள்விதி மனிதன்

சமமனிதக் கொள்கை
பாகம் 46. மூளைச் சலவையில் மயங்காதே!
DON'T BELIEVE BRAINWASH PEOPLE!

பிரியமுள்ள மனிதா! உன் மூளையை
வசியப் படுத்துவது மிகவும் எளிது. அதாவது யார் ஒருவர் தனது
வாழ்வில் இலட்சியம் இல்லாமல், நிலைத் தன்மையில்லாமல் இருக்கிறார்களோ
அவர்களின் மூளையை நாம் பேச்சால், கவர்ச்சியால், செயலால், போலி வாக்குறுதியால் எளிதாக அடிமைபடுத்திவிடலாம். ஏனென்றால்
அவ்வாறான மூளை, சுய சிந்தனை இல்லாத மூளை! யார் எதைச் செய்யச் சொல்கிறார்களோ
அப்படியேச் செயல்படும். அப்படிப்பட்ட மனிதர்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளனர். அந்த வசியம், நன்மை தருவதாக இருந்தால் அவர்களுக்கு நன்மை
கிடைக்கும். அதுவே தீமையாக இருந்தால் அது தீமையில் முடியும்.
ஆனால் இவ்வுலகில் நிலைத்தன்மை உடையவர்கள் மிக மிகக் குறைவானவர்களே உள்ளனர்.
அவர்களில் சிலர் நிலைத்தன்மை இல்லாதவர்களின் மூளையை வசியப்படுத்தி, அவர்களைத்
தவறான வழியில் போகச் செய்து, மனிதக்குலத்திற்குப் பல தீங்குகள் செய்து வருகின்றனர்.
அவர்களை உன் மூலம் இனம் கண்டு உன் மூலமாக அவர்களையும் நல்ல திசையில் திருப்பிவிடவே
உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கிறேன். நல்ல எண்ணம் கொண்ட நிலைத்
தன்மையானவர்கள் தான் பெரும்பாலும் இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இரக்கமுள்ள மனிதா! இந்த நிலைத்
தன்மை உள்ளவர்கள், நன்மை தரும் செயல்களைச் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் சுற்றியிருப்பவர்களுக்கு
நன்மை கிடைக்கும். நாட்டுத் தலைவராக இருந்தால் அந்நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கட்டாயம் கிடைக்கும். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வளமை பெறுவார்கள்.
எத்தனையோ நல்ல சமூகச் சேவகர்கள், தேசியத் தலைவர்கள், இரக்ககுணம் உள்ளவர்கள், உண்மை ஆன்மீகவாதிகள், தொண்டுள்ளம்
கொண்ட அரசியல்வாதிகள் அதற்குச்
சான்று. ஆனால் அந்த நிலைத்தன்மை
உள்ளவர்கள், கெட்டவர்களாக இருந்தால் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு அவர்களின் கெட்ட செயல்களை
நியாயப்படுத்தி தினமும் அல்லது அடிக்கடி பேசிப்பேசியேக் கேட்பவர்களின் மூளையை வசியப்படுத்தி அவர்களை தங்கள் பக்கத்தில் இழுத்து அடிமையாக்கி, அதோடு நிற்காமல் உன்னையும்
உன்னைச் சார்ந்தவர்களையும், ஏன் உன் பரம்பரையும் எதிர்மறையாகக் கஷ்டப்படுத்துவதோடு அவர்களின் வாழ்க்கையையும் வீணாக்கி வருகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக நடக்க நான் உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து நல்லவழி காட்டுகிறேன்.

பசுமை மனிதா! அந்த மாதிரி
செயலில் உன்னை ஈடுபடுத்தவிடாமல் நான் அதைத் தடுத்து நல்ல திசையில் திருப்ப ஆரம்பித்துவிட்டேன். உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் நான் உனக்கு நிலையான புத்தியைக் கொடுத்து உனக்கு
உண்மை எது? பொய் எது? என்பதை விளக்கி உன்னை
நல்வழிப்படுத்தி, உனது வாழ்வில் நான் கொடுத்த செல்வதையும், வளத்தையும்
திருப்பி வாங்கித்தருவேன் அல்லது அவற்றை தவறவிடாமல் செய்யப் போகிறேன்.
மதிப்புள்ள மனிதா! பாலும்
வெண்மை, கள்ளும் வெண்மை. ஆனால் அதன் செயல்
வித்தியாசம். பால் அருந்தினால் மூளை நன்றாய் சுறுசுறுப்பாய் வேலை
செய்யும். கள் அருந்தினால் மூளை மயங்கும். அப்போது உன்னை அறியாமலே நீ மற்றவர்களுக்கு அடிமையாகிவிடுவாய். அதைத் தான் எல்லோரும் செய்துகொண்டு இருக்கிறார்கள். போலியான அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பெரியவர்கள் அழகாகப் பேசுவார்கள்.
அழகாக நடிப்பார்கள். அவைகளெல்லாம் கள் போன்றது.
அதை உங்களுக்குத் தருகிறார்கள் என்றால் உன்னை மயக்குவதற்கும்,
உன் மூளையை அவர்களுக்கு அடிமைப்படுத்துவதற்குமாகும். ஆனால் இதில் விசேசம் என்னவென்றால், உனக்கு கள் கொடுத்த அவர்கள் எப்போதும் பால் அருந்திக் கொண்டு நிலையாக இருப்பார்கள்.
அவர்களைப் பார்த்து நீ ஏமாந்துவிடக் கூடாது. அந்த
வேளைகளில் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். அப்போது நீ விழித்துக் கொண்டால் போதும். நீ ஏமாற்றங்களிலிருந்து
தப்பித்து அவர்களிடத்தில் ஏமாறாமல் உனது செல்வங்களை பாழாக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.


கௌரவமான மனிதா! இந்த உலகத்தில்
உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கு யார் யாருக்கு எது எது தேவைப்படுகின்றதோ அவற்றைக் கொடுத்து இருக்கிறேன். அதோடு எல்லாவற்றையும் அனுபவிக்கும், ரசிக்கும், பார்க்கும் சக்திதந்து இருக்கிறேன். ஒலிகளைக் கேட்கும் சக்தி இருக்கின்றது. இப்படி பலவிதப் புலன்களை இலவசமாகத் தந்து இருக்கிறேன். தந்து கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக எல்லா ஜீவராசிகளும் தங்களின் உணவுத் தேவைக்கும், இனப்பெருக்கத்திற்கும், உயிரைக் காப்பதற்கும் தான் அவைகளைப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால் மனிதனோ பலவற்றைப் பார்க்கிறான். பல நல்ல கெட்டப் பேச்சுகளை ஒலியாகக் கேட்கிறான்.
ஆனால் நல்லவை அனைத்தும் எடுத்துக் கொள்கிறானா? என்றால் 'இல்லை'
என்றே சொல்லலாம். என்ன தான் அவனைப் பக்கத்தில்
வைத்துக் கொண்டு நல்லவற்றை மூளையில் ஏற்றினாலும் அவன் நினைத்தால் தான், அவனுக்கு ஆர்வம் கொண்டும் ஆழ்ந்த கவனம் கொண்டும் திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தால், கேட்டால் தான் அவன் நினைவில் நிற்கும். இல்லை என்றால் நீ ஒரு மணி நேரமோ
பத்து மணி நேரமோ பேசினாலும், அழகாக நடித்துக் காட்டினாலும் அவன் மனதில்
நிற்காது. அவைகளெல்லாம் எங்கே போகிறது? அதாவது அவன் எண்ணங்கள் யாவும் கேளிக்கை மற்றும் வேடிக்கையில் ஈடுபட்டால், நீ என்ன சொன்னாலும்
அவன் எண்ணத்தில் ஏறாது. அதாவது பசியோடு இருக்கும் மனிதனுக்கு
எவ்வளவு பெரிய விசயத்தைச் சொன்னாலும் அவன் மண்டையில் ஏறாது. பசியோடு
இருப்பவனுக்கு உணவு தான் முக்கியம். அந்த பசிப் போக்கும் முதல்
செயல் தான் ஜீவாதாரம் அல்லது வாழ்வாதாரம்!
ஆகவே ஒரு செயல் வெற்றிபெற வேண்டுமென்றால் எதிரில்
இருப்பவன் பசியை ஜெயித்து இருக்கவேண்டும்.
மானமுள்ள மனிதா! இந்த உலகத்தில் மனிதர்கள் மிக அழகாகத் தேன் தடவி இனிமையாக பேசுகிறார்கள். காந்தம் போல் கவருகிறார்கள். தங்கள் நடிப்பில் மக்களை மயக்குகிறார்கள்.


பெருமை கொண்ட மனிதா! ஒரு மனிதன்
பலவற்றைப் பற்றி பேசுகிறான் என்றால் அவன் அதுவாக மாறிவிட்டான் என்று தவறாக நினைத்துக்கொண்டு
அவன் பின்னால் சென்று கடைசியில் அதலபாதாளத்தில் விழுந்து விடாதே. இனிய மனிதா! ஒரு இலக்கியத்தை, தத்துவத்தை, ஆன்மீகத்தை பேசுகிறான் என்றால் அவைகளால்
ஏதேனும் பிரயோசனம் இருக்கின்றதா? அது உன்னை மயக்குவதற்க்கும்,
கவர்வதற்கும் கடைசியில் உன்னை அடிமைபடுத்துவதற்கும் செய்துவிடுகிறது.
சிறப்பு மிகு மனிதா! ராஜா வேடத்தில்
இருந்துகொண்டு வீர ஆவேச செயலையும், மதி தரும் நன்மையையும் செய்தால்
யாருக்கு என்ன பயன்? ஒரு கண்ணாடியில் அனைத்து செல்வத்தையும் காட்டி
'எல்லாம் உனக்குத் தான்! அதை எடுத்துக் கொள்!'
என்பதாகும். கண்ணாடியில் தெரியும், கனவில் தெரியும், திரையில் தெரியும் , புத்தகத்தில் இருக்கும் செல்வத்தினால் யாருக்காவது ஏதாவது பிரயோசனம் கிடைக்குமா?
அது போலத் தான், மற்றவர்கள் உன் முன்னால் பேசுவது,
நடிப்பது! எதற்காகவென்றால் உனது செல்வத்தை அவர்கள்
பறிப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும். தன்னலமற்ற மனிதா! உனது கையில் நிஜமான செல்வங்கள் இல்லாத
வரைக்கும், அவர்கள் கொடுக்காத வரைக்கும், எது வந்தாலும், எது காட்டினாலும்,
எது சொன்னாலும் உனக்கு பிரயோசனப் படாது.
இறைவனாக உனக்குள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றி பிறர் பேசியோ, நடித்தோ இருந்து கொண்டே இருப்பவன் இறைவனாக மாற முடியுமா?
முடியாது! ஏனெனில் அவைகள் வெத்து வேட்டு.
எங்கு பேச்சைப் போல் செயல் இருக்கின்றதோ அவனால் மட்டுமே உனக்கு லாபம்.
வெறும் பேச்சில் மட்டும் திருப்தியடைந்து உனது வாழ்க்கையை, செல்வத்தை, வளத்தை அவர்களுக்கு அர்பணித்து, குறைந்த காலத்திலேயே உனது வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளாதே.
சிறப்பு மிக்க மனிதா! இப்போது
சிறியவர்கள் கூட அழகாக பேசுகிறார்கள், நடிக்கிறார்கள்.
ஆனால் செயல் இருக்கும்போது தான் முழுப் பலன் கிடைக்கிறது. புதுமை மனிதா! ஒரு தாயால் மட்டுமே குழந்தை பிறப்பின்
முறையையும், வலியையும் சரியாக விளக்க முடியும். அதுவும் அவர்கள் ஆர்வத்துடன், ஆழ்ந்த சிந்தனையும் அந்த
பேரு பெற்றவர்கள் தெளிவாகச் சொல்லுவார்கள். மற்றபடி எவ்வளவு தான்
அதை புத்தகத்தில் படித்தாலும், அதைவிட மிகைப்படுத்தியோ,
குறையுடனே தான் சொல்ல முடியும்.
மகிழ்ச்சி மனிதா! அரு சுவை
உணவு பற்றி எவ்வளவு பேசினாலும், காட்டினாலும் உன் பசி தேறாது.
அதை எடுத்து சாப்பிட்டால் தான் உனக்கு பலன் கிடைக்கும். ஆகவே இனிய மனிதா! உன் கடமைகளை, தேவைகளை எப்போதும் மறக்காதே! அது தான் உனக்கு கடைசி வரையில்
உதவும். பொறுமை மனிதா! நீ நல்லதை சாப்பிட்டு
நன்கு ஜீரணமானால் தான் நல்லவை உன் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். அதே சமயத்தில் கெட்டவைகள் வெளியேறும். அது போல நீ ஒரு
காட்சியை, நடிப்பை, படிப்பை உன் மூளையில்
ஏற்றுக்கொண்டு அதை நன்றாக ஆழ்ந்து சிந்தித்தால் தான் உனக்கு நல்லவை ஏற்று கெட்டவை நீக்கி
நன்மை கிடைக்கும்.
நீ இப்போது எப்படி இருக்கிறாயென்றால் பார்ப்பது எல்லாம் எனக்கு வேண்டும்!
வேண்டும் என்று அனைத்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அதை ஜீரணிப்பதற்கு நேரம் கொடுக்காமல் உனது உடல் நல்லவை, கெட்டவை என்று பிரிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அப்போது எந்த வைத்தியனாலும் நிரந்தர தீர்வு காண முடியாது.
அப்படியே வைத்தியம் பார்த்துக் கொண்டாலும் அந்த வைத்தியத்திற்கு அடிமையாகி
உனது செல்வத்தை இழப்பது உறுதி.

இன்பமான மனிதா! அதற்கு
வைத்தியம் தரும் ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், பெரியோர்கள் வேண்டாம். யார் ஒருவர் உனக்கு ஜீரணம் (சிந்தனை) செய்யும்
நன்மை எது, தீமை எது என்று சொல்லித் தந்து எப்போதும் உன்னை சுறுசுறுப்பாக
வைத்திருக்கிறார்களோ அவர்களே உண்மை மகான்கள். அவர்கள் எப்போதும்
நன்மை செய்வார்கள். உனக்கு அவர்களால் எப்போதும் தீங்கு வராது.
பிரியமான மனிதா! யார் ஒருவரால்
நீ கடமையை மறக்கிறாயோ, செல்வத்தை, வளத்தை, வாழ்க்கையை வீணாக்குகிறாயோ,
உனது வாழ்க்கையை மயக்கமடையச் செய்கிறார்களோ அது உனக்கு நஞ்சு கலந்து
கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள். அவர்களிடமிருந்து
நீ பிரிந்து விடு. பிறகு யார் ஒருவர் உனது வாழ்விற்காக,
மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக பல செயல்களைச் செய்கிறார்களோ
அவர்கள் பின்னால் நீ செல்லலாம். அதற்கு இந்த உள்விதி மனிதன் துணையாக இருப்பான்.
வீணர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கும் வழியை நான் காட்டுகிறேன்.
உன் வாழ்வு சுகம் பெறும் .
*********************
Subscribe to:
Comments (Atom)



































































