Pages

Sunday 21 December 2014

எல்லோரும் எல்லாமும் பெற... WAY FOR… ALL GET ! ALL WEALTH…

எல்லோரும் எல்லாமும் பெற...
WAY FOR… ALL GET ! ALL WEALTH…
            
                            புதுக்கவிதை
            மதுரை கங்காதரன்

 
அழகுள்ளவர்கள் எல்லோரும்
நடிகர்கள் ஆவதில்லை - அதற்கு
நடிப்பில் ஆர்வம் வேண்டும்.

நன்கு பேசுபவர்கள் எல்லோரும்
பேச்சாளராவதில்லை - அதற்கு
பேசும் பயிற்சி வேண்டும்.

ஆடத்தெரிந்தவர்கள் எல்லோரும்
நடனக் கலைஞர் ஆவதில்லை - அதற்கு
நடனத்தில் அக்கறை வேண்டும்.

இசைப்பிரியர்கள் எல்லோரும்
இசையமைப்பாளராவதில்லை - அதற்கு
இசைப்பதில் ஈடுபாடு வேண்டும்.
       
பாட்டு படிப்பவர்கள் எல்லோரும்
பாடலாசிரியராவதில்லை - அதற்கு
பாட்டெழுதும் கற்பனை வேண்டும்.

எழுதத் தெரிந்தவர்கள் எல்லோரும்
எழுத்தாளராவதில்லை - அதற்கு
எழுதும் சிந்தனை வேண்டும்.

அரசியல்வாதிகள் எல்லோரும்
ஆள முடிவதில்லை - அதற்கு
தலைமை குணம் வேண்டும்.

செதுக்கத் தெரிந்த எல்லோரும்
சிற்பிகளாவதில்லை - அதற்கு
கலைஞானம் வேண்டும்.

பாடம் படித்த எல்லோரும்
ஆசிரியர்கள் ஆவதில்லை - அதற்கு
ஈர்க்கும் திறமை வேண்டும்.

பணம் சம்பாதிக்கும் எல்லோரும்
பணக்காரனாவதில்லை - அதற்கு
அறிவும் ஆற்றலும் வேண்டும்.

லட்சியங்கள் உள்ள எல்லோரும்
லட்சியத்தை அடைவதில்லை - அதற்கு
விடாமுயற்சி வேண்டும்.
         
காதல் கொண்ட எல்லோரும்
மணவாழ்கை வாழ்வதில்லை - அதற்கு
புரிதல் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

மணமாணவர்கள் எல்லோரும்
சேர்ந்து வாழ்வதில்லை - அதற்கு
உண்மை அன்பு வேண்டும்.

ஆசை கொண்ட எல்லோரும்
அதை அடைவதில்லை - அதற்கு
கடின உழைப்பு வேண்டும்.

பணம் கொண்ட எல்லோரும்
மகிழ்ச்சியாய் இருப்பதில்லை - அதற்கு
திருப்தி வேண்டும்.

விடா முயற்சியுடைய எல்லோரும்
வீழ்சியடைவதில்லை - அதற்கு
ஊக்கம் தொடர வேண்டும்.

தொணடுள்ளம் படைத்த எல்லோரும்
சேவை செய்வதில்லை - அதற்கு
தியாக சிந்தனை வேண்டும்.

வியாபாரம் செய்யும் எல்லோரும்
லாபமடைவதில்லை - அதற்கு
நுணுக்கமான அறிவு வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்ட எல்லோரும்
தளர்ச்சியடைவதில்லை - அதற்கு
மனவலிமை வேண்டும்.
     
துணிவு கொண்ட எல்லோரும்
துவண்டு போவதில்லை - அதற்கு
ஆக்க அறிவு வேண்டும்.

###################################################################################


No comments:

Post a Comment