Pages

Monday 25 February 2019

24.2.19 தமிழ் மொழிப்பற்று கொள்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை


24.2.19 தமிழ் மொழிப்பற்று கொள்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை   
மதுரை கங்காதரன் 
        தாய்மொழிப் பற்றுகொள் தமிழா
               மதுரை கங்காதரன்   

தமிழ்நாடேஒரு விளக்காம்
தமிழர்களேஅதில்எண்ணெயாம்
தனித்தமிழே அதில் திரியாம்
தீபத்தீயை ஏற்றுதலே பற்றாம்.

உலகத் தாய்மொழி தினமாம்
உனெசுகோஅறிவித்தச்சடங்காம் .
உலகத்தாய்மொழிகள் காப்பதற்காம்
உண்மை நிலையோ கவலைக்கிடமாம்.

தாய்மொழிகளில்அழிந்ததுபலவாம்
தங்கியமொழிகளோஅதில் சிலவாம்
ஐநாவின்அழியும்மொழிகள்அறிவிப்பாம்
அன்னைத்தமிழும்அதில் அடக்கமாம்.

ஒருபுறம் மொழிகாக்கும் ஆர்ப்பாட்டம்
மறுபுறம்அழியும்மொழிகளின் போராட்டம்
கணினியால் மொழிகளின்பாடு திண்டாட்டம்
காலம் தருமோ மொழிகளுக்குக் கொண்டாட்டம்.

உலகத் தாய்மொழிப் பற்றாளர்கள் மாநாடு
உடனே தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும்
அவரவர் தாய்மொழி நிலையினை உரைத்திடனும்
ஆதிக்கமொழிகளின் தாக்கத்தை இயம்பிடனும்

துரத்திவரும்கணினிஅசுரனோ அரசனோ
தாய்மொழிகளுக்குஎமனோ காப்பானோ
எளியவழிக்கணினியறிவு புகட்டிடனும்

உலகத் தாய்மொழி பற்றைவளர்த்திடனும்.
                **************** 


















































*********************







No comments:

Post a Comment