Pages

Monday 27 January 2020

26.1.2020 - கவியரங்கம் - அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும் - மா.க.பே

26.1.2020 அன்று மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில்அதன் தலைவர் 
கவிமாமணி சி .வீர பாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி 
தலைப்பு: அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
           அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும் 


அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும்
அருந்தமிழில் ஆங்கிலத்தில் பயிற்ற வேண்டும்
                   புதுக்கவிதை 
              மதுரை கங்காதரன் 

உலகம் சிறந்திட அறிவியலறிவு வேண்டும்
அறிவியலே வாழ்வினை மலர்ந்திடச் செய்யும்
கட்டமைப்பு ஓங்கிட கணிதமறிவு வேண்டும்
கணிதமே பொருளாதாரத்தை உயர்த்திடச் செய்யும்

அறிவியலும் கணிதமும் மனிதனின் இருகண்கள்
அஃதால் பெற்றிடும் அறிவோ இருமடங்குகள் 
ஆங்கிலமும் தமிழும் தமிழனின் இருவிளக்குகள்
இரண்டிலும் கற்றால் பெறுவோமே இருசெல்வங்கள்

இருகுழல் துப்பாக்கி எதிரிகளை அழிக்கும்  
இருமுனை கத்தி எத்திசையும் தாக்கும் 
இருபாட அறிவு எதையும் சாதிக்கும்
இருமொழிக் கல்வி விண்ணையும் தொடும்  

தமிழைப் படித்தால் தமிழர் மானம் நிற்கும்  
தமிழைத் தவிர்த்தால் தமிழர் அடையாளம் போகும் 
ஆங்கிலத்தைப் படித்தால் வாழ்வின் நிலை உயரும் 
ஆங்கிலத்தைத் தவிர்த்தால் தமிழனின் நிலை வீழும்.

காந்தமின் இருதுருவங்கள் இரும்பைக் கவர்ந்திடும்   
கணிதமும் அறிவியலும் காந்தமாய் மாறிடும்     
ஆங்கிலமும் தமிழும் இருதுருவமாய் விளங்கிடும்    
அனைவரையும் கவர்ந்து அகிலமே போற்றிடும் .
                                 **************************


 



 








 














******************

Wednesday 15 January 2020

*ராஷ்ட்ரபந்து L. K. துளசிராம் - 150 வது பிறந்த நாள் (14.01.2020).


*ராஷ்ட்ரபந்து*
 *L. K. துளசிராம்* அவர்களின் 150 வது பிறந்த நாள் இன்று (14.01.2020).

பாரதியாரின் பாடல்களைத் தடையை மீறி சட்டசபையில் முழங்கியவரும்,
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென மதுரையில் உயர்நிலைப் பள்ளியை நிறுவி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும்,
மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும்,
நெசவாளர்களுக்கு தெருவில் பாவு நீட்டுவதற்கு உரிமை பெற்றுத்தந்தவரும்,
சௌராஷ்ட்ர சமூகத்தின் தந்தையுமான
"' *ராஷ்ட்ரபந்து*
*L. K. துளசிராம் B.A.B.L.,* அவர்களின் *150* வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது  

நாள் : *14.01.2020*  *செவ்வாய்க்கிழமை* 
நேரம் : *காலை 08.30* *மணி* 
 *இடம்:சௌராஷ்ட்ர* *ஆண்கள் மேல்நிலைப்* *பள்ளி,* 
 *காமராஜர் சாலை,* 
 *மதுரை - 9* 
அலைகடலென திரண்டு வந்தனர் !
இவண் :
*கே தேவராஜ்,* 
நிறுவனர், *அவ்ராம் அமி* *டிரஸ்ட்.* 
செல்:9443832105



























வாட்ஸ் ஆப் செய்தி 14.1.2020 
அனைவருக்கும் வணக்கம், 


இன்று 14-01-2020 மாலை சரியாக 5.30 மணிக்கு ராஷ்டிரபந்து L.K. துளசிராம் அவர்களின் பிறந்த நாள் சேம்பர் அலுவலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. அனைவரும் பங்குகொள்ள வேண்டுகிறோம்.



சரியாக மாலை 6.00 மணிக்கு சௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் வங்கியின் தலைவர் திரு. T. S. சாரதி அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்.



அனைவரும் தவறாது கலந்து கொள்ள விரும்புகிறோம். 



நன்றி

General Secretary
***********************