Pages

Sunday 30 October 2022

30.10.2022 - மாமதுரைக் கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும்

 மாமதுரைக் கவியரங்கம் 4 - 30.10.2022   

      கற்பனையும் கவிதையும்

                  புதுக்கவிதை
              கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************