Pages

Tuesday 31 July 2012

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - தங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - தங்க நகைகளுக்கு  கடன் வழங்குதல் 




தங்கத்தின் மீதான நம்பிக்கை வரக் காரணம் :


என்னதான் விலை இருந்தாலும், உயந்தாலும் தங்கத்தின் பேரில் மக்களுக்கு அலாதியான மோகம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் குறைந்தது எல்லோரிடத்தில் ஒரு குண்டுமணியாவது தங்கம் இருக்கும் என்றே நம்பலாம்.இதற்கு காரணம் தொன்று தொட்டு தங்கத்தில் பேரில் இருக்கும் நம்பிக்கை.மேலும் இது ஒரு அதிக மதிப்புள்ள , எளிதில் பணமாக்கக் கூடிய , எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அசையும் சொத்து என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவசர காலத்தில் இது கட்டாயம் பலருக்கு கை கொடுத்து இருக்கின்றது.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இதை ஒரு சேமிபபாகவே கருதுகின்றனர். திருமணம், விஷேச நாட்கள், பிறந்த நாள் மற்றும் அன்பளிப்புகளுக்கும் தங்கம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கின்றது.


தங்கநகை பேரில் கடன் வழங்கும் தொழில் :




இந்த தொழில் லாபமான தொழில் என்றே சொல்லலாம். இதற்கு  முக்கிய காரணம் தங்கத்தின் விலை குறையவே குறையாது. அப்படி குறைந்தாலும் மிகச்சிறிதளவே குறையும். இது  தான் இந்த தொழிலுக்கு வலுமையான காரணம்.

உதாரணமாக ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூபாய் 2800 என்று வைத்துகொள்வோம். ஆனால் கடன் வழங்கும்போது அதன் மதிப்பிலிருந்து குறைந்தபட்சம்  60 % தான் கடன் வழங்குகின்றனர்.அதாவது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1800 முதல் 2000 வரை தான் பணமாக தருகின்றனர். மேலும் அந்த பணத்திற்கு குறைந்தபட்சம் 12% வட்டியையும் வசூல் செய்கின்றனர்.

ஆக  இந்த தொழிலில் பணத்திற்கு ஈடாக தங்கநகை கிடைகின்றது. அந்த பணத்திற்கு வட்டியும் கிடைக்கின்றது.

ஆனால் இந்த தொழிலில் கவனிக்க வேண்டியவை :

1. சுத்த தங்கம் தானா என்று காட்டாயம் சோதித்த பின்னரே கடன் வழங்க வேண்டும்.

2. தவறான வழியில் வராத் தங்கம் என்பதை நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்.

3. நேர்மையான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

4. வட்டி வரவை தவறாது வரவு வைப்பதும், வட்டி  கட்டியவுடன் தவறாமல் உடனே சரியான அவர்களுடைய நகைகளை திருப்பித்தர வேண்டும்.

மேற் கூறியபடிதவறாமல் நடந்து கொண்டால் இந்த தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

*********************************************************************************    

 இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                  அல்லது 

நன்று                         அல்லது 

பரவாயில்லை     அல்லது 

இன்னும் தெளிவு தேவை  


இதை 
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..



  

Monday 30 July 2012

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில்


லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள்

  - பாஸ்ட்புட் தயாரிக்கும் தொழில் 



நேரம், நேரம் எல்லாவற்றிக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. நமது வேலையை கூட சிறிது நேரம் கழித்து செய்து கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். ஆனால் சாப்பாடு விஷயத்தில் அப்படி தள்ளிப்போட முடியுமா? அல்லது வயிறு தான் சும்மா இருக்குமா? அப்போது தான் இந்த பாஸ்ட்புட் மிகவும் தேவை படுகின்றது.

அதன் விஷேசம் :



இது ஒரு குறைந்த முதலீட்டில் தொடங்கும் சுய தொழில். வீட்டில் சமைக்க முடியாத புதிது புதிதான உணவு ஐய்யிட்டங்கள், நொடிப்பொழுதில் தயாரித்தல், சுகாதாரத்துடன் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குதல்.

எதனால் விரும்புகின்றனர்?:



வித்தியாசமாக சாப்பிட எண்ணுபவர்கள், ஊருவிட்டு ஊரு வந்து வேலை செய்பவர்கள், பெரிய ஹோட்டல்களில் கிடைக்கும் உணவுவகைகள் , ஏதாவது   ஒரு நாள் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் சாப்பிட நினைப்பவர்கள், சிறிய பார்ட்டி, சமைப்பதற்கு நேரமில்லாமல் இருப்பவர்கள், தினமும் ஹோட்டலில் சாப்பிடும் நிலையில் இருப்பவர்கள், குறைந்த விலையில் தரம்மான உணவை உண்ண  விரும்புபவர்கள்  போன்றவர்களை கவருவதற்கு ருசியான உணவுகளை தயாரித்து கொடுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் தொழில் வளர்ச்சியை. நல்ல தொழில் நல்ல லாபம் என்று கூடிய சீக்கிரம் உணருவீர்கள்.


       

       
*********************************************************************************

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                              அல்லது 

பரவாயில்லை          அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

இதை 

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் - லாபம் தரும் நல்ல யோசனைகள்

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும்  யோசனைகள் 

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் தொழில் 



ஏன் இந்த தொழில் முக்கியம் ?:

இன்றைய அவசர இயந்திர உலகில் பலருக்கு இருக்கின்ற 'நேரம்' போதுமான அளவிற்கு இல்லையே என்று புலம்புவதுண்டு. அவர்களுக்கு அவ்வளவு வேலை பளு. சொந்த வேலைகளை செய்வதற்கே சிலர் வேலையாட்களை வைத்துக்கொள்கிறார்கள். இதில் அவர்கள் வீட்டில் நடைபெறும் சிறிய பெரிய வீட்டு விஷேசங்கள் என்று வரும்போது அதை நல்ல முறையில் நடத்த பலர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதாவது வீட்டில் நடக்கும் திருமணம், பிறந்த நாள், சுற்றுலா, பிக்னிக் , பொதுக்கூட்டம் , கோவில் விஷேசம்     போன்ற சுபகாரியங்களை உறவினர்கள், சுற்றத்தார்கள்  மற்றும் நண்பர்களை   அழைத்து அவர்களுக்கு விருந்து படைக்க எண்ணுகிறார்கள். அதுவும் விதவிதமான சாப்பாடு ஸ்பெஷல் கொடுக்க வேண்டும் என்று பிரியபடுகிறார்கள். 

அந்த விருந்திற்கு ஆட்களை அமர்த்தி விருந்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் அவர்களே அலைந்து வாங்கி, சமையல்காரர்களை கொண்டு சமைத்து தடங்கலில்லாமல் அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்பது மிகப்பெரிய வேலை.மேலும் அவர்கள் அவ்வப்போது கேட்கும் சிறுசிறு சாமான்களை வாங்கித்தருவதற்க்கும், அவர்களின் வேலைகளை மேற்ப்பார்வையிடுவதற்க்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும் சொந்தம் ஓர் நண்பர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும்போது அவர்களால் விஷேசங்களில் பங்கேடுத்டுகொள்ள முடியாது. இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன.

எதிர்பார்ப்புகள் என்ன என்ன ?



இந்த மாதிரியான கஷ்டங்களை தவிர்க்க , பலர் குறைந்த செலவில் நிறைந்த சிறந்த தரமான  கேட்டரிங் தொழிலை செய்பவர்களை நாடுகிறார்கள்.அத்துடன் சரியான நேரத்தில் அனைவரும் விரும்பும் ருசி மிக்க விதவிதமான உணவுகளை  தயாரித்து வழங்கும் மிகச்சிறந்த சேவை மற்றும் சுகாதாரமுடன் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத படியும்  , விருந்தினை உண்டவர்கள் திரும்ப திரும்ப கேட்டு வாங்கும்படியும் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறனர்.அப்படி தருகிறபட்சத்தில் கண்டிப்பாக விருந்தினை ருசி பார்த்தவர்கள் தங்களுடைய வீட்டு விஷேசத்திற்கு அவர்களையே 'புக்' செய்ய விரும்புவர். அதனால் உங்கள் தொழில் விருத்தியடையும். 

ஆரம்பிக்கும் முறை :



முதலில் சிறிய சிறிய விஷேசங்களுக்கு , சிலரை வைத்து சிறப்பான முறையில் தரமான சுகாதாரத்துடன் தயாரித்து வழங்கவேண்டும். எடுத்தவுடன் மிகப்பெரிய விஷேசங்களை ஒத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல் வேலை செய்யும் சிறந்த மாஸ்டர்களை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டிருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமான உங்களது தரமான சேவையை பார்த்து அவர்களே உங்களுக்கு பெரிய பெரிய விஷேசங்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். இதன் மூலம் உங்கள் தொழில் வளரும் லாபமும் பெருகும்.


*********************************************************************************




இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று           அல்லது 

நன்று                   அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

இதை 

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..


  

Saturday 28 July 2012

ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையின் வெற்றிக்கு


ஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையின் வெற்றிக்கு ஒரு வழி  





( எதனால் அடையும் பலன்கள் : மனப்பக்குவம் , எதையுமே சாதிக்கும் துணிவு , பொறுமை, வசீகரம் செய்யும் தேக பிரகாசம்  ,  ஆழ்ந்து சிந்தித்து உறுதியோடு  முடிவெடுக்கும் குணம், கோபத்தை கட்டுபடுத்துதல் மற்றும் உடல் நலத்தை சீராக வைத்துகொள்ளுதல்)  



தியானம் என்றால் அது ஆசை துறப்பதற்கும், மிகுந்த கட்டுப்பாட்டுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும், பெரியவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் மற்றும் சொர்கத்தை அடைவதற்கும் போன்ற  பலப்பல எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் சிந்தனைகள் மனதில் எழலாம் . இதற்கு  வலுவான காரணம் என்னவென்றால்  'தியானம்' நடத்தும் வகுப்புகளாகட்டும், நடத்த்துபவர்கள் ஆகட்டும், தியானத்தை கடைபிடித்தவர்களின் புகை படங்களாகட்டும் அவற்றையெல்லாம்  எண்ணி பார்கிறபோது  நமது அன்றாட வாழ்க்கைக்கும், குடும்ப கடமைகளுக்கும், வேலைகள் மற்றும் வியாபாரத்திர்ககும் சம்பந்தமே இல்லாதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. அதனால்   பலர் இதை ஒதுக்குவிடுகிறார்கள் அல்லது ஒதுக்கி வருகிறார்கள் அல்லது பின்பற்ற முடியாமல் திணறுகிறார்கள், ஒரு சிலர் அரைகுறை மனத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தியானத்தின் பலனை முழுவதும் பெற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒரு சிலர் இதை  செய்வதால் சோம்பேறித்தனம் உருவாகும் என்று தவறாக எண்ணி வருகிறார்கள். இன்னும் சிலர் நேரவிரையம் என்று அறவே தவிர்க்கிறார்கள். 

உண்மையில் பல துறைகளில், பல கலைகளில் அதாவது விளையாட்டு , கல்வி,  அரசியல் , போர்க்களம் , நீதித்துறை, கணினி , அறிவியல் ,மருத்துவம் போன்ற துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை நாம் புரட்டிப்பர்ர்தோமானால் நமக்கு மிகப்பெரிய உண்மை தெரிய வரும். அதாவது அவர்களின் இந்த வளர்ச்சிக்கு தியானம் எவ்வளவு தூரம் உதவியாக இருந்திருக்கிறது என்று தெரியவரும் . இவைகள் வெளிவராததற்கு காரணம் தியானத்தைவிட பெரியளவில் அவர்களின் துறையில் புகழ் பெற்றதால் அதன் மகிமை வெளிவரவில்லை.



உதாரணமாக செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஆகா இருந்துவரும் திரு விஸ்வநாத் ஆனந்த் , கிரிக்கெட் மாஸ்டர் திரு டெண்டுல்கர், பல துறை புகழ் பெற்றவர், பண்பாளர் திரு அப்துல் கலாம், இசைஞானி இளையராஜா , ஏ .ஆர்.ரகுமான், மகாத்மா, சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் வாழ்கையில் இந்த தியானம் செய்வதற்கு  சிறிது நேரம் ஒதுக்கி தினமும் தவறாமல்  கடைபிடித்ததனால் தான்  பெரும் பலனை அடைந்தனர் என்பதை அவர்களே நன்கு அறிவர்.






ஏனென்றால் அவரவர் துறைகளில் அன்றாடம் எதிர்கொள்ளும் அநேக சவால்களையும், பிரச்சனைகளையும் , புதிகளும், சிக்கல்களும்  இந்த தியானத்தின் மூலமாக மற்றவர்களுக்கு  பாதிப்பு ஏற்ப்படுத்தாத வகையில்  பல தீர்வுகளை தந்திருக்கின்றது .அந்த தீர்வுகளின் மூலம் அவர்கள் எல்லோரும் நம் மனதில் நீங்கா  இடம் பெற்றுக்கின்றதொடு மட்டுமில்லாமல், அவர்கள் பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்கள். தியானம் மணிக்கணக்கில் செய்யத் தேவையில்லை. ஆரம்பத்தில் சில நிமிடங்களே போதுமானது.


இப்படியிருக்க யாராவது ஒருவனிடத்தில் 'தியானம்' செய்கிறீர்களா ? என்று கேட்டால் உடனே "இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது , ஒத்து வராதாது கூட " என்ற பதில் தான் வரும்.மேலும் "நமக்கேன் இந்த பலப்பரீட்சை மற்றும் விஷபரீட்சை " என்று பேச்சை மாற்றி தேவைல்லாத பொழுதுபோக்கு பேச்சில் தங்களை அர்பணித்து அலசிக்கொண்டிருப்பார்கள். இது  தான் யதார்த்த நடைமுறையில் இருப்பது. 


ஒருவன் வாழ்க்கையில் நல்ல வழியில் சென்றாலும், நல்லதை நினைத்தாலும் அதை ஏளனமாக பேசி, கேவலப்படுத்தி, நக்கல், நையாண்டி இன்னும் ஏதேதோ பண்ணி அந்த நல்ல செயலை செய்யவிடாமல் தடுப்பவர்கள் நம்மைச் சுற்றி நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாய் இருக்கவேண்டும். வாழ்க்கையின் வெற்றி நம்மிடத்தில் தான் இருக்கின்றது.அதை அடைவதற்கு பல வழிகளில் முயற்சி செய்யவேண்டும். அந்த முயற்ச்சியை தாக்கும் எந்த தடையையும் நாம் தகர்த்தெறிய வேண்டும்.அந்த வல்லமை இந்த தியானம் உங்களுக்கு கொடுக்கும்.


இன்றைய காலகட்டத்தில் தியானத்தை பற்றி கேலி  பேசியவர்களெல்லாம் தியானத்தை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்லல்லாம்.ஏனென்றால் அவர்கள் மட்டும்  தியானத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் குடும்ப உறுப்பினர்களையும் அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு தியானத்தின் வலிமையை இப்போது உணர்ந்திதிருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு தங்களின் உடல் மற்றும் மனநலம் பற்றிய அக்கறை அதிகமாகியுள்ளது. அதற்கு முழு முதற்காரணம் சிறு வயதிலேயே சிலருக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, அல்சர் எனும் வயிற்று  வலி, மன உளைச்சல், மன பாரம் போன்ற பாதிப்புகள் எதனால் வருகின்றது என்றும அதை எவ்வாறு தவிர்ப்பது என்றும் நன்றாகவே தெரியத் துவங்கியிருக்கின்றது. அதனனல் தான் இலவசமாய் தியானம் கற்று கொடுத்தும்  வராத கூட்டம்  இப்போது பணம் கொடுத்து கற்றுகொள்ளும்  ஆர்வம் பிறந்திருக்கின்றது. 


உடல் நலத்திற்காக  தினமும் சிறிது நேரமாவது ஆசனங்கள், யோகா , தியானம், மூச்சு பயிற்சி, நடை பயிற்சி, உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.''தியானம் " நமக்கு சரிவராது, சுத்தபட்டுவராது, கை கூடவே கூடாது என்ற எண்ண முடையவர்களெல்லாம் தியானத்தில் ஈடுபட்டு பல அரிய  பெரிய சாதனைகள் படைத்ததோடு அவர்களும் ஆர்வமாக மற்றவைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இதுநாள் வரை தியானம் செய்வதற்கு  எளிதாய் இருந்தாலும் அதை தினமும்  பயிற்சி செய்வது என்பது மிகவும் கடினம் என்று நினைத்தவர்கள் இப்போது எளிமையான பயிற்சி முறையினை பின்பற்றி அதன் பலனை அடைந்து வருகின்றனர்.


தியானம் செய்வதன  மூலம் கீழ்க்கண்ட பலனை பெறமுடியும்.




1. இரத்தம் சுத்தமாகும் 
2. ஜீரண உறுப்புகள் அனைத்தும் சரியானபடி வேலை செய்யும்.
3. சக்திகள் நல்ல முறையில் சேமிக்கப்படும் 
4. மனம் ஒரு நிலை பெரும் 
5. இரத்த அழுத்தம் சீராக இருக்கும் 
6. சர்க்கரை சக்தியாக மாற்றி அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளும் 
7. அமைதியான தூக்கம் 
8. உடல் புத்துணர்ச்சி 
9. தெளிவான சிந்தனைகள் 
10. எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை 
11. உடல் பலம் அதிகரிக்கும் 
12. கோபம் , பொறாமை நீக்கி பொறுமை கொடுக்கும் இன்னும் பல..


இவைகளெல்லாம் சரி , இதை  எப்படி தினமும் பயிற்சி செய்வது? எப்போதுமே பரபரவென்று வேலை செய்து வரும் நமக்கு ஒரே இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு எதோ சக்தி கொடுக்கும்  ஒன்றை திரும்ப திரும்ப உச்சரிப்பது சாத்தியமாகுமா? என்பதற்கு பதில் இதோ.


சில சமயங்களில் விலங்கில் சரி, மனிதரில் சரி பரபரப்பான வேளைகளில்  அதிக ஆற்றலோடு வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று அனைத்தையும் நிறுத்தி சற்று கண்களை மூடிக்கொண்டு தங்களை சுற்றிலும்  என்ன நடக்கிறது என்பதை அமைதியாகவும்  , நிதானமாகவும் யோசிப்பார்கள்  பார்பதற்கு நமக்கு அவர்கள் ஓய்வு எடுப்பதுபோல் தோன்றும்.. ஆனால் அவர்களின் மனதில்   வேலையை அல்லது பிரச்சனைகளை  எந்த வகையில்  பாதுகாப்புடன் அதே  சமயத்தில் எப்படி  வெற்றி கொள்வது என்பதை சிறந்த திட்டத்தை தீட்டவே  அந்த ஓய்வு தேவைபடுகிறது. புலி பதுங்குவது பாய்வதக்கும், ஆடு அமைதியாக பின்னோக்கி நகருவது அது பாய்வதற்கும் என்பதை எப்போது நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வண்டும்.

தியானம் பயிற்சி செய்யும் முறை:




தியான வகுப்பில் பயிற்சியளிக்கும்போது அனைவரையும் சௌகரியமாக அமரவேண்டும்.


உடலை இறுக்கமாக இல்லாமல் லேசாக வைத்துக்கொள்ள வேண்டும்.


முதலில் கண்களை நன்றாக மூடிக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும்.


இப்படியே மூன்று முறை செய்ய வேண்டும்.


பிறகு ஒரு சக்தி மந்திரத்தை மெதுவாக சொல்ல வேண்டும்.அந்த மந்திரம் அவரவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு வாயை திறந்து மூடுமாறு இருக்கவேண்டும். அப்போது தான் சுத்தமான  காற்று  உள்ளேசென்று உடலை சாந்தநிலையில் வைக்க உதவும் . ( ஓம் அல்லது அல்லாஹோ அல்லாஹ் அல்லது ஏசு கிற்ஸ்துவே எங்களை இரட்சியுங்கள்...போன்றவை)   


அதையே 15 அல்லது 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.


பிறகு மெல்ல கண்களை திறந்து மீண்டும் மூச்சு மெதுவாக இழுத்து மெதுவாகவிட்ட பிறகு தியானத்தை முடித்துக்கொள்ள  வேண்டும்.



உண்மையில் தியானம் செய்யும் போது  நமது மனநிலை எப்படி இருக்கும்?:

சிறு ஒளியுள்ள இருட்டறையிலோ அல்லது நல்ல காற்றோட்டமுள்ள அறையிலோ கண்களை மூடி உட்காரும்போது நமது தலையை சுற்றி , கண்களை சுற்றி பலப்பல படங்கள் ஓடும். கற்பனை செய்யாத பல எண்ணங்கள் தெரியும். சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் , மறக்க முடியாத எண்ணங்கள் , சொந்த கதை, சோக  கதை, வேலை, குடும்பம், சொந்தம், அன்னியம், தெரிந்த முகம், தெரியாத முகம் என்று பலவித உணர்வுகளை நாம் உணருவோம். இப்படி இருக்கும்போது எப்படி நாம் நமது மனதை ஒருநிலை படுத்தி கண்களை மூடிக்கொண்டு  ஒரே மந்திரத்தை ஒரே இடத்தில் உட்கார்து கொண்டு பயிற்சி செய்வது. அப்படியே உட்கார்ந்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நம்மால் செய்ய இயலாது. அப்படித்தானே. அதற்கு கீழ் காணும் பயிற்சி மிகவும் உதவி செய்கிறது. 

தியானம் செய்ய நம்மை தயார் படுத்திகொள்ளுதல் :





தியானம் செய்வதற்கு முன், நமது எண்ணத்தை , செயலை ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு  சுத்தமான ஒரு வெள்ளை பேப்பரில் முதலில் சற்று பெரிதான ஒரு புள்ளியை வைத்து அந்த புள்ளியில் மட்டும் மனதை ஒருமுகமாக செலுத்தி பர்ர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். அப்படியே தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். தேவைபட்டால் கண்களை சிமிட்டலாம்.


பிறகு புள்ளியை சற்று சிறியதாக்கி பயிற்ச்சியை தொடரவேண்டும்.


அதன் பிறகு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் பயிற்சி செய்ய வேண்டும்.


கடைசியாக முழுவதும் கண்களை மூடுகொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.இப்படியே ஒருமாத காலம் பயிற்சி செய்ய வேண்டும்.


இப்போது நீங்கள் தியானம் செய்வதற்கு முழுமையாக தயாராகிவிட்டீர்கள். இனி மேற்கூரியபடி தியான பயிற்சி செய்யும் முறையினை பின் பற்ற வேண்டும்.    

       
இதை  தினமும் தவறாது செய்வீர், வாழ்க்கையினை வெற்றி கொள்வீர்.
   

*********************************************************************************
.   .  .   .                       


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Thursday 26 July 2012

அதி வேக சமையல் - விஞ்ஞான விளக்கங்களுடன் மற்றும் பயனுள்ள குறிப்புகள்

அதி வேக சமையல் -
 விஞ்ஞான விளக்கங்களுடன் 
 மற்றும் பயனுள்ள குறிப்புகள்



கணவன்மார்களே ! பெற்றோர்களே , பெரியவர்களே சமையல் என்பது எவ்வளவு கஷ்டம். அந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாது எவ்வளவு ருசியாக உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை ஏதம் மூலம் தெரிவித்துக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.   




அறுசுவை விரும்பும் நாக்கிற்கு நாம் திருப்திபடுத்துவது இந்த சமையல் மூலம்  தான். நாக்கிற்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  நம் வாழ்க்கை ஒரு சான் வயிற்ருக்காக தான். அந்த வயிற்ரை திருப்திபடுத்துவது இந்த நாக்கு. இந்த நாக்கை திருப்திபடுத்துவது சமையல்.

சமையல் எதற்காக ?

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் அளவும் , சத்துக்களும் மிகவும் அவசியமானது. நமது உடலுக்கு உணவு தேவைபடும்போது மணியடித்தார் போல  பசி வயிற்ரை கிள்ளுகிறது. ஏனென்றால் வயிற்றில் உள்ள ஒருவித அமிலம் சுரப்பதால், அந்த அமிலம் வயிற்றில் உள்ள உறுப்புகள் மீது படும்போது நமக்கு பசி எடுக்கிறது. அதக்கு அந்த அமிலத்திற்கு இணையான உணவுஅளவை எடுத்துக்கொண்டோமானால் நமது பசி அடங்கிவிடுகிறது. ஒருவேளை நாம் அதை அசேட்டையாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் நாம் 'அல்சர்' என்ற நோய்க்கு தள்ளப்படுவீர்கள்.அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அப்போது கட்டாயம் அமிலதன்மையுள்ள புளி , காரம் போன்ற உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

இதற்க்கு பிறகு, சத்து என்று பார்த்தோமானால், சத்துக்களின் அளவும் மிகவும் கூடினாலும் , மிகவும் குறைந்தாலும் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.அப்போது சத்துக்கள் குறைந்தால் நமது உடல் சோர்வுடனும், தெம்பு இல்லாமலும் காணப்படும். சத்துக்கள் அதிகமானால் நமது உடல் பலவித அசௌரியங்களை எதிர்கொள்ளும். அதாவது மாவு சத்து (புரோட்டீன்), உப்பு சத்து (சால்ட்), சர்ககரை (சுகர்) , கொழுப்பு சத்து (கொலஸ்டிரால்), ஊட்ட சத்துக்கள் ( நுண்னூட்ட சத்துக்கள்) போன்ற சத்துக்களின் அளவை பொறுத்து நமது உடல் அரோக்கியம் அமைகிறது. இந்த சத்துக்களின் அளவை நமது சமையல் மூலம் நிலைபடுத்திக்கொள்ளலாம்.    

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் :

சமையல் செய்வது நாம் சோம்பேறித்தனப்பட்டு அல்லது நேரமின்மை காரணமாக  ஹோட்டலுக்கோ, பாஸ்ட் புட் , மெஸ்சுக்கோ போய் சாப்பிடும் போது எல்லோருக்கும் பொதுவான் உணவுகளைத்தான் பரிமாறுவார்கள். அனால் கொடுக்கின்ற பணத்தை வேஸ்ட் செய்யாமல் இருப்பதற்காக வேறு வழியில்லாமல் சாப்பிட்டு விட்டு மறுநாள் டாக்டர் செலவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேறுவழியே இல்லாதவர்கள் கட்டாயம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். பேட்சி லர்கள், ஊருக்கு செல்பவர்கள் போன்றவர்களிடம் கேட்டால் கதை கதைகதையாய் தங்கள் அனுபவத்தை சொல்வார்கள். ஏன் இதற்காக சீக்கிரம் கூட கல்யாணம் செய்து வைப்பார்கள்.

சில சமயங்களில் கூட்டு குடும்பங்கள் கூட தனிகுடும்பமாதுண்டு. அதாவது கூட்டு குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து சற்று எல்லாமே உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இளசுகளோ அறுசுவையும் வேண்டும் என்று நினைப்பார்கள். முடிவில் கூட்டு குடும்பம் கட்.. கட்.... ஆனால் அவர்களே பெரியவர்களாக மாறும்போது தாங்கள்  செய்த தவறுகளை உணருவார்கள். அதாவது இளமையில் அளவுக்கு அதிகமாக உண்டதால் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறோம் என்று.

ஏன் பலருக்கு சமையல் செய்வது 
பிடிக்கவில்லை ? :




சமையல் பலருக்கு எட்டிகாயாகத்தான் இருக்கின்றது. ஏனென்றால் சோம்பேரித்தனம் தான். அனைத்தும் அங்கங்கே போய்  வாங்கிட்டு வரணும். சுத்தம் பண்ணனும். பத்திரப்படுத்தி வைக்கணும். காய்கறிகள் நறுக்கணும். சரியான் அளவு மற்றும் கவனத்துடன் எல்லா வீட்டு உபயோகப்பொருட்களை கையாள வேண்டும். கவனக்குறைவினால் கை,கால் சூடு படலாம், உடம்பில் சூடான பொருட்கள் தெறிக்கலாம். சில வேளைகளில் மின்சார ஷாக் கூட வாங்க நேரிடும். அனைத்திற்கும் மேலாக  பாதிரங்களையெல்லாம் நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

திட்டமிடாமல் வேலை செய்வதாலும் , எளிய வழிகளை பின்பற்றாததாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாததாலும்  எப்போதும் சமையலறையே கதி என்றிருப்பதாலும் சிலருக்கு சமையறை அலர்ஜியாக மாறிவிடுகின்றது.

மேலும் நாக்கு சுவைக்காக டிசைன் டிசைனாக சமைக்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் ! 

மேற்கூறியதெல்லாம் ஒரு காரணமே கிடையாது. ஏனென்றால் இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் செயல் முறை விளக்கங்களுடன் பாதுக்காப்பாக சமையலறையிலுள்ள பொருட்க்களை எப்படி கையாளுவது முதல் டிசைன் டிசைனாக சமையல் வரை தெளிவாக கிடைக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் அதை பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆக, உங்களுக்கு தினமும் வீட்டில் சுவையாக உணவு கிடைத்துக்கொண்டிருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்தால் நீங்கள் விரும்பும் ருசியான் உணவு கிடைக்கும். உங்களது ஆரோக்கியமும் நன்றாய் இருக்கும். அதற்காக சமைத்து கொடுப்பவர்களை மனதார பாராட்டுங்கள். மேலும் உங்களுக்கு புது சுவை கிடைக்கும்.

எதற்காக வெளியில் சாப்பிடுவதை
 தவிர்க்க வேண்டும்? :




உடல் ஆரோக்கியம் தண்ணீரிலிருந்து ஆரம்பமாகிறது. மினரல் வாட்டர் போதுமானது. ஆனால் வெளியில் சாப்பிடும் இடங்களில் இவைகள் கிடைப்பது கஷ்டம். அப்படி கிடைத்தல் அதிக பணம் செலவாகும். குறைந்தது கொதித்து ஆறிய தண்ணீர் போதும். அதுவும் கிடைக்காது. நீங்கள் இவை இரண்டில் ஒன்றை பின்பற்றினால் மருத்துவ செலவு 80 % குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முன்பெல்லாம் உணவை சேவை மனப்பான்மையோடு வழங்கிவந்தனர். விலைவாசியும் குறைவு தான். அதனால் தரமான உணவு கிடைத்தது. ஆனால் இப்போது லாப நோக்கத்தோடு சில வேளைகளில் ருசிக்காக உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனப் பொருட்களையும் தயங்காமல் சேர்க்கின்றனர். இதனால் ஆரோக்கிய சீர்கேடு சிலகாலம் கழித்து தெரிகின்றது. சிலர் தரமான உணவுகளை தருகிறார்கள். அவர்களை அடையாளம் காண்பது சிரமம் தான். வெளியில் பெரும்பாலும் பகட்டில் கவர்ந்து கலர் கலராக கொடுத்து மயங்குவது உண்மை.  அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை பற்றி கவலைபடுவது கிடையாது. தங்களுக்குத் தேவை லாபம். அந்த நோக்கத்திலே தான் செயல்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களோ அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிடுகின்றனர். அவர்களுடைய என்னமோ ருசியாக இருக்குதா? வயிறு நிறைகின்றதா? என்பதை மட்டும் பார்கின்றனர். அவர்களது அவசரத்தை பணமா க்குகின்றனர். ஏன் கொடுக்கும் பில்லை  கூட சரி பார்க்க தருகிறனர். டிப்ஸ் கொடுத்துவிட்டு சட்டென்று வெளியில் வந்துவிடுகிறனர். யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்? 

இவற்றையெல்லாம்  தவிர்பதற்காக தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்காக, குறைந்த நேரத்தில் சுத்தமாக, சுகாதாரமான முறையில் விஞ்ஞான விளக்கத்துடன் முதன் முறையாக ஒரு முயற்சி. மேலும் நீங்களே திட்டமிட்டு உங்களுக்கு பிடித்த உங்கள் உடலுக்கு ஒத்துப்போகும் உணவை சமைப்பதால் உங்களுடைய நிர்வாகத்திறமை வெளிப்படும். குனித்து நிமிர்ந்து செய்வதால் நீங்கள் உங்களை யறியாமலே உடல் பயிற்சி செய்கிறீர்கள். அதனாலும் நீங்கள் சுறுசுறுப்பை உணருவீர்கள்.

அதிவேக சமையல் ஆரம்பம்:




முதலில் தண்ணீரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்ப்போம். 

விஞ்ஞான விளக்கம் : தண்ணீரை பெரும்பாலும் அவிப்பதர்க்கும், உணவுப்பொருட்களை கரைப்பதற்கும், பல பொருட்களைகொண்டு  சரியான கலவை தயாரிப்பதற்கும் மற்றும் பல வழிகளில் உபயோகப்படுத்தபடுகின்றன.

தண்ணீர் பொதுவாக 25 C முதல் 30 C வரை வெப்பம் இருக்கும். நீங்கள் அதை முதலில் 100 C வரை ( தண்ணீரின் கொத்தி நிலை ) சூடு செய்து அதற்குமேல் சூடுபடுத்த படும்போது தான் அது ஆவியாக மாறுகின்றது. அந்த மாற்றம் தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதிக எரி பொருட்கள் செலவாகிறது. 

சில உதாரணங்களை பார்ப்போம்: 

கவனிக்க : ( முக்கியமான பொருட்கள் மட்டும் .. உப்பு போன்றவை கொடுக்கப்படவில்லை)




1. அரிசி + தண்ணீர்  + வெப்பம்                                 = சோறு 

2. பச்சை காய்கறிகள் + தண்ணீர்  + வெப்பம்   = வேக வைத்த காய்கறிகள்   

3. ரசப்பொடி + தக்காளி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = ரசம் 

4. சாம்பார் பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = சாம்பார் 

5. கொழம்பு பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = கொழம்பு 

6. ரவை + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = உப்புமா     

7. நூடுல்ஸ்    + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = நூடுல்ஸ் 

8. மாவு ஊற்றிய இட்லி கொப்பரை + தண்ணீர் + வெப்பம்   = இட்லி 

9. காபி பொடி + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான காபி 

10. டீ தூள்  + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான டீ போன்றவை ...

மேற்கூறியவற்றில்  தண்ணீர் + வெப்பம் பொதுவாக வருகின்றது.

ஒவ்வொரு முறை தண்ணீரை சூடேற்றி கொண்டிருந்தாள் நேரம் அதிகமாகும்.


ஆகவே நாம் பச்சை தண்ணீருக்கு பதிலாக வெந்நீரை எல்லாவற்றிக்கும் உபயோகித்தால் உங்கள் சமையல் நேரம் பாதியாக குறையும்.


இந்த வெந்நீரை குக்கரின் மூலம் சூடுபடுத்தினால் இன்னும் நேரம் குறையும்.

மீதமுள்ள தண்ணீரை குடிப்பதற்கும் வைத்துக்கொள்ளலாம். 

மேலும் குறைந்த அளவு எரிபொருள் செலவு செவதால் பணம் சிக்கனமகிறது 

சீக்கிரம் சூடாவதால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கிறது.

நீங்களும் முயச்சி செய்து பாருங்கள். அதன மகிமையை உணருவீர்கள்!
உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வீர்.

இன்னும் வரும்.

*********************************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் / போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

Wednesday 25 July 2012

கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை


கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் சிறுகதை  
மதுரை கங்காதரன் 

குறிப்பு : இக்கதை விருதைமலர் - நடத்தியப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. 
மனிதனின் இப்போது இருக்கும் குணத்தை சிந்திக்க வைக்கும் 
உணர்ச்சி பூர்வமானக் கற்பனைக்  கதை.


இந்த உலகம் அழியபோவதற்கான பல நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பிரபஞ்சத்தில் அதுவும் சூரிய குடும்பத்தில், அதிசயமான பலவகை உயிரினங்கள் அடங்கிய பூமியில், கதைகளில் ஏன்? திரைப்படங்களில் கூட காட்ட முடியாத அளவிற்கு, உண்மையாகவே  மனித இனம் அழியும் காட்சிகள், பார்க்கும் திசைகளிலெல்லாம் தென்பட ஆரம்பித்தன. அவையெல்லாம் கற்பனைக்கு எட்டாத ஒன்றே சொல்ல வேண்டும்.

அது எவ்வாறென்றால் ஒரு தொலைபேசியில் "மகனே!  சீக்கிரம்  வீட்டுக்கு திரும்பி..."  என்றபடி  பாதியிலே பேச்சுப் பரிமாற்றம் தடைபட்டது. அதற்கு  காரணம் அநேகமாக அந்த இடம் தவிடு பொடியாகி சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும்.

உலக நாடுகள் சிலசற்றும் நினைத்துப் பார்க்காதபடி 'போர்' என்கிற போர்வையில் இயற்கைச் சக்திகளை தோற்கடிக்கும்விதமாக மனித சக்திகள் ஒன்றுகூடி, போட்டிபோட்டுக்கொண்டுத் தங்கள் தங்கள் வலிமையினைப் பலவழிகளில் பலதிசைகளில் நிரூபித்துக்கொண்டிருந்தன. அத்தகைய செயல்கள் 'உலக மக்கள் அனைவரையும் அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும் அடையாளம்தான்என்று யாரும்  எண்ணிப்பார்க்கவே இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது இந்த மனித உலகில் அதிகபட்ச அழிவுகளை ஏற்படுத்தும் சக்திமிக்க ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தனர். மனித உயிர்களை துட்சமாக எண்ணித் தங்கள் செல்வம், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம்பணம் மற்றும் ஆயுத பலத்தை நிரூபிக்கவும் 'நான்தான் உலகத் தலைவன்' என்ற தனிமனித சுயநலத்தின் உச்சத்தில், அனைத்து மானுட  தர்மங்களையும் மீறி, அந்த உலகப் போரானது மனிதர்கள்  உட்பட பல உயிரினங்களை எவ்வித வித்தியாசமும் பார்க்காது அழித்துக்கொண்டு இருந்தது.

இதர நாடுகளின் கவனம் முழுவதும் அந்த உலகப் போரின் முடிவை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
                                        
தொலைக்காட்சி, வானொலி, கணினி , கைபேசி , செய்தித்தாள்கள் போன்ற அனைத்து சாதனங்ளிலும் போரின் கோரத்தை நேரடியாகவும் மற்றும் செய்திதாள்கள் மூலமாகவும்  பரபரப்பாக ஒலி, ஒளி வழியாக நேரலையாக செய்திகளைத் தந்து கொண்டிருந்தது.

அதோடு நிற்காமல் இதுவரை நடந்த முதல் இரு உலகப் போரின் போது மனித இனங்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதை கோப்புக்காட்சியிலிருந்து காட்டிக்கொண்டு இருந்ததுஅப்போது பீரங்கிகள், துப்பாக்கிகள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுகுண்டுகள் செய்த 'மனித அழிவு' சாகசங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டிக்கொண்டு இருந்தது. அது உலக மக்களை பயமுறுத்தும்விதமாகவும், உடலை உறையவைக்கும்விதமாகவும் இருந்தது. அழிவிலிருந்து இருமுறை தப்பித்த பூமி, இம்முறையும் தப்பித்துவிடுமா? என்கிற கேள்விக்குறி நாட்டுத்தலைவர்களுக்கிடையே இருந்தது.   

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. அனைவரின் எண்ணங்கள் பலவாறு சிந்தித்ததுநடக்கும் இந்த உலகப் போர் முதல் இரு உலகப் போரைவிடப் பன்மடங்கு மக்கள் இனத்தை அழித்துவிடும் என்கிற அச்சத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.
                           
போர் நடக்கும் நாடுகளைப் பற்றிய 'போர் செய்திகள்' நேரலையாக உலகத்தின் பல நாடுகளுக்குப்  பல மொழிகளில் கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைபேசி மூலம் கதறியபடித் தந்து கொண்டிருந்ததுஅதுவும் சில நேரம்தான் நீடித்தது. அதன் பிறகு அனைத்து வழிகளில் நடந்தச் செய்திப் பரிமாற்றங்கள்  தானாகத் துண்டித்துக்கொண்டன.





இந்த மாதிரி மனத்தை உலுக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்க, நாடே அச்செய்திகளை மட்டும் நுண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ....


அதேவேளையில் யாருமே கணித்திருக்க முடியாதபடி சற்றும் எதிர்பாரதவிதமாக ஒரே    நேரத்தில் இயற்கையும், இதுநாள்வரை தனக்குள் அடக்கி வைத்திருந்த தனது அசுரபலத்தை உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்ட நான்கு திசைகளில் வெவ்வேறு விதத்தில் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

கிழக்குதிசை முழுவதும் என்றுமே இல்லாதவாறு பல இடங்களில் மிகப்பெரிய நீரூற்றுபோல் எரிமலைகளாகக் கக்கியபடி  அங்குள்ள எல்லாவற்றையும் நாசம் செய்து கொண்டிருந்தது.


மேற்கு திசையில் பல மீட்டர் உயரமுள்ள இராட்சச  அலைகள் தொடர்ச்சியாக எழுந்தபடி நாட்டிற்குள் புகுந்து தாக்கி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி தந்து கொண்டிருந்தது.



வடக்கு திசையோ பனி உருகி ஓடுவதும்,  மீதி இடத்தில் சூறாவளி காற்றுவீசி தனது அழிவு வேலையினைச் சரியாகச் செய்யும்விதமாக அங்கே ஒருவரையும் வாழவிடாது துவசம் செய்து கொண்டிருந்தது.


விடுபட்ட தெற்கு திசையில் புயலும், சுனாமி போன்ற பேரலைகளின் தாக்கங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு பல இடங்களை அதன் அகோர பசியினை தீர்த்துக்கொள்ளும் விதமாக மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட பூமியின் எல்லாப் பகுதியிலும் அழிவுக்கான  அடையாளம் தெரிய தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.
தொலைகாட்சி பெட்டியில் 'முக்கிய செய்திகளுக்குப் 'பதிலாக' அவசர செய்திகள்' மற்றும் 'எச்சரிக்கை செய்திகள்' என்றபடி  ஓடிக்கொண்டிருந்தது.
நாட்டு  மக்களுக்கு, உலகத்தின் அனைத்து நாடுகளின் மூலை முடுக்குகள் உட்பட எல்லா பகுதியிலும் அழிவு, அழிவு! என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. "உங்களை நீங்களே காப்பாற்றி"  என்று அந்த எச்சரிக்கை ஒலியும் அரை குறை பேச்சுடன் 'டொப்' என்ற சப்தத்துடன் அதன் ஆயுள் முடிந்து போயிற்று. காரணம்!  அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் போன்ற அனைவரையும் எந்தவித வித்தியாசமும் பாராது எல்லா உயிர் ராசிகளையும் ஒரே நேரத்தில்  பூமிக்குள் புதைந்து போகச் செய்தது.



கைபேசியில்...
"அப்பா! நாங்க இங்கே  நல்லா  இருக்கிறோம். அங்கே நீங்க எப்ப..." சுனாமி போன்ற அலை அந்தக் குரலையும் அடித்துச்சென்றது.




கணினியில்...

"நல்லவேளை இங்கே  ஒன்னும் நடக்கலே! நாங்க பாதுகாப்பாக இருக்கி..." பேச்சுவார்த்தை முழுமையாய் பரிமாறிக்கொள்ளும் முன்னே அப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது.



வானொலியில்..
"பூமியில் பல பகுதிகள் இயற்கை செய்து கொண்டிருக்கும் அழிவோடு, உலகப் போரான அணு ஆயுதப் போரும் நடைபெற்று வருவதால் நீங்கள்..." சுழன்று வீசிய சூறாவளி வானொலி நிலையத்தோடு அங்கு இருந்தனவற்றை ஒன்றுவிடாமல் சூறையாடிக் கடலுக்குள் அடித்துச் சென்றது.



இடையிலுள்ள நிலப்பகுதியில் அணுகுண்டிலிருந்து    வந்த அணுக்கதிர்கள் மக்களையும், தண்ணீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் உயிரோடு சமாதிகட்டும் வேலை துரிதமாக செய்து கொண்டிருந்தது.
நடப்பவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இயற்கையானது இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுபோல் முன்பே திட்டமிட்டபடி ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நடத்திக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், அழிந்த கட்டிடங்கள், அனாதையாய் கிடக்கும் செல்வங்கள், யாருமே சீண்டாத, ஆட்களே இல்லாத பெரிய சின்ன கடைகள், பொறுக்க ஆளில்லாத சாலையில் பரவிக் கிடக்கும் தங்கம், வைரம், பணப்பெட்டிகள் என்று உலகத்தில் இதுவரை காணாத செல்வங்கள் ஒன்றாக அனைத்து இடங்களிலும் பார்க்கின்றவாறு இருந்ததுஇது நாள் வரை ஒளிந்து கிடந்த, புதையலாகக் காக்கப்பட்டவை எல்லாம் இன்று  'அம்போ' என்று அனாதையாய் கேட்பாரற்றுக் கிடந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் வாழ்க்கை இல்லாமல் செய்ததன் அடையாளமாகத் தனது வெற்றியை மெல்லிய காற்று மூலம் இறந்த மக்களைப் பார்த்துக் கொண்டே பறைசாற்றி வலம் வந்துகொண்டிருந்ததுமருந்திற்காவது ஒரு உயிராவது பிழைத்திருக்கின்றதா? என்று வேவு பார்க்க வந்தது சூரியக் கதிர்கள்.
"பூமியாவது அழிவதாவது, வேறு வேலை இருந்தால் பாருங்கள்!"என்று ஆணித்தரமாய் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்இதுநாள் வரை பிரபஞ்சத்தின் அதிசய படைப்பு பூமியைக இருந்தது. அந்த  பூமியின் அதிய படைப்புக்கு கண்ணடி பட்டதற்குப் பரிகாரமாய் அழிவு வேலைகள் கட்சிதமாக நடந்து முடிந்தது. 
இத்தனையும்  நடந்த பின்னரும் அந்த அசுர அழிவையும் தாண்டி ஏதோ ஒரு மூலையில் முக்கல் முனகல் சத்தம் ... ".... ய்..யோ ... அப் ...பா ..."  என்று உடல் சோர்வில், பசி மயக்கத்தால்வரும் சப்தம் கேட்டது. சற்று நெருங்கியபோது அவன் ஒரு இளைஞன்? உயிர் கொண்ட சிலை. அழிவின் சத்தி  தவறுதலாக ஒரு உயிரை விட்டுவைத்தது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய்கனிகளை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னரே, தான் இருக்கும் நிலைமையினைச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி ஆள் அரவமில்லை. ஒருவிதபயம் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் எங்கே? என்ன ஆனார்கள்? தேடி நடந்தான் ... நடந்தான். கண்ணுக்கு எட்டியவரை யாருமில்லை? 'அப்போ நான் மட்டுமா.., உயிருடன் ..!  இந்த உலகில்..!' என்று தனக்குள் பேசியவாறு விடை காண அலைந்தான். தினமும் உண்பது, உறங்குவது, அலைவது என்றபடி நாட்கள் பல கழிந்தன. போக போக நம்பிக்கை இழந்தான். ஆனாலும் ஒரு மூலையில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் அவன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வீண் போகவில்லை. அவன் எண்ணம்.
ஒரு நாள், தூரத்தில் அ..தோ ......ரு ...உருவம் அசைவது தெரிந்தது. அவன் மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமானது. நெருங்க நெருங்க உருவம் சற்று தெளிவாக தெரிந்தது. அந்த உருவமோ இவனைக் கவனித்ததாக தெரியவில்லை. நீளமானத் தலைமுடி, நளினமான நடை, தளர்ந்த உடல்! அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்துக் கொண்டு அதை நோக்கி ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அது, அவள் ஒரு பெண்! 'இவளும் என்னைப் போலவே தப்பித்தவளாகத்தான் இருப்பாள்!' என்பதை உறுதி செய்து கொண்டான்.
'ஒரு வேளை இவளும் என்னைப் போல, இங்கு உயிரோடு யாராவது இருக்கிறார்களா? என்று தேடி அலைந்து, கடைசியில் யாரும் இல்லாததால், தான் உயிரோடு இருந்து எவ்வித பலனும் இல்லை என எண்ணி ... தன் உயிரை மாய்த்துக் கொள்ள.... ..... அப்படி இருக்கவே கூடாது' என்று துடித்தான்.
அவனுக்கு உதவிடும் ஆருயிர்மருந்து இவள்தான் என்று உறுதியோடு நம்பினான். அவளை எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்று நினைத்தவன் அவனுக்குத்தெரிந்த மருத்துவத்தை அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். அவளின் நாடி துடிப்பு இயல்பாக இருந்தாலும், இவனின் நாடி துடிப்பு அதிக வேகத்தில் துடித்தது. ஒருவழியாக இதயத்துடிப்பு இருப்பதை உறுதி செய்த பின்பே இவனின் நாடி சீரானது. சற்றும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.
உதடு வறண்டிருந்தது. உடல் சுண்டியிருந்தது. அதற்கு காரணம், தண்ணீர் தாகம், பசி என ஊகித்தவாறு இரண்டையும் கொண்டு வந்தவன், முதலில் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். உடல் அசைந்தது. வாயில் தண்ணீர் ஊற்றினான். முதலில் தண்ணீர் வெளியே கொட்டியது. அதன்பின்  சிறிது சிறிதாக தண்ணீரையும் உணவையும் விழுங்கினாள். அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. அப்போது யார் இவள்? எங்கிருந்து வந்திருப்பாள்? போன்ற கேள்விகளை அவனேக் கேட்டுக்கொண்டான்.
சற்று கண்களை திறந்து பார்த்தவள், அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. உடம்பு சுறுசுறுப்பானது. சற்று எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் பேசுவதற்கு தெம்பு இல்லாமல் மௌனமாக இருந்தாள்.  கட்டாயம் அப்போது அவள் எண்ணத்தில் அழிவுநேர கூச்சல்கள், அலறல்கள், கோரக்காட்சிகள் ஒரு முறை வந்துபோயிருக்கும்.


மீண்டும் அமைதி காத்தாள். அவன் எண்ணம் போன்றே அவளுக்கும் இருந்தது.
அன்பு காட்ட, ஆதரவு கொடுக்க, உதவி செய்திட ஒரு உயிராவது இருக்கின்றதே என்று இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவனின் எல்லா உதவிகளையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். மீண்டும் மௌனம். இவனுக்காக அவள். அவளுக்காக இவள் என்கிற சூழ்நிலையே அவர்களிடத்தில் நிலவியது.
பகல் இரவுகள் பல கடந்தன. மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்தாள். "எனக்கு தெரிந்தவரை நாம் இருவரும்தான் உலகில் உயிரோடு இருக்கிறோம் போலத் தெரியுது?"
"எனக்கும்   அப்படித்தான் தோன்றுகின்றது" என்றான்.
"இனி நாடு என்பது ஏதுமில்லை, ந்த உலகமே நமதுதான்" என்றாள்.
இந்த பேச்சு நீண்டது. சட்டென்று "அப்படியானால் நாம் மற்றோரு 'ஆதாம், ஏவாள்' அப்படித்தானே " என்றாள்.

"....... ஆமாம் " என்றபோது இருவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
"நமக்கு மீண்டும் ஒரு புது உலகம் படைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கு. இனி நம் பெயர்களும் அந்த 'ஆதாம், ஏவாள்' போல நிலைத்து நிற்கும். இனி நாம்தான் இப்புதிய உலகைப் படைக்கப்போகும் தாய், தந்தை" என்று நினைக்க நினைக்க அவர்களுக்குப் பெருமையாய் இருந்தது. 
"இந்த புது உலகத்தைப் படைக்கும் பெரிய பொறுப்பு நம்மிடம் இப்போது உள்ளது. இனி நம் பரம்பரையினர் உலகத்தை ஆள்வார்கள்!" அவனின் பேச்சு மகிழ்ச்சியைத் தந்தாலும் உடனே மௌனத்தில் ஆழ்தியது.
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"நாம் மற்றோரு ஆதாம் ஏவாள்! ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனாலே அழிந்தது? பொறாமை, போட்டி, கோபம், தீய எண்ணங்கள், பேராசை என்பது என்று நம் இருவருக்கும் நன்றாகத் தெரியும்." வாதங்கள் காரசாரமாக நிகழ்ந்தன.

"உனக்கு புதிய உலகம் படைக்க விருப்பம்தானே?" அவளிடத்தில் கேள்வியை எழுப்பினான்
மௌனம், யோசனை. மீண்டும் மௌனம்.. யோசனை. சட்டென்று "எனக்கு துளிகூட விருப்பமில்லை" என்ற ஒரு குண்டைத் தூக்கி போட்டாள். அவனின் மகிழ்ச்சியான எண்ணம் இடி தாக்கியதுபோல் சுருண்டது. அவனின் கற்பனை உலகம் மெய்யாக உருவாக ஆரம்பிப்பதற்குள் அழிந்ததுபோல உணர்ந்தான்.
"ஏன்?.. ஏன்? இந்த திடீர் மனமாற்றம்" என்ற பல கேள்விகளை அடுக்கினான்.
"ஆம். ஆசையோடு நாம் சந்ததியினரை படைப்போம். அவர்கள் முதலில் பாசமாகத்தான் இருப்பார்கள். பிறகு பாசம் மோசம் செய்யும். ஏமாற்றும். குறிப்பாக பெண் இனத்தை பாடாய்ப்படுத்தும். உறவுகள் பெருகப் பெருக ஒருவருக்கொருவர் போட்டி, பொறமையில் ஆரம்பித்து பின்னர் சண்டையாய் வளரும். இப்போதுள்ள இந்த உலகம் மாதிரிப் பல நாடுகளாய்  மாறி அவர்களுக்குள் மீண்டும் 'நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்' என்கிறப் போட்டியாகமாறும். "கடைசியில் ஒருநாள் இப்போது நடந்ததுபோல் வெகுசீக்கிரமே நாம் படைத்த புது உலகம் அழிந்துபோகும். அந்த காட்சிகள் என் கண்ணுக்குள் தெரிகிறது. அந்த அழிவுக்கு நாமே காரணமாக இருக்கவேண்டுமா?
நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..
"அதற்காக இந்த அற்புத உலகத்தை நாமே அழிக்கலாமா? இந்த நல்ல வாய்ப்பு யாருக்கும் இனி கிட்டாது. உன் முடிவை மாற்றிக்கொணடால் இந்த உலகம் படைக்கப்பட்டதன் பலனை நாம் கொடுக்கலாம்" என்ற அவனின் தேனினும் இனிய வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தது.
"இனி நாம் இருவரும் புதிய உலகத்திற்கு அடியெடுத்துவைக்கும் புண்ணியவான்களாக மாறுவோம். புனிதமான மறு உலகப்பயணத்திற்கு ஆயுத்தமாவோம்"         

"நீ சொல்வது சரிதான். இன்றைய  நமது சுகம், மகிழ்ச்சி நாளை மலரும் நாட்களிலும் நிலைத்து நிற்கும்! என்பதில் சந்தேகமே இல்லை. நாம் நினைத்தபடி புது உலகம் கட்டாயமாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பாகப் பாசமாக உதவியாக நடந்து கொள்வார்கள் என்பது உண்மையில் நடக்கும். நமது பரம்பரை அணுக்களிலிருந்து வரும் மனிதன் அதிசக்தி படைத்த மனிதனாகவே இருப்பான். அவனின் எண்ணங்கள் ஆரம்பத்திலுருந்தே போட்டி பொறாமை விதைகளை அழித்திடவேண்டும். ஆன்மீகப்பாதைக்கு வித்திடவேண்டும்" படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்டான்.
இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
"சரி. நாம் இந்த உலகுக்கு கடைசி ஆதாம் ஏவாளாக இருப்பதை விட மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இருப்போம். தொடங்கியது எப்படியோ அப்படியே மீண்டும் தொடங்கிடுவோம். நம் அணுக்களில் கலந்திருக்கும் தந்திரம் மற்றும் ஏமாற்றும் குணம் நாம் உருவாக்கும் மனிதனுக்கு இருக்கக் கூடாது. அதனால்.... ? " சற்று நிறுத்தினாள்.
"அதனால்"
"உலகில் அன்பே உருவான மனித இனம் பெருக இன்றிலிருந்து பாடுபடுவோம்" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருத்தபோது இருவர் உடலில் இனம்புரியாத மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தது. உடல் சோர்ந்து, வாடி வதங்கி ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் இருவரும் தரையில் துவண்டுவிழ ஆரம்பித்தனர். தோல்கள் சுருங்கின. உடல் முழுவதும் சூடுபரவ ஆரம்பித்தனர்.
"என்ன நடக்குது? ஒருவேளை அணுகதிர் வீச்சு உடலில் .. உடலில்"
"ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றுது. அப்போ நமது எண்ணம்.. அந்த புது உலகம் .. புது மனிதர்கள் .."
"அதுவும் இந்த அழிவில் அழிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்"
"அப்போ நாம உயிர்வாழ மாட்டோமா?"

" இந்த உலகுக்கு மற்றோரு புது  ஆதாம் ஏவாளாக இல்லாம கடைசி ஆதாம் ஏவாளாக இருந்து உலகைவிட்டுப் போகிறோம்.. மகிழ்ச்சியாக.."   
***********************