Pages

Monday 20 July 2015

வெள்ளை முடி காதல் - சிறு கதை - WHITE HAIR LOVE

வெள்ளை முடி காதல்
சிறு கதை
மதுரை கங்காதரன்

"உண்மையிலே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? எம்மேலே உங்களுக்கு இருக்கிறது ஆசையா? அன்பா?" என்று கேள்வி கேட்டாள் கீதா.

"என்ன அப்படி சொல்லிட்டே கீது. இதையே நான் திருப்பி உன்கிட்டே கேட்டா அதுக்கு நீ என்ன பதில் சொல்லுவாயோ அது தான் என்னோட பதில்!" என்றான் ராஜேஷ்.

"இல்லே, நாளைக்கு நமக்கு கல்யாணமாகி என்கிட்டே ஒரு சின்ன குறையிருந்து அதையே ஒரு சாக்காக வைச்சுட்டு என்னை ஒதுக்கிடமாட்டீங்களே"

"இதுக்கும் உன்னோட பதில் எதுவோ அது தான் என்னோட பதில்"
நான் எதனாலே சொல்றேன்னா, காதலிக்கிறப்போ பெரிய பெரிய பிரச்சனை கூட சின்னதாய்த் தெரியும். ஆனா கல்யாணமான பின்னே சின்ன சின்ன பிரச்சனைங்க கூட பெரிசாத் தெரியும். அப்படி ஒரு சின்ன பிரச்சனை கூட உங்களுக்கு பூதாகரமாய்த் தெரியும். அதனாலே என்கிட்டே பிரியம் காட்ட  மறக்கமாட்டீங்களே!"

"இதே கேள்வியை நான் உன்கிட்டே திருப்பிக் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவாயோ அது தான் என் பதில்!"

"அதெல்லாம் போகட்டும்! இப்போ நான் என் கிட்டே உள்ள ஒரு குறையைச் சொல்லப் போகிறேன். அதை கேட்ட உடனே உங்கிட்டேயிருந்து சூடா ஒரு பதில் வரும்னு நான் எதிர் பார்க்கிறேன்"

"புதிர் போடாதே! எங்கே சொல்லு பார்ப்போம்"

"அது வந்து ..... வந்து ..... நீங்க ஆசையா தொட்டு வர்ணீப்பீங்களே! என்னோட கூந்தல்லே முன்னாலே இருக்கிற தலைமுடி ... "

"மேலே சொல்லு"

"சொன்னா கோபிக்கமாட்டீங்களே..."

"கோபிக்கமாட்டேன். சும்மா சொல்லு"

"முன்னாலே இருக்கிற தலைமுடி.. உண்மையான கருப்பு இல்லே! கொஞ்சம் 'டை' போட்டு கருப்பாக்கியிருக்கிறேன். இதனாலே நீங்க என்னை வெறுப்பீங்களா?" அவன் பதிலுக்காக ஏங்கினாள்.

அவனோ கண்களை அகல விரித்து புருவங்களை உயர்த்தி, "இதே கேள்வியை நான் உன் கிட்டே திருப்பிக் கேட்டா...."

அதை கேட்டு இன்ப அதிர்ச்சியோடு "நீங்க .... என்ன சொல்றீங்க! உங்களுக்கும் முன்னாலே இருக்கிற தலைமுடி வெள்ளைங்களா?"

அவன் பலமாய்த் தலையாட்ட, இருவரும் சிரிப்பில் மூழ்கினர்.

"இதிலே கூட நமக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்க! உண்மையிலே நாம் தான் தெய்வீகக் காதலர்கள்" என்று சொல்லி ஆனந்தமடைந்தனர்.


YOU CAN EARN MILLION ... - பணக்காரராக சில வழிகள்

புதிய தென்றலில் வெளியான எனது கட்டுரை :
பணக்காரராக சில வழிகள் 
YOU CAN EARN MILLION... 
மதுரை கங்காதரன்  




எழுத்தெல்லாம் தூயதமிழ் எழுத்தாகுமா? புதுக்கவிதை


 எழுத்தெல்லாம்  தூயதமிழ்  எழுத்தாகுமா?
                                        புதுக்கவிதை
                                  மதுரை கங்காதரன்

தமிழ்மொழியின் தலையெழுத்து சரியில்லையோ
எழுதும் தமிழில் வடமொழி எழுத்துக்கள் கலப்படம்
பேசும் தமிழில் அந்நியமொழியின் ஆதிக்கம்
தமிழ்மொழியோ தனித்தன்மை இழந்துவருகிறதே.

பணத்திற்கு ஆசைபட்டு தன்மானத்தை இழக்கலாமா?
பறப்பதற்கு ஆசைபட்டு இருப்பதை இழக்கலாமா?
பதவிக்கு ஆசைபட்டு செல்வங்களை இழக்கலாமா?
அந்நிய மொழிக்கு ஆசைபட்டு தூயதமிழை மறக்கலாமா?

முப்பாட்டனுக்கு முன் வந்த மூத்த மொழி தமிழை
முச்சந்தியில் நிறுத்த சம்மதிக்கலாமா?
தமிழனுக்கழகு தூயதமிழில் பேசுவதல்லவா?
தமிழுக்கழகு தூயதமிழ் எழுத்துகளல்லவா?

தமிழ்மொழி எழுத்துகளில் எந்த சிறப்புகளில்லை ?
தூயதமிழ் எழுத்துகள் இயற்கையின் ஒலிகளே
தமிழ் எழுத்துகளை உச்சரிக்க இலக்கணமுண்டு
பலமொழிகளின் வேர்சொற்கள் தமிழிருந்து பிறந்ததே!

பூக்களில் பூசைக்கேற்ற பூக்கள் இறைவனடி சேரும்
சொற்களில் அமுதான சொற்கள் இனிமை தரும்
தன்னலமற்ற செயல்கள் நன்மைகள் தரும்
தூயதமிழ் எழுத்தகள் தமிழ்மொழியைக் காக்கும்.

தூயதமிழ் எழுத்துகளே தனித்தமிழை வளர்க்கும்!
                 தமிழ்மொழியைக் காக்கும்!!

####################################################################################


KAMARAJ – THE KING MAKER - பச்சைத் தமிழன் காமராசர்!


   KAMARAJ – THE KING MAKER
 பச்சைத் தமிழன் காமராசர்
           புதுக்கவிதை
      மதுரை கங்காதரன் 

தன்னம்பிக்கையின் இமயமாய் நிற்பவர்
தன்மானத்தில் கவரிமானாய் கருதுபவர்
தன்னலம் கருதா மாணிக்கமாய் ஒளிர்பவர்
தர்மத்தில் கொடைவள்ளலாய் விளங்குபவர்.

அரசியலுக்கு புது இலக்கணம் தந்தவர்
அறிவுக் கல்வியை ஏழைகளுக்கு அளித்தவர்
அனைத்திற்கும் அருகதை கொண்டவர்
அவரே ஏழைப் பங்காளன் நம்ம காமராசர்!

தென்னக காந்தியாம் நம்ம காமராசர்
செயல் வீரராம் நம்ம காமராசர்
படிக்காத மேதையாம் நம்ம காமராசர்
அரசியலின் அரசராம்  நம்ம காமராசர்.

செயலில் பச்சைத் தமிழர்
திடத்தில் கறுப்பு வைரம்
இரக்கத்தில் வெள்ளை குணம்
சிந்தனையில் நீலவானம்.

நிலையான ஆட்சிக்கு உதவிய வீரத் தமிழர்
தொழிற்சாலைகளை உருவாக்கிய புரட்சித் தமிழர்
அணைகளைக் கட்டி நீர்வளம் பெருக்கிய பாமரத் தமிழர்
தமிழகத்தை தலை நிமிரச் செய்த பச்சைத் தமிழர்.

சொல்லும் செயலும் ஒன்றாய் கொண்டவர்
வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலே கழித்தவர்
பொதுவாழ்விற்காக திருமணத்தை தவிர்த்தவர்
உயர்ந்த பண்பில் உத்தமராய் திகழ்ந்தவர் காமராசர்.

படியுங்கள் காமராசர் வாழ்க்கை வரலாற்றை
நல்வழி காட்டுமே இளைஞர் சமுதாயத்தை
அழிக்கலாமே அரசியல் தரித்திரங்களை
படைக்கலாமே புதியதோர் சரித்திரத்தை!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$