Pages

Sunday 26 January 2014

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ? 78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* Court had given punishment to some criminals and more innocents. Also lawyers pleading wisely and release many criminals as well as some innocents . Tell yourself that this is correct or not ?
* More bribery and corruption takes place mostly in politics and public sectors.
* Media and news papers are exposed high status people's punishment are exposed big and their mistakes are exposed very very small. At the same time ordinary people's mistakes are exposed very very huge manner and their punishment are exposed very very little. Is this called 'Kali kalam'?
* Up to you have the money or position , all your mistakes will hide. Once you loose money as well as position, your previous mistakes even it is small will be exposed very very big manner.  
* Some people want to become 'laughter king' . But they are reluctant to be act as buffoons.

Success step will continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

78. HOW TO BECOME A 'LAUGHTER KING' ?

* நீதிமன்றம் தனது தீர்ப்புகளினால் சில குற்றவாளிகளையும், பல நிரபராதிகளையும் தண்டித்திருக்கின்றது. அதேபோல் வழக்கறிஞர்கள் தங்களது வாதத்திறமைகளினால் பல குற்றவாளிகளையும், சில நிரபராதிகளையும் விடுதலை தந்திருக்கிறார்கள். இது சரியா ? தவறா? என்று நீங்களே சொல்லுங்கள்?
* லஞ்சமும் ஊழலும் அதிகம் நடைபெறும் இடங்கள் பெரும்பாலும் அதிகாரமிக்க அரசியலிலும், பொதுத்துறையிலும் தான்..
* ஊடகங்கள் , மீடியாக்கள் பெரிய பதவி, பெரிய அந்தஸ்துள்ள  மனிதர்களின் பெரிய பெரிய தவறுகளை மிகச் சிறிதாவும் , தண்டனைகளை மிக மிக பெரிதாகவும் சித்தரித்து கூறுகிறார்கள் / காட்டுகிறார்கள் . அதே சமயத்தில் சாதாரண மனிதர்களின் சிறு சிறு தவறுகளை மிகமிகப் பெரிதாகவும்,  தண்டனைகளை மிகச் சிறிதாகவும் எடுத்துக்கூறுகிறார்கள். இதுதான் 'கலிகாலமா'?       
* உன்னிடம் பணம் , பதவி இருக்கும் வரையில் நீ செய்த தவறுகள் வெளியில் வராது . அதேசமயத்தில் உன்னிடத்தில் பணம், பதவி இல்லாது போனவுடன் நீ செய்த சிறு தவறும் பூதாகரமாக வெளியில் கிளம்பும்.
* நிறைய பேர் 'சிரிப்பு மன்னனாக' விரும்புகின்றனர். ஆனால் கோமாளித்தனமாக நடந்துகொள்ளத் தயங்குகின்றனர்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

*****************************************************************************************************************************

சிரி சிரி சிரிப்புகள் - Jokes

சிரி சிரி சிரிப்புகள் - Jokes  
மதுரை கங்காதரன் 



* " இன்ஸ்பெக்டர் ஐயா , என்னோட நூறு பவுன் நகை , ஒரு லட்சம் ரூபா திருடங்க திருடிட்டாங்க. நீங்க தான் உடனே கண்டுபிடிச்சு தரனும் "

" அந்த நகை, பணம் எப்படி கிடைத்தது"

" முக்கு வீட்டிலே நான் திருடியது சார்"


**************************************************************************

* தேவலோகத்தில் 

 "பிரபு ! இந்த திருடன் திருடிய நூறு பவுன் நகையிலே  இந்த இன்ஸ்பெக்டர் ஐம்பது பவுன் நகைகள் எடுத்துக்கொண்டான் பிரபு !"

" அடப்பாவி, திருடிய எனக்கு திருட்டுப் பட்டம். என்னிடம் திருடிய உனக்கு இன்ஸ்பெக்டர் பதவியா? இந்த கொடுமை எப்படி பூலோகவாசிகளிடம் சொல்வது?"

**************************************************************************

" தலைவரே! எதுக்காக பையன் அடம்பிடிக்கிறான்"

" உலகம் சுத்திப்பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் வயசாகட்டும் !  ஜனாதிபதி பதவி கிடைச்ச பிறகு சுத்தலாம் ன்னு சொன்னா கேட்க மாட்டீங்கிறான்"

***************************************************************************************************************
'

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! பார்க்கிலே என்னோட லவ்வரோட மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத நாலு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  'எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க' நானும் சரின்னு ஒத்துகிட்டேன் "

******************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே  நான் என் மாமியாரை, கணவரை சகட்டுமேனிக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.  நான் நல்லா திட்டுறதை இரண்டு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல திட்டுங்கன்னு கூப்பிட்டாங்க"  

****************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! ஆபிஸில் மொக்கை போட்டுகிட்டிருந்தேன். நான் நல்லா மொக்கை போடுறத ஒரு மணிநேரமா கவனித்த டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல மொக்கை போடுங்கன்னு கூப்பிட்டாங்க"

**************************************************************************************************************

"நீங்க எப்படி சீரியலிலே நடிக்க வந்தீங்கன்னு நேயருக்கு சொல்லமுடியுமா?"

"தாராளமா! வீட்டிலே கண்டதை போட்டு சமைப்பேன். வாயில் வைக்கவே முடியாது . அதை கேள்விப்பட்ட  டி.வி.காரங்க  எங்க சீரியலிலே இதுபோல பலவற்றை கலந்து புதுப்புது பேரை வைச்சு கண்டதைப் போட்டு சமைங்கன்னு கூப்பிட்டாங்க"

****************************************************************************

* " பல பட அதிபர்கள்  அந்த குறிப்பிட்ட தியேட்டர்லே தான் தங்களுடைய படத்தை வெளியிடனும்ன்னு ஒத்த கால்லே நிக்கிறாங்க? என்ன காரணம்?"

  " ஓ .. அதுவா! தியேட்டர்லே ரசிகர்கள் கை தட்டுராங்கலோ இல்லையோ அஞ்சு நிமிஷத்திற்கு ஒரு முறை பேக் - க்ரவுண்ட் மியூசிக் ஆக விசில், கை தட்டும் சத்தம், சிரிப்பு , கமெண்ட்ஸ்ன்னு ஒலி பரப்புவார்கலாம் "

*************************************************************************************

*  "அந்த டாக்டர் போலின்னு எப்படி தெரிஞ்சது"

"'ஊசி போடுறதுக்கு கை காட்டுங்கன்னு' சொல்றதுக்கு பதிலா காதை காட்டுங்கன்னு சொன்னாரு "

************************************************************

*  "வர வர மனுசனா பொறந்து பிரயோசனமே இல்லை போலத் தெரியுது"  

"ஏன் ? எதுக்காக அப்படி சலிச்சுக்கிறே"

" பின்னே என்ன , பேங்க்காரங்க எனக்கு லோன் கிடையாது ! ஆனா என் மாட்டுக்கு லோன் தர்றதா சொன்னாங்க" 

(((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


*    " இது என்னங்க புது வியாபாரமாத் தெரியுது"

"எதைச் சொல்றீங்க"

" பணம் கொடுக்கிறதைப் பொறுத்து எந்த கட்சியில் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ , எம்.பி சீட் வாங்கித் தரப்படும்" ன்னு ஒரு போர்டு தொங்குது"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



" ஏம்பா ! பல குரல்லே மாத்தி மாத்தி நல்லாப் பேசுறேயே ,
நீ எந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப் போறே"

" 'நேரலை' நிகழ்ச்சியிலே நானே பல ஆண் , பெண், குழந்தைங்க குரல்லே உலகத்திலே உள்ள பல இடங்களிலிருந்து பேசுவதோடு, நிகழ்ச்சியைப் பத்தி நல்லாப் புகழ்ந்து பேசுறேன்"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^   




        

'தேர்தல்' ஒரு விளையாட்டா? மக்களின் இரட்சகனா ? புதுக்கவிதை

'தேர்தல்' ஒரு விளையாட்டா? மக்களின் இரட்சகனா ?
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

விளையாட்டில் நடப்பது !



விளையாடும் அணிகள் வீறுகொண்டு விளையாடுவார்கள் 
ஆடுகளத்தில் நடுவர்(கள்) தீர்ப்பு சொல்லுவார்(கள்) 

ரசிகர்களைப் பற்றி  விளையாடுபவர்கள் கவலை கொள்கிறார்களா?
ரசிகர்கள் தான் விளையாட்டு வீரர்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள்!

மக்களுக்காகவா  விளையாடுகிறார்களா?
தனக்காகத் தானே விளையாடுகிறார்கள் !


பணத்திற்காகத் தானே விளையாடுகிறார்கள் !
விளம்பரத்திற்க்காகத் தானே விளையாடுகிறார்கள்!

விளம்பரம் , எண்கள் கொண்ட கால் கை உடைகள் 
கண்களைக் கவரும் ரசிகர்களின் கும்மாளங்கள் 

அவர்கள் வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தாலும் கவலை படுவதில்லை!


மீண்டும் களத்தில் பலருடன் ஆடுகிறார்கள் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!

அணியின் வீரர்கள் நன்றாக ஆடினாலும் 
அதன் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!

மக்களுக்கு இது ஒரு வெட்டிப் பொழுதுபோக்குச் செலவு  
ஏதாவது மக்களுக்கு பயன் படியாக இருக்கின்றதா?


வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றதா?


தேர்தலில் நடப்பது ? 


வேட்பாளர்கள் பணம் கொடுத்து தொகுதியை பெறுகின்றனர் 
கட்சிகள் வீறுகொண்டு பிரச்சாரம் செய்வார்கள் 

தேர்தல் ஆணையம் தீர்ப்பு விதிமுறைகள் விதிக்கும் 
அதற்கு மதிப்பு கொடுக்காமல் கட்சிகள் வேலை செய்யும் 

மக்களைப் பற்றி  கட்சிகள் கவலை கொள்கிறார்களா?
மக்கள் தான் கட்சிகளைப் பற்றி விமர்சிகிறார்கள்!

மக்களுக்கு சேவை செய்யவா கட்சிகள் இருக்கின்றது ?
பின் ஏன் விலைவாசிகள் வானத்தைத் தொடுகின்றது?

விவசாயிகள் ஏன் தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள்? 
ஏழைகளின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கின்றது?


லஞ்சம் ஊழல் ஏன் தலை விரித்து ஆடுகின்றது ?
பிடிபட்டாலும் சிறை சென்று வெளியில் வந்துவிடுகிறார்கள் !  

பணத்திற்காகத் கட்சிகள் நடத்துகிறார்கலா ?
சுயநலத்திற்குத் தானே கட்சிகள் ஆட்சி செய்கின்றன !

பரப்பரப்பாக செய்திகளைக் கொடுத்து  காசாக்குகிறார்கள் !
கூட்டணிக்காக பேரம் நடத்துகிறார்கள்  

அள்ளி வீசும் வாக்குறுதிகள் வாரிக்கொடுக்கும் இலவசங்கள் 
பணத்தால் தங்கள் சின்னத்தில் குத்தும் ஓட்டுகள் 

கட்சி வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தால் கவலை படுவதில்லை!

மீண்டும் தேர்தல் களத்தில் புதிய கூட்டணிகளுடன் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!


கட்சி தொண்டர்கள் நன்றாக உழைத்தாலும் 
கட்சித் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!

மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக ஆக்கிவிட்டார்கள்  
மக்களின் குறைகளுக்கு நிரந்தரமான தீர்வு கொடுக்கிறார்களா?   

வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அலசி ஆராய்கின்றார்களா?

இப்போது சொல்லுங்கள் 'தேர்தல்' ஒரு விளையாட்டா?
ஆமாவா? இல்லையா?என்று !


**********************************************************************************

நன்றி...

வணக்கம்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Saturday 25 January 2014

இதுவும் சாணக்கிய தந்திரம் - சிறுகதை

இதுவும் சாணக்கிய தந்திரம் -
 சிறுகதை 
மதுரை கங்காதரன் 

அன்றைய தினம் 'உமா எக்ஸ்போர்ட்ஸ் & இம்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காரணம், புதிதாக வர இருக்கும் அதிகாரி சோமசுந்தரம் ! மிகவும் அனுபவமிக்க எந்த ஒரு பிரச்சனையும் எளிதாகவும் அதேவேளையில் இருவருக்கும் நஷ்டமில்லாமலும் , சமாதானமாகவும் தீர்ப்பதில் வல்லவர். சுயநலமில்லாமல் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்.  

'இதற்கு முன் அவர் எங்கு பணியாற்றினார்? எந்த மாதிரியான குணமுள்ளவர்' எனபதைப் பற்றி அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நிறையவே தெரிந்து வைத்துக்கொண்டிருந்தனர். அனைவர் மனதிலும் 'அப்பாடா! எங்களுக்கெல்லாம் விமோட்சணம் கிடைத்துவிட்டது. வருகின்றவர் மிகவும் அன்பானவர். இரக்க குணம் கொண்டவர். தொழிலாளர்களின் குறைகளை தினமும் கேட்டு , நிர்வாகத்திடம்  சொல்லி அதை சாமர்த்தியமாக நிவர்த்தி செய்யும் திறமை படைத்தவர். கூட்டுமுயற்சியின் பலனாக உற்பத்தியை பெருக்கி அந்த லாபத்தின் ஒருபகுதியை தொழிலாளிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர். தொழிலாளிகளுக்கு வேண்டிய வசதிகளையும், சலுகைகளையும் வாங்கித் தருவதில் கை தேர்ந்தவர். அவரால்  கட்டாயம் நிறுவனம் வளரும். அதில் வேலை செய்பவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்' என்று பலவாறு கனவும் கற்பனையும் ஒவ்வோர் தொழிலாளிகளிடம் இருந்தது. 

இப்போது இருக்கும் அதிகாரி கோதண்டம் இவருக்கு நேர்மாறானவர். எல்லாமே சுயநலம் தான். தொழிலாளிகளுக்கு இம்மியளவு நல்லது செய்யும் மனமில்லாதவர். வேலை மட்டும் பிழிந்து வாங்குவார். அவர்களுக்கு அதிக வேலைநேர சம்பளம், சாப்பாடு படி, போக்குவரத்து , தொழிலாளர்களின் குடும்பத்தைப் பற்றி அக்கறையில்லாதவர்! தொழிலாளர்கள் உழைப்பினால் கிடைக்கும் எல்லாப் பலனும் அவருக்கு மட்டும் தான். அதாவது சம்பளம், போனஸ் மற்றும் பதவி உயர்வு எல்லாமே இவருக்கு கிடைக்கும்படி செய்து கொள்வார்.

ஆகையால் சோமசுந்தரம் வரவினால்  'இன்றோடு நமது துன்பம் தொலைந்தது. வாழ்கையில் விடிவு காலம் பிறந்தது' என்று நம்பிக்கையோடு இருந்தனர். அவருக்குச் சம்பளம், அதிகாரம்  மற்றும் வசதிகள்  கிட்டத்தட்ட கோதண்டம் அதிகாரிக்குச் சமம். 

அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சோமசுந்தரம் எவ்வித பரபரப்பில்லாமல் அனைவரைப் போல் பணியில் சேர்ந்தவுடன் தனது வேலையில் மூழ்கினார். ஆனால் தொழிலாளிகள் நினைத்தது போல் அவர் ஏதும் புதிதாக செய்யவில்லை. மேலும்  அதிகாரி கோதண்டத்தின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி வந்தார்.

இப்போது எல்லோரின் மனதில் ' என்னடா , நாம ஒண்ணு நினைச்சோம். அவரு நல்லவரு, வல்லவருன்னு. ஆனா இவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்' என்று சிலர் சலித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் ' பணமும், அதிகாரமும் கொடுத்து காலம் அவரை சுயநலவாதியாக மாற்றிவிட்டது போலும் " என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டனர். மற்றவர்கள் 'நாம கொடுத்து வைத்தது  அவ்வளவு தான்' என்று அங்கலாய்த்துக்கொண்டனர்.

அதிகாரி கோதண்டமும், சோமசுந்தரம் தன்னுடன் சேர்ந்து தனக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது அவருக்கு பலம் என்பதோடு தன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு  இருக்கிறார் என்பது அவருக்கு ஆறுதலைத் தந்தது.

வழக்கம் போல் ஒரே மாதிரியான உற்பத்தி , வழக்கமான அலுவலக வேலைகள் நடந்து வந்தமையால்  நிர்வாகம் சோமசுந்தரத்தின் வரவினால் ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. நாள்கள் ஓடின.

எதிர்பாராத சூழ்நிலையில் அதிகாரி கோதண்டம் ஒரு மாதம் விடுப்பு எடுக்க நேர்ந்தது. நிர்வாக மேலிடம் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சோமசுந்தரத்தை அழைத்து " மிஸ்டர் சோமசுந்தரம்! பார் தி அன் எக்ஸ்பெக்ட் ரீசன் மிஸ்டர் கோதண்டம் இஸ் கோயின் டு டேக் ஒன் மந்த் லீவ் . அவரின் வேலைகளை நீங்கள் தான் கவனிக்கவேண்டும். வேலையில் எவ்வித இடையூறும் தொய்வும் வரக்கூடாது.  சோ யூ ஹவ் டு டேக் கேர் ஆப் ஹிஸ் ரெஸ்பான்சிபிலிடி" என்று சற்று கடுமையாக  உத்தரவு போட " எஸ் சார் , ஐ வில் டேக் கேர்  சார் ! " என்கிற அமைதியான பதில் தந்துவிட்டு தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்.

மறுநாள் சோமசுந்தரம் எப்போதும் போல இல்லாமல் மிகவும் வித்தியாசமாக அனைவரிடத்தில் நடந்து கொண்டார். அலுவலகத்தில் நுழைந்தவுடன் அன்றைய தினத்தில் நடக்க இருக்கும் வேலைகளைப் பற்றிய திட்டத்தினை அனைத்து துறை பொறுப்பாளர்களை அழைத்து பேசினார். அவ்வாறு பேசும்போது மிகவும் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவர்களது திறமைகளை பாராட்டினார். ஏதேனும் உதவி வேண்டுமானால் நான் செய்யாத் தயார். நான் உங்களின் ஒருவன். அல்லது பிரச்சனை ஏற்பட்டால் அது எனது பிரச்சனை என்று எண்ணி தீர்த்து வைக்கிறேன் என்று உறுதி தந்தார். அவ்வாறு பேச பேச அனைவருக்கும் புது தெம்பு ஏற்பட்டது. மேலும் தினமும் இவ்வாறு கூடுவோம். கூட்டு முயற்சியால் எதுவும் சாதிக்கலாம்" என்று அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்தார்.

அதோடு நிற்காமல் ஒவ்வொரு தொழிலாளியையும் இனிமையாக விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். காலையில் பலர் சாப்பிடாமல் வந்திருப்பதை கணக்கில் கொண்டு மறுநாள் முதல் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தார். போக்குவரத்திற்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்தார். மருத்துவம், கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். தொழிலாளிகளோடு தொழிலாளியாய் தானும் அவர்களின் உழைப்பில் பங்கு கொண்டார். அத்தகைய செயல்களைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மிதந்தனர். தாங்கள் காண்பது நனவா ? அல்லது கனவா? பலமுறை சரி பார்த்துக்கொண்டனர். சோமசுந்தரத்திற்கு இத்தகைய 'ஞான உதயம்' எதனால் பிறந்திற்று? இதுவரை எதனால் இல்லாமல் போயிற்று? என்கிற ஆராய்ச்சியில் விடை தெரியாமல் விழித்தனர். 

அவரின் இத்தகைய நடவடிக்கையினால் நாளுக்கு நாள் உற்பத்தி பெருகியதோடு அனைவரும் ஆர்வத்துடன் வேலை செய்தமையால் தரமும் அதிகமாகியது. தொழிலாளிகள் பலரும் அனாவசிய விடுப்பு எடுக்காமல் தினமும் வருகை தந்தமையால் நாளுக்கு நாள் திட்டமிட்டதற்கு மேலாக உற்பத்தியைக் கொடுத்தனர். அனைவரும் விருப்பத்துடன் சற்று அதிக நேரம் வேலை செய்தார்கள். அவற்றிக்கு சரியானபடி  கூடுதல் சம்பளமும், சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தார்.  இரண்டு மாத உற்பத்தியை ஒரே மாதத்தில் கொடுத்து சாதனை படைத்தனர்.


நிர்வாகம் அவரை தனியே அழைத்து பேசியது. " மிஸ்டர் சோமசுந்தரம், யூ ஹாவ் டன் அன் எக்ஸ்செல்லேன்ட் ஜாப். வி அப்ப்ரிசியாட் யுவர் பெர்பார்மன்ஸ். தரம், அதிவேக உற்பத்தி, சரியான நேரத்தில் டெலிவரி , நிறைந்த லாபம் கொடுத்த  உங்களுக்கு நிர்வாகம் அந்த லாபத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கின்றது. அது போல் மென்மேலும் சிறப்பாக பல சாதனைகளைப் படைக்க வேண்டுகிறோம். இந்தாருங்கள் உங்களுக்கான ஊக்கத் தொகை " என்று சில பணக்கட்டுகளை சோமசுந்தரத்திற்கு கொடுத்தார்கள்.

ஆனால் அதை கையால் வாங்கிக்கொள்ளாமல் "சாரி சார்! இதற்கு முன் யார் எப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த பணம் உழைப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணம். அது தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணம். அவர்களின் முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் அதற்குக் காரணம். இதை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்" என்று ஆணித்தரமான பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் சற்று மிரண்டது. இப்படியும் நேர்மையாக இருப்பார்களா? என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்காத நிர்வாகம் "உங்களின் தாராளமான குணத்தை நான் பாராட்டியே தீரவேண்டும். உங்கள் விருப்பப்படி அனைவருக்கும் லாபத்தின் அதிக பகுதியை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்படி செய்கிறோம்" என்று உறுதி கொடுத்த பின்னரே சோமசுந்தரம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இச்செய்தி காட்டுத்தீ போல் அனைவரின் காதுகளில் எட்டும்போது தேன் பாய்கின்றவாறு உணர்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி அன்றோடு கரைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனெனில் கோதண்டம் ஒரு மாத விடுமுறை முடித்துக் கொண்டு மறுநாள் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டால்  ' நம் நிலைமை பழைய குருடி , கதவைத் திறடி' போலாயிற்றே என்று நொந்து கொண்டார்கள். அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வருமா? என்று நப்பாசையுடன் அன்று வேலைகளை முடித்து வீட்டிற்குச் சென்றனர்.

மறுநாள்..

கோதண்டத்திற்கு பதிலாக சோமசுந்தரமே அலுவலகத்தில் நுழைந்தார். அது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது. ஏன் கோதண்டம் வரவில்லை? அனேகமாக கூடுதல் விடுப்பு கேட்டிருப்பார்' என்று நினைத்துக்கொண்டு அனைவரும் சந்தோசப்பட்டனர். 


சோமசுந்தரம் அனைவரின் முன்பு தோன்றினார். "தொழிலாள தோழர்களே ! சற்று முன் நிர்வாக எனக்கு ஒரு இ . மெயில் அனுப்பியிருந்தது. அதில் நம் அதிகாரி கோதண்டம் அவர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார். இனிமேல் என்னை அவரின் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் உங்களுக்கெல்லாம் என்னுடைய முந்தைய செயல்கள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேன் என்று? எல்லாமே சாணக்கியன் தந்திரம் தான். அவரின் தந்திரத்தை இக்காலத்தின் படி சற்று மாற்றி நடந்து கொண்டேன். வெற்றி பெற்றேன். எப்படி என்று சற்று விரிவாகச் சொல்கிறேன். நான் இங்கு வேலைக்குச் சேரும்போது எல்லோரையும் எனது கண்களைப் போல் காக்கவேண்டும் என்கிற உறுதியோடு இருந்தேன். ஆனால் நாம் நமக்கும் மேலே அதிகாரம், பதவி , பணம் படைத்தவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியாது. அதற்கு காலம் நேரம் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். என்னதான் நீதி, நேர்மை, உறுதி, நம்பிக்கை இருந்தாலும் காலம் தவறி எதிர்கொண்டால் நமக்கு தோல்வி உறுதி தான். ஆகவே புதிதாக வந்தவுடன் அதிகாரி கோதண்டம் அவர்களை பகைத்து என் நோக்கத்தை நிறைவேற்ற நினைத்தால் எனக்கு நிச்சயம் தோல்வி தான் கிடைத்திருக்கும். 

நானும் அந்த அதிகாரி கோதண்டம் அவருடன் சேர்ந்து உங்களுக்கு 'துரோகம்' செய்தது எனக்கு பெரிய கஷ்டத்தை தந்தது. ஆயினும் 'பொறுத்தார் பூமி ஆள்வார்'  என்கிற கூற்றின்படி பொறுத்தேன். ஒரு நாள் அதிகாரி கோதண்டத்தின் அதிகாரம் எனக்கு கட்டாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அப்படி அதிகாரம் கிடைத்த மறு நொடியிலிருந்து நான் நினைத்து சாதிக்க வேண்டும் என்கிற கங்கணம் கொண்டேன். அதுவரை என் குணம் மாற்றிக்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியமும் கொண்டடேன். நான் மனதளவில் அவ்வாறு மாறவில்லை. நேரம் கைகூடும் வரை உங்களை பகைத்துக் கொண்டு அவருடன் கூட்டு சேர்ந்து துரோகம் செய்தேன். அதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். 

அவர் விடுப்பிற்கு சென்றது எனக்கு சாதகாம ஆக்கிக்கொண்டேன். அந்த சமயத்தில் என்னால் இயன்றளவு உங்களுக்கும், நிறுவனத்திற்கும் நிறைய செய்யவேண்டும் என்று இரவும் பகலும் கஷ்டப்பட்டேன். அதற்கு மறுவார்த்தை கூறாமல் என்னுடன் சேர்ந்து உழைத்தபடியால் தான் இத்தகைய சாதனை நிகழ்ந்தது. நிர்வாகம் உங்கள் அனைவரையும் பாராட்டியது. இனி வரும் காலம் நம் கையில். நீதி, நேர்மை, சத்தியத்தோடு உழைப்போம். வெற்றி பெறுவோம். புது சரித்திரம் படைப்போம்" என்று இலட்சிய உரையாற்ற அனைவரும் 'நாளை நமது தான்' என்கிற நம்பிக்கையோடு பணியாற்றச் சென்றனர்.

முற்றும்...

********************************************************************************************

நன்றி..

வணக்கம்..

*********************************************************************************************                      
                             

      

மக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்? HOW PEOPLE ARE SEEN A USUAL PROBLEM ?

மக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்? 
HOW PEOPLE ARE SEEN A USUAL PROBLEM ?
விழிப்புணர்வு பகுதி 
மதுரை கங்காதரன் 

ஒரு சோதனை !
 
* ஒருவரிடத்தில் ஒரு பிரச்சனையை கொடுத்துப் பார்ப்போம். தெரியாத அல்லது பெரிய பிரச்சனை என்று கொடுக்காமல் நடைமுறையில் அவர் கையாளும் பொருளைக்கொண்டு சோதிக்க முடிவு செய்தோம். அதை அவர் எவ்வாறு பார்க்கிறார்கள்  என்பது  தெரிய ஆவலாக இருந்தது. எல்லோருக்கும்  பணத்தை பற்றிய அறிவும் விவரமும் நன்றாகத் தெரியும். ஆகவே அதைக்கொண்டு சோதிக்க முடிவு செய்தோம்.

அதற்காக ஒரு சாதாரண மனிதனிடத்தில் செல்லாத ஒரு 500 ரூபாய்  நோட்டை கொடுப்போம். அவர் அதை என்ன செய்கிறார்? எப்படி அதை கண்டு பிடிக்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று ஒருவரை நெருங்கினோம்.


ஓரளவு பழக்கமானவரிடத்தில் நானும் எனது நண்பர்கள் (பொது சேவை செய்பவர்கள்) அந்த சாதாரண ஆளிடம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து "இந்த ரூபாயில் ஏதேனும் தவறு இருகின்றதா ? அல்லது சரியா இருக்கின்றதா ?" என்று கேட்டேன். அவரோ அந்த நோட்டை நன்றாக திருப்பித்திருப்பிப் பார்த்தார். உடனே ஏதோ ஒன்றை பார்த்தவர் "இந்த நோட்டு செல்லாது" என்று நம்மிடம் கொடுத்தார். நமக்கோ ஒரே ஆச்சரியம் "பரவாயில்லையே ! சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே! சரி என்ன தவறு இருக்கின்றது" என்பதை கூறுமாறு கேட்டோம். அவர் கூறிதை கேட்ட பிறகு எங்கள் அனைவரின் தலைகள் வேகமாக சுற்றுவதாக உணர்ந்தோம்.

நீங்களே ! கேளுங்கள் . அவர் ஏதோ ஒரு சிறு இடத்தைக் காட்டி "இங்கு 'மை' அதிகமாக இருக்கின்றது. அதை வைத்து தான் சொன்னேன்" என்றார்.

"ரொம்ப சரி தான்" என்று நாங்கள் நொந்து கொண்டோம்.


உங்களுக்காக நாங்கள் சொல்கிறோம். அந்த ரூபாயில் இரண்டு பக்கமும் நமது 'காந்திஜி' யின் படம் உள்ளது. அதை கவனிக்காமல் ஏதோ நுணுக்கமாக பார்கிறேன் பேர்வழி' என்று நினைத்து பெரிதாக உள்ள தவறை காணாமல் விட்டுவிட்டது நமக்கு பல செய்திகளை உணர்த்தியது. அதாவது மக்கள் 

 1. பெரிதாக ஊழல் செய்பவர்கள் , லஞ்சம் வாங்குபவர்களைப் பற்றி கவலை படமாட்டார்கள். குறைவான ரூபாய் வாங்குபவர்களை ஏசுவார்கள்.                   
 
2. பெரிதாக தவறு செய்பவர்களைப் பற்றி கவலை படமாட்டார்கள். சிறிய தவறு செய்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்குவார்கள்.

3. தேர்தலின் போது ஒரு நாள் கொடுக்கும் விருந்திற்காக ஐந்து ஆண்டுகள் பட்டினியாக கிடப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கால் துட்டுக்கு ஆசைப்பட்டு முக்கால் துட்டை இழப்பது தெரியாமல் வாழ்கிறர்கள். அவர்களால் தான் அரசியல்வாதிகளின் வாழ்க்கை பொன்னாக மலர்ந்து வருகின்றது.

வாழ்க மக்கள் !
வளர்க ஜனநாயகம் !

செழித்தோங்குக அரசியவாதிகள் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&