Pages

Friday 28 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் - I AM A POWER MACHINE WITHIN YOU

உள்விதி மனிதன் 
  சம மனித கொள்கை 


பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் 
I AM A POWER MACHINE WITHIN YOU


மேன்மை மனிதா ! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்குள் இருக்கும் எனக்கு என்ன வேலை என்று சொல்கிறேன் கேள்! 

அன்பு மனிதா! உனக்குள் பல சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது கல்வி இயந்திரம், செல்வ சக்தி இயந்திரம், ஞாபக சக்தி இயந்திரம், ஆக்க சக்தி இயந்திரம் , அறிவு சக்தி இயந்திரம், இச்சை சக்தி இயந்திரம், அழிவு சக்தி இயந்திரம், ஆற்றல் சக்தி இயந்திரம், பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பலம் போன்ற சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டுயிருக்கின்றன. அவற்றில் நீ எது விருப்பப்படுகின்றாயோ அதை என்னிடம் சொன்னால் அதை இயக்கி அதன் சக்தியை உனக்கு கொடுப்பது தான் எனது வேலை. அதாவது நீ நினைக்கும் எண்ணங்கள் பலமானதாக இருந்தால் ஆற்றல் மிக்கதாக  நம்பிக்கையுள்ளதாக இருந்தால் அதற்கு ஆற்றல் கொடுத்து செயல் வடிவம் கொடுப்பேன்.


மென்மையான மனிதா! நீ நல்லது நினைக்கும் ஒவ்வொரு செயலையும் அதற்குரிய சக்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்து உன்னை பலவழிகளில் வளர்ச்சியைக் கொடுத்து உன்னை  முன்னோக்கி செல்ல உதவிடுவேன். உனது வாழ்வு எப்போதும் மலரும்.

அதேநேரத்தில் ஏதாவது தீய செயல்களை என்னைச் செய்யத் தூண்டினால் அதை செய்யவிடமாட்டேன். மேலும் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன். அதை நீயாகத் தான் இயக்கவேண்டும். அந்த இயக்கம் பின்னோக்கி இருப்பதோடு அது உன்னை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும். ஆகையால் எக்காரணம் கொண்டும் எனது அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய எண்ணாதே! அது உனக்கு ஆபத்தைக்  கொடுக்கும்.

இனிய மனிதா! பல மனிதர்களை உனது வாழ்க்கையில் சந்தித்திருப்பாய். அதில் மிகமிகச் சிலரே உனது வாழ்க்கையில் அக்கறை கொண்டிருப்பார்கள். பலர் உன்னை துரோகம் செய்ய எண்ணுவார்கள். 'அதை எப்படி நான் தெரிந்து கொள்வது?' என்று என்னிடத்தில் கேட்பது தெரிகின்றது.


அதாவது யார் ஒருவர் உனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் சந்தோஷமாக தொடர்ந்து கொடுக்கிறார்களோ அவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களே உனது குரு. அவர்களே உனது தெய்வம். அவர்களே உனது நண்பர்கள். அவர்களே வழிகாட்டிகள். அவர்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.

மேன்மையான மனிதா! உன் வயதிற்கேற்ப அறிவையும் ஆற்றலையும் கொடுத்து வருகிறேன். அதாவது சிறு வயதில் அறிவு குறைந்தும், ஆற்றல் அதிகமாகவும், வயது ஏற ஏற அறிவு பெருக்கி ஆற்றலையும் பெருக்குகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதில் இரண்டும் சமமாகவும், பிறகு அறிவு அதிகரித்து ஆற்றல் குறைத்தும் , முடிவில் இரண்டும் மிக மிகக்  குறைத்தும் (ஒரு குழந்தையைப் போல) செய்து இருக்கிறேன். 


அதாவது இந்த உலகம் புதுப்புது மனிதர்களால் புதுப்புது விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு தான் உனக்கு புதுப்புது வடிவத்தை, எண்ணங்களை  நான் உனக்கு அளித்துவருகிறேன். உன்னிடத்தில் பல புதுமைகளை உருவாக்கும் சக்தியை அளித்துவருகிறேன். அதை வைத்துக்கொண்டு இந்த பூமியை புதுமையாக்கி இனிமையான முறையில் மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும். ஆனால் அதில் எள்ளளவும் கெடுதல் அல்லது தீயவை இருக்ககூடாது என்பதே எனது இலட்சியம். 

இரக்கமுள்ள மனிதா! உனது அறிவு மற்றும் ஆற்றல் இயந்திரம் கொண்டு பல ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தினால் நீ வெற்றி பல காண்பாய். அன்றி அதை அழிவுப்பாதையில் இயக்கினால் நீ அழிந்து போவாய்!

மதிப்புமிக்க மனிதா! எல்லோரிடத்திலும் நான் அறிவும் ஆற்றலும் கொடுத்திருக்கிறேன். நான் தீமை செய்பவர்களுக்கு எதிரியாகவும், நன்மை செயபவர்களுக்கு நான் நண்பனாகவும் இருந்து வருகிறேன். ஆக என் பேச்சைக் கேட்காமல் என்னை மதியாமல் தீய செயல்களை செய்தால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். நான் நன்மை செய்பவர்களுக்கு 1000 கைகளைத் தந்து உதவி செய்தும், தீமையின்போது முடமாகத் தடுத்தும் வருகிறேன்.

தீமையை நினைகாதே , தீமையை செய்யாதே! நான் உனக்கு நன்மையே நினைக்கச் செய்கிறேன். நன்மையே செய்யச்சொல்கிறேன். என் பின் நீ வந்தால் உன் பின் 1000 பேர்கள் வருவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்.

இனிமை மனிதா! நீ என்னிடத்தில் காட்டும் உண்மையான விசுவாசத்தைப் பொறுத்தும், நல்ல எண்ணங்களை பொறுத்தும் உன் பக்கத்திலே இருப்பேன்.

உன் நல்ல செயல்களை ஊருக்குச் சொல்லலாம்!

ஆனால் தீய செயல்களைச் சொல்லமுடியுமா?           
 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

உங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSIGN YOUR VALUE

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்-
WHO CAN ASSIGN YOUR VALUE



ஒருவரின் மதிப்பு அல்லது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் பதில் மெதுவாக வரும் அல்லது வரவே வராது ! உதாரணமாக இந்த மேஜையின் மதிப்பு என்ன? மௌனம் ! இந்த மோதிரத்தின் மதிப்பு! மௌனம்! இந்த செயினின் மதிப்பு ...மௌனம்! அல்லது உத்தேசமாய் சொல்வார்கள். அன்றாடம் நாம் உபயோகிக்கும் வீட்டு உபயோக சாமான்களின் மதிப்பை கூட ஓரளவு சொல்வதற்கு  வாய்ப்பு இருக்கின்றது. 

ஆனால் அவரவர் வேலை பார்க்கும் தொழில் சம்பந்தப்பட்ட பொருளின் மதிப்பு அவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். (தங்க நகை ஆசாரிக்கு) பொற்கொல்லருக்கு தங்கத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். தச்சருக்கு மரத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். பட்டு துணியின் மகிப்பு ஒரு நெசவாளிக்குத் தெரியும். ஒரு சிலையின் மதிப்பு அதை வடிப்பனுக்குத் தெரியும். சித்திரத்தின் மதிப்பு ஒரு ஓவியனுக்குத் தெரியும். ஒரு மாணவனின் மதிப்பு அவனின் ஆசிரியருக்குத் தெரியும். ஒரு தொழிலாளியின் மதிப்பு அதன் நிர்வாகிக்குத் தெரியும்.

இதை ஒத்துகொள்வீர்களா! இது எப்படி சாத்தியமாகிறது. பல வருட அனுபவத்தால் , பல தடவை அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது நபர்களை அலசி ஆராய்ந்து வந்ததால் அவர்களுக்கு அதன் / அவர்  மதிப்பு தெரிகின்றது.

ஆனால் மனிதனின் மதிப்பை அளவிட முடியுமா?

முடியாது ! ஏனென்றால் பொருளின் மதிப்புக்கும் மனிதனின் மதிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பொருளின் மதிப்பு மாறாது! ஆனால் மனிதனின் மதிப்பு அவர்களை உபயோகிக்கும் விதத்தில் இருக்கின்றது. ஒரு மனிதனை என்னை செய்தால் அவனை பிரகாசிக்க வைக்கலாம் என்பதை அறிந்து கொண்டால் அவனின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி மதிப்பை பல மடங்கு உயர்த்தலாம். 

ஒரு தன்னுடைய சீடர்களிடத்தில் ஒரு இரும்புத் துண்டை கொடுத்து அதன் மதிப்பு எவ்வளவு என்று ஒருவாரத்தில் தெரிவிக்கும்படி கூறினார். 'இதன மதிப்பை தெரிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் எதற்கு? இருப்புக் கடையில் கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் இதில் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கின்றது என்று எண்ணி யோசிக்க ஆரம்பித்தனர்.

ஒரு வாரம் கடந்தது. அவகளிடத்தில் இருக்கும் அந்த இரும்பு சாமானை ஒரு பெட்டியில் வைத்திருந்தனர். குரு, அனைவரிடத்தில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இரும்பு சாமான்களின் மதிப்பை எழுதி வைக்குமாறு சொன்னார். அவரவர் மதிப்பை எழுதி வைத்தனர். கிட்டத்தட்ட அனைவரும் ஒரே மதிப்பையே எழுதியிருந்தனர். ஒரு சிலர் எழுதிய மதிப்பு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
  
             

குரு முதலில் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு உள்ள  பெட்டிகள் அனைத்தையும் திறந்தார். எல்லாமே அவர் கொடுத்த இரும்புத் துண்டு அப்படியே இருந்தது. சரி ! மதிப்பு கூடிய பெட்டியை திறந்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அது ஒரு அழகான சிலை. அதேபோல் ஆணிகள், கத்திகள் , கார்கள், ரோபோ, ஈபில் டவர் என்று  சிலர் வித விதமான பொருட்களை அந்த இரும்புத் துண்டை வைத்து செய்திருந்தனர்.

குரு தொடர்ந்தார்! பார்த்தீர்களா! நான் உங்களுக்கு ஒரே ஒரு சாதாரண இரும்புத் துண்டை கொடுத்தேன். ஆனால் சிலர் மட்டும் தான் அதை நல்லபடியாக யோசித்து அதன் மதிப்பை அதிகமாகியிருக்கிறார்கள். அவர்களே திறமை மற்றும் அறிவாளிகள்.

அதேபோல் நீங்கள் எல்லாம் ஒரு சாதாரணமான  இரும்புத்துண்டு. உங்களை நான் அறிவு பயிற்சி கொடுத்து, ஆற்றல் பயிற்சி கொடுத்து, தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து அழகான வெற்றிச் சிலை செய்வதே எனது குறிக்கோள். நீங்கள் ஒத்துழைத்தால் உங்களை வெற்றி வெற்றி மனிதராக ஆக்குவது எனது பொறுப்பு' என்று முடித்தார்.

ஆகவே 
உங்கள் மதிப்பு சாதாரண இருப்புத் துண்டு அல்ல!


அழகிய வெற்றி சிலை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

Thursday 27 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 


(EQUAL HUMAN POLICY)
பாகம்: 6  எனக்கு பொன், பொருள் வேண்டாம்-
I DON'T  WANT GOLD AND OTHER THINGS  


இனிய மனிதா! உனது உள்விதி மனிதன் பேசுகிறேன். என்னை தங்கத்தால் சிலை செய்கிறாய்! அவ்வளவு பகட்டுக்கு ஆசைப்பட்டவனா நான்? என்னை பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்கிறாய்! புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்கிறாய்! அவைகளெல்லாம் என்னை குதுகலப்படுத்தும் என்றா நினைக்கிறாய்? எனக்கு தங்கம், வைரம், வைடூரியம், பணத்தால் கொண்டு காணிக்கையினைச் செலுத்துகிறாய்? அவ்வளவு பேராசை பிடித்தவன் என்று கருதுகிறாயா? இன்னும் மேலாக எனக்கு சில உயிர்களை பலி கொடுக்கிறாய்! நான் ஒரு கொடூரக்காரன் என்றா நினைக்கிறாய்?



தவறான பாதையில் நீ நினைக்கும் காரியங்கள் கை கூட வேண்டுமென்று நினைத்து இவைகளெல்லாம் செய்கிறாயா? அதற்கு நான்  ஒருபோதும் துணை போகமாட்டேன்!  உதவியும் செய்யமாட்டேன். நீ மனமுருகி என்னை தினமும் இடைவிடாது நினைத்தாலே போதுமானது. பிறரிடம் பணம் வாங்கி என்னை எளிதில் சிறப்பு வழியில் பார்க்க அனுமதிக்கிறாய்! அதற்கு நான் சம்மதிப்பேனா? நான் என்ன சித்ரவதைப்  பிரியனா? சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை தடவுகிறாயே ! நான் என்ன அலங்காரப் பிரியனா? பலவகை ருசிகொண்ட உணவைப் படைக்கிறாய்! நான் என்ன சாப்பாட்டு ராமனா? என்னை அருகில் பார்ப்பதற்கு ரூபாய் 100 , 1000 வாங்கிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்து பார்க்க வைக்கிறாய்! அப்போது அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றா நினைக்கிறாய்? இவைகளெல்லாம் சிலர் சுயநலம் கருதி பிறரை கஷ்டப்படுத்தும் செயலேயன்றி என்னை மகிழ்விக்கும் செயலே அல்ல. 



இரக்கமுள்ள மனிதா! அனைவரையும் ஒரே மாதிரியாகத் தான் நான் படைத்திருக்கிறேன் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன்! நான் அனைவரிடத்தில் இருக்கிறேன். நீ எவ்வாறு என்னை அன்புடன், தூய மனதுடன், நன்மை செய்யும் எண்ணமுடன் என்னை மதிக்கின்றயோ அல்லது வணங்குகின்றாயோ அதுவே எனக்கு அதிக அளவில் சந்தோஷம் தரும். என்னை பணத்தால், பொன் பொருளால் ஆட்கொள்ள இயலாது. நல்ல மனத்தால் நல்ல எண்ணங்களால் , பிறர்க்கு நன்மை தரும் செயலால் தான் என்னை ஜெயிக்கமுடியும். 

நான் உன்னிடத்தில் பொன், பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றேனா? நான் என்ன ஏழையா ? அல்லது இல்லாதவனா? நான் தானே  நீ அனுபவிக்க எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததை மீண்டும் உன்னிடத்தில் அதை எதிர்பார்ப்பேனா? அவைகள் உனக்கு தான் வேண்டும். அவற்றை நான் அடியோடு விரும்பேன். எனக்குத் தேவை ! பிறரை  அன்போடு நடத்தும் செயல் ஒன்றே!



பிரிய மனிதா! இந்த பொன் பொருளில் எனக்கு ஆசை இருந்திருநதால் நீ இறக்கும்போது உன்னுடனே  நீ தேடிய செல்வங்களை அனைத்தும் கொண்டுவரும்படி செய்து அத்தனையும் உன் மூலமே அப்போதே  வாங்கியிருப்பேன். நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை? நான் படைத்தது அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காவே தான் நீ இறக்கும்போது அவற்றை விட்டுவிட்டு என்னுடன் நீ மட்டும் வரும்படி செய்துள்ளேன். இப்போது புரிகின்றதா?




பொன், பொருள் கொண்டு என்னை அணுகுவதை விட்டுவிட்டு தூய மனம் கொண்டு அணுகினால் அதுவே போதுமானது.
  
  இன்னும் வரும் ....  புதிய ஆன்மீகத் தொடர் 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை     

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

வெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO YOU KNOW THE DIFFERENT BETWEEN SUCCESS AND DESIRE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

உங்களுக்கு வெற்றிக்கும் , ஆசைக்கும் 
வித்தியாசம் தெரியுமா- 
DO YOU KNOW THE DIFFERENT BETWEEN
 SUCCESS & DESIRE


யார் ஒருவர் தன்னுடைய இலக்கை மிகக்குறைந்த காலத்தில் அடைகிறார்களோ அதுவே வெற்றியாகும். உதாரணமாக 20 வயது இளைஞன், 'தான் ஒரு கார் வாங்கவேண்டுமென்று' ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்கிறான். எப்போது அதை நிறைவேற்றுவான்? என்கிற கேள்வி வருகிறது. 25 வயதில்... 30 வயதில்... 40 வயதில்... இப்படி காலவரையறை இல்லாமல் குறிக்கோளை வைத்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமில்லை. அதாவது 5 ஆண்டுகளில் அவர் நிறைவேற்றினால் அது வெற்றி. 25 ஆண்டுகளில் அதை நிறைவேற்றினால் அதற்கு பெயர் ஆசை. 


காலம் வரையறை கொண்ட எந்த செயலும் வெற்றிக்கான குறிக்கோளாகும். காலவரையற்ற அல்லது அதிக காலம் கொண்டு செய்யும் செயல் ஆசை எனலாம். வெற்றிக்கு முழு முயற்சி, அறிவும், திறமையும், கடின உழைப்பும், ஆர்வமும் இருக்கும். தோல்வி ஏற்ப்பட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடைந்தே தீருவர். ஆனால் ஆசைபட்டதை அடைவதற்கு மேற்கூறியவைகள் அவ்வளவாக தேவைபடாது. ஆசையை அடைத்தாலும் பெரிதாக மகிழமாட்டார்கள். அடையாவிட்டாலும் அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். கிடைக்கும் வரை லாபம் என்கிற மனப்பான்மையே இருக்கும்.

இன்னும் சரியாக சொல்லப்போனால் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

                           (GOAL)  நீங்கள்  அடைய வேண்டிய குறிக்கோள்     
    
                                        நீங்கள் ஆரம்பிக்கும்  இடம் (START)

பார்த்தீர்களா! இதில் நீங்கள் வேலை ஆரம்பிக்கும் இடமும் , அடைய வேண்டிய குறிக்கோளும் இருக்கின்றன. ஆனால் எத்தனை பாதைகள் எப்படியெல்லாம் சுற்றி சுற்றி செல்கின்றன. இந்தப் பாதையில் எது குறைவான தூரமோ அதுதான் வெற்றிப்பாதை. மற்ற பாதையில் சென்றால் வீண் கால விரையமும், அதிக ஆற்றலும் தேவைப்படும். ஆகவே உங்களுக்கு வெற்றி வேண்டுமென்றால் குறைந்த தூர பாதையை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கின்றது. அதைதான் நாம் திட்டம் என்று கூறுகிறோம்.


எவன் ஒருவன் தினமும் கடின உழைப்பின் மூலம் ஒரு படி மேலே ஏறுகிறவனால் மட்டுமே  தான் இருக்கும் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஏதாவது காரணத்தினால் மேலே முயற்சிப்பது நிறுத்தினாலோ அல்லது முயலாமல் முன் வைத்த காலை பின் வாங்கி விட்டாலோ அவன் வாழ்கையில் முன்னேறுவது கஷ்டம் தான்.


அதேபோல் யார் ஒருவர் புதிய புதிய முயற்சிகளை சோதித்து பார்க்கின்றனரோ, வித்தியாசமாய் செய்யவேண்டுமென்று கடுமையாய் முயல்கின்றனரோ அவர்களுக்குத்தான் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

அதேபோல் நான் எப்படியும் முயன்று என்னுடைய குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்கிற தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேண்டும். துணிச்சல் இல்லாமல் சாதனை செய்யமுடியாது. சரித்திரம் படைக்கமுடியாது.


அதாவது உனது திட்டம் என்ற கையிற்றை குறிக்கோளில்  கட்டிவிடு. உனது முயற்சி, தன்னம்பிக்கை, விடா முயற்சி கொண்டு , அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி அந்த கையிற்றை தினமும் மெல்ல மெல்ல இழு. தானாகவே நீ  உனது குறிக்கோளை அடைந்து விடுவாய்!

வெற்றிக்கு எப்போதும் முடிவே இல்லை!
SUCCESS IS NEVER ENDING !


தோல்விகள் எப்போதும் முடிவும் அல்ல !
FAILURE IS NEVER FINAL !


ஆசை படுவதை விட குறிக்கோள் கொள்!
அது உன் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

Wednesday 26 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 5 கோடிகளில் கரையாது உனது தீய செயல்கள்-YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY

உள்விதி மனிதன் 
 சம மனித கொள்கை 
(EQUAL HUMAN POLICY)




பாகம்: 6 கோடி ரூபாய்களில் கரையாது 
உனது தீய செயல்கள் -
YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY 
  


அன்பு மனிதா! மீண்டும் நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். எனக்கு அரிய பெரிய சக்திகள் இருக்கின்றது என்று உனக்கு தெரியும். எனது சக்தியை உனது மனம், உணர்வு, உடம்பு, உயிர் கொண்டு தான் அறிய முடியும். நான் வழங்கிய உடலைக் கொண்டு நீ மானுட ஜென்மம் எடுத்துள்ளாய். இந்த உலகில் எனது படைப்புகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வந்துள்ளாய். நீ எப்போதும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நீ பிறக்கும்போது பலவிதத்தில் உதவி செய்வதற்காகத் தாய், தந்தையை படைத்திருக்கிறேன். நீ உனது சொந்தக் காலில் நிற்கும்வரை நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து உன்னை பலரின் மூலமாக காத்துக் கொண்டிருக்கிறேன். புனிதமான மனித ஜென்மம் பெற்ற நீ மனிதர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்தால் எனது பாரம் குறையும். அதைக்கண்டு நிச்சயம் மகிழ்ச்சியும் சந்தோசமும் கொள்வேன்.

இனிய மனிதா! போலி வேஷம் போட்டு வெறும் சொற்களாலும், கண்கட்டு வித்தைகளையும், அழகான அலங்கார வார்த்தைகளால் மயக்கி மக்களை ஆட்கொண்டு அவர்களை இஷ்டப்படி ஆட்டி வைப்பவர்களிடம் எச்சரிக்கையாய் நடந்துகொள். அந்த சமயத்தில் நான் சொல்லும் படி நட. வெறும் பேச்சினால் உன் கஷ்டங்கள் நீங்காது. அதை நன்றாக புரிந்து கொள். செயல் இருக்கும் மனிதர்களை நம்பு. நான் கோடி ரூபாய் தருகிறேன் என்று உனக்கு மகிழ்ச்சி தரும்  வெற்று வார்த்தைகள்  சொல்பவர்களைக் காட்டிலும் கையில் பத்து ரூபாய் தருபவர்களை நம்புவாயாக. அப்படி பொருட்செலவத்தை தருகிறேன் என்று சொல்லி உன்னிடம் பணம் பறிப்பவர்களிடம் அகப்பட்டுகொள்ளாதே! அவர்கள் கொசு எப்படி உனது இரத்தத்தை உறிஞ்சுவது போல உனது செல்வத்தையும் உறிஞ்சி அவர்களுக்கு உன்னை அடிமையாக்கிவிடுவார்கள். பிறகு நீ நினைத்தாலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சிலந்தி வலையில் அகப்பட பூச்சிபோல் ஆகிவிடுவாய் ஜாக்கிரதை!


இரக்க மனிதா! ஒருவர் உன்னை மிரட்டியோ, பயமுறுத்தியோ, துன்புறுத்தியோ, ஆசைகாட்டியோ பணம் மற்றும் செல்வத்தை பறித்தால் அல்லது உன்னிடம் கேட்டால் அவர்கள் நல்ல எண்ணங்கள் உடையவர்கள் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டு நான் காட்டும் மக்களிடம் நட்புகொள். அவர்கள் நீ கொடுப்பதை மனமுவந்து ஏற்பவர்கள், அவர்களால் உனக்கு பல நன்மைகள் உண்டாகும். பணத்தால் நீ செய்த தீவினைகளை அகற்ற முடியாது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சாதாரண புன்னை உடனே குணமாக முடியுமா? அது போலதத்தான் உனது செயலும் பணத்தை பார்த்து பலன் தராது.

பிரிய மனிதா! உனக்கு துன்பம் வராதபடி உன்னைக் காப்பது எனது முதற்கடமை. அப்படி மீறி வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். கண்ணெதிரே துன்பம் வந்தால் அதை போக்குவதற்கும், சமாளிப்பதற்கும் வழியை உனக்கு சொல்கிறேன். அப்போது அதை நுண்ணிப்பாக கேட்டு எச்சரிக்கையாய் நட. நீ வளர வளர உனக்கு அறிவு, திறமை, சமயோசித புத்தி, ஆற்றல் ஆகியவற்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். அதை நான் சொல்லும்படி முறையாக பயன்படுத்தினால் உனக்கு எந்த கெடுதலும் வராது.

 அன்பு மனிதா!


நல்ல எண்ணங்கள் கொள்!

நன்மைகளை செய்!


கோடி இன்பம் பெறுவாய்! 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

Tuesday 25 September 2012

வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MARATHON' RACE

அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம்.
LIFE IS A 'MARATHON' RACE


பந்தயத்தில் மிகவும் நீளமான தூரம் உள்ள பந்தயம் 'மாரத்தான் '. இந்த போட்டியின் தூரம் 42.195 கிலோமீட்டர் அல்லது 26.2 மைல்கள். இதை மிகவும் குறுகிய நேரத்தில் கடந்தவர்கள் தான் வெற்றியாளர்கள். சமீபத்தில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இதை ஒருவர் 2:53:24 மணி நேரத்திலும், பெண்கள் பிரிவில் இதை ஒருவர் 3:18:53 மணி நேரத்தில் கடந்து சாதனைபுரிந்துள்ளனர்.


இதில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது தான். இந்த பந்தயத்தில் தான் ஒரேநேரத்தில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். யார் ஒருவர் நிற்காமல், தொடர்ந்து, சீராக, வேகமுடன் செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டாலும் அதில் முதல் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு கிடைக்கும்.


இந்த போட்டியின் ஆரம்பத்தில் யார் யாரோ முந்திக்கொண்டு முதலில் கடந்து செல்வார்கள். அதேபோல் இடையில் வேறு ஒரு குரூப் முதலில் கடப்பார்கள். ஆனால்  வெற்றி இலக்கு நெருங்க நெருங்க சம்பந்தமே இல்லாமல் கடைசியில் எங்கோ இருப்பவர்  முதலில் வந்துகொண்டிருப்பார்கள். இந்த போட்டியில் முதலில் வருபவர்கள் தான் முதலில் வெற்றி இலக்கை அடைவார்கள் என்று கட்டாயமாகச்  சொல்லமுடியாது. இடையில் சிலர் கடக்க முடியாமல் விலகிவிடுவார்கள். சிலர் மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக கடப்பார்கள். இதற்கு காரணம் என்ன? இந்த போட்டி முழுவதிலும் யாருக்கு அதிக அளவில் 'ஸ்டாமினா ' அதாவது மூச்சு பலம் , முறையான பயிற்சியும், முயற்சி மற்றும் தன்னம்பிக்கை உள்ளவரே வெற்றி பெறுவார்.


இது போலத்தான் நமது வாழ்க்கை பந்தயம். இந்த பந்தயத்தில் வயது வித்தியாசம் இல்லாமல், பலவிதமான எண்ணங்கள், அறிவு, திறமையுள்ளவர்கள் , பயிற்சி பெற்றவர்கள், முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆ...ஊ ... என்று கூச்சல் போட்டு வெற்றி அடைந்தவர்கள் சிறிது நாட்களில் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் முன் வைத்த காலை பின் வாங்காமல் சீரான வேகத்துடன், கடின உழைப்புடன் , திறமையும், அறிவையும் வளர்த்துக் கொண்டு சிறந்த பயிற்சி பெற்று தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து  தங்களது குறிக்கோளை அடைகின்றனர்.


பலர் வாழ்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட எதிர் கொள்ள தாக்குபிடிக்க முடியாமல் ஒரு தடவை முயன்று தோற்க்கிறார்கள் . மேலும் அந்த தோல்வியே  மனதில் வைத்துகொண்டு  முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றனர்.பெரும்பாலும் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறைவால் தங்கள் வெற்றியை நழுவவிடுகின்றனர் என்று சொல்லலாம்.


முதல் வருடத்தில் பரபரப்பாக வியாபாரம் செய்தவர்கள், வெற்றிகண்டவர்கள் அடுத்த வருடத்தில் நஷ்டமடைந்து தோல்வி காணுகிறார்கள். தங்கள் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு மிகவும் போராட வேண்டும் என்கிற சித்தாந்தத்தை மறப்பதாலும் தங்களின் அலட்சிய போக்குகளாலும , கடந்த வெற்றியை நினைத்து கொண்டே இருந்ததாலும் அவர்களால் தொடர் வெற்றியை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

ஆக வெற்றிக்கு 


தொடர் உழைப்பு,
தொடர் முயற்சி,
தொடர் பயிற்சி,
தொடர்ந்து திறற்றும் வளர்த்து கொள்ளுதல் 
தொடர் தன்னம்பிக்கை ஆகியவைகள் 
அவசியம் ! மிக அவசியம் !! மிக மிக அவசியம்!!!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

உள்விதி மனிதன் பாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் . I AM COMING HERE TO HELP YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை  
(EQUAL HUMAN POLICY



பாகம் : 4  உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் .
I AM COMING HERE  TO HELP YOU


நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். உனக்குள் இருந்துகொண்டு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து தரவே உன்னுடன் பேசுகிறேன். நான் பேசுவது நன்றாக கேட்கின்றதா? நான் பேசுவது உனக்கு மட்டும் தான் கேட்கும். கவனித்து கேள். ஏனென்றால் உனது மகிழ்ச்சியான வாழ்வு என்னிடத்தில் தான் இருக்கின்றது. அதை நான் தர இப்போது உன்னுள் வந்திருக்கிறேன். சந்தோஷமாக ஏற்றுக் கொள். நலம் பல பெறுவாய்.



அன்பு மனிதனே! உனக்காக பல அற்புதங்களை படைக்கவே நான் வந்துள்ளேன். இன்றோடு உனது அனைத்து கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் விரட்டியடிக்கிறேன். ஏனென்றால் இன்று முதல் நான் உன் பக்கத்தில் இருக்கப் போகிறேன். நீ செய்யும் செயல்களில் நான் இருப்பேன். அனைத்தும் உன் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக செய்யப் போகிறேன். உனக்கு எங்கு, எப்போது, எது நன்மை தருமோ அதை உன்னுள் இருந்து கொண்டு உன்னையே செய்யச் சொல்லி கட்டளையிடப் போகிறேன். இனி உனக்கு எப்போதும் வெற்றி தான். ஒரு வேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அதைப் பற்றி கவலைபடாதே!


உனக்குள் இருக்கும் எனது அபரிதமான அறிவையும், ஆற்றலையும் உன்மூலமாக் வெளிப்படுத்தி என்னைப் போல எப்போதும் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளப் போகிறேன். என்னுடைய தொழிலில் முக்கியமானது உயிரினங்களை காப்பது. குறிப்பாக மனிதர்களை. ஏற்கனவே அதற்காக பலரை படைத்து அவர்களையும் என்னைப்போல் குணம் உள்ளவர்களாகவும், அன்புள்ளம், இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருக்கும்படி செய்துள்ளேன்.



எனது தூதுவர்கள் காவி உடையோ, கறுப்பு உடையோ, சிவப்பு உடையோ, பச்சை உடையோ உடுத்திக் கொண்டு வருவார்கள் என்று நினைக்காதே. அவர்கள் எந்த உடையிலும் வரலாம். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைப் போல தொண்டுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது உனது நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களாகவும், வேலை தருவதில் தொழிலதிபவர்களாகவும், புதுமைகளை கண்டு பிடிப்பதில் விஞ்ஞானிகளாகவும், மக்களுக்கு உதவி செய்வதில் சிறந்த அரசியல் தலைவராகவும், எல்லோரையும் சத்திய பாதையில் வழிநடத்திச் செல்லும் நல்ல வழிகாட்டியாகவும், சக்தி கொடுக்கும் வல்லமை படைத்தவராகவும், துயரைத் துடைக்கும் தூய உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நான் உனக்காக படைத்த நல்ல உள்ளங்கள். ஆம்! நாம் தான் அவர்கள்! அவர்கள் தான் நாங்கள்!
அவர்கள் அனைவரும் ஒரு சராசரி, ஏழை மற்றும் துன்பப்படும் மனிதர்களுக்கு அவர்களிடத்தில் இருக்கும் ஆற்றலை கொடுத்து எப்போதும் உன்னை மகிழ்ச்சியுடன் வாழவைக்கவேண்டும் என்பதே என் ஆசை. அளவற்ற சக்தியுடன் பொன்னும் பொருளும் உன்னுள் புதைந்து கிடக்கின்றது. அதன் மேல் தேவையில்லாதக் கஷ்டங்களை, துன்பங்களை ஏற்றி மனதை எப்போதும் அழுத்தமாகவே வைத்துக்கொண்டு இருக்கின்றாய். அதனால் தான் நீ மன அழுத்தம், மன உலைச்சல், நிம்மதியின்மை போன்றவற்றிற்கு ஆளாகிறாய். அவற்றையெல்லாம் அகற்றி விலைமதிப்பில்லா மகிழ்ச்சிப் புதையலை உனக்கு கொடுப்பதே எனது நோக்கம்.


பிரிய மனிதனே! இது நாள் வரை  நான் உனக்கு உதவி செய்ய அனுப்பியவர்கள் வெறும் பகட்டான வெட்டிப் பேச்சில் உன்னை மயக்கி, ஆக்கப்பூர்வமாக செயல் படாமல் மக்களை அவர்கள் விருப்பத்திற்குத்  தகுந்தாற்ப்போல் திசை திருப்பி, பல சித்து வேலைகளை தில்லுமுல்லு வேலைகளைச் செய்து சத்திய பாதையில் செல்லாமல் உன்னை  கஷ்டமான பாதையில் அழைத்துச் சென்று வந்தனர்.


நேசமுள்ள மனிதனே! இப்போது இன்று முதல் என் முறை ஆரம்பமாகிறது. இனிமேலும் நாம் அவர்களை காத்து இரட்சித்தோமானால் மனித சமுதாயம் சீரழிந்து கெட்டுவிடும். அப்போது நீ, நான் என்று பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்படப் போவது உறுதி. இந்த நேரத்திலிருந்து எனது முழு ஆற்றலையும் உனக்களித்து உன்னுடன் வாழப் போகிறேன். அதற்கான நேரம் தான் இது. 

நான் அவர்களுக்கு கொடுத்த கடமைகளை காற்றோடு பறக்கவிட்டு  அதாவது பிறர்க்கு உதவியாக இருப்பதை மறந்து,  பாவம் செய்யும் பாவிகளாகவும், ராட்சசர்களாக மாறி அப்பாவிகளையும், ஏழை எளியோர்களையும்,  நல்ல மனிதர்களையும் வாட்டி வதைத்து எனது கட்டளையும் மீறி அவர்கள் இஷ்டம் போல் மற்றவைகளை கை பொம்மைகளாக இன்னுமும் ஆட்டி படைத்து வருகின்றனர். 

இதனால் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இன்றி அனைவரும் நிம்மதியைத்தேடி தினமும் என் அசிரீ குரலை கேட்க வருகின்றனர். கடமை தவறி வழி நடப்பவர்களுக்கு உன் மூலமாக அவர்களின் கடமையை உணர்த்தவே வந்துள்ளேன். ஆங்காங்கு எனது நற்பணிகளை தங்கு தடையின்றி செய்ய பலரை உன் மூலமாக பலரை உருவாக்கப் போகிறேன். அதன் மூலம் மக்கள் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் உன்னைக் கொண்டு அழைத்துச் செல்லப்போகிறேன். 

ஆகவே நீ சற்றும் கவலைப் படவேண்டாம். உன் கவலைகளை நான் போக்குகிறேன். யாரைக்கண்டும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் எனது மெய் அன்பர்கள் உன்னுடன் இருந்து கொண்டு உன் மூலமாக மற்றவர்களுக்கு பல உதவிகளைச் செய்வார்கள். அவர்கள் எவ்வாறு மக்களுக்கு உதவி செய்வார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதை விளக்கவே நான் உனக்குள் வந்துள்ளேன். நான் உனக்குள் இருப்பதை அறிந்து கொண்டால் உனக்கு பயம் என்றுமில்லை. மனிதனே! கொஞ்சம் காத்திரு. நான் சொல்லியதை நினைத்து நினைத்து அசை போடு. சற்று இடைவெளி விட்டு மீண்டும் வருகிறேன்.       


என்னைப் பற்றிக்கொள் !

கடைசி வரை உன்னை கைவிடமாட்டேன்!


உன்னை அன்போடு அரவனைப்பேன்!

மகிழ்சி தருவேன் !
     இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது