Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (285)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- * யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? AN ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (161)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING UMASK research paper (in English) for Kanitamil 2024 (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD MOTHER TONGUE LANGUAGES - UMASK (4)
- How to create blog (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (27)
- பருத்தியில் வண்ணப் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Sunday, 25 January 2015
பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்
பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால்
தமிழ்சொல்லாகும் ! ஏன் சொன்னார் தொல்காப்பியர்!
மதுரை கங்காதரன்
'தமிழகம்' வந்தாரை மட்டும் வாழவைக்கவில்லை
தமிழன் விருந்தோம்பலை மட்டும் காக்கவில்லை
தமிழ் மொழி தனித்தமிழாய் மட்டும் இருக்கவில்லை
பிறசொற்கிளவியையும் தமிழ்சொல்லாய் இனிக்கச் செய்கிறது
பாலோடு சேர்ந்த நீரும் பாலாய்
மாறும்
பூவோடு சேர்ந்த நாரும் பூவின் மணம் பெறும்
கருவாடு வைத்த கூடையிலும் கருவாடு மணம் வரும்
தமிழ் எழுத்தோடு புணர்ந்த பிறசொற்கிளவியும் தமிழாய் இனிக்கும்.
'கிருஷ்ணன்' நாமமானது கிருட்டிணனாய் ஒலித்தது
'முஹம்மது' இறையானவர் முகம்மதாய் ஓதப்படுகிறார்
'ஜீஸ்ஸ்' தேவனானர் ஏசுவாய் அழைக்கப்படுகிறார்
'ரோஜா' பூவானது ரோசாப்பூவாய்
சூடப்படுகிறது
மாம்பழத்தில் ஒட்டு மாம்பழம் கசக்குமா?
உறவில் அந்நிய உறவு சோடையாகுமா?
மல்லிகையில் மாற்றான் தோட்ட மல்லிகை மணக்காமல் இருக்குமா?
பிறசொற்கிளவியால் தமிழ் சொல் பழுதாகிப்போகுமா?
தொல்காப்பியர் கால மாற்றத்தை அறிந்தவர் போலும்
எத்திசையிலிருந்திலும்
பிறசொற்கிளவி தமிழில் நுழையும்
தமிழ் எழுத்தோடு சேர்ந்து தமிழாய் ஒலித்தல் வேண்டும்
அன்றே சொன்னது போல் இனறு என்றும் தனித்தமிழை வளர்ப்போம்.
தனித்தமிழை பேசுவதிலும் அழகு!
எழுதுவதிலும் அழகு!
வளர்ப்பதிலும் அழகே!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
எங்கும் தமிழ்! எழுத்திலும் தமிழ்! - PUTHU KAVITHAI
எங்கும் தமிழ்! எழுத்திலும் தமிழ்!
மதுரை கங்காதரன்
பூவின் அழகு !
அதன் இதழ்களில்
வானத்தின் அழகு !நிலவு விண்மீன்களில்
மயிலின் அழகு! அதன் தோகைகளில்
தமிழின் அழகு !
அதன் எழுத்துகளில்.
பெற்ற தாய் இருக்க மாற்றான் தாயை நாடலாமா?
தேனிருக்க சர்க்கரை நீரை அருந்தலாமா?
குயிலிருக்க காக்கையின் கீதம் ரசிக்கலாமா?
தனித்தமிழிருக்க பிறமொழி கலப்பு இனிக்குமா?
பிறமொழி நுழைவால் தமிழ் பேச்சு மாறிப்போச்சு
தமிழ் மொழி பெருமை சவப்பெட்டியில் மூடியாச்சு
தனித்தமிழ் எழுத்துக்கள் தாளம் மாறிப்போச்சு
எங்கும் தமிழ்! மாறி எங்கே தமிழ்? நிலைமை வந்தாச்சு
தமிழ் எழுத்திற்கும் சொல்லுக்கும் வேலி போடு
பிறமொழி எழுத்திற்கும் கலப்பிற்கும் தடைபோடு
தமிழ் மொழிக்கும் எழுத்திற்கும் மதிப்பு கொடு
சிங்கார தமிழ் வளர்ச்சிக்குத் துனணயாய் இரு
பிறமொழி எழுத்திற்கும் கலப்பிற்கும் தடைபோடு
தமிழ் மொழிக்கும் எழுத்திற்கும் மதிப்பு கொடு
சிங்கார தமிழ் வளர்ச்சிக்குத் துனணயாய் இரு
விழித்திடு தமிழா! புதுமைகளை புகுத்திடு தமிழா புகுத்திடு!
கணினித் தமிழை வளர்த்திடு தமிழா வளர்த்திடு
அறிவியல் தமிழை தந்திடு தமிழா தந்திடு
எங்கும் தமிழ் !
எழுத்திடும் தமிழை பரப்பிடு தமிழா பரப்பிடு!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வெல்க தமிழ்!
*********************************************************************************************
*********************************************************************************************
Subscribe to:
Posts (Atom)