Pages

Tuesday 14 February 2023

29.1.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 7 ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்

 


மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது .




மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10.00 மணிக்கு கவியரங்கம் நடந்தது 




மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது. 

செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் "ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும் " என்ற தலைப்பில் கவிஞர்கள் முனைவர் இரா. வரதராசன்,  இரா .கல்யாண சுந்தரம், மகா .முருகுபாரதி குறளடியான், கு.பால் பேரின்பநாதன், இதயத்துல்லா, இராமபாண்டியன், முனியாண்டி, அழகையா, ஆ.தனசிங், கவிதாயினிகள் ச .லிங்கம்மாள், நா.அனுராதா, சாந்தி திருநாவுக்கரசு, மு.ரித்திகா ஸ்ரீ ஆகியோர் கவிதை படித்தனர்.

கவிஞர் மு .இராம பாண்டியன் எழுதிய " உலகின் முதல்மொழி தமிழே " என்ற கட்டுரை நூலும், கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய "பிறை நிலவுகள் " என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன. வருகை தந்த அனைவருக்கும் நூல்களின் ஆசிரியர்கள் நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள் . 

படங்கள் நன்றி இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் நன்றி.தினமலர் நாளிதழ்.29.1.2023

























ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!

-    கவிஞர் இரா. இரவி

உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்று
உரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று

எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்
உழவுத் தொழில் அழிந்தால் உலகம் இருக்காது

உயிர் வளர்க்கும் உணவு தரும் தொழில்
உயிர்கள் இன்றி உலகம் இருந்து என்ன பயன்?

தொழில்களில் எல்லாம் தலையாய தொழில் உழவு
தரணி முழுவதும் போற்றிப் புகழும் உழவு

தரணி செழிக்க உயிர்கள் வாழ உழவு
தன்னிகரில்லா மட்டற்ற உயர் தொழில் உழவு

ஒரு நாற்றால் வளர்வது ஒப்பற்ற பல மணிகள்
உழைத்தால் உயரலாம் உணர்த்துவது உழவு

விளைநிலங்களை எல்லாம் வீட்டடி மனைகள் விற்பனை
விளைச்சலுக்கு மூடு விழா நடத்துவது மூடத்தனம்

கரும்பு வயல் எல்லாம் கட்டடங்கள் முளைத்தன
கழனி எல்லாம் கற்சுவர்களாக உயர்கின்றன

நெல் விளைந்த நிலங்களில் நீண்ட நெடிய கட்டடங்கள்
நெல் இன்றி உணவின்றி வாடும் நிலை வருவது உறுதி

போற்றிட வேண்டிய உழவை மதிக்காத காரணத்தால்
பொன்மன உழவன் நொந்து நிலம் விற்கிறான்

அலைபேசியை உண்ண முடியாது உணருங்கள்
அலைபேசியை விட உண்ண உணவு அவசியமாகும்

நவீனம் என்ற பெயரில் நாகரீகம் என்ற பெயரில்
நல்ல நிலங்களை எல்லாம் அடுக்ககம் ஆக்குதல் முறையோ?

உயிர் வாழ உதவிடும் உணவு தரும் உழவை
உலகம் போற்றி கொண்டாடி மகிழ் வேண்டும்!

&&&&&&&&&&&&&&&

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

விதையில்லாமல் உழவில்லை 
உழவில்லாமல் உணவில்லை 
உணவில்லாமல் உயிரில்லை 
உயிரில்லாமல் உலகில்லை 

உழவே மண்ணைக் காக்கும்
மண்ணே பசுமையைக் காக்கும்
பசுமையே உயிரைக் காக்கும்
உயிர்களே உலகைக் காக்கும்

பசியைத் தீர்ப்பது உணவு
நோய்க்கு மருந்து உணவு
உடல் சக்திக்கு உணவு 
உலகைக் காப்பதும் உணவு  

உணவில்லா உடலோ சக்தியில்லா சவமாகும்
ஈடில்லா உழவே என்றென்றும் பலமாகும்
மாட்டுப் பொங்கலே தமிழருக்கு திருநாளாம் 
மட்டற்ற மகிழ்ச்சியே வாழ்வில் கொண்டாட்டமாம்.   

########################