Pages

Friday 16 December 2016

பாரதியார் பிறந்த தினம் - நாமமது தமிழர் கொண்ட நாமே...

நாமமது தமிழர் கொண்ட நாமே
நற்றமிழுள் வேற்றெழுத்தைக் கலத்தல் நன்றோ?
பாரதியார் பிறந்த தினம் - சிறப்புக் கவியரங்கம்
           இடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை.
                    புதுக்கவிதை
                மதுரை கங்காதரன்
                   எங்கள் பாரதி!

எட்டையபுரத்தில் பாரதியாய் பிறந்தவர்
எட்டாத உயரத்திற்குத் தமிழை வளர்த்தவர்
சொட்டும் தேன் கவிகளைத் தந்தவர்
சொற்ப ஆயுளில் மகாகவியாய் மறைந்தவர்.

        நாமமது தமிழர் கொண்ட நாமே
நற்றமிழுள் வேற்றெழுத்தைக் கலத்தல் நன்றோ?

அன்று பச்சைத் தமிழர்களாய்த் தமிழைக் காத்தார்கள்
இன்று பச்சோந்திகளாய் மாறி இருக்கிறார்கள்
நிறமாலையிலுள் கறுப்பு நிறம் புகமுடிகின்றதா?
நற்றமிழுள் வேற்றெழுத்து புகுந்தது எப்படி?

பகடையினால் பாஞ்சாலியின் மானம் போனது
பகட்டினால் தமிழின் மானம் போகின்றது
இலவசமாய் எழுத்துகள் கிடைத்தபதே ஆயினும்     
இலகுவாய் தமிழில் பிறஎழுத்துகளைக் கலக்கலாமா?

உயிர் காக்கும் கத்தியைக் கொண்டு
உயிர் கொலை செய்வது தகுமோ?
மொழி காக்கும் எழுத்துகளைக் கொண்டு
மொழியைக் கொலை செய்வது நன்றோ?

அனுமதி இலவசம் என்றால்
ஆடு மாடுகளை நுழைய விடலாமா?
அமைதி காக்கும் தனித்தமிழுக்குள்
அந்நிய எழுத்துகளை கலக்கவிடலாமா?

இன்று சில சொல்லில் கலந்த வேற்றெழுத்துகள்
நாளை பல சொல்லில் கலந்து தமிழை மாய்க்கும்
தமிழா, உனகுள்ள அடையாளம் தமிழ் மொழி
தமிழா, அதை இழந்தால் அனாதையாய் அலைவாய்.


                                                       

27.12.16
அன்று நடந்த நிகழ்ச்சியின் சில மின் படங்கள் 



 

 

 

 

 

 

 

 

 

 

 


நன்றி ..... வணக்கம் ...




No comments:

Post a Comment