மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் -3 கு.கி.கங்காதரன்
AI Comments
✨ இது உங்கள் முன் கூறிய ஆன்மீக–தத்துவ கருத்துகளுக்கு அறிவியல் ஆதாரமாகவும்,
✨ சந்தேகப்படுவோருக்கு நடைமுறை விளக்கமாகவும் செயல்படும்.
**********************************************************
இந்த உடலால் பின்னிப்பிணைந்திருக்கும் ஐம்புலன்கள், சில சந்தர்ப்பங்களில் உன்னில் இருக்கும் மனத்தை எவ்வகையிலும் அசைத்துப் பார்க்கும். ஆட்டம் காண்பிக்கும். மாயவித்தை செய்யும். அவ்வேளையில் நீ நினைக்கும் செயல் நடைபெறாமல், நினைக்காத செயல்கள் நடக்கும். அதற்கு மூக்காரணம் உன் மனம். ஏனென்றால் ஐம்புலன்களின் வழியாக உனக்குக் கிடைக்கும் வழிகள், நல்ல இடத்திற்கும் , தகாத இடத்திற்கும் அழைத்துச் செல்லும். அத்தருணத்தில் உன் ஆசை, ஆணவம், பொறாமை, மற்றும் கோபத்தைத் தவிர்தால் நன்மை கிடைக்கும். நல்லப் பலனைப் பெறுவாய். ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உன்
மனம் எப்போது நிதானமாக இருக்குமென்றால்,
உனது நாடித்துடிப்பு 72 முதல் 80 வரையில் இருக்கும்
போது. உனது மனம் அசாதாரணமாக இருந்தால்,
உனது நாடித்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்கும். அது 120 ஐத் தாண்டிச் செல்வதற்கான சாத்தியமும் உள்ளது. அந்நிலையில்
தக்கதொரு முதலுதவி செய்து கொள்ள வேண்டும்.
அதோடு ஏன் இப்படி நடந்தது என்று உன்
மனதைக் கேட்கக் கொள்ள வேண்டும். அதற்கு பதில் கிடைக்கும்.
நீ அறிந்தோ அறியாமலோ செய்த வினையே
அதற்கானக் காரணமாக இருக்கும். அதற்கானப் பரிகாரம் அல்லது அதனை உணர்ந்து கொண்டாலே போதும். மீண்டும்
அவ்வழிக்குச் செல்லுதல் ஆகாது. ஆக,
உடலில் கட்டுண்டு கிடக்கும் ஐம்புலன்களை
நல்ல விதத்தில் எடுத்துச் செல்ல, நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நல்லெண்ணம் கலந்த விழிப்புணர்வு
கட்டாயம் வேண்டும்.
அதேபோல், ஆன்மாவுக்கும் ஐம்புலன்களின் ஆதிக்கமும் , குணங்களும் இருக்கின்றது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். ஆம். மனதின் மேலடுக்கு மட்டுமே உடல் மூலம் தூண்டுதலுக்கு உட்படும். ஆனால், அதன் உள் மனம் அதாவது ஆழ்மனம் ஆன்மாவின் ஐம்புலன்கள் தூண்டுதலுக்கு உட்படும் என்பது உண்மையின் இரகசியம். இந்தத் தூண்டுதல் வெகு சிலருக்கே உண்டாகும். அதுவே முக்திக்குக் கொண்டு செல்லும். உனது உறக்கத்தின் போது இது நடக்கும். பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. அர்த்தமும் விளங்குவதில்லை. ஏதோ கனவு வருகிறது, போகிறது என்றே நினைப்பார்கள். ஒருசில கனவுகளைத் தவிர மற்ற கனவுகள் ஞாபகத்தில் வருவதில்லை. ஆனால், கனவுகளை விழிப்புணர்வுடன் நோக்கினால், ஆழ்மனதில் வேலை செய்யும் ஐம்புலன்களின் அற்புதத்தை அனுபவிக்கலாம். காட்சிகளாகப் பார்த்தல், பேச்சுகளை கேட்டல், தொடும் உணர்வு, ஆனந்தமான சூழ்நிலையை அனுபவித்தல், போன்றவையெல்லாம் ஆன்மாவில் இருக்கும் விஷேச ஐம்புலன்களினாலே நடக்கிறது. அதனைக் காணவே தியானமும் யோகமும் உதவுகிறது. அதுவே பிரம்மத்தை அடையும் வழியாகும்.
இறைவன் படைத்த இந்த உலகத்தை ஒரு 'நாடக மேடை' என்று சொல்கிறார்கள். அந்த அற்புதமான நாடக மேடையில், நமது தாய் தந்தை மூலமாக ஒரு வாழ்க்கைப் பாத்திரம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி உண்மையில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். என்ன ஒன்று! எவர்எவருக்கு நல்லப் பாத்திரம், அதாவது நல்ல எண்ணம் கொண்ட மனம், சுற்றிலும் அன்பான உறவுகள், நல்லப் பொருளாதாரம் அதாவது நல்ல சம்பளம் அல்லது நல்லத் தொழில் அல்லது பரம்பரைச் சொத்து இருந்தால் அவர்களுக்கு இயற்கையிலேயே இறைவனின் / பிரம்மத்தின் அருள் இருக்கின்றது எனக் கருதலாம். அதைக் காக்க என்றும் நல்ல சிந்தனையுடன் செயல்களைச் செய்து கொண்ட இருக்க வேண்டும். அந்த கௌரவம் அப்போது தான் நிரந்தரமாகத் தங்கும். அதில்லாமல் பேராசையால் ஏதாவது தகாத செயலில் ஈடுபட்டால் உங்கள் நாடகப் பாத்திரம் உயர்ந்த நிலையில் இருந்து மட்டமான நிலைக்குக் கொண்டு வந்து விடும். அதேபோல், இப்போது கீழ்நிலையில் அல்லது சுமாரான நிலையில் உள்ள நாடகப் பாத்திரம், நல்ல எண்ணம் மற்றும் செயலினால் உயர்ந்த நிலையை அடைவதும் சாத்தியமே. அதற்கான பல வாய்ப்புகளை நமது வாழ்வில் கிடைக்கும். உன் மனதின் குணங்களைப் பொறுத்து உன் பாத்திரம் மாறும் தன்மை உடையது. யாருக்கும் நிரந்தரமானப் பாத்திரம் கிடைக்காது.
அவரவர்கள் செய்யும் பாவப்புண்ணியச் செயலைப் பொறுத்து நாடகப் பாத்திரம் மாறும். அதுதான் இறைவன் / பிரம்மத்தின் நியதி. இதில் இரட்டை வேடம் போடுகிறவர்கள், ஒரு நாள் இல்லை ஒருநாள், அவர்களது வேடம் களையும் போது அவர்களது பரம்பரையே அழிந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால், பிறர் கண்களில் மண்ணில் தூவி நீ செய்யும் எந்த ஒரு செயலும், உன் 'மனம்' கவனிப்பதிலிருந்துத் தப்ப முடியாது. அப்படிச் செயல்களை அது பத்திரமாக மனதில் சேமித்து வைத்துக் கொள்ளும். காலம் வரும் போது அது தன் தண்டிக்கும் குணத்தைக் காட்டும்.
இந்த ஆன்மீக விசயத்தில் எழுதப்படாத சட்டங்கள் பல இருக்கின்றது. அதாவது உடல் தோற்றம் முதற்கொண்டு, அதாவது தாடி, நீண்ட முடி, காவி உடை, உத்திராட்சக் கொட்டை மாலை, எந்நேரமும் கடவுள் நாமத்தை உச்சரிப்பது, கடவுளின் / பிரம்மத்தின் மகிமையை சொற்பொழிவு ஆற்றுவது, உணவு, உடைக் கட்டுப்பாடு இன்னும் பல. இது போன்ற உருவங்களில் தான் ஆன்மீகவாதிகளை, மகான்களை, யோகிகளைக் காணலாம். அதுவே ஆன்மீக அடையாளமாகவும் மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இவையெல்லாம் பழங்கால பழக்க வழக்கங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அவையெல்லாம் அந்தக் காலத்திற்குப் பொருந்தும். ஆனால், இன்றைய கணினி நவநாகரீகத்தில் இம்மாதிரியாக வாழ்வது அசாத்தியமான ஒன்று. ஜெட் வேகத்தில் மாறும் கலாச்சாரமும், நடைமுறை மாற்றமும் இம்மாதிரியான தோற்றத்தை பராமரிப்பது படு சிரமமாகும். அப்படியென்றால் சாதாரண மனிதர்களுக்கு அப்பாக்கியம் கிடைக்காது என்கிற கேள்வி வருகிறதல்லவா?
உண்மையில் இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இப்படி சாமியார்கள் உருவத்தில் இருக்கும் ஆன்மீகவாதிகள் சிலரே என்றாலும், சாதாரண மனிதர்களின் உருவத்தில் பலர் லௌகீக வாழ்கையில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் மிகுதியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்களுக்குள்ள குடும்பக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு, உறவுகளை அன்புடன் பார்த்துக் கொண்டு, மனித சமூகத்திற்கு இயன்ற நற்காரியங்களைச் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் இந்த பூலோகப் பிறவியைக் கடந்து செல்கிறார்களே , என்னைப் பொருத்தவரையில் அவர்களே முழுமையான ஆன்மீகவாதிகள் / இறைவனின் பக்தியை காப்பவர்கள், சுமப்பவர்கள்.
அவர்களும் இறைவன் நாமத்தை உச்சரிப்பவர்களாக இருக்கிறார்கள், அக்கம்பக்கம் உள்ளவர்களை வைத்துக் கொண்டு சொற்பொழிவுகள் செய்கிறார்கள். வீடும் நாடும் நலமாய் இருக்கப் பாடுபடுகிறார்கள். பூஜை, பஜனை, யோகங்கள், தியானமும் செய்கிறார்கள். இதைவிட ஆன்மீகத் தகுதிகள் வேறேன்ன வேண்டும். அவர்களை இனிமேலாவது நவீன ஆன்மீகவாதிகள், நவீன மகான்கள் என்கிற அடைமொழி தந்து, அவர்களின் மூலம் இறைவனின் பெருமைகளை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதில் போலி ஆசாமிகள் நுழைந்தது விடாமல் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது மிக மிக அவசியம்.
ஒருவன் உண்மையைப் பேசுகிறானா? பொய் பேசுகிறானா? நேர்மையானவனா? அயோக்கியனா? உதவி செய்பவனா? உபத்திரவம் செய்பவனா? என்பது அவனுக்கே தெரியும் அன்றி வேறு யாருக்கும் தெரியாது. ஆணித்தரமான பேச்சை வைத்துக் கொண்டு, வெளித்தோற்றத்தை வைத்துக் கொண்டு, சில தானதர்மங்களைச் செய்வது கொண்டும் , பேசுவதையும் கொண்டு தான் முடிவு செய்கிறார்கள். ஏன்? நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளும் அத்தகைய வெளி வேஷத்தைக் கொண்டு, சில சமயங்களில் பொய் சாட்சியங்களை கொண்டு தான் நீதி வழங்குகிறார்கள். அவர்கள் போடும் வேஷம் உண்மையானதா? என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள எவ்விதமானச் சாதனமோ , அளவுகோளோ இல்லை. அப்படி இருக்கும்போது ஆன்மீக விஷயத்திலும் இவர் இப்படிப் பட்டவர்கள் தான் என்பதை குத்துமதிப்பாக , குருட்டாம் போக்காக சிலர் , சிலரை நம்புகின்றனர். பலர் அதனை நம்ப மறுக்கின்றனர். கூடுதலான, கண்ணுக்குத் தெரியும் சாட்சி அல்லது ஆதாரத்தையே எதிர் பார்க்கின்றனர்.
முன்னே சொன்னது போல , ஒருவருடைய வாக்கு, நேர்மை, உண்மையான சொரூபம் அவருக்கு மட்டுமே தெரியும். அதுவும் அதற்கான விளக்கங்கள் கேட்டால், அதிகம் பேருக்குத் தெரியாது. மீறி விளக்கம் கேட்டால், அவர் செய்தார்! நான் செய்கிறேன்! , ஏன்? என்கிற விளக்கம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை! எனக்குப் பிடிக்கிறது ! நான் செய்கிறேன்! எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை! எனது இஷ்டம், என்ற பதில் வரும். அப்படி இருக்கும்போது யாராவது ஏதாவது சொன்னால் எனக்கு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று சொல்பவர்களுக்கு இந்த நிலைமை வரலாம்.
அதாவது, ஒருவர் யார் என்ன சொன்னாலும், அதை முழுமையாக விசாரணை செய்யாமல், ஆராய்ந்து பார்க்காமல் அவர் சொல்வதை அப்படியேச் செய்தால், அதனால் கிடைப்பது நல்லதோ கெட்டதோ அதை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரக்க பறக்க ஓடும் உலகில் அதைத் தவிர உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை தான். பின் என்ன செய்வது ? என்று கேட்டால்! அவர் சொல்வதை நன்றாக அறிந்து, விசாரணை செய்து, அனுபவப் பட்டு பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு வரும் போது அவர் வாழ்க்கையின் முடிவு காலத்தை நெருங்கி இருப்பார்.
ஆக, கூட்டத்தை வைத்துக் கொண்டு, ஆடம்பரத்தைக் கொண்டு, பணத்தை வைத்துக் கொண்டு, தேன் போல இனிய பேச்சைக் கொண்டு முடிவுக்கு வந்தால், நீங்கள் நினைப்பது பாதிக்குப் பாதி சரியாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆன்மீகத்திலோ அல்லது மனதினிலோ தெளிவு அடைய விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும் என்று திரும்பத்திரும்ப நினைவு படுத்துவதாகட்டும் அல்லது நிர்பந்தத்திப்பது ஒருவகையில் கேலியாகவோ , ஏமாற்று வேலையாகவோ அல்லது தப்பிக்கும் வேலையாக இருக்குமோ என்று பலருக்குச் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் எழத்தான் செய்யும். ஏனென்றால், வாழ்வாதாரமாய் விளங்கும் சொத்து விஷயங்களில், பொன், பொருள், நிலம் மற்றும் இரகசியங்களைக் கட்டிக்காக்கும் விஷயத்திலும் பலர் பல வகைகளில் பலரிடத்தில் ஏன்? சொந்தம், நட்பு பேர்வழிகளிடத்தில் ஏமாறும் போது எதை காட்டுகிறது? இந்த விஷயத்திலே இவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாத போது எப்படி ஆன்மீகத்தில், மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது? இது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயமல்லவா!
ஒரு சமயத்தில் இம்மாதிரியான எண்ணமும் வருவதுண்டு. அதாவது, இந்தியாவில் தேர்தல் நடக்கும் போது, வாக்குச் செலுத்துவதற்கு தகுதி என்னவென்றால் ஆணோ பெண்ணோ குறிப்பிட்ட வயது நிரம்பிவிட்டாலே போதும் அவர்கள் வாக்களிக்கத் தகுதியவர்கள் என்கிற சட்டம் இருக்கின்றது. அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், முட்டாள்கள், ஆரோக்கியமாய் இருப்பவர்கள், ஆரோக்கியமாய் இல்லாதவர்கள், ஏழை, பணக்காரன் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தகுதியானவர்கள் என்று சட்டம் வகுத்து வைத்திருக்கிறார்கள்.
அதுபோல, ஆன்மீக விஷயத்திலும் அந்த மாதிரி ஏதேனும் சட்டம் இருக்கின்றதா என்ற எண்ணம் எழுகிறது. என்னைப்பொறுத்தவரையில் ஆறறிவு கொடுத்து, அனுபவிக்க ஐம்புலன்களையும் கொடுத்த இறைவனின் / பிரம்மத்தின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கும். ஏன் ஜனனம் மரணம் நடந்து கொண்டே இருக்கின்றது. இறைவனுக்கு சலிப்பு உண்டாகாதா? என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பேச்சுக்கு இப்படி இருக்குமோ? அதாவது, இறைவன் /பிரம்மம் நம்மிடத்தில், ஏ மனிதா! இது உனக்கு பத்தாவது பிறவி. இப்போதாவது ஆசை படாமல் நற்குணம் கொண்டு, விழிப்புணர்வுடன் இந்தப் பிறவியில் இருந்து விட்டு என்னை வந்தடைய முயற்சி செய்வாயாக! என்று கூறித்தான் இந்தப் பிறவியானது கொடுக்கப்படுகின்றதோ ! என்கிற சந்தேகம் வருகிறது.
சிலருக்கு முப்பதாவது பிறவியாக, சிலருக்கு எட்டாவது பிறவியாக, சிலருக்கு ஐம்பதாவது பிறவியாக! இப்படி பல பிறவிகள் கொடுக்கப் படுகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆக, மனிதப் பிறவி என்பது பிரம்மத்தை அடையும் அரிய வாய்ப்பு. அதனை அடைய விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும் என்று தெரிகிறதல்லவா?
உங்களைச் சுற்றிலும் விழிப்புணர்வை மறக்கச் செய்யும் செயல்கள்
அல்லது அதனை உதாசினப்படுத்தச் சொல்லும் நபர்கள் அல்லது தாகத்தை செய்யச் சொல்லும்
பல ஆட்கள் இருக்கத் தான் செய்வார்கள். அவற்றை ,
அவர்களை சாமர்தியமாய் நல்ல வழியில்
சமாளித்து சாதிப்பதே பிரம்மத்தை அடையும் வழியாகும்.
ஆக, மனம் என்பது வெறும் எண்ணங்களின் தொகுப்பு அல்ல; அது நம் உறக்கம், உடல் நலம், செயல்கள், உறவுகள், வாழ்க்கைப் பாதை என அனைத்தையும் வழிநடத்தும் சக்தியாகும். மனம் அமைதியாக இருந்தால் உடல் ஒத்துழைக்கும்; உடல் சீராக இருந்தால் வாழ்க்கை சீரடையும். ஐம்புலன்கள் நம்மை இழுக்கும் திசை எதுவாயினும், அவற்றை வழிநடத்தும் பொறுப்பு மனதிற்கே உரியது. வெளி வேஷங்களோ, ஆடம்பரங்களோ ஆன்மீகத்தின் அளவுகோல் அல்ல; நம் எண்ணங்களின் நேர்மை, செயல்களின் தூய்மை, விழிப்புணர்வுடன் வாழும் முயற்சியே உண்மையான ஆன்மீகம். இந்த உண்மையை உணர்ந்து, மனத்தை நம் நண்பனாக மாற்றிக் கொள்ளும் முயற்சியே மனிதப் பிறவியின் உயர்ந்த பயன்.
“அப்படியானால் விழிப்புணர்வை எப்படி தினசரி வாழ்வில் கொண்டு வருவது?”
******************************************
AI Review
🔍 மொத்த மதிப்பீடு (Overall Assessment)
இந்த பதிவில்
-
மனம் – உடல் – ஐம்புலன்கள் – ஆன்மா – பிரம்மம்என்ற தொடர்ச்சியான பயணம் மிக இயல்பாக அமைந்துள்ளது.ஒரு உபதேசம் போல அல்லாமல்,சிந்திக்க வைக்கும் உரையாடல் போல் நகர்வது மிகப் பெரிய பலம்.
🌿 முக்கிய பலங்கள் (Strengths)
1️⃣ மன–உடல் இணைப்பை எளிய மொழியில் விளக்கம்
-
அறிவியல்
-
அனுபவம்
-
ஆன்மீகம்
மூன்றையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.
👉 இது வாசகனுக்கு “இது என் வாழ்க்கையிலேயே நடக்கிறதே!” என்ற உணர்வை தருகிறது.
2️⃣ கனவு – ஆழ்மனம் – ஆன்ம ஐம்புலன்கள்
கனவுகளை:
-
சாதாரண நிகழ்வாக அல்ல
-
ஆழ்மனத்தின் செயல்பாடாக
விளக்கியிருப்பது மிகவும் சிறப்பு.
“கனவுகளை விழிப்புணர்வுடன் நோக்கினால்…”
3️⃣ “நாடக மேடை” உவமை – மிக வலுவான பகுதி 🎭
இந்த பகுதி உங்கள் பதிவின் மைய தூண்.
-
பாத்திரம் நிரந்தரம் அல்ல
-
மனக் குணங்களே பாத்திரத்தை மாற்றுகின்றன
-
இரட்டை வேடம் → தண்டனை
4️⃣ நவீன ஆன்மீகவாதிகள் குறித்த பார்வை
இது மிகவும் முற்போக்கான & தைரியமான கருத்து:
“சாதாரண மனிதர்களின் உருவத்தில் பலர்…”
-
குடும்பம்
-
வேலை
-
சமூக பொறுப்பு
-
ஆன்மீகம்
👉 இன்றைய தலைமுறைக்கு இது மிகப் பொருத்தமான பகுதி.
5️⃣ போலி ஆன்மீகம் குறித்த எச்சரிக்கை ⚠️
14.9 & 15.9 தேதியிட்ட பகுதிகள்:
-
Blind belief
-
வெளி வேஷம்
-
கூட்டம் + ஆடம்பரம்
இவற்றின் அபாயங்களை நேரடியாக ஆனால் அமைதியாக சொல்லுகிறது.
“அவர் சொல்வதை விசாரணை செய்யாமல் செய்தால்…”
✍️ மேம்படுத்தக் கூடிய இடங்கள் (Suggestions)
🔹 1. பத்திகள் (Paragraphs) சற்றே சுருக்கலாம்
-
2–3 வரிகளுக்கு ஒரு பத்தி
-
முக்கிய வரிகளை bold / quote செய்தால்படிக்கும் அனுபவம் இன்னும் சிறக்கும்.
🔹 2. “மனம் – பாகம் 3”க்கு வழி திறப்பு
இறுதியில் ஒரு கேள்வி அல்லது சுட்டுரை:
“அப்படியானால் விழிப்புணர்வை எப்படி தினசரி வாழ்வில் கொண்டு வருவது?”
🔹 3. சில இடங்களில் மொழி திருத்தம்
(அர்த்தம் பாதிக்காமல்)
-
“ஆனல்” → “ஆனால்”
-
“அக” → “ஆக”
இது purely polishing மட்டுமே.
🌟 இறுதி மதிப்புரை (Final Verdict)
*********************
.jpeg)
No comments:
Post a Comment