மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 2 - கு.கி.கங்காதரன்
மனம், அமைதியாக இருப்பதற்கும் , நிலையாக இருப்பதற்கும் பயிற்சியளிக்க பலரும் பலவிதமான முறைகளும்
விளக்கங்களும் தந்திருக்கின்றார்கள். அதைப் பற்றிய எனது அனுபவ விளக்கம்
பின்வருமாறு. நமக்கு நன்கு தெரியும். ஓரிடத்தில் இருந்து நாம் விரும்பும் இடத்திற்குப் போக ஒரு வாகனம்
தேவை. அதுபோல, நாம் இறைவனிடத்திற்கு, பிரம்மத்தை (அதாவது இறைவனை அல்லது முக்தி) அடைவதற்கு 'மனம்' என்னும் வாகனத்தால் மட்டுமே அடைய
முடியும். மேலும், மனமானது நீங்கள் விரும்பும் வாகனத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி
கொண்டது. அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் தன்மை பொறுத்து உள்ளது. அதாவது, மனதை with gear or without gear
மூலமாக இயக்கலாம். உங்கள் விருப்பத்திற்கும் மாற்றிக்
கொள்ளலாம். எனது அனுபவத்தின் படி, மனதை without gear ல் இயக்குவது நல்லது. ஏனெனில்,
அப்படி இருந்தால் தான் நம் மனதின்
பக்குவப்படியும் , சூழ்நிலை படியும் தானாக மனமானது தனது
வேகத்தை சுதந்திரமாக் குறைத்தோ , வேகமாகச் செல்வதோ முடியும்.
அதோடு, ஒவ்வொரு கணமும்
நம்முடைய பிரம்மத்தின் ஈடுபாடும், தெய்வீகப் பரிணாம வளர்ச்சியையும்
நன்றாக உணர்ந்து கொள்ளலாம் .
அதுவே, with gearல் இயக்கினால், மனம் எந்த gear ஐ தேர்ந்தேடுக்கின்றதோ அந்த gear
யிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். ஒருவேளை அந்த gearல் ( அதாவது, ஒரு குறிப்பிட்ட முறையில் அல்லது செயலில்) சுகம் கண்டு
கொண்டால் அடுத்த gear க்குச் செல்ல 'மனம்' இருக்காது. சிலவேளைகளில் அப்படிச்
செல்வதற்கு மனம் படாதபாடு படும். பிடிக்காமலும் போகலாம். சிலவேளைகளில் மனதிற்கு அடுத்தடுத்துப் பல gear கள் இருப்பது தெரியாமல், தனது வாழ்நாள் முழுவதும் செக்குமாடு போல ஒரே இடத்தில் உழன்று கொண்டே
இருக்கும் மனப்பான்மை வருமே தவிர இறைவனை, பிரம்மத்தை அடைய முடியாமல் போகலாம். அந்நிலையிலும், பிரம்மத்தின் பார்வை அவர் மீது பட்டு
விட்டால் அதாவது விட்ட குறை, தொட்ட குறை இருந்தால், அந்தத் தருணத்தில் ஒருவேளை பிரம்மத்தில் ஐக்கியமாகும் பாக்கியத்தை
அடைந்தாலும் அடையலாம்.
தெய்வீகத்தை, பிரம்மத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள கீழே சொல்லப்படும் பயிற்சியினைக் கடைபிடித்தால் பயனும் பலனும் கிடைக்கும்.யார் யார் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டு தெய்வீக நூல்களைப் படிப்பதும், அனுஷ்டானங்களைக் கடைபிடித்தும் வருகிறார்களோ அவர்கள் எல்லோரும் சிறிது காலத்திற்கு அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதுநாள் வரை அவற்றிலிருந்து கற்றப் பாடங்களை வாழ்க்கையில் அனுபவித்து, அதனால், மனம் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை அறிய முயல வேண்டும். அவற்றினால் உண்மையான முன்னேற்றம் இருந்தால் மட்டுமே உங்கள் செயல்களைத் தொடர வேண்டும். அப்படி இல்லையேல் அதைவிடப் பலன்தரும் செயல்பாடுகளைத் தேடிக் கண்டு பிடித்து அதனைத் தொடர வேண்டும். இப்பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். அதேபோல், படிப்பு இல்லாமல் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், சிறிது காலம் ஆன்மீகத்தில் எதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி கடைபிடிக்க வேண்டும். இவை எதற்கு என்றால், பிரம்மத்தை அடையும் ஆன்மீக வழி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அதேவேளையில் ஆன்மீகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி திறனும் அறிவும் இருக்கும். அந்த எல்லை வரையில் தான் எட்ட முடியும். அதனை பயிற்சியின் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், ஆன்மீகத்தில் அதிகமாக ஆராய ஆராய குழப்பமும் சந்தேகமுமே மிஞ்சும். அவரவர்க்குத் தகுந்தவாறு எளிய அல்லது கடினமான முறைகள் பலன் தரும்.
வேதியியலில் 108 தனிமங்கள் அதற்குரிய குணங்களில், செயல்களில் தனித்துவம் இருக்கின்றதோ ஆன்மீகத்திலும் கடவுள், முனிவர்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், பெரிய ஆன்மீகவாதிகள், மகான்கள், போதகர்கள், பக்திமான்கள், வேதாந்திகள், சித்தாந்திகள், போன்று அவரவர்கள் தனித்தன்மையோடு இருக்கிறார்கள். அதே வேதியியலில் எவ்வாறு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட சில தனிமங்கள் ஒன்று சேர்ந்து சில சேர்மங்கள் உருவாகின்றதோ, அதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மீகவாதிகளின் கூட்டு வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் சேர்ந்து புதிய ஆன்மீகத்தை உருவாக்கும். அவைகளும் பிரம்மத்தை அடையும் பாதைக்கு வழிகாட்டியாகும். அது தவிர்க்க முடியாது.
காலம், தொழில்நுட்பம், மனோபாவங்கள், மனித சாதனங்களுக்கேற்ப ஆன்மீகமும் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி வழிகாட்டுவதே ஆன்மீகம் சிறக்கும் வழியாகும். அதனை ஏற்றுக் கொண்டு வழிகாட்டும் குருக்களே இக்காலத்தில் தேவை. அப்படி இல்லாமல் பழைய முறைப்படி இப்படிச் செய்ய வேண்டும், அப்படி நடக்க வேண்டும், இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் அவர்களுக்கு ஆன்மீகம் ஊட்ட முடியாது. மாறாக அவர்கள் அதனை விட்டு விலகிச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
சராசரி மனிதர்கள் எல்லோருக்கும் இந்த உலகமும், உயிரினங்களையும் யார் படைத்தார்?, எதற்காகப் படைக்கப்பட்டவை என்ற கேள்வி சிலருக்கு உண்மையாகவும், பலருக்குக் கிண்டலாகவும் வருவதுண்டு. அதற்கு என் பதில், அந்தக் கேள்விக்கான பதில் பிறகு சொல்கிறேன். முதலில் உனது வாழ்கையில் நடந்த நிகழ்வுக்கு உனக்குப் பதில் தெரிகின்றதா என்று பார்க்கலாம்.
பிரம்மத்தின் ஒவ்வொரு படைப்பும் சாதாரணமாகப் படைக்கப்பட்டதாகத்
தெரியவில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது
செய்யப்பட்ட பின்னரே படைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால், ஒவ்வொரு படைப்பும் அளவும், வடிவமும்,
செயல்பாடும், வரையறையும் இருக்கிறது. அந்த அளவும், வரையறை தாண்டி போகமுடியாது. போனாலும் ஆபத்து தான். அதனை முடிவு
செய்து, எவ்விதப் பின் விளைவும் வராது என்று
உறுதி செய்த பின்னரே ஒரு உயிரின் படைப்பை பிரம்மமானது உறுதி செய்கிறது என்றால்
அவரது ஆற்றல் எத்தகையது என்று நினைத்துப் பாருங்கள். அதாவது, ஆடு உடைய வால் இறைவன் அளந்து தான் வைத்துள்ளார். அதுபோல மனித உடலில்
இருக்கும் ஒவ்வொரு பகுதியில் உள்ள முடியின் வளர்ச்சி அளந்து தான் வைத்துள்ளார்
என்பதை உணர வேண்டும். அதுவே, அவரது படைப்பாற்றலின் மகத்தான உதாரணம்.
ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். தலை முடி வளர்ச்சி, கண் இமைக்கு வைத்திருந்தால் கண்ணின் அருமை தெரிய வாய்ப்பில்லை. ஆக, இறைவனின் இத்தகைய குணம், உறுப்புகளின் பயன்பாடுகள், வடிவமைப்பு, அளவுகள், வரையறை போன்றவையும் அதன் பலனும் அனுபவித்து வரும் நாம், பிரம்மத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பின்னர், பெனாய்ட் முதலில் உனது பிறப்பின் மூலத்தையும் அதற்கானத் தேவையும் அறிந்திருக்கின்றாயா? அல்லது அறிய முயற்சி செய்திருக்கின்றாயா? அதற்கு பதில் கிடைத்ததா? சரி, அதை விட்டுத் தள்ளு! உனது வாழ்க்கையில் ஒட்டியிக்கும் மகன்(கள்), மகள்(கள்) யாரால், எப்படி இந்த பூலோகத்திற்கு வந்தார்கள்? நீங்கள் ( கணவன், மனைவி) உங்கள் விருப்பத்திலா? அல்லது உங்களின் நிர்பந்தத்தினாலா? அல்லது விபத்தினாலா? அல்லது தவிர்க்க இயலாத சில காரணத்தினாலா? இவற்றில் எது உண்மை? கண்டிப்பாக இது தானாக நடக்கவில்லை. அதேபோல் மற்றவர்களினாலும் நடக்கவில்லை. நூறு சதவீதம் உங்களால் மட்டுமே நடந்தது. அதை எண்ணிப் பார்த்ததுண்டா?
அது உங்களுடைய சுயநலம், விருப்பத்திற்காக, அல்லது உங்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தானே? உங்களின் ஈருயிர் கலந்து எப்படி மூன்றாவதாக ஒரு உயிர், எங்கு எப்படிப் பிறந்தது? என்று தெரியும் தானே! உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவப் போகின்ற அற்புதமான அந்த உயிரை இறைவனின் இயற்கையாய் தந்த அருளால் தான் உங்கள் மூலமாக உருவானது என்று உணர்ந்திருக்கின்றாயா? அத்தகைய வல்லமையானது, பிரம்மத்தைத் தவிர யாரால் தர முடியும்? இந்தச் செயலை உணர்ந்தவர்களே ஆன்மீகத்தில் நுழைய அருகதை உள்ளவர்கள். இதனைப் பற்றி அறியாதவர்களுக்கு அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு எக்காலமும் அவர்களுக்கு பிரம்மம் கை கூடாது. அவர்களுக்கு பிரம்மத்தின் அருள் அல்லது பார்வை இருந்தால் ஒழிய இப்பிறவியில் ஆன்மீகப் பலன் கிடைக்கும் வாய்ப்பு பெறுவார்கள்.
அதேபோல் ஆன்மீகத்தால், பக்தியால், யோக தியானத்தால் என்ன நன்மை? என்று கேட்பவர்களை, ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதற்கு நிறையப் பொறுமையும், கடினமான முயற்சியும் கண்டிப்பாகத் தேவை. அவர்களை யாருக்கு ஒப்பிடலாம் என்றால், உடல் உபாதைகள் பலவற்றை உடைய ஒருவருக்கு எவ்வாறு மருத்துவம் பார்க்க வேண்டுமோ அவ்வாறு கவனிக்க வேண்டும். அப்படி மருத்துவம் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தால், அவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற தாழ்வுக்கும், பாவ புண்ணியங்களுக்கும், நன்மை தீமைகளுக்கும் ஆளாகத் தயாராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தை நம்பும் பலன், உனக்கு நடப்பது எல்லாம் தனக்காக தான், இறைவனானவன், பிரம்மம் தனக்குள் இருந்து நடத்துகிறான் என்ற நம்பிக்கை வரும். அதனால், உனக்கு நேரும் இன்பம் அதிகமாக இருக்கும். இறைவனின், பிரம்மத்தின் உதவி எப்போதும் கிடைக்கும். அதனால், துன்பம் குறைவாக இருக்கும். ஆனால், ‘தான்’ தான் எல்லாம்! எல்லாம் எனக்குத் தெரியும்! ‘நான்’ தான் செய்கிறேன்! என்கிற ஆணவ எண்ணம் இருந்தால் உனக்கு நடப்பது எல்லாம் உன்னால் தான் வந்தது. எல்லாவற்றையும் நீ தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் புலம்பாமல், யார் மீதும் குறைகூறாமல் நீயே மகிழ்வோடு அனுபவிக்க வேண்டும். அது உன்னால் முடியுமா?
அந்த நேரத்தில், இறைவனின், பிரம்மத்தின் உதவி எப்போதும் கிடைக்காது. ஆகவே, ஆரம்பத்தில் 'நான்' என்ற எண்ணத்தில் உனக்கு வெற்றி கிடைத்தாலும், இன்பம் கிடைத்தாலும், முடிவில் உன்
வாழ்வு நரக வேதனையில் முடியும். அதற்குத் தயாராக
இருக்க வேண்டும். இது பயமுறுத்துவதற்காக அல்ல. இது
உண்மை. இதில் எது வேண்டுமானாலும் உன்
விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. ஒன்றை மட்டும் நீ ஆழமாக உன் மனதில்
போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். உனது மனித
வாழ்க்கையின் இரகசியம் என்னவென்றால், இப்பிறவியை
முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் (உனது ஆன்மீகம் கை கூடினால்) , அல்லது அடுத்த பிறவிக்குத் தொடக்கத்திற்கான (ஆன்மீகத்தைக்
கேவலப்படுத்தியோ, உதாசிணப்படுத்தியோ, நாட்டம் காட்டாமலோ இருக்கும் பட்சத்தில்) ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஆகவே, உனது படைப்பின் மூலமும், முக்கியத்துவமும் ஓரளவுக்கேனும் அறிந்த பின்னே, உன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் படைப்புகளையும், விசித்திரங்களையும், பயன்கள் மற்றும் பண்புகளையும் சிறிதளவேனும் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகே ஆன்மீகத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும். ஆன்மீகத்தின் பலன் உனது முதிர்ந்த வாழ்க்கையில் பெற்ற மொத்த அனுபவங்களைப் பொறுத்து உள்ளது. சிலர் தொடக்கத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடோடு இருந்து விட்டு, முடிவு வாழ்க்கையில் அதனைத் துறந்து நாத்திகத்தைப் பிடித்துக் கொண்டால் உனது பிறவிப் பயணம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோல் நாத்திகத்தில் இருந்து விட்டு ஆன்மீகத்தில் ஒரே பிடிப்போடு இருந்தால் அது உனது அடுத்த பிறவிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இது எப்படி என்றால், உனது முதுமை
ஆன்மீகம் உனது பரம்பரைக்கும் உதவும். நன்மை பயக்கும். அதுவே, நாத்திகத்தில் முடிந்தால் அதன் தாக்கம் உனது சந்ததிகளுக்கும் பரவி
தீராதத் துன்பத்தில் மிதக்கச் செய்யும். ஒருவேளை, அவ்வாறான நிலையில் உனது துயர்களைத்
துடைத்துக் கொள்ள நினைத்தால், அதன் பிறகு உனது உடல், உயிர், மற்றும் உள்ளம் பற்றியத் தெளிவும்
அதனைப் பராமரிக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று நினைத்தால், .... அதற்கு பதில், உங்களை யார் எல்லாவற்றையும் துறந்து,
காவி ஆடை அணிந்து காட்டுக்குப் போகச்
சொன்னார்கள்?. நீ இப்போது இருக்கும் வாழ்கையில் இருந்து கொண்டே, நல்ல முறையில், நல்ல சிந்தனையுடன் அனுபவித்துக் கொண்டே,
நேரம் கிடைக்கும் போது பிரம்மத்தைப் பற்றி
அறிந்து கொண்டால் போதுமானது. அது மணி கணக்கு நேரமாக, நிமிடமாக, வினாடியாகவும் இருக்கலாம்.
அது உனது வேலை, எண்ணம், சூழ்நிலை பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்.
முக்கியமாக, உனக்கான, உன் குடும்பத்திற்கான அடிப்படைத்
தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட பின் ஆன்மீகத்தில் நுழைவது நல்லது.
அந்த நிலையில் ஆன்மீகச் சிந்தனை ஒன்றே போதுமானது. அப்போது தான் ஆன்மீகத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். எவ்வித குழப்பமும் சந்தேகமும் அவநம்பிக்கையும் அடையும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அந்தக் கடமையைச் செய்யாமல், ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உனது விருப்பம் ஒருவேளை பூர்த்தி ஆனாலும் உனது குடும்பமும் பரம்பரையும் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகும். அதனை நீயே முடிவு செய்ய வேண்டும்.
ஆக, உனது படைப்பின் மூலம், முக்கியத்துவம், இயற்கையின் படைப்புகள், கடமையில் நீ அனுபவம் பெற்ற பின் ஆன்மீகத்தின் அடிப்படையான உடலின் அமைப்பு, உள்ளத்தின் குணம், உயிரின் மேன்மை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, உடலானது மனதை வைத்துக் கொண்டு உயிரைச் சுமக்கும் ஒரு சாதனமாகும். அதில் உடல் ( தமஸ் குணம் கொண்டது. அழிவது. அகங்காரம், பொறாமை, போட்டி, கோபம், அந்தஸ்து போன்றவைகளை வெளிப்படுத்தி தான் யார்? உண்மையானவனா? வேடதாரியா? என்பதை அறிவிக்கும் காரணியாகும். உடலின் உரிமை, அக்கறை உள்ளவரை அதாவது அதன் ஐம்புலன்களின் ஆட்டம் இருக்கும் வரை உள்ளத்திற்குச் (ரஜஸ் குணம். நான் என்ற அகங்காரம் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் இருந்து கொண்டு உடலை இஷ்டப்படி உருட்டி விளையாடும் பகடைக்காய் ஆக்கிவைத்திருக்கிறது) செல்வது கடினம்.
அதாவது , நீ கண்ணை மூடிக் கொண்டாலோ , உறக்கத்தில் இருந்தாலோ உனக்கு உடல் பற்றிய எண்ணம் இல்லாமல் போகிறதல்லவா! அத்தகைய அனுபவம் கிடைக்க யோகமும், தியானமும் முறையாகப் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். அதன் முதிர்ச்சி, மனதில் இருக்கும் அகங்காரம், கோபம் என்று மேலே கூறப்பட்ட எண்ணங்களை ஒவ்வொன்றாக மனதிலிருந்து அகற்ற வேண்டும். அதன் பிரதிபலிப்பை உடல் இல்லா, அசையாத தூய மனம் உணரும். அந்த நிலையில், உடல், உள்ளம், உயிர் இம்மூன்றும் ஒன்றாகி ஆன்மாவாக , ஓம் எனும் ஒலியுடன் பிரம்மத்துடன் கலந்த பேரானந்த அனுபவம் கிடைக்கும். அதுவே, பிறவை முற்று பெறச் செய்யும். முக்திக்கு வழிகாட்டும்.
முதலில் நீ உன் உடல் ஐம்புலன்களால் எதைப் பார்த்தாலும், தொட்டாலும், கேட்டாலும், பேசினாலும், சுவைத்தாலும் , அந்த வாசனைகளை உன் உடல் மறந்தாலும் மறக்கும். ஆனால், மனம் என்கிற சாதனம் ஒன்றினால் அவ்வாசனைகளை மறப்பது எளிதில் முடியாது.
இந்த விழிப்புணர்வும் சாந்தமும் கட்டாயம்
எப்போதும் இருக்க வேண்டும். அதனால் தான் பிறர் 'மனம்' புண்படும்படி நடப்பதும், பேசுவதும், கெடுதல் நினைப்பதும் கூடாது . அந்த
மாதிரி நடந்து கொண்டால் அவைகள் மனதில் அழுக்காக, கலங்கமாக சேர்ந்து விடும். அப்படி மனதில் அழுக்கு எண்ணங்கள் சேரச்சேர
ஆன்மீகத்தைக் கடைபிடிக்க மிகவும் கடினமாக இருக்கும்.
ஒருவேளை அந்த மனதின் அழுக்குகள் குறைக்கவும், நீக்கவும் பல யோகங்கள், தியான முறைகள் கடைபிடிக்க வேண்டும். இவையெல்லாம் குறிப்பிட்ட கால அளவுக்குத் தான் நீங்கள் பயிற்சி
மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை வர வரத் தான் ஆன்மீகப் பாதையை உங்களால்
அறிந்து கொள்ள முடியும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆன்மீகப்
பயணத்தால் அன்பும், ஆனந்தமும் அதிகமாகி, உங்களின் கஷ்டம் குறைந்துள்ளதா? என்று கவனிக்க வேண்டும். உங்கள் உற்றார் உறவினர்களுக்கு உங்களால்
எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். சிலருக்கு அதிஷ்டவசமாக,
நல்ல கர்மவினை காரணமாக, குருவின் நம்பிக்கை காரணமாக, நல்ல எண்ணம்,
செயலின் காரணமாக எவ்வித கடினமான முயற்சி
இல்லாமல் ஆன்மீகப் பலன் கிடைக்கும். அப்படி கிட்டியவர்கள் இருக்கிறார்கள்.
அப்படிக் கிட்டியவர்கள், ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டுடன் பல
செயல்களைச் செய்து முக்தியும் பெற்றிருக்கிறார்கள்.
அதாவது, ஆன்மீகச் சிந்தனைகள் வந்து விட்டாலே
மனம் சும்மா இருக்காது. யார் எதில் என்ன சொல்லி இருக்கிறார்கள்? எதற்குச் சொல்லி இருக்கிறார்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனை
சதா மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அந்த எண்ணத்தை, ஆன்மீகச் சிந்தனைகளை பலருக்கு சொல்ல வேண்டும் என்கிற ஆர்வமும்,
வேகமும் உண்டாக்கும். யார் எதைச் சொன்னாலும்
கேட்கின்ற மனது இருக்காது. அந்த நிலை வந்தால் நீங்கள் உங்கள் செயல்களையும்,
வேகத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நினைப்பது, நடப்பது சரியா என்று நீங்களாகவே அல்லது
குருவின் மூலமாக விசாரணை செய்வது மிகவும் நன்று.
ஏனென்றால், உங்களால் அதனின்று வெளிவர இயலாது. அந்த
நிலையை பிரம்மத்தோடு ஒன்றிப் போவதற்கான ஆரம்ப நிலை. மேலும் மேலும் விசாரணை
செய்யும் போது தெளிவும், நம்பிக்கையும் கிடைக்கும். அதன் மூலம்
படிப்படியாக வளர்ந்து முடிவில் முக்தி அடைய வாய்ப்புகள் கிடைக்கும். ஏன் ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க
வேண்டும்?. அதனால் என்ன பயனும், பலனும் உள்ளது?
என்று கேட்பவர்களுக்கு இந்த பதிலை நன்றாக
ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, நமது பிறப்பு உடல், மனம், ஆன்மா என்று மூன்று பரிணாமங்களால்
ஆனது. உடலின் தாகத்தை பொருட்களால் தீரும். மனதின் தாகம் எண்ணங்கள் மற்றும்
சிந்தனைகளால் அடங்கும். அதுபோல, ஆன்மாவின் தாகத்தை ஆன்மீகத்தில்
மட்டுமே தீரும். இதில் ஏதும் குறை வைத்தால் அடுத்த பிறவியில் தீர்க்கும் வாய்ப்பு
உள்ளது. அதுவும் நீங்கள் ஆன்மீகத் தாகத்தை தீர்க்கும் பட்சத்தில்.. ஆதலால் மனிதப்
பிறவியர்களுக்கு ஆன்மீகம் கட்டாயம் வேண்டும். உண்மையில் நீங்கள் ஆன்மீகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றால்,
உங்களுக்கு கடவுள் / பிரம்மம் பற்றிய நம்பிக்கை
இல்லாவிட்டாலும், ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் ,
உங்களது அனுபவங்களை வைத்துக் கொண்டு, அவர்களிடத்தில் நிதானமாக உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை..ஏன்?
எதற்கு? எப்படி? என்று தர்க்கமோ, விவாதம், விசாரணையோ செய்ய வேண்டும்.
நீங்கள் பேசும் நபர் அல்லது குரு எப்படி இருக்க வேண்டும் என்றால்,
நீங்கள் செய்யும் தர்க்கங்களைப் பொறுமையுடனும், அன்புடனும் கேட்டுவிட்டு,
அதற்கான பதிலை அவருடைய அனுபவத்தின்
அடிப்படையில் நீ புரிந்து கொள்ளும் படி அல்லது உணர்ந்து கொள்ளும் படி தெரிந்து
கொண்டால், உனக்கு எளிதில் பிரம்மத்தை அடையும்
உபாயம் கிடைக்கும். ஆனால், அவர் உன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவர் உங்கள் பதிலை திசை திருப்ப, அந்த மகான்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள் அதனால் அதைச் சொன்னேன்
என்று பதிலளித்தால், அவரால் ஆன்ம அறிவு கிடைப்பது அரிது.
இல்லையெனில் அவர், நான் சொல்வதைச் செய்! என்று
உத்தரவிட்டாலும் , அது உபயோகமாகாது.
ஆன்மீக விசயத்தில் குருக்களை விட சிஷ்யர்கள் அதிகமாகப் பலனடைகிறார்கள். ஏனெனில், குருக்கள் பெரும்பாலும் தன் குரு சொல்வதை ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் , குருட்டாம் போக்காக கடைபிடிப்பதால் அவர்களுக்கு எளிதாக கடவுளின் காட்சி கிடைப்பதில்லை. ஆனால், சிஷ்யர்கள் விசாரணை செய்வதால் இறைவன் / பிரம்மம் அருள் கிடைக்கிறது. இறைவன் / பிரம்மம் அருள் கிடைக்க வேண்டுமென்றால், குருவின் உபதேசமே கிடைத்தாலும் அது ஓரளவுக்கே பயன்படும்.
அது எவ்வாறு எனில், உங்களுக்குப் பசி எடுத்தால் நீங்கள்
தான் சாப்பிட வேண்டும். உங்களுக்காக மற்றவர்கள் சாப்பிட்டால்
உங்கள் பசி அடங்காது. அப்படிப்பட்டது தான் இறைவன் / பிரம்மம் தரிசனம்.
நமது அன்றாட வாழ்வில் ஒருவரை ஆன்மீகப் பாதைக்கு
அழைத்துக் கொண்டு போவதற்கு மிக மிகக் கடினமான காரியமாகும். அது சாதாரணமானவர்க்கும் , அறிஞர்களுக்கும்
பொருந்தும். அதில் உள்ள சிக்கல் என்னவென்றால்,
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகப் பலன் இல்லாமல்
எந்த வேலையும் யாரும் செய்வதற்கு முன் வருவதில்லை. அப்படி இருக்கும்போது, ஆன்மீகமாவது ஒன்னாவது! பொழைக்குறதுக்கு வழியைப் பாருங்க! என்று
சொல்லிக் கடந்து போவர்களே அதிகம் பேர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. ஏனென்றால், ஆன்மீகத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது, தான் நினைப்பது, நல்லதோ கெட்டதோ
அது உடனே நடக்க வேண்டும். உழைப்பும் முயற்சியும் இல்லாமல்
வாழ்கையில் நிறைய வசதி வர வேண்டும் ! என்ற ஆசை தான் காரணம்.
இப்போது இருக்கும் அரைகுறை ஆசாமிகளும், மனிதனின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, பல மந்திரங்கள், பல பரிகாரங்கள், பல செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள். மனிதனின் மனமோ, இந்த மந்திரம் சொன்னால் நான் நினைப்பது நடக்குமா? நல்ல வசதி வருமா? அவையெல்லாம் ஆன்மீகத்தில் கிடைக்காது என்றால்? எனக்கு எதுக்கு ஆன்மீகம்? எனக்கு வேண்டவே வேண்டாம் என்று கருதுபவர்களே அதிகம் பேர். உண்மையில் அவர்களுடைய எண்ணங்களைக் குறை சொல்லிவிட முடியாது. ஏனெனில் அன்றாட வாழ்க்கையே, அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம்! இதுக்கே கஷ்டப்படும் போது, இவற்றுக்கு வழி சொல்லாத ஆன்மீகத்தில் எப்படி நாட்டம் கொள்ள முடியும்? இது தான் ஆன்மீகத்தின் உள்ளே வராததற்கான வழுவான காரணம்.
அவர்களுக்கு இன்றைய பொழுதின் மேல் தான் கவனமும் தேவையும்.
எப்போதோ, அல்லது இறப்புக்குப் பின்னே எந்த நல்ல பலன் கிடைத்தாலும் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமலே இருந்து
வருகின்றனர். மேலும், பல ஞானிகள் மற்றும் மகான்களின் தவறான புரிதல்களால், அதாவது ஆன்மீக வாழ்கையில் ஈடுபட வேண்டுமென்றால் சதா இறைவனை
பிரம்மத்தைப் பற்றிய சிந்தனை ஒன்றே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
சில ஆன்மீகவாதிகள் ஒரு படி மேலே போய், பல தியாகங்களைச்
செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
அதாவது உற்றார் உறவினர்களைத் தள்ளி வைக்க வேண்டும் அதோடு பொருளையும்
இன்ப அனுபவத்தையும் துறக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இயற்கையாய் எதுவுமே இல்லாதவர்களுக்கு எவ்வித கஷ்டமும் இல்லை.
அவர்கள் நினைத்தால் உடனே ஆன்மீகத்தில்
ஈடுபடலாம். ஆனால், வாழ்க்கைக் கடமைகள் உள்ளவர்களால்
எப்படி ஆன்மீகம் சாத்தியமாகும். மீறி
ஈடுபட்டாலும் அது ஒப்புக்காக இருக்குமேயன்றி உண்மையாய் இருக்காது. இதுவே இன்றைய நிதர்சனமான உண்மை. அப்படியென்றால் அவர்களால் ஆன்மீகத்திற்கு வரமுடியாதா ? என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு ஒரே
பதில், உண்மையில் ஆன்மீகத்திற்கு வர
விரும்பினால் , எவ்வளவு விரைவாக தங்கள் கடமைகளை செய்ய
முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து விட்டுப் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடலாம்.
அதைவிட்டு உறவுகளின் மேல் , பொருள்களின் மேல் வெறுப்பினால் ஒதுக்கினால், நாளைக்கு ஆன்மீகத்தையும் வெறுக்கும் நிலை வரலாம்.
அதாவது, உடல் எத்தகையப் செயல்கள் செய்தாலும், மனமானது 'பிரம்மம்' பற்றிய சிந்தனை இருந்தாலே போதுமானது. அதாவது, மனம் மட்டும் எவ்வித கலங்கமும் இல்லாமல் இருந்தால் போதுமானது. ஒருவேளை தவறான வழியில் நடப்பவனின் மனம், எவ்வித கலங்கமும் இல்லாமல், சலனமும் இல்லாமல் இருந்தால் போதுமானது. ஏனென்றால், அவனால் எளிதில் பிரம்மத்தை அடைய முடியும். ஏனென்றால் அவன் மனதை வென்றவன், மனதை அறிந்தவன். சிலர், வெளித்தோற்றத்தில் நல்ல செயல்கள் செய்து, அவரது மனம் கலங்கம் இருந்தால், அவன் ஒரு வேடதாரி. அவனின் ஆன்மீகம் போலியானவை. அவரால் ஆன்மீகக் கடலை கடக்க முடியாது.
அப்படியென்றால், ஆன்மீகத்தினால் என்ன நன்மை கிடைக்கும்? என்று கேள்வி கேட்டால் அதற்கு, நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் எத்தகைய செயல்களையும் எதிர் கொண்டாலும் நீங்கள் அதற்குப் பெரும்பாலும் அமைதியை வெளிப்படுத்துவீர்கள். அதிகபட்சமாக ஒரு புன்முறுவல் உதிர்த்துவிட்டு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் ஒதுங்கி விடுவீர்கள். எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுவீர்கள். ஆன்மாவைப் பேரானந்தத்தில் ஆழ்தச் செய்வீர்கள். முடிந்தால் மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயங்க மாட்டீர்கள்.
இப்பிறவியை ஆரோக்கியமாய் கடந்து அனைத்துக் கர்மவினைகளை தீர்த்து, மறுபிறவிக்கான முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியும் எடுப்பீர்கள். இப்பிறவியை ஆரோக்கியமாய் கடந்து அனைத்துக் கர்மவினைகளை தீர்த்து, மறுபிறவிக்கான முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியும் எடுப்பீர்கள். இந்த செயல் எப்போதும் நடக்க வேண்டுமென்றால், உங்களுக்கான கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும். மேலும், மண், பெண், பொன்னாசை இல்லாமல் , அதாவது மனதளவில் இல்லாமல் இருந்தால் போதுமானது. மேலும், எந்த நிலையிலும் மனமானது, முடிந்த அளவுக்கு இறைவனை பிரம்மத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தடவை நினைத்தாலும் மனம் நிறையுடன் உள்ளத்தில் அன்போடு நினைக்க வேண்டும்.
ஆன்மீகத்தில் நுழையும் முன், இறைவன் நமக்காக எங்கு, என்னவெல்லாம்
படைத்துள்ளார் என்பதை எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். இறைவன், எதனைப் படைத்தாலும், யாருக்கு உலகில் எந்த இடத்தில் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவும், அவர்களின் வாழ்க்கையில் இன்பமாக இருக்க வேண்டும் என்கிற ஒரே
காரணத்தினால் அவற்றைப் படைத்தது எவ்வளவு தயாள குணமாக
இருக்கும். ஒன்று நன்றாக கவனித்தால் சில உண்மை
தெரிய வரும். அதாவது, இறைவனின் படைப்பில், இயற்கையாய் அதன், குணம், மணம், செயல் போன்றவை கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதை அனுபவிக்கும் மனிதனோ எதற்கு எதற்கோ
எதை எடுத்துக் கொண்டாலும் பிரிவினைகள் வைத்ததோடு அதனை வைத்துக் கொண்டு எவ்வளவு
முடியுமோ அந்த அளவுக்கு மனிதர்களைப் பலவழிகளில் தன்னிச்சையாக ஆட்டிப் படைக்கும்
கொடுமையைச் சொல்லி மாளாது.
என்ன செய்வது? நாமே அவர்களுக்கு அதிகாரத்தை நல்லவற்றுக்காக தந்தாலும், வந்த வழியை மறந்து சொந்த வழியைத் தேர்ந்தெடுத்து மக்களை மிருகங்களை விடக் கேவலமாக நடந்து கொள்வது நாம் செய்த பாவம் தான். அப்பாவிகளும் , அன்பானவர்களும் அந்தக் கொடுமைக்கு ஆளாகி வருவது எப்போது நிற்குமோ? யார் அதற்கு சாவு மணி அடிப்பார்கள்? அப்படி அடிக்க வந்தாலும் முட்டாள் ஜனங்கள் அவரையே ஒரு கை பார்க்கும் சமூகமாயிற்றே. கெட்ட தலைவரை தேர்ந்தெடுத்துக் காலமெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எவ்விதப் பலனுமில்லை. ஒருவேளை அந்த மாதிரி ஒப்பாரி வைத்து எந்நேரமும் புலம்பிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்குச் சுகமாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
இதற்கெல்லாம் மூலக்காரணம் சுயநலம் தான், பேராசை தான் என்று வைத்துக் கொண்டாலும் ஒருவகையில் ஏதோ அவருக்காவது
பொறுப்பு இருக்கிறதே என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வாழ்வில் எந்த நோக்கமும் இல்லாமல்
தன்னைத்தானே அழித்துக் கொண்டும், மற்றவர்களுக்கும் பலவழிகளில் பாரமாய்
இருந்து கொண்டு, தான் கெட்டதோடு பிறரையும் கெடுக்க
கங்கணம் கட்டிக் கொண்ட இருப்பவர்களை யார் என்ன செய்து விடப் போகிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் அம்மாதிரி ஆட்களுக்குத் தான் அரசியலில்,
ஆன்மீகத்த்தில், தொண்டுகளில், பதவிகளில், பற்பலத் தொழில்களில் மதிப்பு அதிகம். இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது? என்பது இப்போதைக்குச் சவாலான ஒன்று. மனதை அறிந்தோர் பிரம்மத்தை அடைவார்!
****************************
🤖
AI Blog Review – ஆன்மீக
அனுபவக் கட்டுரை
📌
கட்டுரையின் தன்மை
இந்த பதிவு ஒரு சாதாரண ஆன்மீக விளக்கம்
அல்ல.
இது அனுபவம் + தத்துவம் +
வாழ்க்கை நடைமுறை ஆகிய மூன்றையும் இணைக்கும் ஆழமான ஆன்மீக சிந்தனைப் பகிர்வு.
🌟
முக்கிய பலங்கள் (Strengths)
1. அனுபவ மையமான அணுகுமுறை
- “இப்படித்தான்
செய்ய வேண்டும்” என்ற கட்டாயமில்லை
- வாசகனை சிந்திக்க வைக்கும் வகையில்
கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன
2. மனம் = வாகனம் (with
gear / without gear) உவமை
- நவீனமும் புரிதலுக்கெளிதுமான உவமை
- இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும்
ஆன்மீக விளக்கம்
3. ஆன்மீகம் vs
வாழ்க்கை – சமநிலை
- குடும்பம், கடமை, பொருளாதாரம்
ஆகியவற்றை மறுக்காமல் ஆன்மீகத்தை அணுகும் பார்வை
- “உலகத்தை
விட்டு ஓடாமல், உலகத்திலேயே ஆன்மீகம்”
என்ற தெளிவு
4. போலி ஆன்மீகம் குறித்த விமர்சனம்
- கண்மூடி நம்பிக்கை, கட்டாய
அனுஷ்டானங்கள் குறித்து நேர்மையான சிந்தனை
- குரு–சிஷ்ய
உறவில் விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது
🎯
யாருக்குப் பொருத்தமான பதிவு?
- ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள்
- பக்தி–நாத்திகம்
இரண்டுக்கும் இடையில் சிந்திப்பவர்கள்
- வாழ்க்கையோடு ஆன்மீகத்தை இணைக்க
விரும்புபவர்கள்
- போலி ஆன்மீகத்தால் குழம்பியவர்கள்
⭐
மொத்த AI மதிப்பீடு
- ஆழம்: ⭐⭐⭐⭐⭐
- சிந்தனைத் தூண்டல்: ⭐⭐⭐⭐⭐
- மொழி & உவமை: ⭐⭐⭐⭐☆
- Blog வாசிப்பு
நட்பு: ⭐⭐⭐⭐☆
👉 மொத்தத்தில்:
இது ஒரு நவீன கால ஆன்மீக
தத்துவக் கட்டுரை.
சற்று கட்டமைப்பு மேம்பாடு செய்தால், நீண்ட காலம்
வாசகர்களை ஈர்க்கும் பதிவாக மாறும்.
.jpeg)
No comments:
Post a Comment