மனம்– லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் -5
கு.கி.கங்காதரன்
நல்ல எண்ணங்களைக் கொண்டு இருக்கும் மனம், எதற்கும் கவலை படாது, புலம்பாது, ' நல்லதே நடக்கும், நன்மையில் முடியும்' என்று என்றும் உறுதியாய் இருக்கும்.
கெட்ட எண்ணங்கள் கொண்டு இருக்கும் மனமோ, எந்த நேரத்தில் என்ன
நடக்குமோ? என்ற
பயத்தில் இருக்கும். வெளியே சிரித்த முகத்தோடு பாசாங்கு செய்தாலும் , மனதிற்குள் அந்த கெட்ட
எண்ணங்கள் புகைந்து கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் அந்த மனம் வெடிப்பதோடு, அவரின் உறவுகளையும், சுற்றத்தார்களையும் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடும்.
அதனால், மனதை
வளர்ப்பதில், காப்பதில்
மிகுந்த எச்சரிக்கை தேவை .
கு.கி.கங்காதரன்
மனமானது, இருப்பதைப் பார்த்து திருப்தி அடையாமல், இல்லாததைப் பார்த்து
ஏங்கும் இயல்புடையது. அதாவது, பெரும்பாலும் எதிர்மறையாகச் சிந்திக்கும் தன்மை கொண்டது. எதையோ
எதிர்பார்க்கும் குணமுடையது. யார்,
எவர் என்று கூடத் தெரியாது. ஆனால், அவர்களைப்
பார்த்துப் பொறாமை படும். தானும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணி, நல்ல
அல்லது கெட்ட வழியில் ஈடுபட்டு, இருப்பதையும் இழந்த மனிதர்கள் தான் ஏராளம். காரணம்! ஒவ்வொருவருக்கும்
ஒருவிதமானத் குறிப்பிட்ட அளவுக்குத் திறமைகளைக் கொடுத்து தான் இறைவன் நம்மைப்
படைத்திருக்கிறார். அதைவிட எதிர்பார்ப்பது ஆபத்து தரும். எப்படி
அதனை அறிந்து கொள்வது?
நீங்கள் இருக்கும் நிலைமையிலிருந்து உயரேச் செல்ல வேண்டும் என்றால், முயற்சி, கடின உழைப்பு, புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை, இதர முதலீடுகள் ஆகியவை மூலதனமாகக் கொண்டு முன்னேறலாம். அப்படி முன்னேறிகொண்டு இருக்கும் போது, உங்களுடைய திறமையும், செயலும் சரியான திசையில் இருந்தால் முன்னேற்றம் தடைபடாது. மீறியும் ஓரளவுக்கு மேல் மேற்கூறியது எதுவுமே உதவவில்லை என்னும் சமயத்தில் தான் நீங்கள், உங்களை நீங்களே மனதிற்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அதாவது, 'எனதுத் திறமை இவ்வளவு தான். இதற்கு மேலே செல்வதென்றால் என் திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்ட பின் முயற்சி செய்ய வேண்டும் ' என்று மனதை சமாதானம் செய்து, அதற்கானச் செயலில் ஈடுபடவேண்டும். இப்படி இல்லாமல், தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளாமல் காரியத்தில் இறங்கினால் மனம் துன்பத்திற்கு ஆளாகி, வாழ்கை முழுவதும் கஷ்டத்திற்குத் தள்ளிவிடும். பலர், அதாவது நேற்று பணம், பதவி, அதிகாரத்தில் இருந்தவர்கள் சடாரென்று பாதாளத்தில் விழுவது இதனால் தான்.
ஒருவித எண்ணங்களுக்கு அடிமை பட்ட மனதை 'பிரம்மத்தை நோக்கி ' மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு செயலாகும். அது அவனுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாது. பெரும்பாலான மனம், அதெல்லாம் முடியாது என்று உடனே நிராகரித்து விடும். சிலர், அப்படிச் செய்து பார்ப்போம். சரியாக வந்தால் பின்பற்றுவோம். இல்லையேல் உதரித்தள்ளுவோம் என்று அவர்களின் மனம் நினைக்கும். மிகவும் அரிதானவர்களே , இதில் எனக்குத் தெரியாத நல்லது இருக்கும் என்று கண்களை மூடிக் கொண்டுப் பின்பற்றும் மனம் கொண்டவர்களும் உண்டு.
பெரும்பாலான மனம், தானே தவறு செய்தாலும் , தனக்கு எவ்விதத் தீங்கும் வந்து விடக் கூடாது என்று தான் பார்க்கும். அதற்கு எந்த அளவுக்குப் போவதற்கும் துணியும். அதாவது தான் செய்த செயலுக்கு ஏதோ மிகப்பெரிய அளவில் எதிர்வினை நடக்கப் போகிறது என்று அறிந்தாலே, அச்செயலுக்காக , அவர்களின் மனம் 'சரி' என்று விதண்டா வாதம் செய்யும். அல்லது அதை மூடிமறைக்கும். தான் செய்யவில்லை என்று பொய் சொல்லும். தன்னைக் காத்துக்கொள்ள பலவித முயற்சிகள் செய்யும். சிலரது மனம், அச்செயலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் கண்டும் காணாது இருக்கும். அல்லது தெரியாதது போல் பாசாங்கு செய்யும். பலவிதங்களில் நெருக்கடி கொடுத்த பிறகு ஒத்துக் கொள்ளும். அதாவது, அப்படி உண்மையைச் சொல்லாத, ஏற்காத மனம், எதற்குச் சமானம் என்றால், நம் உடலில் உள்ள உடல்நோயோ அல்லது மனநோயையோ மறப்பது போலாகும். அது எது வரைக்கும் நிலைக்கும் என்றால், தன்னால் மேற்கொண்டு எவ்விதத் துன்பமும், வலியையும் தாங்க முடியாது என்றபோது தான், மனமானது, தனக்குள் இருக்கும் நோயை அல்லது துக்க உணர்வை வெளிப்படுத்தும். இதுவே காலாகாலத்தில் உண்மையைச் சொல்லிவிட்டோமானால் மனமும் உடலும் சிறிதளவே கஷ்டப்படும். அந்தக் கஷ்டமும் நாளடைவில் சரியாகிவிடும்.
தாய், தந்தையர் மனங்கள் ஒன்றுபட்டதால் தான் பிள்ளைகள் பிறக்கின்றன. அப்பிள்ளைகள் எப்படி எவ்வாறு எந்நிலையில் இருக்கும் என்று பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும். அதாவது, அவர்களது சூழ்நிலையும் பொருளாதார வசதியும் நன்கு அறிவார்கள். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பணக்காரர்களாக இருப்பார்கள். ஏழைவீட்டுப் பிள்ளைகள் ஏழையாகவே இருப்பார்கள். இதில் யோசிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது? ஆனால், அந்தப் பிள்ளைகளின் நிலை, பெற்றோர்களைப் போல் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அந்தப் பிள்ளைகளின் செயல்களைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை இருக்கும். இதுவே நியதி.
மனமானது சில வேதனையானச் செயல்களைத் தெரிந்து கொண்டே ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டது. 'பிரசவவேதனை' தெரிந்து கொண்டே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வர். இன்றைய காலகட்டத்தில் வேலையின்மை, போட்டி, பொறாமை, அதிகார வர்க்கங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற நியதி ! இவையெல்லாம் இருப்பது தெரிந்தே மனம், குழந்தைப் பேறுவுக்கு ஆசை படுகிறது. ஆக, தன் வாழ்கையில் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதைத் தெரிந்தே இருக்கிறான். ஆனால், அவனது இயலாமை மறைக்க, சோம்பேறித்தனத்தால் அவனது மனம், மற்றவர்கள் மீது ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறது. இதுவே பெரும்பாலான மனதின் இயல்பு.
அப்படிப் மனம் பல சேஷ்டைகள் செய்கின்ற போது, இதில் இறைவனின் பங்கு என்னவென்று நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். எல்லாமே உங்களால் தான், நீங்கள் செய்யும் செயலினால் உங்கள் வாழ்க்கைச் செல்கிறது என்று இருக்கும் போது இறைவனின் பங்கு நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பலர் இவ்வாறு நினைக்கிறார்கள். அதாவது, இறைவன் /பிரம்மம் நம்மை நல்ல மாதிரியாகவே படைத்திருக்கிறார். வாழ்கையில் உயர நன்மை செய்கிறார் என்ற சிந்தனையே இருக்கும். ஆதனால் , நல்லது நடந்து விட்டால் இறைவனை நினைக்காமல் தன்னால் நடந்தது என்று எண்ணிக் கொண்டு , பிறரின் ஆஹா, ஓஹோ என்றப் பாராட்டு மழையில் நனைகிறான். கெட்டது நடந்து விட்டாலோ, இறைவனை நினைக்க ஆரம்பிக்கிறான். இரண்டுமே வாழ்கையில் நடந்தாலும், இரண்டாவது தான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறுகிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஏன் மனிதனுக்கு நல்லதை மட்டுமே நடக்கச் செய்யாமல் துன்பம் அதிகமாக இருக்கும்படி செய்கிறான்?
இதற்கான பதில், என் எண்ணத்தில் உதித்ததை எழுதுகிறேன். இறைவனின் மனிதப் பிறவியைப் படைக்கும் போது மேற்படி கூறப்படுபவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மனிதனைப் படைக்கும் போது, கூடவே பசியைப் படைத்துள்ளார். அதோடு மதிப்பு மிக்க ஐம்புலன்களையும், அனுபவிக்க அறிவையும் சுற்றிலும் இயற்கை அதிசயங்களையும் படைத்துள்ளார். அதுமட்டுமா, இயற்கையாகவே மனிதனுக்குக் கவலையோடு, கஷ்டத்தையும், கடமையும் கொடுத்து தன்னை எப்போதும் நினைத்துக் கொள்ள மனதையும் படைத்துள்ளார். அதாவது தன்னை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவே பசியைப் படைத்துள்ளார்.
அந்தப் பசியைப் போக்க, எல்லோரும் கஷ்டப்பட்டே தீரவேண்டும். அப்படி இருந்தால் தான் தன்னை நினைப்பான் என்பதே இறைவனின் சட்டம். இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ சில பல கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். அதைப் போக்க பலர் பலவகையில் முயற்சி செய்து முறியடித்து வருகிறார்கள். அப்படி முயற்சி செய்யாமலும், முயற்சியில் வெற்றி கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்களும் அனேகம் பேர் உள்ளனர். இதற்குக் காரணம், “இறைவனை நினைவில் கொள்ளாத மனநிலை உள்ளவர்கள்”.
இவர்கள் உண்மையில் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் மனதில் வெளியில் சொல்ல இயலாத துன்பத்தில் இருப்பார். ஏனென்றால், நீ எப்போதும் என்னை (கடவுளை) நினைக்க வேண்டும் என்ற விதியை மதிக்காததே. கடவுளை நினைப்பவர்கள் கஷ்டப்படுவது எதற்கு என்றால், வெளி உலகுக்கு நல்லது செய்வது போன்று இருந்தாலும், உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் இருப்பதே. என்னதான் கடவுளை நினைத்தாலும் தூய மனம் இருந்தால் தான் கடவுளின் கருணை கிடைக்கும். வெகு சிலர், தன்னையே இறைவனிடம் முழுவதுமாக ஒப்படைத்து தன்னால் முடிந்தவரை மக்களுக்கு நன்மை செய்பவர்கள் எப்போதுமே இன்பமாக இருப்பார்கள். தங்கள் கஷ்டத்தை எல்லாம் கடவுளே அனுபவிப்பார். பக்தனுக்கு எப்போதும் உதவிசெய்து கொண்டே இருப்பார். அவன் கஷ்டம் நீங்கும். கடமை பூர்த்தியாகும். பசிப்பிணி அண்டாது. மனம் முழுவதும் இறைவனே நிறைந்து இருக்கும். ஐம்புலன்கள் அவர் சொன்னபடியே கேட்கும். இயற்கையும் அவர் அசைவுக்கு இசையும்.
இதிலிருந்து நாம் ஒன்றை எப்போதும் நினைவு கொள்ள வேண்டும். அதாவது, இறைவன் நம்மைப் படைத்தது அவர் படைத்த வற்றை நல்ல முறையில் அனுபவிப்பது மற்றும் அவரை என்றும் நம் நினைவில் கொள்வதற்கு. இறைவன் நமக்கு நல்லபடி படைக்க எண்ணினால் பசியைக் கொடுத்திருக்க மாட்டார்கள் அல்லவா! ஆகவே, நாம் எப்போதுமே இறைவனை நினைப்போம். மனதை தூய்மையாய் வைத்துக் கொள்வோம். பிரம்மத்தை அடைய முயற்சி மேற்கொள்வோம்.
பாகம் : 6 தியான நித்திரை அனுபவமும் அதன் எல்லையும்
என்ற பகுதியுடன் இந்த 'மனம்' என்னும்
தொடர் நிறைவு பெறுகிறது.
நன்றி. வணக்கம்.
**************
பாகம் 5 – சுருக்கம் :
மனமானது இயல்பாகவே எதிர்மறை எண்ணங்களுக்கும், தேவையற்ற எதிர்பார்ப்புகளுக்கும் இழுக்கப்படும் தன்மை கொண்டது. தன் திறமைகளை உணராமல், பிறருடன் ஒப்பிட்டு ஆசைப்பட்டால், அதே மனம் தன்னைத் தானே துன்பத்திற்குள் தள்ளிவிடும். உண்மையை மறைக்கும் மனம் நோயைப் போல வளர்ந்து, காலத்தால் பெரும் வேதனையைக் கொடுக்கும். மனத் தூய்மையுடன் இறைவனை நினைத்து, தன் எல்லைகளை அறிந்து செயல்படும் போதே மனம் அமைதிக்கும், வாழ்க்கை சமநிலைக்கும் வழிவகுக்கும்.
*****************************
கீழே AI Review + Comments + Suggestions ஒழுங்காக வழங்குகிறேன்.
.jpeg)
No comments:
Post a Comment