Pages

Showing posts with label என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில். Show all posts
Showing posts with label என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில். Show all posts

Monday, 10 December 2012

என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில்

மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி 
மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய 
கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை 




          


தலைப்பு :


என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் !
ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில்!

இதோ கவிதை !


பூ வாசம் தேன் சுவை அனுபவித்தோர் மறுப்போரோ?
தமிழ் வளம் மொழி இனிமை சுவைத்தோர் மாறுவோரோ ?

ஆயிரமாயிரம் ஆண்டைக் கடந்து சாகாவரம் பெற்ற மொழி 
உணர்வுள்ள எழுத்துக்களே வளமான மொழி 

உயிராய் மெய்யாய் உயிர்மெய்யாய் கலந்த மொழி 
வல்லின மெல்லின இடையினமுள்ள ஒய்யார மொழி 

உச்சரிப்புக்கேற்ற சொற்கள் கொண்ட தெளிவான மொழி 
எம்மொழியும் கலவாத கன்னித் தமிழ் மொழி 

வள்ளுவனும் பாரதியும் பெற்றெடுத்த செம்மை மொழி 
எழிச்சி வீரமுடன் தாலாட்டும் அமுதமொழி 

இலக்கண இலக்கிய முத்தமிழ் கொடுத்த சிறப்பு மொழி 
எதற்கும் விலைபோகாத தன்மான மொழி 

எப்போதும் கடன் வாங்காத மதிப்பான மொழி 
எம்மொழிக்கும் வாரிவழங்கும் வள்ளல் தன்மை மொழி 

வந்தாரை வாழவைக்கும் ஈரமுள்ள மொழி 
ஆன்மீக கலாச்சார பண்பாட்டுக்கு முன்னோடியான மொழி 

எல்லோரும் ஓர் இனம் ஓர் குலம் உணர்த்திய அருமை மொழி 
எட்டுத் திசையில் புகழ் பரவி நிற்கும் உயந்த மொழி 

தமிழ் கடவுளாக வணங்கி வழிபாடும் மொழி 
பிறமொழி சிறப்பென்பார் செந்தமிழின் ஆழம் அறியாதோர் 

இத்தனை வளம் கொண்ட மொழி 
கையேந்த அவசியமுண்டோ பிறமொழியில்.



நன்றி 



வணக்கம் 



ஆக்கியோன் 



மதுரை கங்காதரன்