Pages

Thursday 26 July 2012

அதி வேக சமையல் - விஞ்ஞான விளக்கங்களுடன் மற்றும் பயனுள்ள குறிப்புகள்

அதி வேக சமையல் -
 விஞ்ஞான விளக்கங்களுடன் 
 மற்றும் பயனுள்ள குறிப்புகள்



கணவன்மார்களே ! பெற்றோர்களே , பெரியவர்களே சமையல் என்பது எவ்வளவு கஷ்டம். அந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாது எவ்வளவு ருசியாக உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை ஏதம் மூலம் தெரிவித்துக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.   




அறுசுவை விரும்பும் நாக்கிற்கு நாம் திருப்திபடுத்துவது இந்த சமையல் மூலம்  தான். நாக்கிற்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  நம் வாழ்க்கை ஒரு சான் வயிற்ருக்காக தான். அந்த வயிற்ரை திருப்திபடுத்துவது இந்த நாக்கு. இந்த நாக்கை திருப்திபடுத்துவது சமையல்.

சமையல் எதற்காக ?

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் அளவும் , சத்துக்களும் மிகவும் அவசியமானது. நமது உடலுக்கு உணவு தேவைபடும்போது மணியடித்தார் போல  பசி வயிற்ரை கிள்ளுகிறது. ஏனென்றால் வயிற்றில் உள்ள ஒருவித அமிலம் சுரப்பதால், அந்த அமிலம் வயிற்றில் உள்ள உறுப்புகள் மீது படும்போது நமக்கு பசி எடுக்கிறது. அதக்கு அந்த அமிலத்திற்கு இணையான உணவுஅளவை எடுத்துக்கொண்டோமானால் நமது பசி அடங்கிவிடுகிறது. ஒருவேளை நாம் அதை அசேட்டையாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் நாம் 'அல்சர்' என்ற நோய்க்கு தள்ளப்படுவீர்கள்.அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அப்போது கட்டாயம் அமிலதன்மையுள்ள புளி , காரம் போன்ற உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

இதற்க்கு பிறகு, சத்து என்று பார்த்தோமானால், சத்துக்களின் அளவும் மிகவும் கூடினாலும் , மிகவும் குறைந்தாலும் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.அப்போது சத்துக்கள் குறைந்தால் நமது உடல் சோர்வுடனும், தெம்பு இல்லாமலும் காணப்படும். சத்துக்கள் அதிகமானால் நமது உடல் பலவித அசௌரியங்களை எதிர்கொள்ளும். அதாவது மாவு சத்து (புரோட்டீன்), உப்பு சத்து (சால்ட்), சர்ககரை (சுகர்) , கொழுப்பு சத்து (கொலஸ்டிரால்), ஊட்ட சத்துக்கள் ( நுண்னூட்ட சத்துக்கள்) போன்ற சத்துக்களின் அளவை பொறுத்து நமது உடல் அரோக்கியம் அமைகிறது. இந்த சத்துக்களின் அளவை நமது சமையல் மூலம் நிலைபடுத்திக்கொள்ளலாம்.    

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் :

சமையல் செய்வது நாம் சோம்பேறித்தனப்பட்டு அல்லது நேரமின்மை காரணமாக  ஹோட்டலுக்கோ, பாஸ்ட் புட் , மெஸ்சுக்கோ போய் சாப்பிடும் போது எல்லோருக்கும் பொதுவான் உணவுகளைத்தான் பரிமாறுவார்கள். அனால் கொடுக்கின்ற பணத்தை வேஸ்ட் செய்யாமல் இருப்பதற்காக வேறு வழியில்லாமல் சாப்பிட்டு விட்டு மறுநாள் டாக்டர் செலவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேறுவழியே இல்லாதவர்கள் கட்டாயம் இதை அனுபவித்தே ஆகவேண்டும். பேட்சி லர்கள், ஊருக்கு செல்பவர்கள் போன்றவர்களிடம் கேட்டால் கதை கதைகதையாய் தங்கள் அனுபவத்தை சொல்வார்கள். ஏன் இதற்காக சீக்கிரம் கூட கல்யாணம் செய்து வைப்பார்கள்.

சில சமயங்களில் கூட்டு குடும்பங்கள் கூட தனிகுடும்பமாதுண்டு. அதாவது கூட்டு குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து சற்று எல்லாமே உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இளசுகளோ அறுசுவையும் வேண்டும் என்று நினைப்பார்கள். முடிவில் கூட்டு குடும்பம் கட்.. கட்.... ஆனால் அவர்களே பெரியவர்களாக மாறும்போது தாங்கள்  செய்த தவறுகளை உணருவார்கள். அதாவது இளமையில் அளவுக்கு அதிகமாக உண்டதால் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறோம் என்று.

ஏன் பலருக்கு சமையல் செய்வது 
பிடிக்கவில்லை ? :




சமையல் பலருக்கு எட்டிகாயாகத்தான் இருக்கின்றது. ஏனென்றால் சோம்பேரித்தனம் தான். அனைத்தும் அங்கங்கே போய்  வாங்கிட்டு வரணும். சுத்தம் பண்ணனும். பத்திரப்படுத்தி வைக்கணும். காய்கறிகள் நறுக்கணும். சரியான் அளவு மற்றும் கவனத்துடன் எல்லா வீட்டு உபயோகப்பொருட்களை கையாள வேண்டும். கவனக்குறைவினால் கை,கால் சூடு படலாம், உடம்பில் சூடான பொருட்கள் தெறிக்கலாம். சில வேளைகளில் மின்சார ஷாக் கூட வாங்க நேரிடும். அனைத்திற்கும் மேலாக  பாதிரங்களையெல்லாம் நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

திட்டமிடாமல் வேலை செய்வதாலும் , எளிய வழிகளை பின்பற்றாததாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாததாலும்  எப்போதும் சமையலறையே கதி என்றிருப்பதாலும் சிலருக்கு சமையறை அலர்ஜியாக மாறிவிடுகின்றது.

மேலும் நாக்கு சுவைக்காக டிசைன் டிசைனாக சமைக்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் ! 

மேற்கூறியதெல்லாம் ஒரு காரணமே கிடையாது. ஏனென்றால் இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் செயல் முறை விளக்கங்களுடன் பாதுக்காப்பாக சமையலறையிலுள்ள பொருட்க்களை எப்படி கையாளுவது முதல் டிசைன் டிசைனாக சமையல் வரை தெளிவாக கிடைக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் அதை பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆக, உங்களுக்கு தினமும் வீட்டில் சுவையாக உணவு கிடைத்துக்கொண்டிருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்தால் நீங்கள் விரும்பும் ருசியான் உணவு கிடைக்கும். உங்களது ஆரோக்கியமும் நன்றாய் இருக்கும். அதற்காக சமைத்து கொடுப்பவர்களை மனதார பாராட்டுங்கள். மேலும் உங்களுக்கு புது சுவை கிடைக்கும்.

எதற்காக வெளியில் சாப்பிடுவதை
 தவிர்க்க வேண்டும்? :




உடல் ஆரோக்கியம் தண்ணீரிலிருந்து ஆரம்பமாகிறது. மினரல் வாட்டர் போதுமானது. ஆனால் வெளியில் சாப்பிடும் இடங்களில் இவைகள் கிடைப்பது கஷ்டம். அப்படி கிடைத்தல் அதிக பணம் செலவாகும். குறைந்தது கொதித்து ஆறிய தண்ணீர் போதும். அதுவும் கிடைக்காது. நீங்கள் இவை இரண்டில் ஒன்றை பின்பற்றினால் மருத்துவ செலவு 80 % குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

முன்பெல்லாம் உணவை சேவை மனப்பான்மையோடு வழங்கிவந்தனர். விலைவாசியும் குறைவு தான். அதனால் தரமான உணவு கிடைத்தது. ஆனால் இப்போது லாப நோக்கத்தோடு சில வேளைகளில் ருசிக்காக உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனப் பொருட்களையும் தயங்காமல் சேர்க்கின்றனர். இதனால் ஆரோக்கிய சீர்கேடு சிலகாலம் கழித்து தெரிகின்றது. சிலர் தரமான உணவுகளை தருகிறார்கள். அவர்களை அடையாளம் காண்பது சிரமம் தான். வெளியில் பெரும்பாலும் பகட்டில் கவர்ந்து கலர் கலராக கொடுத்து மயங்குவது உண்மை.  அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை பற்றி கவலைபடுவது கிடையாது. தங்களுக்குத் தேவை லாபம். அந்த நோக்கத்திலே தான் செயல்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களோ அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிடுகின்றனர். அவர்களுடைய என்னமோ ருசியாக இருக்குதா? வயிறு நிறைகின்றதா? என்பதை மட்டும் பார்கின்றனர். அவர்களது அவசரத்தை பணமா க்குகின்றனர். ஏன் கொடுக்கும் பில்லை  கூட சரி பார்க்க தருகிறனர். டிப்ஸ் கொடுத்துவிட்டு சட்டென்று வெளியில் வந்துவிடுகிறனர். யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்? 

இவற்றையெல்லாம்  தவிர்பதற்காக தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்காக, குறைந்த நேரத்தில் சுத்தமாக, சுகாதாரமான முறையில் விஞ்ஞான விளக்கத்துடன் முதன் முறையாக ஒரு முயற்சி. மேலும் நீங்களே திட்டமிட்டு உங்களுக்கு பிடித்த உங்கள் உடலுக்கு ஒத்துப்போகும் உணவை சமைப்பதால் உங்களுடைய நிர்வாகத்திறமை வெளிப்படும். குனித்து நிமிர்ந்து செய்வதால் நீங்கள் உங்களை யறியாமலே உடல் பயிற்சி செய்கிறீர்கள். அதனாலும் நீங்கள் சுறுசுறுப்பை உணருவீர்கள்.

அதிவேக சமையல் ஆரம்பம்:




முதலில் தண்ணீரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்ப்போம். 

விஞ்ஞான விளக்கம் : தண்ணீரை பெரும்பாலும் அவிப்பதர்க்கும், உணவுப்பொருட்களை கரைப்பதற்கும், பல பொருட்களைகொண்டு  சரியான கலவை தயாரிப்பதற்கும் மற்றும் பல வழிகளில் உபயோகப்படுத்தபடுகின்றன.

தண்ணீர் பொதுவாக 25 C முதல் 30 C வரை வெப்பம் இருக்கும். நீங்கள் அதை முதலில் 100 C வரை ( தண்ணீரின் கொத்தி நிலை ) சூடு செய்து அதற்குமேல் சூடுபடுத்த படும்போது தான் அது ஆவியாக மாறுகின்றது. அந்த மாற்றம் தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதிக எரி பொருட்கள் செலவாகிறது. 

சில உதாரணங்களை பார்ப்போம்: 

கவனிக்க : ( முக்கியமான பொருட்கள் மட்டும் .. உப்பு போன்றவை கொடுக்கப்படவில்லை)




1. அரிசி + தண்ணீர்  + வெப்பம்                                 = சோறு 

2. பச்சை காய்கறிகள் + தண்ணீர்  + வெப்பம்   = வேக வைத்த காய்கறிகள்   

3. ரசப்பொடி + தக்காளி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = ரசம் 

4. சாம்பார் பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = சாம்பார் 

5. கொழம்பு பொடி + காய்கறி  + புளி  + தண்ணீர்  + வெப்பம்   = கொழம்பு 

6. ரவை + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = உப்புமா     

7. நூடுல்ஸ்    + தாளிப்பு சாமான்கள் + தண்ணீர்  + வெப்பம்   = நூடுல்ஸ் 

8. மாவு ஊற்றிய இட்லி கொப்பரை + தண்ணீர் + வெப்பம்   = இட்லி 

9. காபி பொடி + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான காபி 

10. டீ தூள்  + சர்க்கரை + தண்ணீர் + வெப்பம்   = சுவையான டீ போன்றவை ...

மேற்கூறியவற்றில்  தண்ணீர் + வெப்பம் பொதுவாக வருகின்றது.

ஒவ்வொரு முறை தண்ணீரை சூடேற்றி கொண்டிருந்தாள் நேரம் அதிகமாகும்.


ஆகவே நாம் பச்சை தண்ணீருக்கு பதிலாக வெந்நீரை எல்லாவற்றிக்கும் உபயோகித்தால் உங்கள் சமையல் நேரம் பாதியாக குறையும்.


இந்த வெந்நீரை குக்கரின் மூலம் சூடுபடுத்தினால் இன்னும் நேரம் குறையும்.

மீதமுள்ள தண்ணீரை குடிப்பதற்கும் வைத்துக்கொள்ளலாம். 

மேலும் குறைந்த அளவு எரிபொருள் செலவு செவதால் பணம் சிக்கனமகிறது 

சீக்கிரம் சூடாவதால் அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கிறது.

நீங்களும் முயச்சி செய்து பாருங்கள். அதன மகிமையை உணருவீர்கள்!
உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வீர்.

இன்னும் வரும்.

*********************************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் / போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

No comments:

Post a Comment