Pages

Saturday 14 December 2013

பலவித கொள்ளைக்காரர்கள் ! - DIFFERENT KINDS OF ROBBERS!

பலவித கொள்ளைக்காரர்கள் !



DIFFERENT KINDS OF ROBBERS!

                  புதுக்கவிதை 

            மதுரை கங்காதரன் 

பாசத்தினால் தன் பிள்ளைகளின் அன்பைக் 
கொள்ளையடிப்பவள் தாய்.

தியாகத்தால் குடும்பத்தின் உறவுகளை 
கொள்ளையடிப்பவள் மனைவி.

குடும்பத்திற்காக சம்பாதித்து அன்பை 
கொள்ளையடிப்பவன் கணவன்.

பெற்றோர்களுக்கு தனது கடமை பாசத்தை 
கொள்ளையடிப்பவர்கள் பிள்ளைகள். 


நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களைக் 
கொள்ளையடிப்பவன் நடிகன்.

ஆபத்து சமயத்தில் உதவி நட்பை 
கொள்ளையடிப்பவன் நண்பன்.

சோதனைகளைச் செய்து பக்தர்களின் மனதை 
கொள்ளையடிப்பவர் இறைவன்.

மக்களின் செல்வங்களைத் தெரியாமல் 
கொள்ளையடிப்பவன் திருடன்.


மக்களை தனது பேச்சினால் 
கொள்ளையடிப்பவர் பேச்சாளர்.

செவிகளை தன் இசை பாடல்களால் 
கொள்ளையடிப்பவன் இசைக் கலைஞன்.

உடல் அசைவினால் பார்பவர்களை மயக்கி 
கொள்ளையடிப்பவன் நடனக் கலைஞன்  


தொண்டர்களின் உழைப்பை கொள்கையினால் 
கொள்ளையடிப்பவன் அரசியல்வாதி.

மக்களின் உரிமைகளை ஓட்டுகளின் மூலம் 
கொள்ளையடிப்பவர் அரசியல் தலைவர்.

வியாபரத்தை வாடிக்கையாளர்களை லாப முறையில் 
கொள்ளையடிப்பவன் பணக்காரன்.

மக்களை பலவழிகளில் ஏமாற்றிக் 
கொள்ளையடிப்பவன் அறிவாளி.


சேவைகள் மூலம் மக்கள் மனங்களை 
கொள்ளையடிப்பவன் சமூக சேவகன்.

அன்பின் மூலம் இதயத்தை 
கொள்ளையடிப்பவகள் காதலர்கள். 

இலக்கியம் மூலம் மக்களின் உணர்வுகளைக் 
கொள்ளையடிப்பவன் கவிஞன்.

***************************************************************************************



No comments:

Post a Comment