Pages

Saturday 14 December 2013

மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் ! - HAPPY AND SORROWS

மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் !

HAPPY AND SORROWS
                                                

புதுக்கவிதை 
               
     மதுரை கங்காதரன் 

விட்டுக்கொடுத்தல் இருக்கும் வரை சீண்டிப்பார்பவர்கள் இருப்பார்கள் 
ஆட்டுவிப்பவர்கள்  இருக்கும் வரை ஆடுபவர்கள்   இருப்பார்கள் 

பசி இருக்கும் வரை பஞ்சம்   இருக்கும்  
இரக்கம்  இருக்கும் வரை  தவறுகள் நடக்கும் 

நல்லவர்கள்  இருக்கும் வரை  கேட்டவர்கள்  இருப்பார்கள் 
அறிவாளிகள்  இருக்கும் வரை   அறிவுரை சொல்பவர்கள் இருப்பார்கள் 

நீதிமன்றம்  இருக்கும் வரை  வழக்குகள்  இருந்துகொண்டிருக்கும் 
காவலர்கள் இருக்கும் வரை திருடர்கள்   இருப்பார்கள் 

 நாடுகள் இருக்கும் வரை  சண்டைகள் இருந்து கொண்டிருக்கும்  
 மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் 


 காதல்  இருக்கும் வரை   சாதலும் இருக்கத் தான் செய்யும்  
 மிதவாதம் இருக்கும் வரை   தீவிரவாதம் இருக்கும்  

 பரிசுகள் இருக்கும் வரை அதிர்ஷ்டம் இருக்கும்  
 எல்லைகள் இருக்கும் வரை  அதை  மீறுதலும் இருக்கும் 

 நல்ல மனம் இருக்கும் வரை பொறாமை உடையவர்களும்   இருப்பார்கள் 
ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகம் இருக்கும்  

 ஆக்கம் இருக்கும் வரை அழிவுகள் இருக்கத் தான் செய்யும்  
 படித்தவர்கள் இருக்கும் வரை முட்டாள்கள்  இருப்பார்கள் 

 பணக்காரர்கள் இருக்கும் வரை ஏழைகள்  இருப்பார்கள் 
 பகல் இருக்கும் வரை   இரவு என்று ஒன்று இருக்கும் 

 ஏற்றங்கள் இருக்கும் வரை   இறக்கங்கள் இருப்பார்கள் 
 சாதிகள் இருக்கும் வரை  சச்சரவுகள்  இருப்பார்கள் 

 லாபம் இருக்கும் வரை   நஷ்டம் என்று இருக்கும் 
 உண்மை இருக்கும் வரை பொய் என்று ஒன்று இருக்கும்  

அழகு  இருக்கும் வரை  அசிங்கங்களும் இருக்கும்  
 நியாயங்கள் இருக்கும் வரை அநியாயமும் இருக்கும் 

 நட்பு இருக்கும் வரை  பகையாளிகளும் இருப்பார்கள் 
அரசியல்வாதிகள்  இருக்கும் வரை  லஞ்சம், ஊழல் இருக்கும்  

வெள்ளை  இருக்கும் வரை   கருப்பு இருக்கும் 
டாக்டர்கள் இருக்கும் வரை நோயாளிகள் இருப்பார்கள் 

ஆண் பெண் இருக்கும் வரை  குடும்பம் என்று ஒன்று இருக்கும் 
நல்லநேரம் இருக்கும் வரை கெட்டநேரம் இருக்கும்  


ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை   ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் 
சப்தம்  இருக்கும் வரை  அமைதியும் இருக்கும் 

உழைப்பவர்கள் இருக்கும் வரை  சோம்பேறிகளும்  இருப்பார்கள் 
சரித்திரங்கள் இருக்கும் வரை  தரித்திரங்களும் இருக்கும்   

காரியம் இருக்கும் வரை   காரணங்களும் இருக்கும் 
பலசாலிகள் இருக்கும் வரை கோழைகள் இருப்பார்கள் 

அரசியல் இருக்கும் வரை ஓட்டு போடுபவர்கள் இருப்பார்கள் 
உலகம் இருக்கும் வரை   மனிதர்கள் இருப்பார்கள் 

உறவுகள்  இருக்கும் வரை பிரிவுகள் இருக்கும்  
அன்பு இருக்கும் வரை தண்டனை கொடுப்பவர்கள்   இருப்பார்கள் 


######################################################################################

No comments:

Post a Comment