Pages

Sunday 12 April 2015

DO YOU WANT STEADY MIND ? சஞ்சலமும் மனமும்

DO YOU WANT STEADY MIND ?
      சஞ்சலமும் மனமும்
               புதுக்கவிதை
         மதுரை கங்காதரன்

பணம் கொஞ்சம் அதிகமாக வந்தாலே
மனசு ஏதேதோ என்னென்னமோ செய்யத் துடிக்கிறது

பெண்னொருத்தி கொஞ்சம் சிரித்தாலே
கற்பனைக் காதல் குதிரை மனசில் ஆயிரம் ஓடுது

புகழ் மழை கொஞ்சம் அதிகம் பெய்தாலே
மனசு அடுத்தடுத்து அலைபாயுது

மதிப்பெண் கொஞ்சம் அதிகம் பெற்றாலே
மனசு மேல்படிப்புக் கனவு கண்களில் மிதக்குது

அதிர்ஷ்டம் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலே
மனசு 'நானே ராஜா' என எண்ணுது

பதவி கொஞ்சம் அதிகம் அடைந்தாலே
மனசு தன்னையறியாமல் தடுமாறுது

கேட்டவுடன் உதவி கொஞ்சம் அதிகம் கிடைத்துவிட்டால்
மனசு மேலும் மேலும் எதிர்பார்க்குது

நினைத்ததை விட கொஞ்சம் அதிகமாய் நடந்துவிட்டால்
மனசு சொர்க்கத்தை படைக்க நினைக்குது

தொட்டதெல்லாம் வெற்றி பெற்றுவிட்டால்
மனசு எட்டிப் பிடிக்காத தூரம் போகுது

சஞ்சலமே அரக்கன்
சஞ்சலமே பேய்

சஞ்சலமே எமன்
சஞ்சலமே சாத்தான்

சஞ்சலத்தை முளையிலேயே கொன்று விடு
சலனமற்ற மனசைப் பெற்று விடு.

###############################################################


No comments:

Post a Comment