Pages

Thursday 28 January 2021

பாகம் : 2 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் - மதுரை கங்காதரன்

                                                   பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 2




அறிவியல் - குறுநாவல் 

(முதல் பாகம் தொடர்ச்சி) 

                                                    மதுரை கங்காதரன் 

முன்பகுதியின் இருபுறங்களில் பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், நடுவில் ஊடகங்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேடையில் பேசுகிறவர்களின் பேச்சைத் தெளிவாகக் கேட்பதற்கு ஒலிபெருக்கிகள் தவிர, ஆங்காங்கே நேரடியாகப் பார்ப்பதற்குப் மிகப்பெரிய மின்திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குக்கு நோபல் பரிசு பெற்றவர்களும், அறிவியலில் பல சாதனை புரிந்தவர்களும் தவிர பல நாட்டு அறிவியல் மேதைகளும் இங்கு வருகை தந்திருந்தனர். இந்த ஏற்பாடுகள், இந்தியாவில் அறிவியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதையும், இளைஞர்கள் அறிவியல் கருத்துகளைக் கேட்க எவ்வளவு ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை உலகுக்கு இதன் மூலம் நன்கு தெரிய வைத்திருக்கின்றது. 

ஓர் முக்கிய அறிவிப்பு என்பதைக் கேட்டவுடன் அனைவரின் கவனமும் அதில் லயித்தன.

அதாவது இந்தக் கருத்தரங்கு நிறைவடைவதற்குச் சற்று முன் வரும் நிகழ்ச்சியாககூடுதல் சிறப்பு அம்சமாகஊடகங்கள்இளைஞர்கள்ஆசிரியர்கள்பொதுமக்களாகிய நீங்கள் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டில் இருக்கும் எண்ணைக் கொண்டுகுலுக்கல் முறையில் தேர்வாகும் சிலருக்குநேரடியாக சில கேள்விகள் விஞ்ஞானி வினோதனிடம் கேட்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர்.

ஒருவேளை என் பேரு குலுக்கலில் வந்தால், ஐயா! உங்களோட ஆராய்ச்சிக்கான இந்தச் சிந்தனை வந்ததற்கான அடிப்படைக் காரணம் என்ன ஐயா?’ என்று நான் கேட்கப்போகிறேன் என்று ஒரு மாணவன் சொல்ல அவனைச் சுற்றி இருந்த மாணவ மாணவிகளும் நாங்களும் அதைத் தான் தெரிஞ்சுக்க வந்திருக்கிறோம் என்றனர்.

நான் கேட்பதாக இருந்தால், அடுத்த ஆராய்ச்சி எதைப் பற்றியதாக இருக்கும்?” என்றார் பொதுமக்களில் ஒருவர்.

என்னோட சீட்டு வந்தால், நீங்க கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, ஏன் வெளிநாட்டுகாரருக்கு காப்புரிமை கொடுத்தீங்க? இது நம்ம நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தது போலத்தானே என்று கேட்க நினைத்தார் ஒரு ஊடகப் பொறுப்பாளர்.

குலுக்கல்லே என்னோட பேரு மட்டும் வரட்டும்! ஏன்யா உங்களோட ஆராய்ச்சியை நம்ம நாட்டிலே செய்யாம ஏன் வெளிநாட்டுக்குப் போய்ச் செஞ்சீங்கன்னு கேட்கப் போகிறேன்?” என்றார் முனைவர் பட்டம் பெற்ற ஒரு ஆசிரியர்.   

இப்படி ஆளுக்காளு ஏதேதோ கற்பனை பண்ணி பேசிட்டு இருக்கீங்களேஅதை மொதலே நிப்பாட்டுங்க. இப்போதான் இவரு முதன்முதலா தன்னோடக் கண்டுபிடிப்பு பத்தி மனம் திறந்து பேசப் போறார். அதுக்குள்ளே இவர் மேலே அபாண்டமாப் பழி சுமத்துறதும், வெறுப்பா பேசுறதும் சரியாப்படலே. அவரு என்ன சொல்றார்னு கேட்ட பின்னே உங்களோட கேள்வியைக் கேளுங்க? என்ன இருந்தாலும் இவரு இந்தியர்! அதுவும் நம்மத் தமிழன்! அதை ஞாபகத்திலே வச்சிக்கிட்டுப் பேசுங்க” என்றார் ஒருவர் சற்று அதட்டலாக.

அது ஞாபகத்திலே இருக்கிறதாலேத் தானே இதுவரை நாம கட்டுப்பாடோடவும் அமைதியாகவும் இருக்கிறோம். இல்லாட்டா என்னென்னமோல்லே நடந்திருக்கும். ஆனா ஒன்னுக்காக அவரை நாம பாராட்டியேத் தீர வேணடும். படிச்சவங்க முதல் பாமரர் வரைக்கும் அறிவியல் தாகத்தை ஏற்படுத்திட்டாரு பாருங்க, அதுக்கு நாம நன்றி சொல்லணும் என்று முதலில் ஆத்திரத்தோடு பேசியவர், பிறகு அடங்கிப் போனது அதிசயம் என்றேச் சொல்ல வேண்டும்.

நீங்க எல்லாரும் வேணும்னா பாருங்க, நாளை காலைப் பத்திரிக்கையிலே இவருக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படுவதாகப் பல செய்திகள் கட்டாயம் வரும் என்றும் பலர் அபரிவிதமான நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

கட்டாயமாக அதுலே எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதுக்கு அவருக்கு நல்லாவேத் தகுதி இருக்குஇவரு நிச்சயமா நம்ம கலாம் ஐயாவோட மறுபிறவிதான்னு  சொல்லணும். நம்மைப் போல இக்காலத்து இளைஞர்களுக்கு இவரைப் போலுள்ளவங்கதான் அறிவியல் ஆர்வத்துக்கு உரமூட்டுகிற டானிக்! ஏன் பூஸ்ட்ம் கூட! என்று அவர்கள் உணர்வு பொங்க பேசினர்.

இதுவரையில் இயற்கையால் செய்ய முடியாததை இவர் செய்து காட்டியது, உண்மையாகவே இவரு பிரம்மனின் அற்புதமானப் படைப்பு! மனிதர்களைக் காக்க வந்தக் கடவுள்! இல்லை, இல்லை, இந்தக் கலியுகத்தை காக்க வந்த அவதாரம்!” என்று பலர் புகழ்ந்து தள்ளினார்கள்.

எதனாலே மனுசங்க பலர் இப்படி இருக்காங்கன்னு தெரியலே. யாராவது ஒருத்தர் தன்னோட உழைப்பாலே, அறிவாலே, கடினமுயற்சியாலே புகழோ, பதவியோ, பணக்காரனாகவோ ஆயிடக் கூடாது! உடனே அந்த மனிதனை, பொறாமை பிடிச்ச வீணாப் போனவங்க, எப்படியெல்லாம் அசிங்கமா விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கமா மட்டம் தட்டுகிற புத்தி எப்பத்தான் மாறும்னு தெரியலே? அதுலே விஞ்ஞானி வினோதன் விதி விலக்கா என்ன?” என்று கொந்தளிப்பு கொண்ட வேதனையுடன் தன் எண்ணத்தை சற்று உரத்த குரலோடு வெளியில் கக்கினார்.     

இதுவரையில் காத்திருந்த கூட்டம் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல், “விஞ்ஞானி வினோதனைப் பேசச் சொல்லுங்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக மேடையில் அமர்ந்திருந்தவர் விரைவாகத் தங்கள் பேச்சுகளை முடித்துக் கொண்டனர். அதற்குக் காரணம் அவர்களும் விஞ்ஞானி வினோதன் ஆற்றப்போகும் உரையினைக் கேட்க ஆவலோடு இருந்ததே!

வினோதன் தன் பேச்சைத் தொடங்க எழப் போனார்.

ஆனால்

அனைவரும் மன்னிக்கவும் என்று வினோதனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு அறிவியல் அறிஞர் டாக்டர் ஜான் மில்லர் சொல்ல, அரங்கமே ஒரு கணம் குழப்பத்திற்கு உள்ளானது. ஏனென்றால், ஒரு வெளிநாட்டவர் மிகத் தெளிவாகத் தமிழ் பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுஅதில்லாமல், விஞ்ஞானி வினோதனைப் பேச விடாமல் இவர் ஏன் தடுத்தார்? என்கிற காரணம் பிடிபடாமல் அங்கிருந்த கூட்டம் சற்று விழித்தது.

யாரும் எதற்கும் பதட்டப் பட வேண்டாம். என் பெயர் ஜான் மில்லர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதோடு, அதன் சம்பந்தமான எனது ஆராய்ச்சிகளுக்கு மூன்று காப்புரிமைகள் பெற்றுள்ளேன் என்பதை இவ்வேளையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்நான் ஒரு வெளிநாட்டவராக இருந்தாலும் எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். அதையும் நான் விஞ்ஞானி வினோதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட ஐந்து வருடகாலமாகப் பழக்கம். இவரது புதுமையானக் கண்டுபிடிப்பால்தான்” அமெரிக்காவிலிருந்த என்னையையும், இந்தியாவில் இருந்த இவரையும் இணைபிரியாத நண்பர்களாக ஆக்கியது என்று ஒரு புதிய தகவலை பகிர்ந்தவுடன், இவருக்கும் வினோதனின் கண்டுபிடிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? என்கிற மாதிரியானப் பல கேள்விகள் பலருடைய மனதில் ஓடியது.

நான் சொல்ல நினைக்கின்றது என்னவென்றால், விஞ்ஞானி வினோதனின் சாதனையை அவரே சொன்னால், அது தற்பெருமையாகவோ அல்லது தலைக்கணமாகவும் தெரியலாம். அதனால் ஐந்து ஆண்டுகள் அவரோடு இருந்த காரணத்தினால்நான் சொன்னால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றவுடன் அனைவரும் ஆமோதிக்கும் விதமாக,

அதுவும் சரிதான் ஒரு வெளிநாட்டவர், நம் இந்தியத் தாய் நாட்டின் விஞ்ஞானியான வினோதனைப் பத்திப் பேசும்போது, இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களும், நம் நாட்டின் பெருமையைப் பறைசாற்றச் செய்யும் ஒரு நல்ல வாய்ப்பாகவே நாம் கருதுவோம் என்று சமாதானம் கொண்டனர்.   

இதுமட்டும் காரணம் இல்லை. வேறு ஒரு முக்கிய காரணமும் உள்ளது என்று புதிர் போட்டவுடன் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. என்னவாக இருக்கும்?’ என்று ஆளுக்காளு ஒவ்வொன்றை யோசிக்கலானார்கள்.

நான் எதற்காக இவரை பேசத் தடுத்தேன் என்றால்? இவரது இந்தப் புதிய கண்டுப்பிடிப்புக்கு மேற்கொண்ட முயற்சியில், இவர் வெற்றி பெற்றது முதல், அதை உலகுக்கு அறிவிக்கும் வரையில் இவர் அடைந்த அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் கொஞ்சநஞ்சமல்ல. அத்தகைய நிகழ்வுகளை இவர் இன்னும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் எந்த அளவுக்கு தன்னுடையக் கண்டுபிடிப்பு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வார்? என்பது எனக்குத் தெரியவில்லை. இவரது உரையை ஆவலுடன் கேட்க வந்திருக்கும் நீங்கள், குறிப்பாக மாணவ மாணவிகள், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தோடு, ஒரு கண்டுபிடிப்பாளருக்கு எத்தகையத் துன்பமெல்லாம் வரும் என்பதை நீங்கள் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்ச்சியை உள்ளடக்கத் தெரியாமல், அவரின் வேதனை கலந்த பேச்சால் பொங்கி வெளியில் வழிந்தபோது, அவராலேயே தொடர்ந்து பேச முடியாமல் சில வினாடிகள் மௌனம் காத்தார்அதைக் கேட்ட விஞ்ஞானி வினோதனின் கண்கள், கண்ணீரால் குளமாகியது.

ஒருவாறு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார், அந்த வெளிநாட்டு அறிவியலாளர்.   

நான் சொல்லப் போகும் விசயங்கள் கேட்டு எவரின் செயலும் மனமும்  புண்படுமேயானால் அதற்கு என்னை மன்னிக்க வேண்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். விஞ்ஞானி விநோதன் செய்தது என்னவோ? உண்மையில் இவருக்கு நடந்தது என்னவோ? அதை நான் அப்படியே சொல்கிறேன் என்று மறுபடியும் கேட்பவர்களின் ஆவலை அதிகப்படுத்தினார்.

விஞ்ஞானி வினோதன், இங்குள்ள ஒரு சாதரண அரசு மானியம் உதவி பெறும் கல்லூரியில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளமையில் இருந்தே இவருக்கு வேதியியலில் மேல் அலாதியான ஈடுபாடு. தன் வாழ்க்கையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல கண்டுபிடிப்பு ஒன்றைத் தரவேண்டும் என்கின்ற அறிவியல் தாகம் அவரிடத்தில் இருந்தது. இவரது இந்தக் கண்டுபிடிப்பு மூலம் இவரது ஆசை நிறைவேறிவிட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம்

அதற்காக இவர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற எண்ணினார். குறிப்பாக நீர் சுத்திகரிப்பு அல்லது நீர் மேலாண்மை பற்றி ஆராய முனைந்தார். அப்போது இவர் கவனத்திற்கு ஒரு யோசனை வந்தது. ஆடைகளுக்குப் பல வேதிப்பொருட்களும், தண்ணீரும் கலந்து பல செயல்கள் மூலம் அதற்கு நிறங்கள் ஏற்றிய பிறகு, வீணாகும் அந்த நஞ்சுத் தன்மை கொண்ட  தண்ணீர், ஆற்றிலும், குளத்திலும் கலப்பதால், குடிதண்ணீரை மாசடையச் செய்வதோடு, நல்ல நிலங்களையும் கேடு விளைவிப்பதைக் கண்டார். அதற்குத் தீர்வாக, எளிய முறையில் விரைவாகவும், அதேவேளையில் செலவு மிகக்குறைவாகவும் இருக்கும்படியான, தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஒரு தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தன்னந்தனியே இறங்கினார். கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பாடுபட்டார். அவருக்கு உதவி செய்யவோ, வழிகாட்டியாகவோ யாரும் வரவில்லை என்பதுதான் கொடுமை. ஒரு சிலர் வந்தாலும் அதற்காக அவர்கள் எதிர்பார்த்தத் தொகை மிக அதிகம். அவர்கள் இவருக்கு உதவி செய்யும் எண்ணத்தைக் காட்டிலும் பணத்தாசையே மேலோங்கி இருந்தது

இதனைக் கேட்ட அனைவருக்கும் இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதானே. இந்த காலத்திலே உண்மையான உழைப்புக்கு யார்தான் மதிப்பு கொடுக்கிறாங்க? என்கிற நினைப்பு எட்டிப் பார்த்ததுச் சென்றது.

உண்மையில் விஞ்ஞானி வினோதன் உரையாற்றி இருந்தால், ‘இந்த இடத்தில் மேற்கொண்டுப் பேசச் சற்று தடுமாறி இருப்பார்இவர் மனதில் தைத்திருக்கும் துக்கமே வார்த்தைகளை வெளிவராமல் செய்திருக்கும் என்று இப்போது அனைவரும் உணர்ந்தனர்.

டாக்டர் ஜான் மில்லரும் சமாளித்துக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து மேற்கொண்டு பேசினார் இவர், பல வழிகளில் தன் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். இதற்காக இவருடைய சொந்தப் பணத்தையும், போதாகுறைக்கு பிச்சை எடுக்காதக் குறையாக பலரிடத்தில் கேட்டு தன் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். திரைப்படத்திற்கும், விளையாட்டிற்கும், கலைநிகழ்ச்சிக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு மற்றும் தனியார்துறைகள்! அவர்களிடத்தில் இவரைப் போன்றவர்கள், ஆராய்ச்சிச் செலவுக்கென்று உதவிக்குச் சென்றால், அவர்களின் கண்களையும், காதுகளையும் மூடிக்கொள்வதோடு, அவர்களின் கைகளையும் இறுக்கி மூடிக் கொள்கின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை” என்று நடந்ததை மெல்ல மெல்லச் சொல்லலானார்   

பாகம் : 3 தொடரும் 

No comments:

Post a Comment