Pages

Monday 13 January 2014

Life lessons that you learn from Natures - 'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்

 'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும்  பாடங்கள்  

  Life lessons that you learn from Nature

 புதுக்கவிதை 
 மதுரை கங்காதரன் 

* தெரியாததை தெரிய வைக்கின்றது 
  புரியாததை புரிய வைக்கின்றது 

* கிடைக்காததை கிடைக்கச் செய்கின்றது 
  கிடைத்தை தொலைக்க / இழக்கச் செய்கின்றது 

* சோகத்தை துடைத்து மகிழ்ச்சி கொடுக்கின்றது 
  தோல்விகளை சமாளித்து வெற்றி தருகின்றது 
* இல்லாத உறவுகளை புதிதாக கொடுக்கின்றது 
  இருக்கும் உறவுகளை மறக்கச் செய்கின்றது 

*அனுபவமில்லாததை அனுபவிக்க வைக்கின்றது 
  பழகாததை பழக்க வைக்கின்றது 

* எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கின்றது 
  கொடுத்ததை திருப்பி எடுத்துக் கொள்கின்றது 
* நினைவுகளை மறக்கச் செய்கின்றது 
  மறந்ததை நினைக்கச் செய்கின்றது 

* நிலையானதை மாற்றச் செய்கின்றது
  மாற்றியதை நிலையாக நிற்க வைக்கின்றது 

* விரும்புவதை வெறுக்கச் செய்கின்றது 
  வெறுப்பதை விரும்பச் செய்கின்றது 
* உண்மைகளை பொய் என்று சொல்ல வைக்கின்றது 
 பொய்களை உண்மையென சித்தரிக்கின்றது 

* கண்ணால் காண்பதை நம்பச் சொல்கின்றது 
 காதால் கேட்டு ஏமாறச் செய்கின்றது 

* கஷ்டத்திற்கு பிறகு வளமான வாழ்க்கை தருகின்றது 
 நல்ல வாழ்க்கைக்குப் பிறகு கஷ்டம் பல தருகின்றது 

* நல்லவர்களை அழ வைத்து வேடிக்கை பார்க்கின்றது 
 அழுபவர்களுக்கு சிரிப்பை பரிசாக கொடுக்கின்றது 

* அன்புள்ளவர்களை அரக்கர்களாக மாறச் செய்கின்றது 
  அரக்கர்களின் இதயத்திலும் ஈரம் பிறக்கச் செய்கின்றது 
* கோழைகளை வீரனாக்குகின்றது 
  வீரர்களை கோழைகளாக்குகின்றது 

* உங்களை எனக்கு அறிமுகப் படுத்துகின்றது 
 நான் படைத்ததை படிக்கச் செய்கின்றது 

* காலத்தின் பிடியில் நாம் கை பொம்மைகள் 
 ஆட்டுவிட்டபடி ஆட வேண்டும் 
* காலம் ஒரு  தாயாக அன்பைக் கொடுக்கின்றது 
  காலம் ஒரு ஆசானாக நமக்கு அறிவைக் கொடுக்கின்றது  

* காலம் ஒரு நண்பனாக நமக்கு பாதுகாக்கின்றது 
  காலம் ஒரு வழிகாட்டியாக நமக்கு இருக்கின்றது  

* காலம் காற்றும் மழையும் தருகின்றது 
  காலம் கல்லையும் கனியச் செய்கின்றது 
* காலம் முல்லையும் மலரையும் படைக்கின்றது 
  காலம் உன்னையும் என்னையும் சந்திக்கச் செய்தது 

* காலத்தை வெல்ல நாம் பிறக்கவில்லை 
  காலத்தை அனுபவிக்க நாம் பிறந்திருக்கிறோம்  

* நாம் வாழ்கையில் நம்பிக்கை கொண்டால் உதவுகின்றது 
  
  வாழ்க காலம் ! 
அது வரும் காலத்தில் நமக்கு நல்லதை தருமென்று      நம்புவோமாக!

நன்றி, வணக்கம்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment