Pages

Monday 10 February 2014

LOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்! அழியாத நேசம்!!

                                காதலர் தினம்

                

    சிறப்பு புதுக்கவிதை (தமிழ் & ஆங்கிலம்)
               
                           மதுரை கங்காதரன் 
   


   மதுரையில் சென்ற 9.2.14 அன்று நடைபெற்ற
 முப்பெரும் விழாவில் வாசிக்கப்பட்ட கவிதை.

இடம் : ஹோட்டல் பிரேம் நிவாஸ் 

              
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

இது ஒரு 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம்  

                          

             விழியாலே பேசும்! அழியாத நேசம்!!
                     
அன்பே ! உன் விழிகள் என்ன நவரச கலவையா?
உன் விழிகளில் தான் எத்தனை எத்தனை பாவங்கள்!

உன் அம்பு விழிகளாலே பேசி என் இதயத்தில் நுழைந்தாய்
மாசில்லா நேசத்தால் என்னை ஆட்கொண்டாய்.

உன் கயல் விழிகளாலே பேசி மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வைத்தாய்
முத்தாய் நேசத்தை வெகுமதியாகத் தந்தாய் !

உன் காந்த விழிகளாலே பேசி என்னைக் கவர்ந்திழுத்தாய்
குறைவில்லாத நேசத்தை எனக்கு எந்நாளும் கொடுத்தாய்

உன் சூரிய விழிகளாலே பேசி என் வாழ்வில் ஒளி தந்தாய்
பிரகாசமான நேசத்தை தினம் தினம் வளர்த்தாய்
                   
உன் நிலவு விழிகளாலே பேசி என்னை குளுமை படுத்தினாய்
வசந்தமான நேசத்தை நித்தமும் எனக்களித்தாய்

உன் வாள் விழிகளாலே பேசி என்னை வென்றாய்
நிரந்தரமான நேசத்தை என்னிடத்தில் காட்டினாய்

உன் மான் விழிகளாலே பேசி என்னை துள்ளி துள்ளி துரத்தினாய்
மகிழ்ச்சியான நேசத்தை மங்காமல் இருக்கச் செய்தாய்

உன் அன்பு விழிகளாலே பேசி என்னை அரவணைத்தாய்
அமைதியான நேசத்தை வளமாக பெறச் செய்தாய்   

உன் வேல் விழிகளாலே பேசி என்னைக் காத்து நின்றாய்
அழியாத நேசத்தை என் வாழ்வுக்காக அர்ப்பணித்தாய்
                     
உன் விழிகள் அடுத்த பிறவியிலும் பேசும் ! நேசம் காட்டும்! 
ஏனென்றால் இறந்த பிறகும் நீ 'விழி தானம்' செய்யப்போகிறாயே !  

ஆகவே ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளுங்கள்.

போட்டி, பொறாமை, ஆசை அழித்திடுங்கள் 

உண்மை அன்பு, பாசம், காதலை வளர்த்திடுங்கள் !

உலகை மகிழ்ச்சி மயமாக மாற்றுங்கள் !

அன்பு கொள்பவர்களை அன்பு கொள்ளுங்கள் 

அன்பு கொள்ளாதவர்களை அவர்களுக்கு வழி விடுங்கள் 

அன்பு கிடைக்காவிட்டாலும் உங்களை நீங்களே அன்பு கொள்ளுங்கள் 

புதிய மனிதனாக அன்பு கொடுக்கும் சிற்பியாக மாறி , உண்மை 'காதல்' சிலைகளை செதுக்குவதற்கு உதவி புரியுங்கள்.

காதலர்களே ! காதலர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள் !

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

                      
படைப்பு : கு.கி.கங்காதரன் , மதுரை ..  கை பேசி : 9865642333

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
                        LOVER'S  DAY SPECIAL 
                            
                     MADURAI GANGADHARAN  

Speaking of magical eyes! Getting everlasting love !



My love ! What ? your eyes are a mixer of Nava rasam !
How many expressions are there in your eyes !

When you are speaking with arrow eyes Penetrating my heart
I am fascinating by your pure love .

When you are taking fish like eyes I am sinking in your love
Given as a gift of love kisses !
                
You attract me When you are seeing me with magnetic like eyes ,
Ever lasting love you have given to me

Lighting my life when you are chatting solar like eyes
Bright Day is the day of love raised

Cooling me when you are touching moon like eyes
Love of spring  you have given to me

You are winning me when you are talking sword like eyes
Abiding affection shown to me
                  
Leaping with joy when you are speaking deer like eyes
You show happy and love to me

Embracing me by talking with your lovely eyes
Express your love with quiet to me

Protecting my life when you are talking with your sparrow eyes
Everlasting love of my life dedicated to me
               
Your eyes will speaks next life time and shows love too
Because you decide to donate your eyes after your present life time!

Creator : Madurai Gangadharan .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1 comment:

  1. வரிகள் அருமை... காதலர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete