Pages

Monday 22 October 2012

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்- IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்-
IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR 


பணம் ஒரு மிகப்பெரிய ஆயுதம். அது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். கடவுள் படைத்த இந்த அற்புத உலகில் மனிதன் சக்தி வாய்ந்தவன் என்று சொன்னால், மனிதன் படைத்ததில் மிக மிக சக்தி வாய்ந்தது 'பணம் ' என்று சொன்னால் மிகையாகாது.


பஞ்சபூதத்தில் இதை ஆறாவதாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதை ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதாவது 'தீ ' விளக்காக இருக்கும் வரையில் அது மற்றவர்களுக்கு ஒளி தந்து உதவுகிறது. அதுவே பெரிய நெருப்பாக பற்றி எரியும் போது , தீ உருவான இடத்தையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் அழிக்கவல்லது. பணம் அளவோடு இருக்கும் வரையில் அது அமைதியாக இருக்கச் செய்கிறது. அளவுக்கு அதிகமாகும் போது அது தனது விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்கின்றது. பணம் நீ கையாளுவதை பொறுத்து தெய்வமாக கருணை காட்டும். அதுவே சாத்தானாக மாறி தீமையை உண்டாக்கும்.

பணம் நமது மனப்பான்மை , நம்பிக்கை மற்றும் ஐடியாக்களை வளர்க்கிறது. ஆனால் எப்போதும் பணம் இருக்கும்போது உன்னைப்பற்றியும், பணத்திற்கும்  உனக்குமுள்ள உறவை பற்றியும் தெளிவாக மனதில் வைத்துகொள். பணம் தேவையான அளவு இருந்தால் நாம் சொல்வதை பணம் கேட்கும். தேவைக்கு அதிகமாக இருந்தால் அது சொல்வதை நாம் கேட்கவேண்டியிருக்கும். 


பணம் அமைதியை கெடுக்கவல்லது. குணத்தை மாற்றவல்லது. உறவுகளை எதிரியாக நினைக்கச் சொல்கிறது. நட்பை பகையாய்  பார்க்கச் செய்கிறது. அன்பை அரக்கத்தனமாய் நினைத்துப் பார்க்கிறது. மரியாதை உள்ளவர்களை அவமதிக்கிறது. 'நான்' என்கிற அகந்தையும் , தலைக்கணமும் வளர்க்கிறது.  ஆசையை பேராசையாக மாற்றி அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. பையில் பணம் கூடக்கூட மனதில் 'கணம் ' கூட ஆரம்பித்து விடுகின்றன.


பணத்தைக் கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கமுடியும். ஆனால் குணத்தை வாங்க முடியாது. அதாவது அன்பு, கருணை, பாசம், நேசம், இரக்கம் , கல்வி மற்றும் வீரம் முதலியவைகள் . 

பணம் நமக்கு அடிமையாக இருக்கவேண்டுமென்றால்.... 


* எண்ணத்தில் கவனம் இருக்க வேண்டும்.

* காட்டுகின்ற உணர்வில் உண்மை இருக்கவேண்டும்.

* செயல்கள் சத்தியப் பாதையில் இருக்கவேண்டும் 

* செயல்களின் விளைவுகள் நன்மை தரக்கூடியதாய் இருக்கவேண்டும்.   

பணம் இருக்கும் போது நீ எதைப் பார்க்கிறாயோ அதைக்கொண்டு தீர்ப்பு சொல்லாதே. சிந்தித்து செயல்பாடு. எப்போதும் உன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் விழிப்புடன் இரு. வாழ்கையில் நீ முன்னேறும்போது உனது குணம் மிளிர்கின்றதா என்பதை உறுதி செய்துகொள். 


பணம் உன்னிடம் ஒட்டியிருக்கும் வரை மற்றவர்கள் உன்னிடம் ஒட்டியிருப்பார்கள். பணம் உன்னைவிட்டு விலகி விட்டால் நீ மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். 

பணத்தின் மீது நமது கவனம் கூடக் கூட அது போகும் திசையிலெல்லாம் நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


மனிதன் 'நார் ' என்றால் பணத்தை  'பூ ' என்று என்று சொல்லலாம். அதாவது மனிதனுக்கு மதிப்பு பணத்தால் மட்டுமே வருகின்றது. 


பணமுள்ளவனிடத்தில் குணமும் இருப்பது தான் மிகவும் சிறப்பு. அது தான் மனிதனை தெய்வமாக காட்டும்.

'பணம்' சம்பாதிப்பது 'மரம் ' நடுவதற்க்குச் சமமாகும். அதாவது நட்டவனுக்கு பலன் தருவதைக்காட்டிலும் மற்றவர்களுக்கு அதிக பலன் கொடுக்கின்றது. 


பணத்தை சம்பாதிக்க வேண்டும்!


அதேசமயத்தில் குணத்தை இழக்காமல்!

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

1 comment: