Pages

Thursday 13 September 2012

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். THINK NEGATIVE AND ACT POSITIVE

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

பலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள்.
THINK NEGATIVE AND ACT POSITIVE 



எண்ணம் என்பது உங்களுடன் இருப்பது. செயல் என்பது மற்றவர்களுக்கு கொடுப்பது. ஆக பலவீனமான எண்ணங்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பலத்தை மட்டும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உங்களின் திறமைகளை விரும்பி , மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதன்மூலம் கூட உங்களின் பலவீனம் பலமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.


அதாவது எப்போதும் எதிர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK NEGATIVE). நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள் (ACT POSITIVE). இந்த வார்த்தைகள் உங்களுக்கு முரணாக தெரியலாம். ஏனென்றால் பொதுவாக அனைவரும் கூறிவருவது  எப்போதும் நேர்மறை சிந்தனைகளை எண்ணுங்கள். (THINK POSITIVE).நேர்மறை சிந்தனைகளை செயல்படுத்துங்கள்  (ACT POSITIVE) என்பது தானே. அது ஒருவகையில் உங்களை ஏமாற்றும் செயல். தற்பெருமையும் கூட. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய உண்மையை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். 

                                                        

ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்று எண்ணுகிறான் என்று வைத்துகொள்ளுங்கள். அதை அடைவதற்கு பலவித வழிகளில் முயற்சி செய்கிறான். நன்றாக உழைகிறான் . நல்ல தொழில் செய்கிறான் , ஆனால் இவ்வளவு இருந்தும் அவனால் வெற்றிபெற முடியாமல் தோல்விகளை சந்திக்கிறான். இப்படித்தான் பலருடைய வாழ்வின் நிகழுகிறது. அவனுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது. இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும்? அவனுடைய பலவீனகள் தான் செயலாக மாறியிருக்கின்றன.  

                                     

ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணங்கள் தான் எப்போதும் செயலாக மாறுகின்றது! உங்களிடத்தில் பலவீனமான எண்ணங்கள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை செயலாக விரும்புவீர்களா? அப்படி செய்தாலும் வெற்றி பெறுமா?

ஒரு உதாரணத்தில் மூலம் உங்களுக்கு எளிதாக விளக்குகிறேன். அதாவது உங்களுக்கு நீச்சல் தெரியாது. இருப்பினும் நேர்மறை சிந்தையோடு ஆற்றில் குதிக்கிறீகள். உங்களது நேர்மறை சிந்தனை அங்கு வந்து உங்களுக்கு உதவி செய்யுமா? 

அப்படியில்லாமல் ஆற்றில் குளிக்க ஆசை. ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரியாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்? கட்டாயமாக ஆற்றில் இறங்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் பலவீனம் 'நீச்சல் தெரியாதது.' ஆகையால் ஒன்று ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிப்பீர்கள் அல்லது முறையாக நல்லவிதத்தில் நீச்சலை கற்று கொண்டு குதித்தால் உங்கள் ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். அதுவும் இல்லையென்றால் 'லைப் ஜாக்கெட்' அணிந்துகொண்டு நன்கு நீச்சல் தெரிந்த ஒருவரின் துணையோடு உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள் . அதாவது உங்கள் பலவீனமான சிந்தனை தான் பலத்தை சிந்திக்க வைத்து செயபடுத்த உதவி செய்கின்றது.


அதேபோல் சமையல் செய்யத்தெரியாதவர்கள் நேர்மறை சிந்தனையோடு சமையல் செய்தால் ருசியான உணவு கிடைக்குமா?


பள்ளி மாணவன், நான் படித்த கேள்விகள் தான் பரீட்சையில் கேட்க வேண்டுமென்ற நேர்மறை சிந்தனையோடு பரீட்சைக்கு சென்றால் அவன் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் வாங்குவான். அப்படி எண்ணாமல் ஒருவேளை நான் படிக்காத கேள்விகள் வந்துவிட்டால் என்ன செய்வது? ஆகவே எதற்கும் அதையும் படித்து வைப்போம் என்று எண்ணுகின்ற மாணவர்களே சாதனைகள் பல படைக்கின்றனர்.


நாளை மழைபெய்யும் என்று நினைத்தால் என்னாவது. ஒருவேளை மழை பெய்யாவிட்டால்  அதற்க்கு மாற்று வைத்திருப்பவனே வெற்றியடைகிறான்.


எனக்கு தான் பரிசு கிடைக்குமென்று ஒவ்வொருவரும் நினைத்தால் , பரிசு கிடைக்குமா? அதற்கு வாய்ப்பு மிகவும் அரிது. ஏனென்றால் பரிசின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணலாம்.   

எனவே எப்போதும் பலவீனங்களை நினையுங்கள்!


பலமுள்ள செயல்களை செய்யுங்கள்!

உங்களுக்கு எப்போதும் வெற்றி தான்.
       
  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com        

1 comment: