Pages

Wednesday 5 September 2012

நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன்

நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - 
ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?



வெட்டுவதற்கு நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. கத்திரிக்கோல், சுத்தியல், கோடாளி, கத்தி, இரம்பம், அரிவாள் மற்றும் பல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு    வடிவமைப்பில் பலவித அளவில் இருகின்றது. நமது தேவைக்கேற்ப ஆயுதத்தை தேர்தெடுக்க தெரியவேண்டும். அதற்குமுன் ஒவ்வொன்றின் வேலை செய்யும் விதத்தையும், அதை கையாளும் முறையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது  அவசியம். 

பேப்பரை நறுக்குவதற்கு அல்லது வெட்டுவதற்கு கத்திரிக்கோல் பதிலாக கொடாளியை பயன்படுத்தினால் பயன்தருமா? அதனுடைய நோக்கமே பாழாய்ப்   போய்விடும்.


அதேபோல் டாக்டர் ஆபரேஷன் செய்வதற்கு சிறிய கத்தி, சிறிய கத்திரிக்கோல் உபயோகபடுத்துவதற்கு பதிலாக பெரிய கத்தி , கத்திரிக்கோல்  பயன்படுத்தினால் நோயாளி பிழைப்பாரா? அல்லது ஆபரேஷன் தான் வெற்றியடையுமா?   

அதுபோல ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்டவிதமான ஆட்களால் தான் செய்து முடிக்க முடியும். சிறிய வேலைக்கு அதிகம் தகுதியுள்ளவர்களையும், கடினமான வேலைக்கு குறைந்த தகுதியுள்ளவர்களை ஈடுபடுத்தினால் கட்டாயம் வெற்றி கிடைக்காது.

ஆகவே உங்களுடைய இலக்கை அடைய தகுதி , திறமை, அனுபவம் ஆகியோர்களை எங்கெங்கு எப்படி கையாளுகின்றோமோ அதைபொறுத்து தான் நம்முடைய வெற்றி இருக்கும்.


ஆகவே மனிதர்களை திறம் பட நிர்வாகம் செய்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் வெற்றி பரிசு நிச்சயம்.




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

   

1 comment: